logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

அம்பாசமுத்திரம் அகஸ்தியர் கோவிலில் வைத்து 504 சுமங்கலி பெண்கள் பூஜை சிறப்பாக நடைபெற்றது. இன்று காலையில் அம்பாசமுத்திரம் அகஸ்தியர் கோவிலில் வைத்து 504 சுமங்கலி பெண்கள் பூஜை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர், இந்த திருவிளக்கு பூஜையில் திருநெல்வேலி யோகிராம் குடில் மாவட்ட செயலாளர் .T. V. சுரேஷ் கலந்து கொண்டு சிறப்பு தீப ஆராதனை செய்தார் தொடர்ந்து பூஜை செய்த அன்னையர்களுக்கு முன் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார்கள். பூஜை முடிந்தவுடன் வந்திருந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கிப்பட்டது.

5 hrs ago
user_Jil jolly Club
Jil jolly Club
அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, தமிழ்நாடு•
5 hrs ago

அம்பாசமுத்திரம் அகஸ்தியர் கோவிலில் வைத்து 504 சுமங்கலி பெண்கள் பூஜை சிறப்பாக நடைபெற்றது. இன்று காலையில் அம்பாசமுத்திரம் அகஸ்தியர் கோவிலில் வைத்து 504 சுமங்கலி பெண்கள் பூஜை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர், இந்த திருவிளக்கு பூஜையில் திருநெல்வேலி யோகிராம் குடில் மாவட்ட செயலாளர் .T. V. சுரேஷ் கலந்து கொண்டு சிறப்பு தீப ஆராதனை செய்தார் தொடர்ந்து பூஜை செய்த அன்னையர்களுக்கு முன் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார்கள். பூஜை முடிந்தவுடன் வந்திருந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கிப்பட்டது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • அம்பாசமுத்திரம் அகஸ்தியர் கோவிலில் வைத்து 504 சுமங்கலி பெண்கள் பூஜை சிறப்பாக நடைபெற்றது. இன்று காலையில் அம்பாசமுத்திரம் அகஸ்தியர் கோவிலில் வைத்து 504 சுமங்கலி பெண்கள் பூஜை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர், இந்த திருவிளக்கு பூஜையில் திருநெல்வேலி யோகிராம் குடில் மாவட்ட செயலாளர் .T. V. சுரேஷ் கலந்து கொண்டு சிறப்பு தீப ஆராதனை செய்தார் தொடர்ந்து பூஜை செய்த அன்னையர்களுக்கு முன் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார்கள். பூஜை முடிந்தவுடன் வந்திருந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கிப்பட்டது.
    1
    அம்பாசமுத்திரம் அகஸ்தியர் கோவிலில் வைத்து 504  சுமங்கலி பெண்கள்  பூஜை சிறப்பாக நடைபெற்றது.
இன்று  காலையில் அம்பாசமுத்திரம் அகஸ்தியர் கோவிலில் வைத்து 504  சுமங்கலி பெண்கள்  பூஜை சிறப்பாக நடைபெற்றது.
இதில் ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர்,
இந்த திருவிளக்கு பூஜையில்  திருநெல்வேலி யோகிராம் குடில் மாவட்ட செயலாளர் .T. V. சுரேஷ்  கலந்து கொண்டு சிறப்பு தீப ஆராதனை செய்தார் தொடர்ந்து பூஜை செய்த அன்னையர்களுக்கு முன் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார்கள்.
பூஜை முடிந்தவுடன்  வந்திருந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கிப்பட்டது.
    user_Jil jolly Club
    Jil jolly Club
    அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • தாமிரபரணி ஆற்றில்சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிட்டு அதற்கான சோதனை *தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க புதிய தொழில்நுட்பம் பயண்பட்டுத்த திட்டம்.பத்தமடையில் சோதனை அடிப்படையில் நாள் ஒன்றுக்கு 1 லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யும் வகையில் 2 மாதங்களில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிட்டு அதற்கான சோதனை இன்று நடைபெற்றது* தமிழகத்தில் வற்றாத ஜீவநதியாக விளங்கி வரும் தாமிரபரணி ஆறு, திருநெல்வேலி மாவட்டத்தில் தொடங்கி தூத்துக்குடி மாவட்டத்தில் கடலில் கலக்கிறது. சுமார் 134 கிலோ மீட்டர் பயணம் செய்யும் இந்த ஆற்றில் 58 இடங்களில் கழிவுநீர் கலப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலந்து ஆறு மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த பிரச்சினையை கருத்தில் கொண்டு சென்னை உயர்நீதிமன்றமும் ஆய்வு மேற்கொண்டு, பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. இந்த நிலையில், தாமிரபரணி நதியில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் பொருட்டு யூனிசென் என்ற தனியார் நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின் வேதியியல் அடிப்படையிலான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான சோதனை செயல்விளக்கம் நெல்லை சிந்துபூந்துறை பகுதியில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கும் மையப்பகுதியில் நடைபெற்றது. இதனை நெல்லை மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் இந்தத் திட்டத்தை முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் செயல்படுத்த பத்தமடை பேரூராட்சியை தேர்வு செய்துள்ளார். இதற்காக தனியார் நிறுவனத்தின் சொந்த பங்களிப்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் தேசிய பசுமை தீர்ப்பாய விதிமுறைகள் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளின் அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், கழிவுநீரில் உள்ள அமோனியல் நைட்ரஜன் மற்றும் பாஸ்பேட் ஆகியவற்றை குறைக்கும் வகையிலான சுத்திகரிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை இரண்டு மாதங்களுக்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வந்து, முதற்கட்டமாக ஒரு லட்சம் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்கும் வகையில் பத்தமடை பேரூராட்சி பகுதியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக யூனிசென் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    1
    தாமிரபரணி ஆற்றில்சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிட்டு அதற்கான சோதனை
*தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க புதிய தொழில்நுட்பம் பயண்பட்டுத்த திட்டம்.பத்தமடையில் சோதனை அடிப்படையில் நாள் ஒன்றுக்கு 1 லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யும் வகையில் 2 மாதங்களில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிட்டு அதற்கான சோதனை இன்று நடைபெற்றது* 
தமிழகத்தில் வற்றாத ஜீவநதியாக விளங்கி வரும் தாமிரபரணி ஆறு, திருநெல்வேலி மாவட்டத்தில் தொடங்கி தூத்துக்குடி மாவட்டத்தில் கடலில் கலக்கிறது. சுமார் 134 கிலோ மீட்டர் பயணம் செய்யும் இந்த ஆற்றில் 58 இடங்களில் கழிவுநீர் கலப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலந்து ஆறு மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த பிரச்சினையை கருத்தில் கொண்டு சென்னை உயர்நீதிமன்றமும் ஆய்வு மேற்கொண்டு, பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.
இந்த நிலையில், தாமிரபரணி நதியில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் பொருட்டு யூனிசென் என்ற தனியார் நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின் வேதியியல் அடிப்படையிலான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளது.
இதற்கான சோதனை செயல்விளக்கம் நெல்லை சிந்துபூந்துறை பகுதியில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கும் மையப்பகுதியில் நடைபெற்றது. இதனை நெல்லை மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் இந்தத் திட்டத்தை முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் செயல்படுத்த பத்தமடை பேரூராட்சியை தேர்வு செய்துள்ளார். இதற்காக தனியார் நிறுவனத்தின் சொந்த பங்களிப்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் தேசிய பசுமை தீர்ப்பாய விதிமுறைகள் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளின் அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், கழிவுநீரில் உள்ள அமோனியல் நைட்ரஜன் மற்றும் பாஸ்பேட் ஆகியவற்றை குறைக்கும் வகையிலான சுத்திகரிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை இரண்டு மாதங்களுக்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வந்து, முதற்கட்டமாக ஒரு லட்சம் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்கும் வகையில் பத்தமடை பேரூராட்சி பகுதியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக யூனிசென் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    user_Subramanian
    Subramanian
    திருநெல்வேலி, திருநெல்வேலி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • தென்காசி மாவட்ட‌ கலெக்டர் ரஞ்சித் சிங் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தென்காசி இசிஐ ஈஸ்வரன் பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் வரும் செப்டம்பர் 5ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது எனவும் இதில் வேலை தேவைப்படுவோர் கலந்து கொண்டு வேலை வாய்ப்பு பெற வேண்டும் என கேட்டுக் கொண்டார்
    1
    தென்காசி மாவட்ட‌ கலெக்டர் ரஞ்சித் சிங் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தென்காசி இசிஐ ஈஸ்வரன் பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் வரும் செப்டம்பர் 5ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது எனவும் இதில் வேலை தேவைப்படுவோர் கலந்து கொண்டு வேலை வாய்ப்பு பெற வேண்டும் என கேட்டுக் கொண்டார்
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    8 hrs ago
  • கடம்பூரில் சீனிவாச பெருமாள் கோயில் வருஷாபிசேக விழா நடைபெற்றது கடம்பூர் ஸ்ரீ செளந்தர்ய பத்மாவதி ஸ்ரீ கோதா சமேத ஶ்ரீ மகா ஸ்ரீ சீனிவாசகம் பெருமாள் கோயில் வருஷாபிஷேகம் திராளன பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் .கயத்தாறு அருகே உள்ள கடம்பூர் ஸ்ரீ செளந்தர்ய பத்மாவதி ஸ்ரீ கோதா சமேத ஶ்ரீ மகா ஸ்ரீ சீனிவாசகம் பெருமாள் கோயில் வருஷாப்பிஷேகத்தை முன்னிட்டு காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது.பின்னர் திருப்பள்ளியெழுச்சி பூஜையும், நித்திய பூஜையும் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து யாகசாலை மண்டபத்தில் பல்வேறு ஹோம்கள் நடை பெற்று கும்பகலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யபட்டடன.பூஜைகளைதொடந்து மேள தாளம் முழங்க கடம் புறப்பட்டு கோயில் மூன்று முறை வலம் வந்து ஸ்ரீ மகா ஸ்ரீனிவாச பெருமாளுக்கு ஸ்ரீ சௌந்தர்யா பத்மாவதி மற்றும் ஆண்டாள் நாச்சியாருக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு அதைத் தொடர்ந்து மூலவர் ஸ்ரீ மகா ஸ்ரீனிவாச பெருமாள் பத்மாவதி தாயார் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் மற்றும் விநாயகர் ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் பரிவாரமூர்த்தககளுக்கு மஞ்சள் பொடி மாபொடி திரவியம் பால் தயிர் இளநீர் தேன் சந்தனம் வாசனை உட்பட 21 திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது . இவ்விழாவில் திருக்குறுங்குடி ஜீயர் மடம்மடாதிபதி 50வது பட்டம் ஸ்ரீமத் பரமஹம்ஸ ஸ்ரீ ஸ்ரீ பேரருளானராமானுஐ ஜீயர் ஸ்வாமிகள் கலந்து கொண்டு மங்களாசாஸனம் செய்தருளி அனுக்ரஹ பாஷணம் செய்த அருளாசி வழங்கினார்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் நிறைவாக பிரசாதம் வழங்கப்பட்டது.அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் அறங்காவலர்கள் செய்திருந்தனர்.
    4
    கடம்பூரில் சீனிவாச பெருமாள் கோயில் வருஷாபிசேக விழா நடைபெற்றது 
கடம்பூர் ஸ்ரீ செளந்தர்ய பத்மாவதி ஸ்ரீ கோதா சமேத ஶ்ரீ மகா  ஸ்ரீ சீனிவாசகம் பெருமாள் கோயில் வருஷாபிஷேகம் திராளன பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் .கயத்தாறு அருகே உள்ள கடம்பூர்  ஸ்ரீ செளந்தர்ய பத்மாவதி ஸ்ரீ கோதா சமேத ஶ்ரீ மகா ஸ்ரீ சீனிவாசகம் பெருமாள் கோயில்  வருஷாப்பிஷேகத்தை முன்னிட்டு காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது.பின்னர் திருப்பள்ளியெழுச்சி பூஜையும், நித்திய பூஜையும் நடைபெற்றது.இதனைத்  தொடர்ந்து  யாகசாலை மண்டபத்தில் பல்வேறு ஹோம்கள் நடை பெற்று கும்பகலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யபட்டடன.பூஜைகளைதொடந்து மேள தாளம் முழங்க கடம்  புறப்பட்டு கோயில் மூன்று முறை வலம் வந்து ஸ்ரீ மகா ஸ்ரீனிவாச பெருமாளுக்கு ஸ்ரீ சௌந்தர்யா பத்மாவதி மற்றும் ஆண்டாள் நாச்சியாருக்கு  அபிஷேகங்கள் செய்யப்பட்டு  அதைத் தொடர்ந்து மூலவர் ஸ்ரீ மகா ஸ்ரீனிவாச பெருமாள் பத்மாவதி தாயார் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் மற்றும் விநாயகர் ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் பரிவாரமூர்த்தககளுக்கு மஞ்சள் பொடி மாபொடி திரவியம் பால் தயிர் இளநீர் தேன் சந்தனம் வாசனை  உட்பட 21 திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.  பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது . இவ்விழாவில்  திருக்குறுங்குடி ஜீயர் மடம்மடாதிபதி 50வது பட்டம் ஸ்ரீமத் பரமஹம்ஸ ஸ்ரீ ஸ்ரீ பேரருளானராமானுஐ ஜீயர் ஸ்வாமிகள்  கலந்து கொண்டு மங்களாசாஸனம்  செய்தருளி அனுக்ரஹ பாஷணம் செய்த அருளாசி வழங்கினார்.இதில்  திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் நிறைவாக பிரசாதம் வழங்கப்பட்டது.அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் அறங்காவலர்கள் செய்திருந்தனர்.
    user_பூல்பாண்டி
    பூல்பாண்டி
    Grain Shop கயத்தாறு, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் அவசர பழுதுநீக்கும் பணிகள் காரணமாக நாளை (மே 16) சனிக்கிழமை மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை (16.05.2026) சனிக்கிழமை அன்று தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து மின் நிறுத்தம் செய்யபடும் பகுதிகள் முத்தையாபுரம், தோப்புத்தெரு, வடக்குதெரு, பாரதிநகர், முள்ளகாடு,அத்திமரப்பட்டி,பொட்டல்காடு, அனல்மின்நகர் பகுதி, அபிராமிநகர், கேம்ப்,சுற்றியுள்ள பகுதிகள்,சுனாமிநகர், கேம்ப்,சவேரியார்புரம், துறைமுகம் மற்றும் துறைமுக, விரநாயக்கன் தட்டு. குடியிருப்பு பகுதிகள் ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்பட்டுள்ளது.
    1
    தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் அவசர பழுதுநீக்கும் பணிகள் காரணமாக நாளை (மே 16) சனிக்கிழமை மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை (16.05.2026) சனிக்கிழமை அன்று தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இதை தொடர்ந்து மின் நிறுத்தம் செய்யபடும் பகுதிகள் முத்தையாபுரம், தோப்புத்தெரு, வடக்குதெரு, பாரதிநகர்,

முள்ளகாடு,அத்திமரப்பட்டி,பொட்டல்காடு, அனல்மின்நகர் பகுதி, அபிராமிநகர், கேம்ப்,சுற்றியுள்ள பகுதிகள்,சுனாமிநகர், கேம்ப்,சவேரியார்புரம், துறைமுகம் மற்றும் துறைமுக, விரநாயக்கன் தட்டு. குடியிருப்பு பகுதிகள் ஆகிய பகுதிகளில் மின் தடை

செய்யப்பட்டுள்ளது.
    user_மா.கணேஷ்
    மா.கணேஷ்
    Local News Reporter ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • கோவில்பட்டியில் நாய்கள் மற்றும் மாடுகள் தொல்லையை கட்டுப்படுத்த - கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் நகரத்தின் அருகிலுள்ள கிராம பகுதிகளிலும் தெருநாய்கள் பொதுமக்களையும் பள்ளி செல்லும் குழந்தைகளையும் விரட்டி செல்வதும் கடிப்பதுமாக உள்ளது. ஏராளமானோர் நாய் கடிபட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள். ஏராளமான மாடுகள் சாலைகளில் சுற்றி திரிவதால் போக்குவரத்து நெருக்கடியும், விபத்துக்களும் நடைபெறுகிறது.நாய்கள் மற்றும் மாடுகள் தொல்லையை கட்டுப்படுத்தி பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு தர வலியுறுத்தி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக தலைவர் தமிழரசன் தலைமையிலும் நிர்வாகி தவம் பாலாஜி முன்னிலையிலும் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்பு நகராட்சி பொறியாளர் சேர்மாக்கணியிடம் மனு வழங்கினர்.ஆர்ப்பாட்டத்தில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, நிர்வாகிகள் நல்லையா, மோகன், HMS வினோபா, ஆவல்நத்தம் லட்சுமணன், நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ரவிக்குமார், இந்திய கலாச்சார நட்புறவு கழகம் மாநில துணை தலைவர் அபிராமி முருகன், நிர்வாகிகள் வழக்கறிஞர் ஜெய ஸ்ரீ கிரிஸ்டோபர், ராமலட்சுமி, மணிமேகலை, மக்கள் நீதி மய்யம் கல்லூரணி ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு காமராஜர் பேரவை நாஞ்சில் குமார், INTUC ராஜசேகரன், திராவிடர் கழகம் செண்பகராஜ், மக்கள் நலம் அறக்கட்டளை மாரிமுத்து குமார், ஜெகநாதன், பகத்சிங் இரத்ததான கழகம் காளிதாஸ், லட்சுமணன், வேல்முருகன், தியாகி விஸ்வநாததாஸ் பேரவை சங்கர், தமிழ்நாடு பெண்கள் இணைப்புகுழு மேரிஷீலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    1
    கோவில்பட்டியில் நாய்கள் மற்றும் மாடுகள் தொல்லையை கட்டுப்படுத்த -  கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் நகரத்தின் அருகிலுள்ள கிராம பகுதிகளிலும் தெருநாய்கள் பொதுமக்களையும் பள்ளி செல்லும் குழந்தைகளையும் விரட்டி செல்வதும் கடிப்பதுமாக உள்ளது. ஏராளமானோர் நாய் கடிபட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள். ஏராளமான மாடுகள் சாலைகளில் சுற்றி திரிவதால் போக்குவரத்து நெருக்கடியும், விபத்துக்களும் நடைபெறுகிறது.நாய்கள் மற்றும் மாடுகள் தொல்லையை கட்டுப்படுத்தி பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு தர வலியுறுத்தி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக தலைவர் தமிழரசன் தலைமையிலும் நிர்வாகி தவம் பாலாஜி முன்னிலையிலும் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்பு நகராட்சி பொறியாளர் சேர்மாக்கணியிடம் மனு வழங்கினர்.ஆர்ப்பாட்டத்தில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, நிர்வாகிகள் நல்லையா, மோகன், HMS வினோபா, ஆவல்நத்தம் லட்சுமணன், நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ரவிக்குமார், இந்திய கலாச்சார நட்புறவு கழகம் மாநில துணை தலைவர் அபிராமி முருகன், நிர்வாகிகள் வழக்கறிஞர் ஜெய ஸ்ரீ கிரிஸ்டோபர், ராமலட்சுமி, மணிமேகலை, மக்கள் நீதி மய்யம் கல்லூரணி ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு காமராஜர் பேரவை நாஞ்சில் குமார், INTUC ராஜசேகரன், திராவிடர் கழகம் செண்பகராஜ், மக்கள் நலம் அறக்கட்டளை மாரிமுத்து குமார், ஜெகநாதன், பகத்சிங் இரத்ததான கழகம் காளிதாஸ், லட்சுமணன், வேல்முருகன், தியாகி விஸ்வநாததாஸ் பேரவை சங்கர், தமிழ்நாடு பெண்கள் இணைப்புகுழு மேரிஷீலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    user_News
    News
    கோவில்பட்டி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • வேளாங்கண்ணி திருத்தலம் திருவிழா நடைபெறுகிறது மேலும் பார்க்க
    1
    வேளாங்கண்ணி திருத்தலம் திருவிழா நடைபெறுகிறது மேலும் பார்க்க
    user_M.Maria Ronickam
    M.Maria Ronickam
    கல்குளம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • அய்யனார் குளம் துலங்கும்பதி அய்யா சுவாமி கோயிலில் ஆவணி பெருந்திருவிழா கொடியேற்றம். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள நெல்லை மாவட்டத்தின் தலைமை பதியாக விளங்கும் அய்யனார்குளம் துலங்கும்பதி துவரயம்பதி நாராயண சுவாமி திருக்கோயில் ஆவணி பெருந்திருவிழா பத்து நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம் அதையொட்டி இன்று பக்தர்கள் அய்யா சிவ சிவ அரகரா சரண கோஷங்கள் முழங்க திருக்கொடி ஏற்றப்பட்டது. இன்று தொடங்கிய விழாவானது வரும் 7 தேதி திருத்தேரோட்டத்துடன் நிறைவடையும். மேலும் விழா காலங்களில் நாள்தோறும் மதியம் உகப்படிப்பு உச்சிப்படிப்பு வாசிக்கப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். பத்து நாட்கள் அய்யா நாராயண சுவாமி நாகம்,அனுமன்,கருடன்,போன்ற வெவ்வேறு வாகனங்கள் வந்து பக்தர்களுக்கு காட்சி வழங்குவார்கள்.
    1
    அய்யனார் குளம் துலங்கும்பதி அய்யா சுவாமி கோயிலில் ஆவணி பெருந்திருவிழா கொடியேற்றம்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள நெல்லை மாவட்டத்தின் தலைமை பதியாக விளங்கும் அய்யனார்குளம் துலங்கும்பதி துவரயம்பதி நாராயண சுவாமி திருக்கோயில் ஆவணி பெருந்திருவிழா பத்து நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம் அதையொட்டி இன்று பக்தர்கள் அய்யா சிவ சிவ அரகரா சரண கோஷங்கள் முழங்க திருக்கொடி ஏற்றப்பட்டது.
இன்று தொடங்கிய விழாவானது வரும் 7 தேதி திருத்தேரோட்டத்துடன் நிறைவடையும். மேலும் விழா காலங்களில் நாள்தோறும்  மதியம்  உகப்படிப்பு உச்சிப்படிப்பு வாசிக்கப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
பத்து நாட்கள் அய்யா நாராயண சுவாமி நாகம்,அனுமன்,கருடன்,போன்ற வெவ்வேறு வாகனங்கள் வந்து பக்தர்களுக்கு காட்சி வழங்குவார்கள்.
    user_Jil jolly Club
    Jil jolly Club
    அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, தமிழ்நாடு•
    5 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.