Shuru
Apke Nagar Ki App…
வளநாடு அருகே தேர்தலின்போது போராட்டத்தில் ஈடுபட்டதாக 31 பேர் மீது வழக்கு திருச்சி மாவட்டம் மருங்காபுரியை அடுத்த வளநாடு அருகே வெள்ளையன்கோன்பட்டியில் கடந்த 23-ந் தேதி சட்டமன்ற தேர்தலின்போது, வாக்குச்சாவடி மையத்தில் இருந்து 100 மற்றும் 200 மீட்டர் தூரத்தில் வாக்கு சேகரித்ததாக கூறப்படுகிறது. அப்போது பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் லோகேஷ் அங்கிருந்தவர்களை கலைந்து செல்லும் படி வலியுறுத்தியபோது, அவர்கள் கலைந்து செல்ல மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் சண்முகமூர்த்தி (வயது 29) உள்ளிட்ட 31 பேர் மீது வளநாடு போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Usha arun News
வளநாடு அருகே தேர்தலின்போது போராட்டத்தில் ஈடுபட்டதாக 31 பேர் மீது வழக்கு திருச்சி மாவட்டம் மருங்காபுரியை அடுத்த வளநாடு அருகே வெள்ளையன்கோன்பட்டியில் கடந்த 23-ந் தேதி சட்டமன்ற தேர்தலின்போது, வாக்குச்சாவடி மையத்தில் இருந்து 100 மற்றும் 200 மீட்டர் தூரத்தில் வாக்கு சேகரித்ததாக கூறப்படுகிறது. அப்போது பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் லோகேஷ் அங்கிருந்தவர்களை கலைந்து செல்லும் படி வலியுறுத்தியபோது, அவர்கள் கலைந்து செல்ல மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் சண்முகமூர்த்தி (வயது 29) உள்ளிட்ட 31 பேர் மீது வளநாடு போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே ஆர்.எஸ். வையம்பட்டியில் நேற்று சூறைகாற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக பொம்மகிருஷ்ணன் என்பவர் வீடானது அருகில் உள்ள புளிய மரம் விழுந்ததில் சேதாரம் அடைந்துள்ளது. இதையறிந்த சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பொம்மகிருஷ்ணனுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என திருச்சி தெற்கு மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதி தமிழர் தேசம் கட்சியின் சார்பாக கோரிக்கை வைத்துள்ளனர்.1
- அன்னவாசல் சுற்று வட்டார பகுதிகளில் திடிரென பலத்த காற்றுடன் மழை பெய்தது பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் அன்னவாசல், இலுப்பூர், முக்கண்ணாமலைப்பட்டி, வயலோகம், பரம்பூர், சித்தன்னவாசல், குடுமியான்மலை, மெய்வழிச்சாலை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக சித்திரை வெயில் வாட்டி வதைத்து வந்தது இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மிகவும் சிரமடைந்தனர் இந்தநிலையில் நேற்று மாலை அன்னவாசல் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது இதனைத் தொடர்ந்து திடிரென பலத்த காற்றுடன் மழை பெய்தது ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த மழையால் குளிர்ச்சியான சூழல் உருவாகியது இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் இந்த தொடர் காற்று மழையால் முக்கண்ணாமலைப்பட்டி சக்கரன்குளம் சாலையில் இருந்த மரம் ஒன்று சாலையில் விழுந்தது இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சிரமம் அடைந்தனர் இதேபோன்று அன்னவாசல் இலுப்பூர் சாலையோரங்களில் இருந்த மரக்கிளைகள் உடைந்து சாலைகளில் விழுந்தது இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர் பலத்த காற்று வீசியதால் அன்னவாசல் சுற்று வட்டார பகுதியில் மின் தடை ஏற்பட்டது இந்த மழையால் முக்கண்ணாமலைப்பட்டி வாரசந்தையில் தண்ணீர் புகுந்தது தொடர்ந்து மழை பெய்ததால் பொதுமக்கள் கூட்டம் இல்லாததால் சந்தை வெறிச்சோடி காணப்பட்டது இதனால் வியபாரிகள் சிரமம் அடைந்தனர்3
- திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் உள்ள கோம்பைப்பட்டி, கணக்கன்பட்டி ஆகிய பகுதியில் கோடை வெயிலின் காரணமாக வெப்பம் அதிகமாக இருந்த நிலையில் தற்போது சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருவதால் அப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.1
- மதுரையில் நேற்று (மே.2) இரவு கனமழை பெய்ததால் அமிகா ஹோட்டல் அருகே அவனியாபுரத்தையும் மதுரை தூத்துக்குடி புறவழிச்சாலையையும் இணைக்கும் பெரியார் நகர் சாலையில், மின் கம்பம் ஒன்று சரிந்து விழுந்த காரணத்தால் சாலை மூடப்பட்டது. சாலையிலிருந்து மின்கம்பிகள் அகற்றப்படும் பணிகள் தொடங்கின. இதனால் அப்பகுதியில் மின்சாரம் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் பொது மக்கள் சிரமப்பட்டனர்1
- சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியில் சித்தர் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி எல்லை பந்தயத்தில் சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து 46 ஜோடி மாடுகள் பங்கேற்றன. இரு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில், பெரிய மாட்டு பிரிவிற்கு 7 மைல் தூரமும், இரு சுற்றுகளாக நடைபெற்ற சிறிய மாட்டு பிரிவிற்கு 5 மைல் தூரமும் பந்தய எல்லைகளாக நிர்ணயிக்கப்பட்டது. பெரிய மாட்டு பிரிவில் 18 ஜோடி மாடுகளும் சிறிய மாட்டு பிரிவில் 28 ஜோடி மாடுகளும் பங்கேற்றன. கொல்லங்குடி - காளையார்கோவில் சாலையில் நடைபெற்ற போட்டியினை அழகாபுரி, கொல்லங்குடி, காளையார்கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான ரசிகர்கள் சாலையின் இரு புறங்களிலும் நின்று உற்சாகமாக கண்டுகளித்தனர். பெரிய மாட்டு பிரிவில் ஒரு மாட்டு வண்டி சாலையோரம் இருந்த கம்பத்தில் மீது மோதி உடைந்த நிலையிலும் ஒரு மாடு சாரதி இல்லாத நிலையிலும் தொடர்ந்து போட்டியில் பங்கேற்று ஓடியது பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. விறுவிறுப்பான நடைபெற்ற போட்டியில் முதல் நான்கு இடங்களை பிடித்த மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும், ரொக்க பரிசும், பரிசு கோப்பையும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.1
- நாமகிரிப்பேட்டையில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் சித்திரை மாத திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினமும் அம்மனுக்கு பல்வேறு நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் முக்கிய நிகழ்வாக, நேற்று அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த விழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.1
- திருச்சி மாவட்டம் மருங்காபுரியை அடுத்த வளநாடு அருகே வெள்ளையன்கோன்பட்டியில் கடந்த 23-ந் தேதி சட்டமன்ற தேர்தலின்போது, வாக்குச்சாவடி மையத்தில் இருந்து 100 மற்றும் 200 மீட்டர் தூரத்தில் வாக்கு சேகரித்ததாக கூறப்படுகிறது. அப்போது பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் லோகேஷ் அங்கிருந்தவர்களை கலைந்து செல்லும் படி வலியுறுத்தியபோது, அவர்கள் கலைந்து செல்ல மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் சண்முகமூர்த்தி (வயது 29) உள்ளிட்ட 31 பேர் மீது வளநாடு போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.1
- துவரங்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. இதனால் பல பகுதியல் மரம், செடிகள் கூட காய்ந்து கருகும் நிலையில் இருந்து வருகின்றன. மேலும் பொதுமக்கள் முதியவர்கள் வெயிலின் தாக்கத்தால் வெளியில் வருவதையே தவிர்த்து வருகின்றனர். இந்த நிலையில் காலையில் இருந்து மாலை வரை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. தொடர்ந்து மாலை பொழுதில் கருமேக கூட்டம் ஒன்று கூடி வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கும் வகையில் பலத்த காற்று வீச தொடங்கியது. இதில் பல இடங்களில் மரங்கள் சாய்த்தன. தொடர்ந்து சூறை காற்றுடன் பலத்த மழை பெய்யத்தொடங்கியது.இடி, மின்னலுடன் பலத்த மழை சுமார் இரண்டு மணிநேரம் கொட்டி தீர்த்தது. இதனால் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இருசக்கர வாகனஓட்டிகள் வாகனங்களை ஓட்ட முடியாமல் சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு மழைக்கு ஒதுங்கினர். இந்த கனமழையால் விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களுக்கு ஏதுவாக இருக்கும் என்று மகிழ்ச்சி அடைந்தனர்.1
- தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கும் தேர்தல் முடிவுகள் 4ஆம் தேதி திங்கள் கிழமை வெளியாக உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் பாதுகாக்க நாங்கள் இருக்கின்றோம் எனவும் வேடசந்தூர் போலீசார் வேடசந்தூர் நகர் பகுதியில் கொட்டும் மழை மற்றும் சூறாவளி காற்றிலும் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர். வேடசந்தூர் ஆய்வாளர் கணேசமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த அணிவகுப்பு ஊர்வலத்தில் வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர் பவித்ரா முன்னிலை வகித்தார். வேடசந்தூர் கூம்பூர் மற்றும் ஆயுதப்படை போலீசார் வேடசந்தூர் ஆர்.ஹச்.காலனி முதல் ஆத்துமேடு வரை ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்தனர்.1