Shuru
Apke Nagar Ki App…
செல்லப்பம்பட்டி அருகே சுயம்பு மகா மாரியம்மன் கோவில் திருவிழா நாமக்கல் மாவட்டம் , செல்லப்பம்பட்டி அருகே சுயம்பு மகா மாரியம்மன் கோவில் உள்ளது . இக்கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 30/4/2026 இன்று மாலை கோவிலில் அம்மனுக்கு பொங்கல் வைக்கப்பட்டு மாவிளக்கு பூஜை நடைபெற்றது. பின் பக்தர்கள் அலகு குத்தி நேத்திக்கடன் செலுத்தினர். இந்த நிகழ்வில் பொதுமக்கள் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
DHINESH KUMAR
செல்லப்பம்பட்டி அருகே சுயம்பு மகா மாரியம்மன் கோவில் திருவிழா நாமக்கல் மாவட்டம் , செல்லப்பம்பட்டி அருகே சுயம்பு மகா மாரியம்மன் கோவில் உள்ளது . இக்கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 30/4/2026 இன்று மாலை கோவிலில் அம்மனுக்கு பொங்கல் வைக்கப்பட்டு மாவிளக்கு பூஜை நடைபெற்றது. பின் பக்தர்கள் அலகு குத்தி நேத்திக்கடன் செலுத்தினர். இந்த நிகழ்வில் பொதுமக்கள் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அத்தனூர் பகுதிகளில் குடிநீர் விநியோகம் சார்பாக பேரூராட்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அத்தனூர் பேரூராட்சிக்கு குடிநீர் வழங்கும் காவேரி குடிநீர் ஆதாரமான குதிரை கால் மேடு பகுதியில் பராமரிப்பு பணிகள் மே 4 தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதுவரை குறைவான அளவிலே குடிநீர் திறந்து விடப்படும் எனவே தற்போது உள்ள குடிநீரை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அத்தனூர் குடிநீர் வாரியம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.1
- நாமக்கல் மாவட்டம் , செல்லப்பம்பட்டி அருகே சுயம்பு மகா மாரியம்மன் கோவில் உள்ளது . இக்கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 30/4/2026 இன்று மாலை கோவிலில் அம்மனுக்கு பொங்கல் வைக்கப்பட்டு மாவிளக்கு பூஜை நடைபெற்றது. பின் பக்தர்கள் அலகு குத்தி நேத்திக்கடன் செலுத்தினர். இந்த நிகழ்வில் பொதுமக்கள் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.1
- எடப்பாடி பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு இரண்டாவது நாளாக சித்திரை தேரோட்டம் வெகு விமர்சியாக நடைபெற்றது... எடப்பாடி பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் சித்திரை தேர் திருவிழாவானது ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறுவது வழக்கம். அதனைத் தொடர்ந்து நேற்று முதல் தேரோட்டம் விழா விமர்சையாக நடைபெற்ற வருகிறது. இதனைத் தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக தேரோட்டமானது மேட்டு தெருவிலிருந்து கடைவீதி வரை இழுத்துவரப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது... முன்னதாக அலங்கரிக்கப்பட்டுள்ள மூன்று தேர்களில் முதலாவதாக விநாயகரும் , இரண்டாவதாக பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரரும் மற்றும் மூன்றாவதாக முருக பெருமான் ஆகிய மூன்று தேர்களையும் சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிவசிவா மற்றும் அரோகரா கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்... இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் சத்தாபரணம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது...1
- இன்று நாடு முழுவதும் நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே தாவாந்தெரு பகுதியில் உள்ள அஜித் ரசிகர்கள் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏழை எளிய பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி அஜித் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினர்.1
- தருமபுரி அடுத்த அதியமான்கோட்டையில் வள்ளல் அதியமான் பிறந்த நாள் விழா தகடூரை ஆட்சிபுரிந்த மன்னர் வள்ளல் அதியமான் பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், நடப்பு ஆண்டுஅதியமான் பிறந்த நாள் விழா தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் உள்ள அதியமான் கோட்டத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் பங்கேற்று வள்ளல் அதியமான் மற்றும் அவ்வையார் உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அதியமான் வரலாறு தொடர்பான தகவல்களுடன் அதியமான் கோட்டத்தில் நிறுவப்பட்டுள்ள பதாகைகளை பார்வையிட்டார். மேலும் வள்ளல் அதியமானின் புகழ் இளைய தலைமுறையினரும் அறியும் வைகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பொதுமக்களும் அதியமான் மற்றும் அவ்வையார் உருவச் சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.1
- திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியம் தென்னம்பட்டி மற்றும் பிலாத்து ஊராட்சி ஆண்டிபட்டியில் இன்று மூன்று நாள் பெரிய கும்பிடு விழா சித்திரை திருவிழா நடைபெறுகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் முதல் நாளான இன்று பக்தர்கள் 15 நாள் விரதம் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து விநாயகருக்கு அபிஷேகம் செய்தனர்.1
- திருவெறும்பூர் அருகே உள்ள தெற்கு காட்டூர் அழகு முத்து மாரியம்மன் கோவில் 42ம் ஆண்டு திருவிழா நேற்று விமர்சையாக நடந்தது முன்னைக சித்திரை மாதம் 11 ஆம் தேதி (24-04-2026) காப்பு கட்டுதல் நடந்தது அதன் தொடர்ச்சியாக பாப்பாக்குறிச்சி கிராமத்தில் உள்ள மதுரை வீரன் சுவாமி கோவிலிலில் இருந்து 'சக்தி வெள்ளிகரகம்' சங்கிலிகருப்பு புறப்பட்டு காவேரிநகர் அழகு சக்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து பூச்சொரிதல், அலகு காவடி, பால்குடம், தீர்த்த குடம் அம்பாள் அலங்காரத்துடன் அழகு முத்து மாரியம்மன் கோயில் வந்தடைந்தது அங்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபாடு செய்தனர். 2 ம் தேதியான மாலை அன்னதானமும் இரவு 6.00 உற்சவ அம்பாள் குதிரை வாகனத்தில், 'சக்தி வெள்ளிகரகம் 'சங்கிலி கருப்பு வீதி உலா மற்றும் குட்டிக்குடித்தல் நிகழ்ச்சி நடைபெறும். இதில் பக்தர்கள் தங்களது இல்லத்திலும் கோயிலிலும் ஆடு, கோழி பழியிட்டு நேர்த்திக் கடன் செலுத்தலாம். 3ம் தேதி காலை மேல் மஞ்சள் நீராட்டு விழாவும் 8.00 மணிக்கு சங்கிலி கருப்புக்கு படையலிட்டு மாபெரும் அன்னதானம் நடைபெறும். இதில் காட்டூர் சுற்றுவட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்..1
- எடப்பாடியில் அஜித் ரசிகர்கள் சார்பில் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு ஏழை எளிய பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது... நாடு முழுவதும் தல அஜித் பிறந்தநாள் விழா கோலாக்காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது .அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் எடப்பாடி உள்ள தாவந்தெரு பகுதியில் சேலம் மாவட்ட அஜித் ரசிகர்கள் சார்பில் இன்று தல அஜித் பிறந்தநாள் மற்றும் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு ஏழை எளிய பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது... அன்னதான விழாவில் சேலம் சேலம் மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட அஜித் ரசிகர்கள் பங்கேற்று சுமார் 10,000-க்கும் மேற்பட்ட ஏழை எளிய பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கினர்... இதில் எடப்பாடி நகர அஜித் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்...1