Shuru
Apke Nagar Ki App…
மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் என்டிஏ கூட்டணியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர். விஜயகுமார் இன்று மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயசித்ரகலாவிடம் வேட்புமனுவை அளித்தார். அதனைத் தொடர்ந்து மணப்பாறை நகரின் முக்கிய வீதிகளில் பிரச்சாரமும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் மாவட்ட செயலாளர் ரத்தினவேல், பாஜக மாவட்ட செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திரசேகர், சின்னசாமி, ராமச்சந்திரன், வழக்கறிஞர் முருகன் உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Usha arun News
மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் என்டிஏ கூட்டணியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர். விஜயகுமார் இன்று மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயசித்ரகலாவிடம் வேட்புமனுவை அளித்தார். அதனைத் தொடர்ந்து மணப்பாறை நகரின் முக்கிய வீதிகளில் பிரச்சாரமும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் மாவட்ட செயலாளர் ரத்தினவேல், பாஜக மாவட்ட செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திரசேகர், சின்னசாமி, ராமச்சந்திரன், வழக்கறிஞர் முருகன் உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே மருங்காபுரியில் ஸ்ரீபகவதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் சுமார் ஐநூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாகும். மணப்பாறை பகுதி மக்களிடையே மருங்காபுரி பகவதி அம்மன் கோவில் முக்கியத்துவம் பெற்றதாக விளங்கி வருகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவில் முக்கியத்துவம் வாய்ந்த பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அதேபோல் இந்த ஆண்டும் திருவிழாவானது கடந்த 29 ம் தேதி மருங்காபுரி அருகே உள்ள மொட்டமலை போடிகிரிநாதர் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு காப்புகட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு தரப்பினரின் மண்டகப்படி நிகழ்சிகள் தினந்தோறும் நடந்து வந்தது. முக்கிய விழாவான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வரிசையாக வந்து பூ குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் ஏராளமான சிறுவர்கள், சிறுமிகள் மற்றும் பெண்களும் குழந்தைகளுடன் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கனக்கான பக்தர்கள் தீமிதி திருவிழாவில் கலந்து கொண்டனர்.1
- திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி 2026 தேர்தலை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் கப்பல் பட்டி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் திமுக வேட்பாளர் அர. சக்கரபாணி பொதுமக்களிடம் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை கூறி வாக்கு சேகரித்தார். அமைச்சருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து பூக்கள் தூவி உற்சாகமாக வரவேற்றனர். உடன் ஒன்றிய திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.1
- குளித்தலை தொகுதி வேட்பாளர் சூரியனூர் சந்திரன் பேரணியாக திரண்டு சென்று வேட்பு மனு தாக்கல் கரூர் மாவட்டம் குளித்தலை திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி குளித்தலை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சூரியனூர் சந்திரன் இன்று குளித்தலை சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாக திரண்டு சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்1
- Post by R. Suresh1
- மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் (193) புதிய தமிழகம் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் இரும்பொறை சேதுராமன் நேற்று (6.4.26) வேட்புமனு தாக்கல் செய்தார் அவருடன் மேற்கு மாவட்ட செயலாளர் விஜயகுமார் மற்றும் கிழக்கு தொகுதி வேட்பாளர் பாரதிராஜா கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணன் சுதாகர் மேற்கு ஒன்றிய செயலாளர் லோகநாதன் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர் இரும்பொறை சேதுராமன் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கரட்டுபட்டி என்ற ஊரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது1
- திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் ஆத்தூர் கிழக்கு ஒன்றியத்தில் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் விஸ்வநாதன், பிள்ளையார் நத்தம், பித்தளைப்பட்டி, வக்கம்பட்டி, முன்னிலைக்கோட்டை, ஆரியநல்லூர், பண்ணப்பட்டி ஆகிய ஊராட்சி பகுதிகளிலும் ஆலமரத்துப்பட்டி ஊராட்சியில் போக்குவரத்துநகர், மற்றும் பஞ்சம்பட்டி ஊராட்சி பகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார். உடன் மாவட்ட , ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1
- *பெரியகுளம் தொகுதி த.வெ.க வேட்பாளருக்கு ஆதரவாக தேனி உழவர் சந்தை பகுதியில் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்த த.வெ.க மகளிர் அணியினர்* *தாங்கள் வாழ்வதே கலைஞர் கட்டிக் கொடுத்த உழவர் சந்தையால் தான், எங்கள் ஓட்டு ஸ்டாலினுக்கு தான் என்று விவசாயி தெரிவித்ததால் அதிர்ச்சி அடைந்த த.வெ.கவினர்* தேனி உழவர் சந்தையில் த.வெ.க மகளிர் அணியினர் சார்பில் பெரியகுளம் தொகுதி தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் சபரி ஐங்கரனுக்கு ஆதரவாக வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் அப்போது உழவர் சந்தையில் காய்கறி விற்பனை செய்யும் விவசாயிடம் துண்டு பிரசுரம் வழங்கி தங்கள் கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டுகோள் விடுத்தனர் ஆனால் தாங்கள் வாழ்வதே கலைஞர் கட்டிக் கொடுத்த உழவர் சந்தையால் தான் அதனால் எங்கள் ஓட்டு ஸ்டாலினுக்கு தான் என்று கூறியதால் த.வெ.கவினர் அதிர்ச்சி அடைந்தனர் தொடர்ந்து காய்கறி வாங்குவதற்கு வருகை தந்த வயதான பெண்மணியிடம் தளபதி விஜய்க்கு வாக்களியுங்கள் என கோரிக்கை வைத்த நிலையில் தளபதி வந்து நாட்டுக்கு என்ன செய்யப் போகிறார் என கூறியதால் அதிர்ச்சியடைந்த கட்சியினர் அவர் மாதம் 2000 ரூபாய் தருகிறார், சிலிண்டர் தருகிறார் நல்லாட்சி தருவார் என கூறி தொடர்ந்து அப்பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்1
- கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கீழ தாளியாம்பட்டி ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு குளித்தலை கடம்ந்துறை ஆற்றில் இருந்து தீர்த்த குடம் பால்குடம் எடுத்துக்கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக தாளியாம்பட்டி ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் வந்தடைந்தனர் பின்பு கொண்டுவரப்பட்ட தீர்த்தங்களை தங்களது கைகளாலே அம்மனுக்கு ஊற்றி அபிஷேகம் செய்து வழிபட்டனர்1