Shuru
Apke Nagar Ki App…
சேலம் காந்தி மைதானத்தில் இன்று லையோ ஈவன்ஸ் என்ற தனியார் நிறுவனம், முற்றிலும் குழந்தைகளை வைத்து போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை நடத்தியது. போதைப்பொருள் நடமாட்டத்தால் ஏற்படும் விளைவுகள் மற்றும் இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் அதிக நேரம் கைப்பேசியை உபயோகிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இந்த மாரத்தான் போட்டியில் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தி வருவதாக இந்த தனியார் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். சேலத்தில் வித்தியாசமான முறையில் குழந்தைகளைக் கொண்டு இந்த மாரத்தான் போட்டி நடத்தப்பட்டுள்ளது.
Rajendran
சேலம் காந்தி மைதானத்தில் இன்று லையோ ஈவன்ஸ் என்ற தனியார் நிறுவனம், முற்றிலும் குழந்தைகளை வைத்து போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை நடத்தியது. போதைப்பொருள் நடமாட்டத்தால் ஏற்படும் விளைவுகள் மற்றும் இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் அதிக நேரம் கைப்பேசியை உபயோகிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இந்த மாரத்தான் போட்டியில் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தி வருவதாக இந்த தனியார் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். சேலத்தில் வித்தியாசமான முறையில் குழந்தைகளைக் கொண்டு இந்த மாரத்தான் போட்டி நடத்தப்பட்டுள்ளது.
More news from தமிழ்நாடு and nearby areas
- சேலம் காந்தி மைதானத்தில் இன்று லையோ ஈவன்ஸ் என்ற தனியார் நிறுவனம், முற்றிலும் குழந்தைகளை வைத்து போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை நடத்தியது. போதைப்பொருள் நடமாட்டத்தால் ஏற்படும் விளைவுகள் மற்றும் இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் அதிக நேரம் கைப்பேசியை உபயோகிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இந்த மாரத்தான் போட்டியில் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தி வருவதாக இந்த தனியார் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். சேலத்தில் வித்தியாசமான முறையில் குழந்தைகளைக் கொண்டு இந்த மாரத்தான் போட்டி நடத்தப்பட்டுள்ளது.1
- தாரமங்கலம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவிலில் பிரதோஷ தினத்தை முன்னிட்டு சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் சிறப்பாக நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட காளை வாகனத்தில் சிவபெருமானும் பார்வதி தேவியாரும் ஒருங்கே அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். சிவமேளம் முழங்க, பக்தர்களின் 'சிவாய நம' கோஷம் விண்ணை எட்ட, அம்மையப்பன் திருக்கோவிலைச் சுற்றி திரு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மையப்பனை தரிசித்து வழிபட்டனர். வழிபாட்டின் நிறைவாக பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பிரதோஷத்தையொட்டி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.1
- ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள சூரியம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில், டாஸ்மாக் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் திடீரென குடியேறும் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோட்டில் டாஸ்மாக் ஊழியர்களின் இந்தப் போராட்டம் மூன்றாவது நாளாக நீடித்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஊழியர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் சித்தோடு போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து, காவல்துறை வாகனம் மூலமாக அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர்.1
- தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீகோடாளம்மன் திருக்கோவில் சிதலமடைந்து, விளக்கு ஏற்றக்கூட பணம் இல்லாமல் மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது. மொரப்பூர் நெடுஞ்சாலையில் இக்கோயிலுக்குச் சொந்தமாக சுமார் 20-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் உள்ளது. இக்கோயிலை நேரில் பார்வையிட்ட திருத்தொண்டர்கள் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன், கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள கட்டுமானங்களை ஆய்வு செய்தார். தொடர்ந்து, இந்து அறநிலைத்துறை ஆய்வாளர் மற்றும் செயல் அலுவலரிடம் எந்தவொரு கட்டிடத்திலும் 'இந்து அறநிலைத்துறை கட்டிடம்' என்ற பெயர் பலகை இல்லாதது, கட்டிடங்களுக்கு வாடகை முறையாக வசூலிக்கப்படுகிறதா என்பது மற்றும் புதிய கட்டுமான பணிகளுக்கு எவ்வாறு அனுமதி கொடுக்கப்பட்டது என்பது குறித்து சரமாரியாகக் கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக முன்னதாக காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார், நிலப் பிரச்சனை எனக் கூறி நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில், கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் சுமார் ₹2 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, காரிமங்கலம் காவல் நிலையத்தில் இந்து அறநிலைத்துறை ஆய்வாளர், செயல் அலுவலர் மற்றும் காரிமங்கலம் காவல் ஆய்வாளர் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி அறங்காவலர் ராதாகிருஷ்ணன் புகார் மனு அளித்துள்ளார்.1
- தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தின் ஸ்ரீ அபித குஜாம்பாள் சமேத அருணேஸ்வரர் மலைக்கோவிலில் சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு ஹோமம் மற்றும் நந்திக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் மற்றும் மகா தீபாராதனை விமரிசையாக நடைபெற்றன. இந்த பிரதோஷ வழிபாட்டு நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் கொள்ளுப்பட்டி மாதப்பன், அர்ச்சகர் புருஷோத்தமன் மற்றும் பக்தர்கள் இணைந்து மேற்கொண்டனர்.1
- சேலம் மாவட்டம் கோரிமேடு பகுதியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய காம்பவுண்ட் சுவரில் அரசியல் கட்சிகள் விளம்பர போஸ்டர்கள் மற்றும் பேனர்களை ஒட்டியுள்ளனர். அரசு சுவர்களில் அரசியல் கட்சிகளின் விளம்பரங்களையோ அல்லது பொது விளம்பரங்களையோ செய்யக்கூடாது என்ற விதிமுறைகள் இருந்தும், சில அரசியல் கட்சிகள் இந்த விதிமுறைகளை மீறி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது அரசியல் சட்டத்தை அவமதிக்கும் செயலாக உள்ளது. எனவே, இதுபோன்ற விதிமீறல் செயல்களைத் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் கடுமையான சட்டங்களை இயற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.1
- சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே ஒதியத்தூர் ஊராட்சியில் உள்ள நான்கு ரோடு ரவுண்டானா பகுதியில் ஒரு தரப்பினரால் அம்பேத்கர் சிலை ஒன்று அமைக்கப்பட்டது. நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்பது போன்ற வடிவில் இந்த அம்பேத்கர் சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த அம்பேத்கர் சிலையினை திறப்பதற்கு மற்றொரு தரப்பினர் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றமான சூழல் உருவானதை அடுத்து, போலீசார் பாதுகாப்புப் பணிக்காக அங்கு குவிக்கப்பட்டனர். அப்போது, அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த மோதல் சம்பவத்தால் ஒதியத்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.1