Shuru
Apke Nagar Ki App…
யாமிருக்க பயமேன் முருகன் அருள் இருந்தால் வாழ்க்கையில் பயம் இல்லை இந்த முருகன் நாமம் உங்கள் மனத்திற்கு அமைதியும் தைரியமும் தரும் ய ஓம் சரவணபவ
M.K.S
யாமிருக்க பயமேன் முருகன் அருள் இருந்தால் வாழ்க்கையில் பயம் இல்லை இந்த முருகன் நாமம் உங்கள் மனத்திற்கு அமைதியும் தைரியமும் தரும் ய ஓம் சரவணபவ
More news from தமிழ்நாடு and nearby areas
- ஆண்டிபட்டி மாணவர்களுக்கு அரசியல் வேண்டாம், என்னை போன்று அரசியலில் சட்டமன்ற உறுப்பினராக விரும்புவதை விட படிப்பில் கவனம் செலுத்தி அரசுத்துறையில் ஆசிரியர், காவலர், வழக்கறிஞர் என்று உயர் பதவிகளில் வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டுமென ஆண்டிப்பட்டி அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் ஆண்டிப்பட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார் தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ரங்கசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் 53 மாணவ மாணவிகளுக்கு இலவச விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சேதுராம் தலைமை தாங்கினார் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பெருமாள் விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார் ஆண்டிப்பட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் கலந்துகொண்டு 42 மாணவர்களுக்கும் 11 மாணவிகளுக்கும் என 53 பேர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாணவ மாணவிகளுக்கு வழங்கினார் நிகழ்ச்சியில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் மாணவர்களுக்கு அரசியலே வேண்டாம் என்னை போன்று சட்டமன்ற உறுப்பினர் ஆவதை விரும்புவதை விட படிப்பில் கவனம் செலுத்தி ஆசிரியர் காவல் கண்கானிப்பாளர் வழக்கறிஞர் என அரசுத்துறையில் உயர் அதிகாரி பதவிகளுக்கு சென்று வாழ்வில் முன்னேற வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார் விழாவில் மாணவ மாணவியர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்1
- கேள்வி கேட்டவரை அடித்த காங். நிர்வாகிகள் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மக்களை சந்திக்க சென்ற கரூர் எம்.பி. ஜோதிமணியின் காரை மறித்து கேள்வி கேட்ட நபரை காங்கிரஸ் நிர்வாகிகள் அடித்து விரட்டி அட்டகாசம். இனையத்தில் வீடியோ வைரல் காட்சிகள்1
- *மணப்பாறை அருகே புத்தாநத்தத்தில் கடை அடைப்பு போராட்டம்* திருச்சி மாவட்டம், மணப்பாறை மணப்பாறை அருகே புத்தாநத்தம்அருகே புத்தாநத்தம் ஊராட்சியை புத்தாநத்தம் மற்றும் இடையபட்டி என இரண்டு ஊராட்சியாக பிரித்து அரசாணை வெளியிட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி மெய்யம்பட்டி, பாறைப்பட்டி, இடையபட்டி, வெள்ளையகவுண்டம்பட்டி, கணவாய்ப்பட்டி, கருஞ்சோலைப்பட்டி உள்ளிட்ட 18 கிராமங்களைச்சேர்ந்த பொதுமக்கள் கடந்த சில தினங்களுக்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து நேற்று புத்தாநத்தத்தில் ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 100 க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அதேபோல் ஆட்டோ மற்றும் மினி சரக்கு வேன்களும் ஓடவில்லை. ஆனால் ஊராட்சியை பிரிப்பதற்கு புத்தாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மட்டும் ஆதரவு தெரிவிக்கின்றனர். இதனால் ஊராட்சியை பிரிக்க ஆதரவு தெரிவிக்கும் ஒரு தரப்பினர் கடைகளை வழக்கம்போல் திறந்து வைத்துள்ளனர. எதிர்ப்பு தெரிவிக்கும் 18 கிராமமக்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊராட்சி பிரிப்பதால் பொருளாதார ரீதியாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடும் எனவே ஊராட்சியை பிரிக்கும் அரசாணையை ரத்து செய்யவேண்டும். ஊராட்சியை இரண்டாக பிரிக்காமல் பேரூராட்சியாக தரம் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சியை இரண்டாக பிரிக்கும் ஆணையை ரத்து செய்யாவிட்டால் கருப்புக்கொடி போராட்டம் நடத்துவோம் எனவும், வரவுள்ள சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராமத்தினர் தெரிவித்துள்ளனர். கடையடைப்பு போர்ட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.1
- அரசு அலுவலரை கண்டித்து போராட்டம் ஆலங்குடி அருகே உள்ள அணவயல் எல்.என்.புரம் ஊராட்சியில் அமைந்துள்ள கோயிலுக்கு சொந்தமான விழா அரங்கம் மற்றும் சந்தைக்கு மின் இணைப்பை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் துண்டித்து விட்டதாக குற்றம் சாட்டி, கிராம மக்கள் புதுக்கோட்டை-சேதுபாவாசத்திரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் வருவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.1
- StartupTN தமிழ்நாடு அரசு தொடங்கிய StartupTN அமைப்பு மூலம், ஒவ்வொரு கிராமத்திலும் புதிய தொழில்முனைவோர்களை உருவாக்க இந்தத் திட்டம் நடத்தப்படுகிறது. 🎯 திட்டத்தின் நோக்கம் கிராமங்களில் உள்ள இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் தொழில் தொடங்க உதவி வேலை தேடுபவர்களை → வேலை கொடுப்பவர்களாக மாற்றுதல் உள்ளூர் வளங்களை பயன்படுத்தி நிலையான வருமானம் 👥 யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்? 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இளைஞர்கள் / பெண்கள் / SHG உறுப்பினர்கள் விவசாயிகள் & கைவினைஞர்கள் புதிய தொழில் யோசனை உள்ள யாரும் 🧑🏫 என்னென்ன உதவிகள் கிடைக்கும்? இலவச பயிற்சி & வழிகாட்டுதல் தொழில் யோசனை (Idea) தேர்வு & மேம்பாடு அரசு மானியம் / வங்கி கடன் தொடர்பான உதவி மார்க்கெட்டிங், டிஜிட்டல் விளம்பரம் Mentor support (அனுபவமுள்ள தொழில்முனைவோர்) 💼 எந்த வகை தொழில்கள்? 🥦 உணவு பதப்படுத்தல் (மில்க், மசாலா, சிறுதானியம்) 🐄 பால் & கால்நடை சார்ந்த தொழில்கள் 🧺 கைவினைப் பொருட்கள் 🌱 இயற்கை / ஆர்கானிக் விவசாயம் 🛍️ கிராம அளவிலான கடைகள் & சேவைகள் 💻 டிஜிட்டல் சேவைகள் (Online services, design, etc.) 📝 எப்படி விண்ணப்பிப்பது? StartupTN இணையதளத்தில் பதிவு உங்கள் தொழில் யோசனையை சமர்ப்பிக்கவும் மாவட்ட / கிராம அளவிலான பயிற்சி முகாம்களில் கலந்து கொள்ளவும் தேர்வு செய்யப்பட்டால் முழு ஆதரவு ⭐ இந்தத் திட்டத்தின் பலன் குறைந்த முதலீட்டில் தொழில் சொந்த ஊரிலேயே வேலை அரசின் நேரடி ஆதரவு நீண்டகால வருமானம் நீங்கள் விரும்பினால்: ₹50,000 – ₹5 லட்சம் முதலீட்டுக்கு ஏற்ற தொழில் யோசனைகள் பொள்ளாச்சி / கோயம்புத்தூர் பகுதிக்கு ஏற்ற கிராம தொழில்கள் விண்ணப்பம் எப்படி எழுதுவது என்று பயிற்சி அளிக்கிறார்கள்!1
- நமது கண்களே நம்மை நம்ப மறுக்கும்.1
- *அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 50 லட்சம் ரூபாய் பெற்று பண மோசடியில் ஈடுபட்டதாக தேனி மாவட்டத்தின் முன்னாள் பிஆர்ஓ மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை* தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பகுதியில் வசித்து வருபவர் சாந்தி, இவரது மகன் சூரிய நாராயணன் படித்து முடித்துவிட்டு அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்துள்ளார் இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு துறை அலுவலராகப் (PRO) பணிபுரிந்து வந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் சாந்திக்கு அறிமுகம் ஆகியுள்ளார் அப்போது செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலராக பணி புரிந்து வருவதால் தனக்கு அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர் என பலருடன் தொடர்பு இருப்பதாகவும் பலருக்கு அரசு வேலை வாங்கி கொடுத்திருப்பதாகவும் 50 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் உதவி மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் (APRO) பணி வாங்கி தருவதாக கூறியுள்ளார் இதனை நம்பிய சாந்தி தனது மகனுக்கு அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பி தவணை முறையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சண்முகசுந்தரம் மற்றும் அவரது மனைவி செண்பகவள்ளி ஆகியோரிடம் 50 லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது பின்னர் தன் மகனுக்கு எப்போது அரசு வேலை கிடைக்கும் என கேட்டபோது சண்முகசுந்தரம் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் சண்முகசுந்தரம் அரசு வேலை வாங்கி தருவதாக 4 நபர்களிடமிருந்து 74 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்துள்ளதாகவும் இதனை அறிந்த சாந்தி தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார் இதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிநேக பிரியா உத்தரவின் படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தேனி மாவட்ட முன்னாள் மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் சண்முகசுந்தரம் மற்றும் அவரது மனைவி செண்பகவள்ளி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சண்முகசுந்தரம் தற்போது சேலம் போக்குவரத்து கழக மக்கள் செய்தி தொடர்பு அலுவலராக (PRO) பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது1
- திண்டுக்கல் கிழக்கு: அமித்ஷாவா..? அவதூறுஷாவா..? திண்டுக்கல்லில் கொந்தளித்த முதல்வர்! திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து பொதுமக்களிடையே பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டிற்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "அமித்ஷாவா அல்லது அவதூறு ஷாவா என சந்தேகம் வருகிறது" என்று பேசினார். உண்மைக்கு புறம்பான விஷயங்களை பேசியதாலும், இந்துக்களின் வழிபாட்டு முறைகளுக்கு எதிராக தமிழ்நாடு செயல்படுகிறது என கூறியதாலும் கண்டனத்தை பதிவு செய்வதாக கூறினார்.1
- மணப்பாறை நகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கு திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இங்கு குப்பைகள் கொட்டகூடாது என்று தமிழக அரசு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை தொடங்கி டெண்டர் விடப்பட்டுள்ளது. இதன்படி வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளில் மக்கும் குப்பைகளை உரமாகவும் மக்காத குப்பைகளை (பிளாஸ்டிக் கழிவுகள்) சிமெண்ட் ஆலைகளுக்கு அனுப்பவேண்டும் என்று அரசு ஆணை சொல்கிறது. ஆனால் , மணப்பாறை நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தாமல் வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளை அப்படியே நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டி வருகின்றனர். இதையறிந்த சமூக ஆர்வலர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.1