Shuru
Apke Nagar Ki App…
மணப்பாறை நகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கு திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இங்கு குப்பைகள் கொட்டகூடாது என்று தமிழக அரசு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை தொடங்கி டெண்டர் விடப்பட்டுள்ளது. இதன்படி வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளில் மக்கும் குப்பைகளை உரமாகவும் மக்காத குப்பைகளை (பிளாஸ்டிக் கழிவுகள்) சிமெண்ட் ஆலைகளுக்கு அனுப்பவேண்டும் என்று அரசு ஆணை சொல்கிறது. ஆனால் , மணப்பாறை நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தாமல் வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளை அப்படியே நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டி வருகின்றனர். இதையறிந்த சமூக ஆர்வலர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
Usha arun News
மணப்பாறை நகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கு திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இங்கு குப்பைகள் கொட்டகூடாது என்று தமிழக அரசு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை தொடங்கி டெண்டர் விடப்பட்டுள்ளது. இதன்படி வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளில் மக்கும் குப்பைகளை உரமாகவும் மக்காத குப்பைகளை (பிளாஸ்டிக் கழிவுகள்) சிமெண்ட் ஆலைகளுக்கு அனுப்பவேண்டும் என்று அரசு ஆணை சொல்கிறது. ஆனால் , மணப்பாறை நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தாமல் வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளை அப்படியே நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டி வருகின்றனர். இதையறிந்த சமூக ஆர்வலர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
More news from Tamil Nadu and nearby areas
- ஆலங்குடி: மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கிய அமைச்சர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு கலை கல்லூரி மாணவர்களுக்கு இன்று மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான சிவ.வீ. மெய்யநாதன் கலந்து கொண்டு கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கி சிற்பித்தார். இந்நிகழ்வில் ஒன்றிய பெருந்தலைவர் தங்கமணி, ரவி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1
- திண்டுக்கல் சோலைஹால் பகுதியில் உள்ள மீன் கடைகளை அகற்றி மேட்டுப்பட்டி சாலைகள் உள்ள குலசாலையில் மீன் மார்க்கெட் இயங்கி வருகிறது1
- வேடசந்தூரில் எம் எல் ஏ அலுவலகம் அருகில் பல நாட்களாக பழுதாகி உள்ள நிலையில் உள்ள அடி பம்ப் இந்த அடி பம்ப்பில் பலர் நல்ல குடி நீர் தேவைக்கு பயனடைந்து வந்தனர் வேடசந்தூர் சுற்றியும் எங்கும் நல்ல தண்ணீர் கிடையாது ஆனால் இந்த பம்ப்பில் மட்டுமே நல்ல தண்ணீர் கிடைக்கும். ஆனால் இப்பொழுதோ இதை சரி செய்து கொடுக்க யாரும் முன் வராததால் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.1
- திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆவண வைப்பறையில் கருநாகப் பாம்பு தீயணைப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டது1
- *பொங்கல் தொகுப்பு வழங்கிய பேரூராட்சி தலைவர்* தமிழகம் முழுவதும் இன்று பொங்கல் தொகுப்புகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக பெரியகுளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தென்கரை பேரூராட்சி பகுதியில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வினை பேரூராட்சி தலைவர் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் கூட்டுறவு துறையினர் கலந்து கொண்டனர்.1
- சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள பூவந்தி பகுதியில் சாலையோரமாக செல்லும் குடிநீர் குழாய் உடைந்து, சுத்தமான குடிநீர் தொடர்ந்து வீணாகி வருகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக பழுதை சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- பெரியகுளம் நகராட்சியில் அலுவலகத்தில் மாதாந்திர கூட்டத்தின் போது அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என நகர்மன்ற உறுப்பினர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் அதேபோல் விசிகவை சேர்ந்த நகர்மன்ற உறுப்பினரும் அடிப்படை வசதிகள் செய்யவில்லை என நகர் மன்ற தலைவரிடம் வாக்குவாதம் ஈடுபட்டார் தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் திமுகவைச் சேர்ந்த நகர் மன்ற தலைவர் சுமிதா சிவகுமார் தலைமையில் இன்று மாதாந்திர கூட்டம் நடைபெற்றது இதில் நகராட்சி ஆணையாளர் நகர் மன்ற உறுப்பினர்கள் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர் அப்போது பாமக நகர்மன்ற உறுப்பினர் குமரன் தனது வார்டுகளான இடுக்கடி லாட்டரி முத்துராஜா தெருவில் கடந்த நான்கு ஆண்டுகளாக அப்பகுதியில் பாதாள சாக்கடை அமைத்து தருமாறு பலமுறை நகர்மன்ற தலைவர் மற்றும் நகராட்சி ஆணையாளருக்கு கோரிக்கை மனு வழங்கியும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என இன்று நகர்மன்ற கூட்டத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் தொடர்ந்து நகர் மன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன் மதன் ஆகியோரும் தங்கள் பகுதியில் முறையாக அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என நகராட்சி ஆணையாளர் மற்றும் நகர மன்ற தலைவரிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் மேலும் நகர மன்ற தலைவரிடம் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளான சாக்கடை வசதி சாலை வசதி, பாதாள சாக்கடை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என நகல் மன்ற தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் அதேபோல் திமுக கூட்டணியில் உள்ள வீசி காவை சேர்ந்த பவானி முருகன் 11 வது வார்டு நகர் மன்ற உறுப்பினராக பதவி வசித்து வருகிறார் இவரது வார்டில் தொடர்ந்து சாலை வசதி சாக்கடை வசதி குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை கடந்த நான்கு ஆண்டுகளாக நகர் மன்ற கூட்டத்தில் நகர்மன்ற தலைவரிடம் எடுத்துரைத்தும் இதுவரை எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தராததால் இன்று நடந்த நகர் மற்றும் கூட்டத்தில் தலைவரிடம் நகர் மன்ற உறுப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் உடனடியாக தங்கள் பகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தர வேண்டும் எனவும் தெரிவித்தார்1
- புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி பேட்டி! புதுகை மன்னர் கல்லூரியில் இன்று தமிழக அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அதில், "நான் நீதிமன்ற அவமதிப்பு செய்யவில்லை, திருப்பரங்குன்றத்தில் பிரச்சனைக்குரிய இடத்தில் ஏற்கெனவே தீபம் ஏற்றப்பட்டுள்ளதா என்பதை தான் நீதிமன்றத்தில் கேட்டோம். நீதிபதிகள் பேய் கதை சொல்லும்போது அமைச்சர் சொல்லக் கூடாதா?, அமித்ஷா அடிக்கடி தமிழகம் வருவது அவருக்குத்தான் ஏமாற்றம்? என்றார்.1