logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

திருவாடானை அருகே வயல்வெளிகளில் சாய்ந்த மின்கம்பங்கள்: விவசாயப் பணிகள் கடுமையாகப் பாதிப்பு திருவாடானை தாலுகாவிற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் வயல்வெளிகளில் ஆபத்தான முறையில் சாய்ந்துள்ள மின்கம்பங்களாலும், தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளாலும் விவசாயப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றன.​சின்னக் கீரமங்கலம் அருகே பறையனேந்தல் குடியிருப்பு எதிர்ப்புறம் உள்ள வயல்வெளியில் எழும்புக் கூடான மின் கம்பம் ஒன்று மிகவும் சாய்ந்த நிலையில், எப்போது வேண்டுமானாலும் விழும் ஆபத்தில் உள்ளது. இதேபோல, ஆதியூர் அருகே மல்லிக்குடி கிராமத்திலும் மின் கம்பம் ஒன்று ஆபத்தான முறையில் வயல்வெளியில் சாய்ந்து நிற்கிறது.​மேலும், மல்லிக்குடி மற்றும் வெளியங்குடி ஆகிய பகுதிகளில் உயர்மின்னழுத்த மின் கம்பிகள் மிகவும் தாழ்வாகச் செல்வதால், அப்பகுதியில் விவசாயப் பணிகளை மேற்கொள்வதில் பெரும் சிக்கல் நிலவுகிறது.​நிலத்தை உழுது விதைப்பது முதல், பயிர்களைப் பராமரித்து அறுவடை செய்வது வரை அனைத்துக் கட்டங்களிலும் விவசாயிகள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டே பணியாற்றும் அவலநிலை நீடிக்கிறது. டிராக்டர் மற்றும் அறுவடை இயந்திரங்களைக் கொண்டுசெல்ல முடியாத சூழல் நிலவுவதால், விவசாயப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.​இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்வாரியத் துறை அதிகாரிகளுக்குப் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன், சாய்ந்த மின்கம்பங்களைச் சீரமைத்து, தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளை உயர்த்தி அமைக்க மின்வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

3 hrs ago
user_அனல் ஆனந்த்
அனல் ஆனந்த்
திருவாடானை, ராமநாதபுரம், தமிழ்நாடு•
3 hrs ago

திருவாடானை அருகே வயல்வெளிகளில் சாய்ந்த மின்கம்பங்கள்: விவசாயப் பணிகள் கடுமையாகப் பாதிப்பு திருவாடானை தாலுகாவிற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் வயல்வெளிகளில் ஆபத்தான முறையில் சாய்ந்துள்ள மின்கம்பங்களாலும், தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளாலும் விவசாயப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றன.​சின்னக் கீரமங்கலம் அருகே பறையனேந்தல் குடியிருப்பு எதிர்ப்புறம் உள்ள வயல்வெளியில் எழும்புக் கூடான மின் கம்பம் ஒன்று மிகவும் சாய்ந்த நிலையில், எப்போது வேண்டுமானாலும் விழும் ஆபத்தில் உள்ளது. இதேபோல, ஆதியூர் அருகே மல்லிக்குடி கிராமத்திலும் மின் கம்பம் ஒன்று ஆபத்தான முறையில் வயல்வெளியில் சாய்ந்து நிற்கிறது.​மேலும், மல்லிக்குடி மற்றும் வெளியங்குடி ஆகிய பகுதிகளில் உயர்மின்னழுத்த மின் கம்பிகள் மிகவும் தாழ்வாகச் செல்வதால், அப்பகுதியில் விவசாயப் பணிகளை மேற்கொள்வதில் பெரும் சிக்கல் நிலவுகிறது.​நிலத்தை உழுது விதைப்பது முதல், பயிர்களைப் பராமரித்து அறுவடை செய்வது வரை அனைத்துக் கட்டங்களிலும் விவசாயிகள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டே பணியாற்றும் அவலநிலை நீடிக்கிறது. டிராக்டர் மற்றும் அறுவடை இயந்திரங்களைக் கொண்டுசெல்ல முடியாத சூழல் நிலவுவதால், விவசாயப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.​இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்வாரியத் துறை அதிகாரிகளுக்குப் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன், சாய்ந்த மின்கம்பங்களைச் சீரமைத்து, தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளை உயர்த்தி அமைக்க மின்வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • திருவாடானை பகுதியில் ஆவின் பால் தட்டுப்பாடு: பொதுமக்கள் மற்றும் விற்பனையாளர்கள் கடும் அவதி திருவாடானை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஆவின் பால் பாக்கெட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவதால், பொதுமக்களும் சில்லறை விற்பனையாளர்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.​இப்பகுதியில் ஆவின் நிர்வாகம் சார்பில் 10 ரூபாய் பால் பாக்கெட் முதல் 1 லிட்டர் பாக்கெட் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. குறிப்பாக, எளிய மற்றும் நடுத்தர மக்கள் 10 ரூபாய் பால் பாக்கெட்டுகளையே அதிக அளவில் வாங்கிப் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இந்த 10 ரூபாய் பால் பாக்கெட்டுகள் முற்றிலுமாக விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.​மேலும், தினசரி தேவைகளுக்கான அரை லிட்டர் பால் பாக்கெட்டுகளும் மிகக் குறைந்த அளவிலேயே விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதனால் பால் முகவர்கள் மற்றும் கடைக்காரர்கள் பால் விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். வழக்கமாக கிடைக்கும் பால் பாக்கெட்டுகள் கிடைக்காததால், பொதுமக்கள் அன்றாடத் தேவைகளுக்குப் பால் பெற முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.​எனவே, பொதுமக்களின் அத்தியாவசியத் தேவையை கருத்தில் கொண்டு, திருவாடானை பகுதியில் சீரான முறையில் ஆவின் பால் விநியோகம் செய்ய சம்பந்தப்பட்ட நிர்வாகமும் அதிகாரிகளும் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
    1
    திருவாடானை பகுதியில் ஆவின் பால் தட்டுப்பாடு: பொதுமக்கள் மற்றும் விற்பனையாளர்கள் கடும் அவதி
திருவாடானை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஆவின் பால் பாக்கெட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவதால், பொதுமக்களும் சில்லறை விற்பனையாளர்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.​இப்பகுதியில் ஆவின் நிர்வாகம் சார்பில் 10 ரூபாய் பால் பாக்கெட் முதல் 1 லிட்டர் பாக்கெட் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. குறிப்பாக, எளிய மற்றும் நடுத்தர மக்கள் 10 ரூபாய் பால் பாக்கெட்டுகளையே அதிக அளவில் வாங்கிப் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இந்த 10 ரூபாய் பால் பாக்கெட்டுகள் முற்றிலுமாக விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.​மேலும், தினசரி தேவைகளுக்கான அரை லிட்டர் பால் பாக்கெட்டுகளும் மிகக் குறைந்த அளவிலேயே விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதனால் பால் முகவர்கள் மற்றும் கடைக்காரர்கள் பால் விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். வழக்கமாக கிடைக்கும் பால் பாக்கெட்டுகள் கிடைக்காததால், பொதுமக்கள் அன்றாடத் தேவைகளுக்குப் பால் பெற முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.​எனவே, பொதுமக்களின் அத்தியாவசியத் தேவையை கருத்தில் கொண்டு, திருவாடானை பகுதியில் சீரான முறையில் ஆவின் பால் விநியோகம் செய்ய சம்பந்தப்பட்ட நிர்வாகமும் அதிகாரிகளும் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
    user_அனல் ஆனந்த்
    அனல் ஆனந்த்
    திருவாடானை, ராமநாதபுரம், தமிழ்நாடு•
    3 hrs ago
  • காரைக்குடி கழனி வாசலில் பருப்பு ஊரணியில் விநாயகர் சிலை கரைத்தனர் : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனி வாசலில் பருப்பு ஊரணி விநாயகர் சிலை கரைத்தனர் பெரியார் சிலையில் இருந்து விநாயகர் சிலையை டிராக்டரில் மேளம் தாளத்துடன் ஊர்வலமாக வந்து கழனிவாசன் பருப்பு ஊரணியில் கரைத்தனர். ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு கண்டுபிடித்தனர்.
    2
    காரைக்குடி கழனி வாசலில் 
பருப்பு ஊரணியில் 
விநாயகர் சிலை கரைத்தனர் :
சிவகங்கை மாவட்டம் 
காரைக்குடி கழனி வாசலில் 
பருப்பு ஊரணி 
விநாயகர் சிலை கரைத்தனர் 
பெரியார் சிலையில் இருந்து விநாயகர் சிலையை டிராக்டரில் மேளம் தாளத்துடன் ஊர்வலமாக வந்து கழனிவாசன் பருப்பு ஊரணியில் 
கரைத்தனர்.
ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு கண்டுபிடித்தனர்.
    user_Nirmala Devi R
    Nirmala Devi R
    காரைக்குடி, சிவகங்கை, தமிழ்நாடு•
    10 hrs ago
  • சிவகங்கையில் அருகே இரட்டை கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி 3 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் – போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சிவகங்கை அருகே கொடிக்காடு கண்மாயில் இரண்டு இளைஞர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று சிவகங்கை அரண்மனை வாயில் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் தொடர்புடையதாக ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் கூலிப்படையினர் என்றும், தவறான நபர்களை அடையாளம் கண்டு கொலை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்துள்ள உறவினர்கள், சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். மேலும், உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும், குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும், மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிவகங்கை பேருந்து நிலையம் அருகே நடைபெற்று வரும் இந்த சாலை மறியல் காரணமாக முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து வரும் போராட்டத்தால் பயணிகள், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். போராட்டக்காரர்களிடம் வருவாய் கோட்டாட்சியர் வட்டாட்சியர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு இன்னும் உடற்கூறு ஆய்வு நடைபெறாததால், நிலவும் பதற்றத்தை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை மாவட்டம் முழுவதும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
    1
    சிவகங்கையில்  அருகே இரட்டை கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி 3 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் – போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 
சிவகங்கை அருகே கொடிக்காடு கண்மாயில் இரண்டு இளைஞர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று சிவகங்கை அரண்மனை வாயில் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த வழக்கில் தொடர்புடையதாக ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் கூலிப்படையினர் என்றும், தவறான நபர்களை அடையாளம் கண்டு கொலை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்துள்ள உறவினர்கள், சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும், உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும், குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும், மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிவகங்கை பேருந்து நிலையம் அருகே நடைபெற்று வரும் இந்த சாலை மறியல் காரணமாக முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து வரும் போராட்டத்தால் பயணிகள், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
போராட்டக்காரர்களிடம் வருவாய் கோட்டாட்சியர் வட்டாட்சியர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு இன்னும் உடற்கூறு ஆய்வு நடைபெறாததால், நிலவும் பதற்றத்தை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை மாவட்டம் முழுவதும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    2 hrs ago
  • புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீரால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா அரிமளம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வந்தது .இதனை அடுத்து அரிமளம் தெப்ப குளத்தில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அரிமளம் பசுமை மீட்பு குழு வரத்து வாரிகளை தூய்மை செய்ததன் பேரில் நீர்வரத்து அதிகரித்ததால் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்
    1
    புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீரால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா அரிமளம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வந்தது .இதனை அடுத்து அரிமளம் தெப்ப குளத்தில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அரிமளம் பசுமை மீட்பு குழு வரத்து வாரிகளை தூய்மை செய்ததன் பேரில் நீர்வரத்து அதிகரித்ததால் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்
    user_Mayilvaganan
    Mayilvaganan
    திருமயம், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    8 hrs ago
  • சிங்கம்புணரியில் 32-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விஜர்சன ஊர்வலம் ஆட்டம் பாட்டத்துடன் விமர்சையாக நடந்தது சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் இந்து முன்னனி நடத்திய 32-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விஜர்சன ஊர்வலம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. தொழிலதிபர் ஆர்.எம்.எஸ்.சரவணன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். 9 முதல் 16 அடி உயரமுள்ள 46 விநாயகர் சிலைகள் மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் தெப்பக்குளத்தில் சிலைகள் விஜர்சனம் செய்யப்பட்டன. பாதுகாப்பில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றினர்.
    1
    சிங்கம்புணரியில் 32-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விஜர்சன ஊர்வலம் ஆட்டம் பாட்டத்துடன் விமர்சையாக நடந்தது
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் இந்து முன்னனி நடத்திய 32-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விஜர்சன ஊர்வலம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. தொழிலதிபர் ஆர்.எம்.எஸ்.சரவணன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். 9 முதல் 16 அடி உயரமுள்ள 46 விநாயகர் சிலைகள் மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் தெப்பக்குளத்தில் சிலைகள் விஜர்சனம் செய்யப்பட்டன. பாதுகாப்பில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றினர்.
    user_ABDUL SALAM
    ABDUL SALAM
    Photographer சிங்கம்புணரி, சிவகங்கை, தமிழ்நாடு•
    48 min ago
  • தந்தை பெரியாரின் 148 பிறந்தநாள் விழா அமைச்சர் பர்வேஸ் பங்கேற்று பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார் புதுக்கோட்டை மாவட்டம் பழைய பேருந்து நிலையத்தில் இருக்கக்கூடிய தந்தை பெரியார் 148 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் சார்பில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் தந்தை பெரியார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்
    2
    தந்தை பெரியாரின் 148 பிறந்தநாள் விழா அமைச்சர் பர்வேஸ் பங்கேற்று பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார் 
புதுக்கோட்டை மாவட்டம் பழைய பேருந்து நிலையத்தில் இருக்கக்கூடிய தந்தை பெரியார் 148 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் சார்பில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் தந்தை பெரியார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்
    user_Prabhu
    Prabhu
    கரம்பக்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    10 hrs ago
  • தந்தை பெரியாரின் 148 வது பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் முகமது பர்வேஸ் மாலை அணிவித்து மரியாதை புதுக்கோட்டை மின்வாரிய அலுவலகம் எதிரே உள்ள தந்தை பெரியாரின் உருவ சிலைக்கு அவரது 148 வது பிறந்த நாளை முன்னிட்டு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் மகளிர் அணியினர் பொறுப்பாளர்கள் ஏராளமானார் கலந்து கொண்டனர்
    1
    தந்தை பெரியாரின் 148 வது பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் முகமது பர்வேஸ் மாலை அணிவித்து மரியாதை
புதுக்கோட்டை மின்வாரிய அலுவலகம் எதிரே உள்ள தந்தை பெரியாரின் உருவ சிலைக்கு அவரது 148 வது பிறந்த நாளை முன்னிட்டு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் மகளிர் அணியினர் பொறுப்பாளர்கள் ஏராளமானார் கலந்து கொண்டனர்
    user_Arokiaraj.J
    Arokiaraj.J
    Local News Reporter கரம்பக்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    10 hrs ago
  • திருவாடானை அருகே வயல்வெளிகளில் சாய்ந்த மின்கம்பங்கள்: விவசாயப் பணிகள் கடுமையாகப் பாதிப்பு திருவாடானை தாலுகாவிற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் வயல்வெளிகளில் ஆபத்தான முறையில் சாய்ந்துள்ள மின்கம்பங்களாலும், தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளாலும் விவசாயப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றன.​சின்னக் கீரமங்கலம் அருகே பறையனேந்தல் குடியிருப்பு எதிர்ப்புறம் உள்ள வயல்வெளியில் எழும்புக் கூடான மின் கம்பம் ஒன்று மிகவும் சாய்ந்த நிலையில், எப்போது வேண்டுமானாலும் விழும் ஆபத்தில் உள்ளது. இதேபோல, ஆதியூர் அருகே மல்லிக்குடி கிராமத்திலும் மின் கம்பம் ஒன்று ஆபத்தான முறையில் வயல்வெளியில் சாய்ந்து நிற்கிறது.​மேலும், மல்லிக்குடி மற்றும் வெளியங்குடி ஆகிய பகுதிகளில் உயர்மின்னழுத்த மின் கம்பிகள் மிகவும் தாழ்வாகச் செல்வதால், அப்பகுதியில் விவசாயப் பணிகளை மேற்கொள்வதில் பெரும் சிக்கல் நிலவுகிறது.​நிலத்தை உழுது விதைப்பது முதல், பயிர்களைப் பராமரித்து அறுவடை செய்வது வரை அனைத்துக் கட்டங்களிலும் விவசாயிகள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டே பணியாற்றும் அவலநிலை நீடிக்கிறது. டிராக்டர் மற்றும் அறுவடை இயந்திரங்களைக் கொண்டுசெல்ல முடியாத சூழல் நிலவுவதால், விவசாயப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.​இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்வாரியத் துறை அதிகாரிகளுக்குப் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன், சாய்ந்த மின்கம்பங்களைச் சீரமைத்து, தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளை உயர்த்தி அமைக்க மின்வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    திருவாடானை அருகே வயல்வெளிகளில் சாய்ந்த மின்கம்பங்கள்: விவசாயப் பணிகள் கடுமையாகப் பாதிப்பு
திருவாடானை தாலுகாவிற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் வயல்வெளிகளில் ஆபத்தான முறையில் சாய்ந்துள்ள மின்கம்பங்களாலும், தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளாலும் விவசாயப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றன.​சின்னக் கீரமங்கலம் அருகே பறையனேந்தல் குடியிருப்பு எதிர்ப்புறம் உள்ள வயல்வெளியில் எழும்புக் கூடான மின் கம்பம் ஒன்று மிகவும் சாய்ந்த நிலையில், எப்போது வேண்டுமானாலும் விழும் ஆபத்தில் உள்ளது. இதேபோல, ஆதியூர் அருகே மல்லிக்குடி கிராமத்திலும் மின் கம்பம் ஒன்று ஆபத்தான முறையில் வயல்வெளியில் சாய்ந்து நிற்கிறது.​மேலும், மல்லிக்குடி மற்றும் வெளியங்குடி ஆகிய பகுதிகளில் உயர்மின்னழுத்த மின் கம்பிகள் மிகவும் தாழ்வாகச் செல்வதால், அப்பகுதியில் விவசாயப் பணிகளை மேற்கொள்வதில் பெரும் சிக்கல் நிலவுகிறது.​நிலத்தை உழுது விதைப்பது முதல், பயிர்களைப் பராமரித்து அறுவடை செய்வது வரை அனைத்துக் கட்டங்களிலும் விவசாயிகள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டே பணியாற்றும் அவலநிலை நீடிக்கிறது. டிராக்டர் மற்றும் அறுவடை இயந்திரங்களைக் கொண்டுசெல்ல முடியாத சூழல் நிலவுவதால், விவசாயப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.​இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்வாரியத் துறை அதிகாரிகளுக்குப் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன், சாய்ந்த மின்கம்பங்களைச் சீரமைத்து, தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளை உயர்த்தி அமைக்க மின்வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_அனல் ஆனந்த்
    அனல் ஆனந்த்
    திருவாடானை, ராமநாதபுரம், தமிழ்நாடு•
    3 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.