Shuru
Apke Nagar Ki App…
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானைப் பகுதி முக்கிய இடங்களில் சுற்றித் திரியும் கால்நடைகள்
நம்ம ஊரு ஆடானை 2
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானைப் பகுதி முக்கிய இடங்களில் சுற்றித் திரியும் கால்நடைகள்
More news from தமிழ்நாடு and nearby areas
- திருப்பாலைக்குடியில் சபடு மண் எடுப்பதில் முறைகேடு பொதுமக்கள் குற்றச்சாட்டு திருப்பாலைக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய கண்மாயிலிருந்து விவசாயப் பயன்பாட்டிற்காக மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், விவசாய நிலங்களில் கொட்டாமல், ஒரு டிராக்டர் மண் ₹1,200 என்ற விலையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட டிராக்டர் லோடு மண் திருப்பாலைக்குடி காவல் நிலையத்திற்கு எதிரே உள்ள மனைப்பிரிவுகளில் (பிளாட்டுகளில்) கொட்டப்பட்டுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.1
- தேவகோட்டை அருகே கோவில் திருவிழா முன்னிட்டு உலக நன்மை வேண்டி விளக்கு பூஜை நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள ஆவரங்காடு முத்துமாரியம்மன் திருக்கோவிலில் ஆடி மாத திருவிழா முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இந்த புனித ஆடி மாதத்தில், உலக நன்மை மற்றும் அனைவரின் நலனை வேண்டி சிறப்பு திருவிளக்கு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டது. பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் கோவிலுக்கு வந்து வழிபட்டனர்.உலக அமைதி, நல்வாழ்வு, மற்றும் அனைவரின் நலனுக்காகவும் இந்த சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பக்தர்கள் தங்கள் குடும்ப நலனுக்காகவும், சமுதாய நன்மைக்காகவும் அம்மனை வேண்டி வழிபட்டனர்.1
- திருமயம் அருகே குருவிக் கொண்டான் பட்டியில் முன்னாள் அமைச்சர் எஸ் ரகுபதி பேட்டி புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள குருவி கொண்டான் பட்டி சொக்கலிங்கம் மீனாட்சி நடுநிலைப் பள்ளியில் AI தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன கணினி பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது. இVவிழாவில் கலந்து கொண்டு கணினி பயிற்சி அறையை திருமயம் MLA ரகுபதி தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.1
- ஒரு லட்சம் ஓட்டில் வெற்றிபெறுவோம் என சொன்னார்கள் ஆனால் நாம ஒரு ஓட்டில் தொங்கி கொண்டு இருக்கிறோம் நெற்குப்பை பேரூராட்சி ராஜவீதியில் முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு ஒரு ஓட்டில் தோல்வி அடைந்த நிலையில் நன்றி தெரிவித்து பிரச்சாரம் செய்தார். அப்போது நம்ம ஆளுங்க யாரை பார்த்தாலும் சொன்னாங்க ஒரு லட்சம் ஓட்டில் வெற்றிபெறுவோம் என ஆனால் நாம ஒரு ஓட்டில் தொங்கி கொண்டு இருக்கிறோம் ஆகையால் வருங்காலங்களில் சிந்தித்து வாக்களியுங்கள் என மு. அமைச்சர் பேசினார். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்1
- மறைந்த விசிக நிர்வாகி உடலுக்கு அஞ்சலி செலுத்திய திருமாவளவன் மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் உடல் நலக்குறைவால் மறைந்த திருமங்கலம் சட்டமன்ற தொகுதி செய்தி தொடர்பாளர் பழக்கடை சுப்ரமணியன் அவர்களின் திருவுடலுக்கு இன்று (ஆக.1) மதுரை வந்த விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார். உடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.1
- வாடிப்பட்டியில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியி... இன்று வாடிப்பட்டி சந்தை கேட் அருகில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மருத்துவ நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாலைநேர தர்னா நடைபெற்றது இந்த நிகழ்வில் மாநில கொள்கை பரப்பு செயலாளர்கள் முனைவர் மொ.சித்திராதேவி திருச்சி.சரவனண் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் இந்த நன்னாளில் மாவட்ட ஒன்றிய நகர நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்1
- ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயர் கோவில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது பக்தர்கள் பங்கேற்பு திருவாடானை ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயர் கோயிலில், ஆடி மாத சனிக்கிழமையன்று, ஆஞ்சநேயப் பெருமானுக்கு மங்கலப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மலர், வெற்றிலை மற்றும் துளசி மாலையாக அலங்கரித்து, தீபாராதனைகள் காட்டப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, ஆஞ்சநேயரின் திருவருளையும், ஆசீர்வாதங்களையும் பெற்று, தங்கள் வாழ்வு செழிக்கப் பிரார்த்தித்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, இறைவனை தரிசித்து, பிரசாதங்களைப் பெற்றுச் சென்றனர்.1
- சபரிமலை செல்பவர்களுக்கு வேண்டுகோள் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு அபாயம் காரணமாக, ஆகஸ்ட் 2 மற்றும் 3-ஆம் தேதிகளில் நிரபத்தரி பூஜைக்காக சபரிமலைக்கு வருவதைத் தவிர்க்குமாறு பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு அபாயம் மற்றும் பாதுகாப்பு எச்சரிக்கை காரணமாக இந்த அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, யாத்திரையை முடிந்தவரை ஒத்திவைக்குமாறு திருவிதாங்கூர் தேவசம் வாரியம் (TDB) கேட்டுக்கொண்டுள்ளது. ஆகஸ்ட் 16-21 (சிங்கம் மாத நடை திறப்பு) அல்லது ஆகஸ்ட் 24-28 (ஒணம் சிறப்பு பூஜைகள்) காலத்தில் தரிசனம் செய்ய திட்டமிடலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரளத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு அபாயம் நீடித்து வருகிறது.1