Shuru
Apke Nagar Ki App…
N balu Nbalu
More news from தமிழ்நாடு and nearby areas
- தென்காசி மாவட்டம் திப்பணம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட நாட்டார்பட்டி சென்னல்தா புதுகுளத்தின் அவல நிலை குறித்து சமூக ஆர்வலர் வீடியோ வெளியீடு1
- சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படும் ஆகாஷின் வீட்டிற்கு தமிழ்நாடு கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் நேரில் சென்று அவரது பெற்றோர்களை நேற்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தமிழ்நாடு அரசு சார்பில் ஆறு லட்ச ரூபாய்க்கான காசோலையை பெற்றோர்களிடம் வழங்கினார் இந்த சந்திப்பின் போது சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, திமுக நகர செயலாளர் பொன்னுச்சாமி உடனிருந்தனர்1
- அமெரிக்கா, இஸ்ரேல் ஈரான் போரால் வர்த்தக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தேவகோட்டை வாகன எரிவாயு நிரப்பும் |பங்க்கு உள்து அவற்றில் இன்று LPG கார்கள், ஆட்டோக்கள் நீண்ட வரிசையில் நின்று எரிவாயு நிரப்பி வந்தன. இந்நிலையில், எரிவாயு வரத்து இல்லாததால் பங்க்குகளும் தற்போது மூடப்பட்டுள்ளன.இதனால் எரிவாயுவை நிரப்ப முடியாமல் வாகனஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர். அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் பெரும்பா லான ஆட்டோக்கள் எரிவாயு மூலமே இயக்கப்படுகின்றன. அது பெட்ரோல், டீசல் விலையைவிட குறைவு என்பதால் ஆட்டோ ஓட்டுநர்கள் எரிவாயுவைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் எரிவாயு கிடைக்காததால் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.1
- தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி மர்ம நபர்களால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மாணவியின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறவும் தேவையான உதவிகளை செய்யவும் தமிழக வெற்றி கழகத்தின் மாநில பொறுப்பாளர் ஆதவ் அர்ஜுனா இன்று (மார்ச் .13) மாலை சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்த பின்னர் தூத்துக்குடிக்கு காரில் புறப்பட்டு சென்றார்.1
- பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மது போதையில் முதியவர் மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்டவர்களை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி ரகலையில் ஈடுபட்டார் தனக்கு முதியோர் பணம் வழங்கவில்லை என ஆத்திரத்தில் அங்குள்ள அதிகாரிகளிடம் தகராறு ஈடுபட்ட முதியோர் தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பெரியகுளம் மற்றும் அதை சுற்று வட்டார பகுதியில் இருந்து நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் தங்கள் பிரச்சனை மற்றும் கோரிக்கைகளுக்காக வந்து செல்கின்றனர் இந்நிலையில் முதியவர் ஒருவர் தனது ஆதார் கார்டில் பெயர் திருத்தம் செய்வதற்காக வந்துள்ளார் அப்போது பெயர் திருத்துவதற்கான உரிய ஆவணம் அவரிடம் இல்லாததால் அவரை ஆதார் மையத்தில் இருந்து திருப்பி அனுப்பி உள்ளனர் இதனால் ஆத்திரமடைந்த முதியோர் மது போதையில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நின்று கொண்டு மாவட்ட ஆட்சியர் வட்டாட்சியர் மற்றும் அங்குள்ள அதிகாரிகளை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி ரகலையில் ஈடுபட்டார் மேலும் தனக்கு முதியோர் பணம் வழங்குவதில் கையெழுத்து போடுவதில் உங்களுக்கு என்ன என ஆபாச வார்த்தைகளால் பேசி ஏன் பணம் தர மாட்டீர்கள் என சரமாரியாக மது போதையில் கேள்விகளை எழுப்பினார் இதனால் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள் மிகுந்த சருமத்துக்குள்ளாகியுள்ளனர் மேலும் தொடர்ந்து அப்பகுதியில் மது போதையில் முதியவர் கடும் ரகலையில் ஈடுபட்டனர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்து சம்பந்தப்பட்ட இடத்துக்கு வந்த காவல்துறையினர் போதையில் இருந்த முதியோரை விசாரித்துவிட்டு அங்கிருந்து அழைத்துச் சென்று காம்பவுண்ட் வெளியே கொண்டு சென்று விட்டு விட்டு சென்றுள்ளனர் மேலும் மது போதையில் முதியவர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை தரக்குறைவான வார்த்தைகளால் பேசியது அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது மேலும் திமுக ஆட்சியின் அவல நிலை பொதுமக்களை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் சூழ்நிலைதான் தற்போது தமிழக முழுவதும் பரவியுள்ளது தொடர்ந்து பெரிய வளம் பகுதிகளில் கள்ளச் சந்தையில் மது விற்பனை பெரிய அளவில் நடைபெற்று வருவதாலும் இது போன்ற போதைக்கு அடிமையாகி தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் முதியவர்கள் இளைஞர்கள் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது1
- தமிழக வெற்றி கழகத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவினை முன்னிட்டு மாவட்ட தொண்டர் அணி தலைமை சார்பாக இன்று பெரியகுளம் நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் அக்கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் கலந்து கொண்டு 200க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.1
- Post by தமிழ்நாடுஅரசியல்1
- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருணகிரிபட்டிணத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் உலக நண்மைக்காக திருவிளக்கு பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த திரளான பெண்கள் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துமாரியம்மனை வணங்கி சென்றனா். அருணகிரிபட்டிணத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்தில், அப்பகுதி பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை வெகுசிறப்பாக நடைபெற்றது. முன்னதாக மூலவர் முத்துமாரியம்மனுக்கு லெட்சுமி அலங்காரம் நடைபெற்று சிறப்பு பூஜைகளும், தீப ஆராதனைகளும் நடைபெற்றன. பின்னர் கோயில் வளாகத்தில் ஏராளமாக பெண்கள் ஒன்று கூடி சிவச்சாரியார்கள் தலைமையில் 1001 திருவிளக்குகளை ஏற்றி பூஜை செய்து வழிபட்டனா். கணபதி பூஜையுடன் துவங்கிய விளக்கு பூஜையில் 1008 திருவிளக்கு போற்றி, மஹா லெட்சும் மந்திரங்கள் ஜெபித்து, குங்கும் மற்றும் பூ வினால் அர்ச்சனை செய்து உலக நண்மைக்காகவும், அனைவரும் நோய் நொடியில்லாமல் நீண்டநாள் மகிழ்வுடன் வாழ கூட்டு வழிபாடு நடத்தினார்கள். பின்னா் சுவாமிக்கு தீப ஆராதனை காட்டப்பட்டது. இதில் திராளன பெண்கள் கலந்து கொண்டு முத்துமாரியம்மனை வழிபட்டு சென்றனா்.1
- தொடர்ந்து சரிந்து வரும் வைகைஅணையின் நீர்மட்டம் 36.65 அடியாக உள்ளது . தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள மொத்தம் 71 அடி உயரம் கொண்ட வைகை அணை. தேனி மதுரை திண்டுக்கல் சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய ஐந்து தென் மாவட்டங்களின் குடிநீருக்கும் விவசாயத்திற்கும் முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான வீரபாண்டி, கொட்டக்குடி, மூல வைகை உள்ளிட்ட ஆறுகளில் போதிய மழை இன்றி வறண்டு காணப்படுவதால் வைகை அணைக்கான நீர்வரத்து முற்றிலும் இல்லாமல் போனது. கடந்த மூன்று ஆண்டுகளாக இல்லாத வகையில் இந்த ஆண்டு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் அணைக்கு நீர்வரத்தும் முற்றிலும் இல்லாமல் போனதால் ஐந்து மாவட்ட வைகை பாசன விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 36.65 அடியாகவும், அணையில் நீர் இருப்பு 707 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. அணையில் இருந்து மதுரை தேனி மாவட்ட குடிநீருக்காக மட்டும் வினாடிக்கு 72 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.1