logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

நாகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம். ஆட்சியர் தகவல் நாகப்பட்டினம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனியார் துறையினர் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 26-ந்தேதி காலை 10 - மணி முதல் மதியம் 3 மணி வரை நடக்கிறது. இதில் 8-ம் வகுப்பு முதல் பட்டதாரி வகுப்பு படித்தவர்கள் உரிய சான்றிதழ்களுடன் பங்கேற்று பயன் பெறுமாறு ஆட்சியர் பிரவின்குமார் தெரிவித்துள்ளார்.

5 hrs ago
user_NAGAI BABU
NAGAI BABU
Reportar நாகப்பட்டினம், நாகப்பட்டினம், தமிழ்நாடு•
5 hrs ago
56502005-662f-43df-bba4-92779fe85241

நாகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம். ஆட்சியர் தகவல் நாகப்பட்டினம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனியார் துறையினர் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 26-ந்தேதி காலை 10 - மணி முதல் மதியம் 3 மணி வரை நடக்கிறது. இதில் 8-ம் வகுப்பு முதல் பட்டதாரி வகுப்பு படித்தவர்கள் உரிய சான்றிதழ்களுடன் பங்கேற்று பயன் பெறுமாறு ஆட்சியர் பிரவின்குமார் தெரிவித்துள்ளார்.

More news from Nagapattinam and nearby areas
  • தலையாமழை கிராமத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் 3 மணி நேரமாக சாலை மறியல் தலையாமழை கிராமத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்: 3மணி நேரமாக கொளுத்தும் வெயிலில் சாலையில் அமர்ந்து போராட்டம் நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தலையாமழை கிராமத்தில் அடிப்படை வசதியான குடிநீர் கேட்டு, 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தலையாமழை கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 'ஜல் ஜீவன்' திட்டத்தின் கீழ் வீடுகள் தோறும் குழாய் இணைப்புகள் அமைக்கப்பட்டும், கடந்த 6 மாதங்களாக ஒரு சொட்டு குடிநீர் கூட விநியோகிக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே டேங்கர் லாரி மூலம் வழங்கப்படும் தண்ணீரும் போதுமானதாக இல்லை எனவும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். குடிநீருக்காக சுமார் 5 கிலோமீட்டர் தூரமுள்ள சோழவித்தியாபுரம் கிராமத்திற்குச் சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டிய அவலநிலை நிலவுகிறது. இருசக்கர வாகனம் மற்றும் சைக்கிள் வைத்திருப்பவர்கள் மட்டுமே சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலையில், முதியவர்கள் மற்றும் பெண்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும், வெளி ஊர்களுக்கு சென்று தண்ணீர் பிடிப்பதால் கிராமங்களுக்கிடையே மோதல் போக்கு ஏற்படும் சூழலும் உருவாகியுள்ளது. குளிப்பதற்கும் குடிப்பதற்கும் போதிய தண்ணீர் இன்றி பள்ளி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்வோர் பெரும் துயரத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த கிராமத்துப் பெண்கள், நாகப்பட்டினம் - மேலப்பிடாகை உட்சாலையில் அரசுப் பேருந்தை சிறைபிடித்து, காலி குடங்களை தலையில் சுமந்தவாறு சாலையில் அமர்ந்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 3 மணி நேரத்திற்கும் மேலாக மறியல் நீடித்தது. சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் உடனடியாக வராததால், பெண்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ​தலையான்மழை கிராம மக்களின் குடிநீர் தாகத்தைத் தீர்க்க மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர் செபஸ்தியம்மாள் மற்றும் கீழையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
    1
    தலையாமழை கிராமத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் 3 மணி நேரமாக சாலை மறியல்
தலையாமழை கிராமத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்: 3மணி நேரமாக கொளுத்தும் வெயிலில் சாலையில் அமர்ந்து போராட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தலையாமழை கிராமத்தில் அடிப்படை வசதியான குடிநீர் கேட்டு, 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தலையாமழை கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 'ஜல் ஜீவன்' திட்டத்தின் கீழ் வீடுகள் தோறும் குழாய் இணைப்புகள் அமைக்கப்பட்டும், கடந்த 6 மாதங்களாக ஒரு சொட்டு குடிநீர் கூட விநியோகிக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே டேங்கர் லாரி மூலம் வழங்கப்படும் தண்ணீரும் போதுமானதாக இல்லை எனவும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
குடிநீருக்காக சுமார் 5 கிலோமீட்டர் தூரமுள்ள சோழவித்தியாபுரம் கிராமத்திற்குச் சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டிய அவலநிலை நிலவுகிறது. இருசக்கர வாகனம் மற்றும் சைக்கிள் வைத்திருப்பவர்கள் மட்டுமே சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலையில், முதியவர்கள் மற்றும் பெண்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும், வெளி ஊர்களுக்கு சென்று தண்ணீர் பிடிப்பதால் கிராமங்களுக்கிடையே மோதல் போக்கு ஏற்படும் சூழலும் உருவாகியுள்ளது. குளிப்பதற்கும் குடிப்பதற்கும் போதிய தண்ணீர் இன்றி பள்ளி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்வோர் பெரும் துயரத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த கிராமத்துப் பெண்கள், நாகப்பட்டினம் - மேலப்பிடாகை உட்சாலையில் அரசுப் பேருந்தை சிறைபிடித்து, காலி குடங்களை தலையில் சுமந்தவாறு சாலையில் அமர்ந்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 3 மணி நேரத்திற்கும் மேலாக மறியல் நீடித்தது. சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் உடனடியாக வராததால், பெண்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
​தலையான்மழை கிராம மக்களின் குடிநீர் தாகத்தைத் தீர்க்க மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர் செபஸ்தியம்மாள் மற்றும் கீழையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
    user_MAHENDRAN
    MAHENDRAN
    Local News Reporter Kilvelur, Nagapattinam•
    3 hrs ago
  • விநாயகர் சதுர்த்தி சதுர்த்தி முன்னிட்டு 32 அடி விநாயகர் ஊர்வலம் நாகை மாவட்டம் 32 அடி உயர அத்தி விநாயகர் அகிலம் போற்றும் 32 உயர ஸ்ரீ விஸ்வரூப அத்தி விநாயகர் நகர்வலம் நாகை முதல் நாகூர் வரை அது விமர்சையாக ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் மற்றும் வானவேடிக்கையுடன் 108 திருவிளக்கு பூஜை உடன் ஸ்ரீ விஸ்வரூப குழு திருநாகை
    4
    விநாயகர் சதுர்த்தி சதுர்த்தி முன்னிட்டு 32 அடி விநாயகர் ஊர்வலம்
நாகை மாவட்டம் 32 அடி உயர அத்தி விநாயகர் அகிலம் போற்றும் 32 உயர ஸ்ரீ விஸ்வரூப அத்தி விநாயகர் நகர்வலம் நாகை முதல் நாகூர் வரை அது விமர்சையாக ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் மற்றும் வானவேடிக்கையுடன் 108 திருவிளக்கு பூஜை உடன் ஸ்ரீ விஸ்வரூப குழு திருநாகை
    user_ARUL WINNER அருள் வின்னர்
    ARUL WINNER அருள் வின்னர்
    கீழ்வேளூர், நாகப்பட்டினம், தமிழ்நாடு•
    23 hrs ago
  • திருத்துறைப்பூண்டி அருகே கோலாகலமாக நடைபெற்ற ஆவணி தீமிதி திருவிழா ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஈஸ்வர காமாட்சி மாரியம்மன் கோயிலில் ஆவணி மாத தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆவணி திருவிழாவையொட்டி கடந்த நான்கு வாரங்களாக கோயிலில் சிறப்பு வழிபாடுகளும், அடிகளார் அருள்வாக்கு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்நிலையில், ஆவணி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, திருத்துறைப்பூண்டி தச்சன்குளக்கரை பிள்ளையார் கோயிலில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து ஊர்வலமாக வந்தனர். கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தீமிதித்து, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து ஸ்ரீ ஈஸ்வர காமாட்சி மாரியம்மனை பயபக்தியுடன் வழிபட்டனர். தீமிதி திருவிழாவையொட்டி திருத்துறைப்பூண்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதனால் கோயில் வளாகம் முழுவதும் பக்தர்களின் கூட்டத்தால் களைகட்டியது.
    1
    திருத்துறைப்பூண்டி அருகே கோலாகலமாக நடைபெற்ற ஆவணி தீமிதி திருவிழா ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஈஸ்வர காமாட்சி மாரியம்மன் கோயிலில் ஆவணி மாத தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஆவணி திருவிழாவையொட்டி கடந்த நான்கு வாரங்களாக கோயிலில் சிறப்பு வழிபாடுகளும், அடிகளார் அருள்வாக்கு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இந்நிலையில், ஆவணி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, திருத்துறைப்பூண்டி தச்சன்குளக்கரை பிள்ளையார் கோயிலில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தீமிதித்து, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து ஸ்ரீ ஈஸ்வர காமாட்சி மாரியம்மனை பயபக்தியுடன் வழிபட்டனர்.
தீமிதி திருவிழாவையொட்டி திருத்துறைப்பூண்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
இதனால் கோயில் வளாகம் முழுவதும் பக்தர்களின் கூட்டத்தால் களைகட்டியது.
    user_BARATHI
    BARATHI
    திருத்துறைப்பூண்டி, திருவாரூர், தமிழ்நாடு•
    4 hrs ago
  • ‎சித்தக்காடு நெடுஞ்சாலை நடுவில் தடுப்பு கட்டை அமைக்கும் பணி நடைபெறுகிறது மயிலாடுதுறை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை சித்தக்காடு இரயில்வே மேம்பாளம் முன்னே சாலையை இரண்டாக பிரித்து நடுவே தடுப்பு கட்டை அமைக்கும் பணி தீவீரம் பொது மக்களுக்கு சிறமம் ஏற்படாத வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது
    1
    ‎சித்தக்காடு நெடுஞ்சாலை நடுவில் தடுப்பு கட்டை அமைக்கும் பணி நடைபெறுகிறது
மயிலாடுதுறை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை சித்தக்காடு இரயில்வே மேம்பாளம்  முன்னே சாலையை இரண்டாக பிரித்து நடுவே தடுப்பு கட்டை அமைக்கும் பணி தீவீரம் பொது மக்களுக்கு சிறமம் ஏற்படாத வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது
    user_Anbu Vetri
    Anbu Vetri
    Teacher College குத்தாலம், மயிலாடுதுறை, தமிழ்நாடு•
    14 hrs ago
  • உடைக்கப்பட்ட சிலைக்கு பதிலாக வெண்கல சிலை அமைத்து தருவதாக மாநில துணைத்தலைவர் உறுதி கடலூர் மாவட்டம் சிதம்பரம் கொத்தங்குடி பகுதியில் இரவில் மர்ம நபர்கள் அண்ணல் அம்பேத்கர் சிலையை உடைத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவரும் நந்தனார் கல்வி கழக தலைவருமான டாக்டர் கே ஐ மணிரத்தினம் அவர்கள் மண் சிலைக்கு பதிலாக வெண்கல சிலை அதே இடத்தில் நிறுவி தருவதாக உறுதியளித்துள்ளார்
    1
    உடைக்கப்பட்ட சிலைக்கு பதிலாக வெண்கல சிலை அமைத்து தருவதாக மாநில துணைத்தலைவர் உறுதி 
கடலூர் மாவட்டம் சிதம்பரம் கொத்தங்குடி பகுதியில் இரவில் மர்ம நபர்கள் அண்ணல் அம்பேத்கர் சிலையை உடைத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவரும் நந்தனார் கல்வி கழக தலைவருமான டாக்டர் கே ஐ மணிரத்தினம் அவர்கள் மண் சிலைக்கு பதிலாக வெண்கல சிலை அதே இடத்தில் நிறுவி தருவதாக உறுதியளித்துள்ளார்
    user_தாமோதரன் மாவட்ட செய்தியாள
    தாமோதரன் மாவட்ட செய்தியாள
    காட்டுமன்னார்கோயில், கடலூர், தமிழ்நாடு•
    7 hrs ago
  • கடலூர் மாவட்டத்தில் 2026–27ஆம் ஆண்டுக்கான சிறப்பு கால்நடை சுகாதார முகாம் தொடக்கம்! கடலூர் மாவட்டத்தில் 2026–27ஆம் ஆண்டுக்கான சிறப்பு கால்நடை சுகாதார முகாம் தொடக்கம்! கடலூர் மாவட்டத்தில் 2026–27ஆம் ஆண்டுக்கான சிறப்பு கால்நடை சுகாதார முகாம் தொடக்க விழா புவனகிரி அருகே உள்ள ஆயிப்பேட்டை ஊராட்சியில் நடைபெற்றது. 2026–27ஆம் ஆண்டிற்கான சிறப்பு கால்நடை சுகாதார முகாமை கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சிறந்த கால்நடைகளுக்கு பரிசுகளும், முன்னோடி விவசாயிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்த முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், செயற்கை முறை கருவூட்டல், தடுப்பூசி செலுத்துதல், குடற்புழு நீக்கம், சினை பரிசோதனை, மாடுகள் மற்றும் ஆடுகளுக்கு சிறந்த சிகிச்சை வழங்குதல், தாது உப்பு கலவை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கால்நடை மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன. மேலும், கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் தடுப்பு, சிறு அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டன. கால்நடைகளில் ஏற்படும் தோல் கழலை நோய் (Lumpy Skin Disease–LSD) மற்றும் கோமாரி நோய் தடுப்பு முறைகள் மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வும் வழங்கப்பட்டது. இந்த முகாமின் மூலம் கால்நடைகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டன. மேலும், கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்தும் அதிகாரிகள் விளக்கமளித்தனர். கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் கால்நடை மருத்துவர்களின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு துறையினர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் தேவையான மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர். கால்நடைகளை நோய்களில் இருந்து பாதுகாத்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இதுபோன்ற சிறப்பு கால்நடை சுகாதார முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    1
    கடலூர் மாவட்டத்தில் 2026–27ஆம் ஆண்டுக்கான சிறப்பு கால்நடை சுகாதார முகாம் தொடக்கம்!

கடலூர் மாவட்டத்தில் 2026–27ஆம் ஆண்டுக்கான சிறப்பு கால்நடை சுகாதார முகாம் தொடக்கம்!
கடலூர் மாவட்டத்தில் 2026–27ஆம் ஆண்டுக்கான சிறப்பு கால்நடை சுகாதார முகாம் தொடக்க விழா புவனகிரி அருகே உள்ள ஆயிப்பேட்டை ஊராட்சியில்  நடைபெற்றது.
2026–27ஆம் ஆண்டிற்கான சிறப்பு கால்நடை சுகாதார முகாமை 
கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில்  நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சிறந்த கால்நடைகளுக்கு பரிசுகளும், முன்னோடி விவசாயிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இந்த முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், செயற்கை முறை கருவூட்டல், தடுப்பூசி செலுத்துதல், குடற்புழு நீக்கம், சினை பரிசோதனை, மாடுகள் மற்றும் ஆடுகளுக்கு சிறந்த சிகிச்சை வழங்குதல், தாது உப்பு கலவை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கால்நடை மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன.
மேலும், கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் தடுப்பு, சிறு அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டன.
கால்நடைகளில் ஏற்படும் தோல் கழலை நோய் (Lumpy Skin Disease–LSD) மற்றும் கோமாரி நோய் தடுப்பு முறைகள் மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.
இந்த முகாமின் மூலம் கால்நடைகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டன. மேலும், கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்தும் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் கால்நடை மருத்துவர்களின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு துறையினர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் தேவையான மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.
கால்நடைகளை நோய்களில் இருந்து பாதுகாத்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இதுபோன்ற சிறப்பு கால்நடை சுகாதார முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    user_Lathan V
    Lathan V
    புவனகிரி, கடலூர், தமிழ்நாடு•
    13 hrs ago
  • அதிமுக மாவட்ட செயலாளர் சிதம்பரத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார் கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு சிதம்பரம் வண்டி கேட்டில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே ஏ பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் நிகழ்ச்சியில் கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
    1
    அதிமுக மாவட்ட செயலாளர் சிதம்பரத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்
கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு சிதம்பரம் வண்டி கேட்டில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே ஏ பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் நிகழ்ச்சியில் கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
    user_Chidambaram Repoter
    Chidambaram Repoter
    பத்திரிகையாளர் சிதம்பரம், கடலூர், தமிழ்நாடு•
    13 hrs ago
  • டிப்பர் லாரியிலிருந்து கொட்டப்பட்ட மண் பொதுமக்கள் அவதி அரியலூர் - ஜெயங்கொண்டம் சாலையில் வெங்கட கிருஷ்ணாபுரம் அருகே சாலையில் மணல் ஏற்றிச் சென்ற கனரக வாகனத்தில் இருந்து மண் சாலையில் கொட்டிச் சென்றுள்ளது. ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் இந்த சாலையில் பயணித்தே அரியலூரை வந்தடைய முடியும். இந்நிலையில் சாலையில் கொட்டிக் கிடந்த மண்ணைக் கடந்து செல்லும் கனரக வாகனங்களின் வேகத்தினால் அதிலிருந்து எழும் மண் துகள்கள் இருசக்கர வாகன ஓட்டிகளை பெரிதும் அவதிக்குள்ளாக்கியது. கண்களில் வந்து விழுந்த மண் துகள்களால் வாகனத்தை இயக்க முடியாது பொதுமக்கள் அவதியுற்றனர். உடனடியாக சாலையில் கொட்டிக் கிடக்கும் இந்த மண்ணை அகற்றி வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக பயணிக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    1
    டிப்பர் லாரியிலிருந்து கொட்டப்பட்ட மண் பொதுமக்கள் அவதி
அரியலூர் - ஜெயங்கொண்டம் சாலையில் வெங்கட கிருஷ்ணாபுரம் அருகே சாலையில் மணல் ஏற்றிச் சென்ற கனரக வாகனத்தில் இருந்து மண் சாலையில் கொட்டிச் சென்றுள்ளது.
ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் இந்த சாலையில் பயணித்தே அரியலூரை வந்தடைய முடியும்.
இந்நிலையில் சாலையில் கொட்டிக் கிடந்த மண்ணைக் கடந்து செல்லும் கனரக வாகனங்களின் வேகத்தினால் அதிலிருந்து எழும் மண் துகள்கள் இருசக்கர வாகன ஓட்டிகளை பெரிதும் அவதிக்குள்ளாக்கியது.
கண்களில் வந்து விழுந்த மண் துகள்களால் வாகனத்தை இயக்க முடியாது பொதுமக்கள் அவதியுற்றனர். உடனடியாக சாலையில் கொட்டிக் கிடக்கும் இந்த மண்ணை அகற்றி வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக பயணிக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    user_Milkaj
    Milkaj
    அரியலூர், அரியலூர், தமிழ்நாடு•
    9 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.