Shuru
Apke Nagar Ki App…
மணிபாலன். E
More news from தமிழ்நாடு and nearby areas
- காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத், வாரணவாசி அருகே தாழையம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் சௌந்தர் (58) இவர் வாரணவாசியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது வாலாஜாபாத்திலிருந்து படப்பை நோக்கி சென்ற லோடு டாரஸ் லாரி மோதிய விபத்தில் 2 கால்களும் நசுக்கியது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு 108 வாகனம் மூலமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து ஒரகடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.1
- paree matric hr sec school Pullambadi. Admission opening for the year 2026-271
- தருமபுரி அருகே இரண்டு நபர்கள் புல்லட் பைக் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல். தருமபுரி காந்தி நகரை சேர்ந்த பாரத ஜனதா கட்சி தருமபுரி இளைஞர் அணி தலைவர் விக்னேஷ் என்பவர் வழக்கம்போல் நேற்று இரவு புல்லட் வாகனத்தை வீட்டு முன்பு நிறுத்திவிட்டு உறங்கச் சென்றுள்ளார். மேலும் மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த புல்லட் வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த நிலையில் விக்னேஷ் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தபோது இரண்டு நபர்கள் வீட்டின் முன்பு நின்று அக்கம் பக்கத்தினர் யாராவது இருக்கிறார்களா என்று நோட்டமிட்டு பின்பு காலால் சைடு லாக்கை உடைத்து புல்லட் வாகனத்தை தள்ளி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதனை அடுத்து தர்மபுரி நகர காவல் நிலையத்தில் வினேஷ் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சிசிடிவி கட்சியில் பதிவாகி இருப்பது யார் என்பதை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இந்த சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இந்த பகுதியில் அரசு ஊழியர்கள், அரசு பிரமுகவர்கள் என ஏராளமானோர் உள்ளதால் வாகனங்களை நிறுத்த மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.1
- தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியம் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய மாவட்ட தலைநகரங்களில் கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம்1
- பாலக்கோடு அருகே சின்னாறு அணையிலிருந்து விவசாய பாசனத்திற்கு 140 நாட்களுக்கு வினாடி 400கன அடி தண்ணீரை மாவட்ட ஆட்சியர் சதீஷ் திறந்து வைத்தார். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளி கிராமத்தில் உள்ள சின்னாறு அணை நிரம்பியது. தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையேற்று அணையிலிருந்து விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து இன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் விவசாய பாசனத்திற்காக வலது புறகால்வாய் வழியாக வினாடிக்கு 400 கன அடி தண்ணீரை திறந்து வைத்து, மலர் தூவினார். இதில் பழைய ஆயக்கட்டு ஐந்து ஏரிகளுக்கும், புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு 140 நாட்களுக்கு திறக்கப்படும். இதன் மூலம் பஞ்சப்பள்ளி, பெரியானூர், போடிகுட்டப்பள்ளி, அத்திமுட்லு மாரண்டஅள்ளி, கொலசனஅள்ளி, பி.செட்டிஅள்ளி, ஜெர்த்தலாவ், பாலக்கோடு, குஜ்ஜரஅள்ளி, எர்ரனஅள்ளி, பேளாரஅள்ளி, சாமனூர் ஆகிய கிராமங்களில் உள்ள பழைய ஆயக்கட்டு பரப்பு 2626 ஏக்கர் மற்றும் புதிய ஆயக்கட்டு பரப்பு 1874 ஏக்கர் மொத்தம் 4500ஏக்கர் நிலம் பாசனவசதி பெறுகின்றன. மேலும் தண்ணீரை கிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சதீஷ் அறிவுறுத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் சட்ட மன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன், பாரளுமன்ற உறுப்பினர் மணி மற்றும் பொதுபணித்துறை அதிகாரிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.1
- புதுகை: பொதுமக்களிடம் சோதனை செய்யும் போலீசார் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் ஏராளமான பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரை சந்தித்து வழங்க வருகை தருகின்றனர். அவர்களின் உடைமைகள் மற்றும் வாகனங்களை போலீசார் தீவிர சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கிறார்கள். காலையில் முதியோர் தம்பதியினர் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள்காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 26 12 2025 முதல் இன்று வரை சென்னையில் பல்வேறு இடங்களில் 11 வது நாட்களாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அதனைத் தொடர்ந்து இன்று தமிழக முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 01.06.2009 க்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் 20000 இடைநிலை ஆசிரியர்களும் தர்மபுரி மாவட்டத்தில் 420 இடைநிலை ஆசிரியர்களும் பணி செய்து வரும் நிலையில் வரிசை எண் 311 தேர்தல் வாக்குறுதிப்படி தமிழக அரசு அரசாணை நிறைவேற்ற வேண்டும். கல்வியிலும் பொருளாதாரத்திலும் வேலைவாய்ப்பிலும் முன்னணியில் இருக்கும் தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு மிக குறைவான ஊதிய வழங்கி பின்னணியில் இருக்கிறது என்றும் சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் கோசங்கள் எழுப்பி இன்று ஒரு நாள் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமையிலும், மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி முன்னிலையிலும் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சசிகுமார் தலைமை உரையாற்றினார்.1
- சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள்காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 26 12 2025 முதல் இன்று வரை சென்னையில் பல்வேறு இடங்களில் 11 வது நாட்களாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அதனைத் தொடர்ந்து இன்று தமிழக முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 01.06.2009 க்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் 20000 இடைநிலை ஆசிரியர்களும் தர்மபுரி மாவட்டத்தில் 420 இடைநிலை ஆசிரியர்களும் பணி செய்து வரும் நிலையில் வரிசை எண் 311 தேர்தல் வாக்குறுதிப்படி தமிழக அரசு அரசாணை நிறைவேற்ற வேண்டும். கல்வியிலும் பொருளாதாரத்திலும் வேலைவாய்ப்பிலும் முன்னணியில் இருக்கும் தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு மிக குறைவான ஊதிய வழங்கி பின்னணியில் இருக்கிறது என்றும் சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் கோசங்கள் எழுப்பி இன்று ஒரு நாள் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமையிலும், மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி முன்னிலையிலும் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சசிகுமார் தலைமை உரையாற்றினார்1