தமிழகத்தில் 61 நாட்கள் கடைப்பிடிக்கப்பட்ட மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவோடு முடிவடைந்த நிலையில், சென்னை காசிமேடு பகுதியில் இருந்து மீனவர்கள் மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இந்தச் சூழலில், மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் இன்று காசிமேட்டில் ஆய்வு மேற்கொண்டார். துறைமுகத்தில் நடைபெற்று வரும் பணிகளைக் கேட்டறிந்த அமைச்சர், திடீரென ஒரு விசைப்படகில் ஏறி சிறிது தூரம் அதனை இயக்கி மகிழ்ச்சியடைந்தார். அமைச்சரிடம் கோரிக்கை வைத்த மீனவர்கள், தற்போது அதிக செலவில் கட்டப்பட்டுள்ள துறைமுகம், குழு பொறுப்பில் உள்ள அதிகாரிகளின் வசமே இருக்க வேண்டும் என்றும், அது எந்த சங்கத்தின் பிடியிலும் சிக்கிவிடக்கூடாது என்றும் வலியுறுத்தினர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஸ்ரீநாத், மீனவர்கள் மானிய டீசல் அளவை உயர்த்தக் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், ஆந்திராவில் தமிழக விசைப்படகுகள் மீன்பிடிக்க விதிக்கப்பட்டுள்ள தடை குறித்த பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காணப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
தமிழகத்தில் 61 நாட்கள் கடைப்பிடிக்கப்பட்ட மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவோடு முடிவடைந்த நிலையில், சென்னை காசிமேடு பகுதியில் இருந்து மீனவர்கள் மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இந்தச் சூழலில், மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் இன்று காசிமேட்டில் ஆய்வு மேற்கொண்டார். துறைமுகத்தில் நடைபெற்று வரும் பணிகளைக் கேட்டறிந்த அமைச்சர், திடீரென ஒரு விசைப்படகில் ஏறி சிறிது தூரம் அதனை இயக்கி மகிழ்ச்சியடைந்தார். அமைச்சரிடம் கோரிக்கை வைத்த மீனவர்கள், தற்போது அதிக செலவில்
கட்டப்பட்டுள்ள துறைமுகம், குழு பொறுப்பில் உள்ள அதிகாரிகளின் வசமே இருக்க வேண்டும் என்றும், அது எந்த சங்கத்தின் பிடியிலும் சிக்கிவிடக்கூடாது என்றும் வலியுறுத்தினர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஸ்ரீநாத், மீனவர்கள் மானிய டீசல் அளவை உயர்த்தக் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், ஆந்திராவில் தமிழக விசைப்படகுகள் மீன்பிடிக்க விதிக்கப்பட்டுள்ள தடை குறித்த பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காணப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
- Surendran Sugandhiபெரம்பூர், சென்னை, தமிழ்நாடுஹலோ தம்பி மீனவர் அமைச்சர் ஸ்ரீநாத் தமிழ்நாட்டிலே எத்தனை கடல் இருக்கு தெரியுமாடா மிஸ்டர் ஸ்ரீநாத் நீ ஓரு காமெடி நடிகர் நீ அரசியல் பண்ணத் தெரியாது நான் ஒரு கேள்வி கேட்கிறேன் டாக்டர் அம்பேத்கார் பிறந்த ஆண்டு என்ன கேள்வி பதில் சொல்ல முடியுமா உன்னால அப்பத்தா நீ மீன் ஒரு அமைச்சர் தமிழ் மக்கள நமபோ6 hrs ago
- திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் உள்ள கச்சேரி சாலையில் அமைந்துள்ள ஒரு மருந்தகத்தில் இன்று (15) ஒரு நபர் மருந்து வாங்குவது போல் வந்துள்ளார். அவர், கடையில் இருந்த பெண்ணிடம் தனது உறவினர் மருத்துவமனையில் இருப்பதாகவும், அவருக்கு போன் செய்ய வேண்டும் என்றும் கூறி செல்போனைக் கேட்டுள்ளார். அப்பெண் கடையில் இருந்த செல்போனைக் கொடுத்தபோது, அந்த நபர் பேசிவிட்டுத் தருவதாகக் கூறிவிட்டு, செல்போனை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார். இந்தச் சம்பவம் குறித்துக் கிடைத்த புகாரின் அடிப்படையில், வாணியம்பாடி நகர போலீசார் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.1
- திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் திருப்பதி, இன்று காலை 9 மணியளவில் திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலையில் அமைந்துள்ள புதூர் நாடு மற்றும் புங்கம்பட்டு நாடு ஊராட்சிகளுக்குட்பட்ட சேக்கனூர் கிராமத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விசில் சின்னத்தில் வாக்களித்த அனைவருக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்தார். இந்த நிகழ்வில், தவெக மாவட்ட கழக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.2
- chanakasava 💗💗💗💗💗💗💗💗💗💗💗🧡🧡🧡🧡🧡🧡🧡🧡❤❤❤❤❤❤❤❤❤❤1
- கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலை வட்டத்திற்குட்பட்ட மேல்நிலவூர் கிராமத்தில் இயங்கி வரும் அரசு நியாய விலை கடையில், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் வி.முத்தையா மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் பாண்டியன் ஆகியோர் திடீர் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வின்போது, பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய ரேஷன் பொருட்களின் தரம், இருப்பு நிலை மற்றும் விநியோக முறைகளை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் தரமானதாகவும், அரசின் விதிமுறைகளின்படியும் வழங்கப்படுவதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். அரசின் நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்வதற்காகவே இதுபோன்ற ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.1
- கிருஷ்ணகிரி அருகேயுள்ள மகராஜகடை அடுத்த பெலவர்த்தி சுற்றுவட்டாரப் பகுதியில், கடந்த ஏழு ஆண்டுகளாகக் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள காட்டூர், தின்னூர், நாகமரத்துப்பள்ளம் போன்ற கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து தொடர்ச்சியாக அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள், தங்களுக்கு சோலார் மின்வேலிகள் அமைத்துத் தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.1
- தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேன்ட் டெவலப்பர்ஸ் நிலத் தரகர்கள் நலச்சங்கம் மற்றும் காவேரி மருத்துவமனை இணைந்து இலவச மருத்துவ முகாமை நடத்தியது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் பீமன் மற்றும் மாவட்ட செயலாளர் கிரிண்லேன்ட் பாபு ஆகியோர் தலைமை வகித்தனர். நகர தலைவர் சண்முகம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மாவட்ட துணைத் தலைவர் குமரவேல், மாவட்ட இணைச் செயலாளர் பாபு, நகரச் செயலாளர் அண்ணாமலை, தொகுதி தலைவர் நயாஸ் அகமது, மாவட்ட செயற்குழு உறுப்பினர் தர்மன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தேசிய தலைவர் விருகை கண்ணன், ஏ.ஆர்.டி.எஸ். தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன், பேரூராட்சி தலைவர் பி.கே. முரளி, இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் மற்றும் தொகுதி பொருளாளர் கே.பி. செல்லன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி இலவச மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்தனர். இந்த முகாமில் ரத்த அழுத்தம், எலும்பு முறிவு, குழந்தை நல மருத்துவம், இருதய நல சிறப்பு மருத்துவம், உப்பு மற்றும் சர்க்கரை தொடர்பான பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. தொடர்ந்து, அகில இந்திய தலைவர் விருகை கண்ணன் சங்க நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார். முகாமில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது. இறுதியாக, ஒன்றிய செயலாளர் சின்னசாமி நன்றி தெரிவித்தார்.1
- திருப்பத்தூரைச் சேர்ந்த அஜிஜீர்ரகுமான், தனது பெற்றோர் மறைந்த நிலையில், தன்னுடைய சொத்தை அபகரித்துக் கொண்டதாகக் கூறி, இன்று (15) ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அஜிஜீர்ரகுமான் அளித்த புகாரில், அவரது தங்கை ஐக்கியபானு, தனது மகன் மற்றும் சிலருடன் சேர்ந்து தங்களை மிரட்டி அடைத்து வைத்து, போலி ஆவணங்கள் மூலம் சொத்தை அபகரித்துக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கோரியுள்ளார்.1
- chanakasava 💗💗💗💗💗💗💗🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡❤❤❤❤❤❤❤❤❤❤❤❤1
- கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை வட்டத்தில் உள்ள வெள்ளிமலை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில், 1435-ம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) கூட்டம் நடைபெற்று வருகிறது. வருவாய் தீர்வாய அலுவலர் வி. முத்தையா தலைமையில் இக்கூட்டம் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் மேலாளர் ராமகிருஷ்ணன், வருவாய் வட்டாட்சியர் கோவிந்தராஜ், தனி வட்டாட்சியர் குமரன், துணை வட்டாட்சியர் தாமோதரன், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் மணி, மண்டல துணை வட்டாட்சியர் சக்திவேல், வருவாய் ஆய்வாளர் ராம்ஜி, வட்ட துணை ஆய்வாளர் சுரேஷ், கிராம நிர்வாக அலுவலர்கள் வடிவேல், வெங்கடேஷ் மற்றும் கிராம நிர்வாக உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இன்று பெருமாள்நத்தம், கீழ்நிலவூர், மேல்நிலவூர், வில்வித்தி, கீழாத்துக்குழி மற்றும் மேலாத்துக்குழி ஆகிய வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி கூட்டம் நடைபெற்று வருகிறது. பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.1