Shuru
Apke Nagar Ki App…
சேரன்மகாதேவியில் அரசு பள்ளி அருகே வேகத்தடை அமைக்க கோரிக்கை நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி நீதிமன்றம் அருகே அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி அருகே வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் வருகைக்காக சில மாதங்கள் முன்பு அந்த வேகத்தடை அகற்றப்பட்டது. ஆனால் அதன் பின் மீண்டும் அப்பகுதியில் வேகத்தடை அமைக்கப்படாததால் பள்ளி மாணவ மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மீண்டும் அங்கு வேகத்தடை அமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்
S.Maria selvam
சேரன்மகாதேவியில் அரசு பள்ளி அருகே வேகத்தடை அமைக்க கோரிக்கை நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி நீதிமன்றம் அருகே அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி அருகே வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் வருகைக்காக சில மாதங்கள் முன்பு அந்த வேகத்தடை அகற்றப்பட்டது. ஆனால் அதன் பின் மீண்டும் அப்பகுதியில் வேகத்தடை அமைக்கப்படாததால் பள்ளி மாணவ மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மீண்டும் அங்கு வேகத்தடை அமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்
More news from தமிழ்நாடு and nearby areas
- கயத்தாறில் அஇஅதிமுக கிழக்கு ஒன்றியம், மேற்கு ஒன்றியம் ஆகிய இரண்டு ஓன்றிய செயல்வீரர்கள் கூட்டம் கயத்தாறு மகேஷ்வரி திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.இந்தஓன்றிய செயல்வீரர்கள் கூட்டத்திற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு வருகை புரிந்த அனைவரையும் மாவட்ட அம்மா பேரவைச் துணை செயலாளர் கருப்பசாமி பாண்டியன் வரவேற்று பேசினார்.கூட்டத்தில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் செ.ராஜ் சிறப்புரையாற்றினார்.இந்த செயல்வீரர்கள் கூட்டத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ்கட்சியின் மாவட்ட தலைவர் ராஜகோபால், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஒன்றிய கழக செயலாளர் மந்திரமூர்த்தி, நகர கழக செயலாளர் அருண், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பொருளாளர் சீனிவாசன், கயத்தாறு கிழக்கு ஒன்றிய தலைவர் இராமர் பாண்டியன், துணை தலைவர்கள் தங்கத்துரை, சுரேஷ் கண்ணன், இராமகிருஷ்ணன், பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் வேல்ச்சாமி, முன்னாள் எம் எல் ஏக்கள் சின்னப்பன், மோகன், மாவட்ட கலைப் பிரிவு செயலாளர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஆசூர் காளிப்பாண்டியன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பாலகனேசன், மாவட்ட எம் ஜி ஆர் மன்ற இணைச் செயலாளர் குடியரசுபாண்டியன், கயத்தாறு நகர செயலாளர் கப்பல் ராமசாமி, மகளிர் அணி செல்லத்தாய், கோவில்பட்டி நகர செயலாளர் விஜயபாண்டியன், கோவில்பட்டி மேற்கு , கிழக்கு ஒன்றிய செயலாளர்கள் தூத்துக்குடி வடக்கு மாவட்ட எம். ஜி.ஆர் மன்ற செயலாளர் பூமாரியப்பன், துறையூர் கணேசன், பன்னீர் குளம் முத்துப்பாண்டியன், மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.4
- கடையநல்லூரில் தவெக சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது1
- Post by ARULJEGAN1
- தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி காட்டுப்பகுதியில் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கிராம மக்கள் தொடர்ந்து இரவு முழுவதும் சாலை மறியல் போராட்டம் பரபரப்பு குற்றவாளிகளை கைது செய்ய ஐந்து தனிப்படைகள் அமைப்பு தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே வேடநத்தம் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் விவசாயி சுப்புராஜ். இவரது மனைவி காளீஸ்வரி. இவர்களது 17 வயது மகள் குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். தற்போது 12-ம் வகுப்பு பொது தேர்வை எழுதி வந்தார். இந்நிலையில் மார்ச் 10 ஆம் தேதி மாலை 6 மணிக்கு அவர் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், அவரது தந்தை சுப்புராஜ் குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றனர். அங்கிருந்த போலீஸார் பள்ளி மாணவி என்பதால் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து சுப்புராஜ் மார்ச் 11ஆம் தேதி காலை விளாத்திகுளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனிடையே, மார்ச் 11ஆம் தேதி மாலை வேடநத்தம் காட்டுப்பகுதியில் முகம் மற்றும் உடலில் காயங்களுடன் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் மாணவி சடலமாக கிடந்தார் இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மாணவியின் சடலத்தை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், பொதுமக்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி குளத்தூர் - குறுக்குச்சாலை - சாலையில் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . இதை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் மற்றும் போலீஸார் மாணவியின் பெற்றோர் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் . குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் உத்தரவுப்படி 5 தனி படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர் மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிராமத்தில் ஒவ்வொரு வீடு வீடாக சென்று விசாரணை நடத்தி வருகிறார் இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் காவல்துறை உரிய தண்டனை வாங்கி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்க பட்ட பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்தனர் மேலும் நேற்று குளத்தூர் காவல்துறை காவல் நிலையம் ஆரத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த போதே காவல்துறையினர் உரிய முறையில் விசாரணை நடத்தி தேடி இருந்தால் இந்த சம்பவம் நடைபெற்றிருக்காது காவல்துறையினர் அலட்சியம் காரணமாகவே தற்போது மாணவி உயிரெழுத்துள்ளதாக உயிரிழந்துள்ளதாகவும் எனவே சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவியின் உறவினர்கள் தெரிவித்தனர் குற்றவாளிகளை கைது செய்யாத வரை உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர் இந்தச் சம்பவம் காரணமாக வேடநத்தம் கிராமம் மட்டும் இல்லாமல் அருகே உள்ள கிராமங்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்1
- Post by தமிழ்நாடு அரசியல்1
- சாத்தான்குளம் பகுதியில் ஒரு பெட்ரோல் பங்கில் மது போதையில் தகராறு ஈடுபட்டதாக விஷ்வா, இசக்கி அழகுவேல் என்ற இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.இவர்கள் தங்கள் தவறை உணர்ந்ததால் அவர்களை போலீசார் திருக்குறள் வாசிக்க வைத்தனர்.1
- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி மரணம் தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் அதிகாரிகள் இன்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் செல்வ சுரபி தலைமையில், எஸ்.பி. சிவபிரசாத், ஆர்.டி.ஓ ஜெபி கிரேசியா, தாசில்தார் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் காவல் நிலையத்தில் உள்ள பதிவுகளை பரிசோதித்தனர்1
- தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம் புத்தூரில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நாதக வேட்பாளர் கோரிக்கை1