Shuru
Apke Nagar Ki App…
ஆசிப் பிரியாணி கடையில் பிரியாணி ஆர்டர் செய்தபோது அதில் வண்டு இருந்ததால் பரபரப்பு ஆசிப் பிரியாணி கடையில் பிரியாணி ஆர்டர் செய்தபோது அதில் வண்டு இருந்ததால் பரபரப்பு வண்டு இருப்பதாக ஆசிப் பிரியாணி கடை ஊழியர் இடம் கேட்ட பொழுது அட்ஜஸ்ட் செய்து சாப்பிடுமாறு வலியுறுத்தி உள்ளனர் இத்தகைய செயலை செய்துவிட்டு ஒன்றினை எடுத்து போட்டு சாப்பிடுமாறு கூறியதால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர் மேலும் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்தபோது அதில் ஈ ஊறிக் கடந்ததாக தகவல் இதில் தரமற்ற உணவு வழங்குவதையும் கண்டித்து தர மற்ற உணவினை வாங்குவதும் தவிர்க்கவும் என்று வாடிக்கையாளர் மக்களுக்கு வலியுறுத்தியுள்ளார்
ARULCHOZHAN V
ஆசிப் பிரியாணி கடையில் பிரியாணி ஆர்டர் செய்தபோது அதில் வண்டு இருந்ததால் பரபரப்பு ஆசிப் பிரியாணி கடையில் பிரியாணி ஆர்டர் செய்தபோது அதில் வண்டு இருந்ததால் பரபரப்பு வண்டு இருப்பதாக ஆசிப் பிரியாணி கடை ஊழியர் இடம் கேட்ட பொழுது அட்ஜஸ்ட் செய்து சாப்பிடுமாறு வலியுறுத்தி உள்ளனர் இத்தகைய செயலை செய்துவிட்டு ஒன்றினை எடுத்து போட்டு சாப்பிடுமாறு கூறியதால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர் மேலும் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்தபோது அதில் ஈ ஊறிக் கடந்ததாக தகவல் இதில் தரமற்ற உணவு வழங்குவதையும் கண்டித்து தர மற்ற உணவினை வாங்குவதும் தவிர்க்கவும் என்று வாடிக்கையாளர் மக்களுக்கு வலியுறுத்தியுள்ளார்
More news from தமிழ்நாடு and nearby areas
- ஆசிப் பிரியாணி கடையில் பிரியாணி ஆர்டர் செய்தபோது அதில் வண்டு இருந்ததால் பரபரப்பு ஆசிப் பிரியாணி கடையில் பிரியாணி ஆர்டர் செய்தபோது அதில் வண்டு இருந்ததால் பரபரப்பு வண்டு இருப்பதாக ஆசிப் பிரியாணி கடை ஊழியர் இடம் கேட்ட பொழுது அட்ஜஸ்ட் செய்து சாப்பிடுமாறு வலியுறுத்தி உள்ளனர் இத்தகைய செயலை செய்துவிட்டு ஒன்றினை எடுத்து போட்டு சாப்பிடுமாறு கூறியதால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர் மேலும் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்தபோது அதில் ஈ ஊறிக் கடந்ததாக தகவல் இதில் தரமற்ற உணவு வழங்குவதையும் கண்டித்து தர மற்ற உணவினை வாங்குவதும் தவிர்க்கவும் என்று வாடிக்கையாளர் மக்களுக்கு வலியுறுத்தியுள்ளார்1
- உடைக்கப்பட்ட சிலைக்கு பதிலாக வெண்கல சிலை அமைத்து தருவதாக மாநில துணைத்தலைவர் உறுதி கடலூர் மாவட்டம் சிதம்பரம் கொத்தங்குடி பகுதியில் இரவில் மர்ம நபர்கள் அண்ணல் அம்பேத்கர் சிலையை உடைத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவரும் நந்தனார் கல்வி கழக தலைவருமான டாக்டர் கே ஐ மணிரத்தினம் அவர்கள் மண் சிலைக்கு பதிலாக வெண்கல சிலை அதே இடத்தில் நிறுவி தருவதாக உறுதியளித்துள்ளார்1
- சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக வெண்கல சிலை கே.ஐ.மணிரத்தினம் சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக வெண்கல சிலை கே.ஐ.மணிரத்தினம் சிதம்பரம், செப், 16 சிதம்பரத்தில் சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக வெண்கல சிலை அமைக்கப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநில துணைத் தலைவரும், நந்தனார் கல்விக்க ழகத் தலைவருமான கே.ஐ.மணி ரத்தினம் தெரிவித்தார். சிதம்பரம் அருகே உள்ள சி.கொத்தங்குடியில் சுமார் 40 ஆண்டுகள் பழைமையான அம் பேத்கர் சிலை திங்கள்கிழமை மர் மநபரால் சேதப்படுத்தப்பட்டது. இதுதொடர்பாகஅதேபகுதியைச் சேர்ந்த சிவகுமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்நிலையில், கே.ஐ. மணிரத் தினம், சேதப்படுத்தப்பட்ட அம் பேத்கர் சிலையை செவ்வாய்க்கி ழமை நேரில் பார்வையிட்டு, சம் பவம் குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்தார் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், 'சேதப்படுத்தப் பட்டுள்ள சிலைக்குப் பதில், அதே இடத்தில் நந்தனார் கல்விக் கழகம் சார்பில் புதிய வெண்கல சிலை அமைக்கப்படும் என்றார். நிகழ்ச் சியில் காங்கிரஸ் கட்சியின் இளை ஞர் அணி மாநில துணைத்தலை வர் கமலக்கண்ணன் மற்றும் நிர் வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.1
- அரியலூர் கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகை போனஸ் ஐயாயிரம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம். அரியலூர் கட்டுமான தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் 5,000 ஆயிரம் வழங்க வேண்டும். மணல் ஜல்லி கம்பி பொருட்களின் விலை உயர்வை ஏற்படுத்த வேண்டும். மாநில நல வாரியங்கள் அதிகாரங்கள் பறிக்கும் சமூக பாதுகாப்பு சட்ட தொகுப்பை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கட்டுமான தொழிலாளர் கலந்து கொண்டனர்.1
- தலையாமழை கிராமத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் 3 மணி நேரமாக சாலை மறியல் தலையாமழை கிராமத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்: 3மணி நேரமாக கொளுத்தும் வெயிலில் சாலையில் அமர்ந்து போராட்டம் நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தலையாமழை கிராமத்தில் அடிப்படை வசதியான குடிநீர் கேட்டு, 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தலையாமழை கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 'ஜல் ஜீவன்' திட்டத்தின் கீழ் வீடுகள் தோறும் குழாய் இணைப்புகள் அமைக்கப்பட்டும், கடந்த 6 மாதங்களாக ஒரு சொட்டு குடிநீர் கூட விநியோகிக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே டேங்கர் லாரி மூலம் வழங்கப்படும் தண்ணீரும் போதுமானதாக இல்லை எனவும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். குடிநீருக்காக சுமார் 5 கிலோமீட்டர் தூரமுள்ள சோழவித்தியாபுரம் கிராமத்திற்குச் சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டிய அவலநிலை நிலவுகிறது. இருசக்கர வாகனம் மற்றும் சைக்கிள் வைத்திருப்பவர்கள் மட்டுமே சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலையில், முதியவர்கள் மற்றும் பெண்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும், வெளி ஊர்களுக்கு சென்று தண்ணீர் பிடிப்பதால் கிராமங்களுக்கிடையே மோதல் போக்கு ஏற்படும் சூழலும் உருவாகியுள்ளது. குளிப்பதற்கும் குடிப்பதற்கும் போதிய தண்ணீர் இன்றி பள்ளி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்வோர் பெரும் துயரத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த கிராமத்துப் பெண்கள், நாகப்பட்டினம் - மேலப்பிடாகை உட்சாலையில் அரசுப் பேருந்தை சிறைபிடித்து, காலி குடங்களை தலையில் சுமந்தவாறு சாலையில் அமர்ந்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 3 மணி நேரத்திற்கும் மேலாக மறியல் நீடித்தது. சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் உடனடியாக வராததால், பெண்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தலையான்மழை கிராம மக்களின் குடிநீர் தாகத்தைத் தீர்க்க மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர் செபஸ்தியம்மாள் மற்றும் கீழையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.1
- திருத்துறைப்பூண்டி அருகே கோலாகலமாக நடைபெற்ற ஆவணி தீமிதி திருவிழா ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஈஸ்வர காமாட்சி மாரியம்மன் கோயிலில் ஆவணி மாத தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆவணி திருவிழாவையொட்டி கடந்த நான்கு வாரங்களாக கோயிலில் சிறப்பு வழிபாடுகளும், அடிகளார் அருள்வாக்கு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்நிலையில், ஆவணி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, திருத்துறைப்பூண்டி தச்சன்குளக்கரை பிள்ளையார் கோயிலில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து ஊர்வலமாக வந்தனர். கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தீமிதித்து, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து ஸ்ரீ ஈஸ்வர காமாட்சி மாரியம்மனை பயபக்தியுடன் வழிபட்டனர். தீமிதி திருவிழாவையொட்டி திருத்துறைப்பூண்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதனால் கோயில் வளாகம் முழுவதும் பக்தர்களின் கூட்டத்தால் களைகட்டியது.1
- கும்பாபிஷேக விழாவில் முளைப்பாரி எடுத்து கும்மி அடித்து கொண்டாடிய பெண்கள். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே முள்ளால் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்தும்,கும்மி அடித்தும் விழாவில் கலந்து கொண்டனர்.1
- டிப்பர் லாரியிலிருந்து கொட்டப்பட்ட மண் பொதுமக்கள் அவதி அரியலூர் - ஜெயங்கொண்டம் சாலையில் வெங்கட கிருஷ்ணாபுரம் அருகே சாலையில் மணல் ஏற்றிச் சென்ற கனரக வாகனத்தில் இருந்து மண் சாலையில் கொட்டிச் சென்றுள்ளது. ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் இந்த சாலையில் பயணித்தே அரியலூரை வந்தடைய முடியும். இந்நிலையில் சாலையில் கொட்டிக் கிடந்த மண்ணைக் கடந்து செல்லும் கனரக வாகனங்களின் வேகத்தினால் அதிலிருந்து எழும் மண் துகள்கள் இருசக்கர வாகன ஓட்டிகளை பெரிதும் அவதிக்குள்ளாக்கியது. கண்களில் வந்து விழுந்த மண் துகள்களால் வாகனத்தை இயக்க முடியாது பொதுமக்கள் அவதியுற்றனர். உடனடியாக சாலையில் கொட்டிக் கிடக்கும் இந்த மண்ணை அகற்றி வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக பயணிக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.1