logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

அரசு பெண் அலுவலர்களுக்கு போட்டிகள் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் தின விழா இன்று கொண்டாடப்பட்டது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் பல்வேறு துறை சார்ந்த அரசு பெண் மகளிருக்கு கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே ரங்கோலி மற்றும் அடுப்பில்லாமல் சமையல் செய்யும் போட்டி உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இதில் அரசு பெண் மகளிர் ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.

2 hrs ago
user_Vel
Vel
திருப்பூர் தெற்கு, திருப்பூர், தமிழ்நாடு•
2 hrs ago
96656335-8bbb-4b5d-8e01-320506a31227

அரசு பெண் அலுவலர்களுக்கு போட்டிகள் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் தின விழா இன்று கொண்டாடப்பட்டது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் பல்வேறு துறை சார்ந்த அரசு பெண் மகளிருக்கு கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே ரங்கோலி மற்றும் அடுப்பில்லாமல் சமையல் செய்யும் போட்டி உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இதில் அரசு பெண் மகளிர் ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.

More news from Salem and nearby areas
  • சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூமணியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளி குழந்தைகளை தகாத வார்த்தைகளால் திட்டியும், அடித்து துன்புறுத்துவதாகவும், பெற்றோர்களையும் தரக்குறைவாக பேசி வருவதாக கூறி ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூமணியூர் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த 10 மாதங்களாக விஜயதாரணி என்பவர் பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்ற பின்னர் பள்ளி குழந்தைகளை தகாத வார்த்தைகளால் திட்டியும், அடித்து துன்புறுத்துவதாக குழந்தைகள் பெற்றோர்களிடம் புகார் தெரிவித்தனர். மேலும் இது குறித்து கேட்க வரும் பெற்றோர்களையும் தலைமை ஆசிரியர் தகாத வார்த்தைகளால் திட்டுவதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 10 மாதங்களில் இப்பள்ளியில் பயிலும் குழந்தைகளை பெற்றோர்கள் அருகில் உள்ள மற்ற பள்ளிக்கு அனுப்பி உள்ளதாகவும். கூறப்படுகிறது. தலைமை ஆசிரியையின் நடவடிக்கையால் தற்போது 13 குழந்தைகள் மட்டுமே பயின்று வருவதாகவும், இது சம்பந்தமாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை எனவும், மேலும் கடந்த வாரம் மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவன் ஒருவரை அடித்து கை வீங்கியதாகவும் அந்த மாணவன் தங்கள் பெற்றோரிடம் கூறியதாகவும் இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் இன்று பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூலாம்பட்டி போலீசார் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதுகுறித்து பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர் கூறுகையில், தலைமை ஆசிரியர் பள்ளி குழந்தைகளை வாரத்தில் இருமுறை அடித்தும், தகாத வார்த்தையால் திட்டி வருகிறார். மேலும் அவர் அடித்த குழந்தைகளை பெற்றோர்களிடம் சொல்ல கூடாது என அவர்களுக்கு ரூ.50 பணம் தருகிறேன் என குழந்தைகளிடம் கூறியுள்ளார். என்று கண்ணீர் மல்க கூறினார்கள். பேட்டி :1) ஞானசுந்தரி 2)கோமதி 3) தனசுந்தரி பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்கள், 4) ஜோதி,காலை உணவு தயாரிப்பாளர்.
    1
    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூமணியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளி குழந்தைகளை தகாத வார்த்தைகளால் திட்டியும்,  அடித்து துன்புறுத்துவதாகவும், பெற்றோர்களையும் தரக்குறைவாக பேசி வருவதாக கூறி ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூமணியூர்  அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த 10 மாதங்களாக விஜயதாரணி என்பவர் பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் தலைமை ஆசிரியராக  பொறுப்பேற்ற பின்னர்  பள்ளி குழந்தைகளை தகாத வார்த்தைகளால் திட்டியும், அடித்து துன்புறுத்துவதாக குழந்தைகள் பெற்றோர்களிடம் புகார் தெரிவித்தனர். 
மேலும் இது குறித்து கேட்க வரும் பெற்றோர்களையும்  தலைமை ஆசிரியர் தகாத வார்த்தைகளால் திட்டுவதாக கூறப்படுகிறது.
இதனால் கடந்த 10 மாதங்களில் இப்பள்ளியில் பயிலும்  குழந்தைகளை  பெற்றோர்கள் அருகில் உள்ள மற்ற பள்ளிக்கு அனுப்பி உள்ளதாகவும். கூறப்படுகிறது.
தலைமை ஆசிரியையின் நடவடிக்கையால் தற்போது  13 குழந்தைகள் மட்டுமே பயின்று வருவதாகவும், இது சம்பந்தமாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை எனவும்,
மேலும் கடந்த வாரம் மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவன் ஒருவரை அடித்து கை வீங்கியதாகவும் அந்த மாணவன் தங்கள் பெற்றோரிடம் கூறியதாகவும் 
இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் இன்று பள்ளியை  முற்றுகையிட்டு ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு  விரைந்து வந்த பூலாம்பட்டி போலீசார் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இதுகுறித்து பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர் கூறுகையில், தலைமை ஆசிரியர் பள்ளி குழந்தைகளை வாரத்தில் இருமுறை  அடித்தும், தகாத வார்த்தையால் திட்டி வருகிறார்.
மேலும் அவர் அடித்த குழந்தைகளை பெற்றோர்களிடம் சொல்ல கூடாது என அவர்களுக்கு ரூ.50 பணம் தருகிறேன் என குழந்தைகளிடம்  கூறியுள்ளார். என்று கண்ணீர் மல்க கூறினார்கள்.
பேட்டி :1) ஞானசுந்தரி 2)கோமதி 3) தனசுந்தரி பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்கள்,  
4) ஜோதி,காலை உணவு தயாரிப்பாளர்.
    user_Srianand
    Srianand
    பத்திரிகையாளர் Edappadi, Salem•
    20 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உணவு மற்றும் உணவு வளங்கள் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் சிலிண்டர் பற்றாக்குறை குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் சிலிண்டரை பற்றி மத்திய அரசு மோடி அரசை கேளுங்கள் என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் என்று பேட்டி அளித்தார்.
    1
    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உணவு மற்றும் உணவு வளங்கள் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் சிலிண்டர் பற்றாக்குறை குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் சிலிண்டரை பற்றி மத்திய அரசு மோடி அரசை கேளுங்கள் என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் என்று பேட்டி அளித்தார்.
    user_RAJA news
    RAJA news
    பத்திரிகையாளர் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தமிழ்நாடு•
    19 hrs ago
  • நாமக்கல் மாவட்டம் காளிப்பட்டி பஸ் நிறுத்தத்தில் அனுமதி இன்றி வைக்கப்பட்ட பேனர் நேற்று (மார்ச் 10) அவ்வழியாக சென்று கொண்டிருந்த பள்ளி மாணவி மீது விழுந்ததில் மாணவிக்கு காயங்கள் ஏற்பட்டன. மீண்டும் இதுபோல விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க பொதுமக்கள் இது போன்ற பேனர்களை உடனடியாக அகற்ற காவல் துறையிடம் கோரிக்கை வைத்துள்ளனர்
    1
    நாமக்கல் மாவட்டம் காளிப்பட்டி பஸ் நிறுத்தத்தில் அனுமதி இன்றி வைக்கப்பட்ட பேனர் நேற்று (மார்ச் 10) அவ்வழியாக சென்று கொண்டிருந்த பள்ளி மாணவி மீது விழுந்ததில் மாணவிக்கு காயங்கள் ஏற்பட்டன. மீண்டும் இதுபோல விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க பொதுமக்கள் இது போன்ற பேனர்களை உடனடியாக அகற்ற காவல் துறையிடம் கோரிக்கை வைத்துள்ளனர்
    user_கணேஷ் G
    கணேஷ் G
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    8 hrs ago
  • தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள காக்கில் சிக்கையன் பட்டியை சேர்ந்தவர் லெனின் அவரது உறவினர் முருகன் ஆகிய இருவரும் இரண்டு சக்கர வாகனத்தில் உத்தமபாளையம் நகர் பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது தேனி குமுளி தேசிய நெடுஞ்சாலையில் கோவிந்தன் பட்டி அருகே அவர்கள் சென்று கொண்டிருந்தபோது அவர்களின் பின்புறம் வந்த கிரேன் வாகனம் இருசக்கர வாகனம் மீது எதிர்பாராத விதமாக மோதியுள்ளது. கிரேன் வாகனம் மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்த இருசக்கர வாகனத்தில் வந்த இருவரின் மீதும் கிரேன் வாகனத்தின் டயர் இருவரின் மீதும் ஏறியதில் பலத்த காயம் அடைந்துள்ளனர். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் இந்த விபத்து குறித்து உத்தமபாளையம் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அத்தகவலினை தொடர்ந்து விரைந்து வந்த காவல்துறையினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் பலத்த காயம் அடைந்த இருவரையும் உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்துள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும் போது சிகிச்சை பலனின்றி லெனின் உயிரிழந்துள்ளார். மேலும் பலத்த காயம் அடைந்த முருகனை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று மேல் சிகிச்சை அளித்துள்ளனர். அப்போது மேல் சிகிச்சை பலன் அளிக்காமல் விபத்தில் காயம் அடைந்த மற்றொருவரானா முருகனும் உயிரிழந்துள்ளார். இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது பின்புறமாக வந்த கிரேன் வாகனம் மோதி விபத்தை ஏற்படுத்தி ஒரே கிராமத்தைச் சேர்ந்த உறவினர்கள் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றது.
    1
    தேனி மாவட்டம்
உத்தமபாளையம் அருகே உள்ள காக்கில் சிக்கையன் பட்டியை சேர்ந்தவர் லெனின் அவரது உறவினர் முருகன் ஆகிய இருவரும் இரண்டு சக்கர வாகனத்தில் உத்தமபாளையம் நகர் பகுதிக்கு சென்றுள்ளனர்.
அப்போது தேனி குமுளி தேசிய நெடுஞ்சாலையில் கோவிந்தன் பட்டி அருகே அவர்கள் சென்று கொண்டிருந்தபோது 
அவர்களின் பின்புறம் வந்த கிரேன் வாகனம் இருசக்கர வாகனம் மீது எதிர்பாராத விதமாக மோதியுள்ளது.
கிரேன் வாகனம் மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்த இருசக்கர வாகனத்தில் வந்த இருவரின் மீதும்
கிரேன் வாகனத்தின் டயர் இருவரின் மீதும் ஏறியதில் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் இந்த விபத்து குறித்து உத்தமபாளையம் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். 
அத்தகவலினை தொடர்ந்து விரைந்து வந்த காவல்துறையினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் பலத்த காயம் அடைந்த இருவரையும் உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்துள்ளனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும் போது சிகிச்சை பலனின்றி லெனின் உயிரிழந்துள்ளார்.
மேலும் பலத்த காயம் அடைந்த முருகனை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று மேல் சிகிச்சை அளித்துள்ளனர்.
அப்போது மேல் சிகிச்சை பலன் அளிக்காமல் விபத்தில் காயம் அடைந்த மற்றொருவரானா முருகனும் உயிரிழந்துள்ளார்.
இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது பின்புறமாக வந்த கிரேன் வாகனம் மோதி விபத்தை ஏற்படுத்தி ஒரே கிராமத்தைச் சேர்ந்த உறவினர்கள் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றது.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    1 hr ago
  • திருச்சியில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், "இந்தியாவில் கேஸ் தட்டுப்பாடு என்பது இல்லை. ஊடகங்கள் கேஸ் தட்டுப்பாடு என்கிற செய்தியை பரப்புகிறது. எரிபொருள் இருப்பு குறித்து விரிவான அறிக்கை விரைவில் வெளியிடப்படும். தவெகவை NDA கூட்டணியில் இணைப்பது குறித்து, தமிழ்நாட்டில் NDA கூட்டணிக்கு தலைமை வகிக்கும் எடப்பாடி பழனிசாமி தான் முடிவெடுக்க வேண்டும்" என்றார். இந்த நிகழ்வில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
    1
    திருச்சியில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்  வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், "இந்தியாவில் கேஸ் தட்டுப்பாடு என்பது இல்லை. ஊடகங்கள் கேஸ் தட்டுப்பாடு என்கிற செய்தியை பரப்புகிறது. எரிபொருள் இருப்பு குறித்து விரிவான அறிக்கை விரைவில் வெளியிடப்படும். தவெகவை NDA கூட்டணியில் இணைப்பது குறித்து, தமிழ்நாட்டில் NDA கூட்டணிக்கு தலைமை வகிக்கும் எடப்பாடி பழனிசாமி தான் முடிவெடுக்க வேண்டும்" என்றார். இந்த நிகழ்வில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    29 min ago
  • Post by Lingaraju mc
    6
    Post by Lingaraju mc
    user_Lingaraju mc
    Lingaraju mc
    துறையூர், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு எடப்பாடியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் அணிவகுப்பு... சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, சேலம் மாவட்டம் எடப்பாடி நகரில் மத்திய தொழில் பாதுகாப்பு படை (CISF) வீரர்கள் இன்று முக்கிய வீதிகளில் அணிவகுப்பு நடத்தினர்... எடப்பாடி பேருந்து நிலையம் பகுதியில் தொடங்கிய இந்த அணிவகுப்பு, கடைவீதி, மேட்டுதெரு, கவுண்டம்பட்டி உள்ளிட்ட முக்கிய பகுதிகள் வழியாக நடைபெற்றது.நூற்றுக்கும் மேற்பட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் கலந்து கொண்டு நகரின் முக்கிய சாலைகளில் அணிவகுத்து சென்றனர்... தேர்தல் காலத்தில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு உணர்வு ஏற்படுத்தவும், சட்டம் ஒழுங்கை உறுதி செய்யவும் இந்த அணிவகுப்பு நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்...
    1
    தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு எடப்பாடியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் அணிவகுப்பு...
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, சேலம் மாவட்டம் எடப்பாடி நகரில் மத்திய தொழில் பாதுகாப்பு படை (CISF) வீரர்கள் இன்று முக்கிய வீதிகளில் அணிவகுப்பு நடத்தினர்...
எடப்பாடி பேருந்து நிலையம் பகுதியில் தொடங்கிய இந்த அணிவகுப்பு, கடைவீதி,  மேட்டுதெரு, கவுண்டம்பட்டி உள்ளிட்ட முக்கிய பகுதிகள் வழியாக நடைபெற்றது.நூற்றுக்கும் மேற்பட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் கலந்து கொண்டு நகரின் முக்கிய சாலைகளில் அணிவகுத்து சென்றனர்...
தேர்தல் காலத்தில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு உணர்வு ஏற்படுத்தவும், சட்டம் ஒழுங்கை உறுதி செய்யவும் இந்த அணிவகுப்பு நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்...
    user_Srianand
    Srianand
    பத்திரிகையாளர் Edappadi, Salem•
    20 hrs ago
  • தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள நாகலாபுரம் பகுதியே சேர்ந்தவர் காமாட்சி இவரது மகன் தவசி (13) போடி நகராட்சியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் காமாட்சி அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சித்தப்பா ஒருவருக்கு திதி கொடுப்பதற்காக கம்பம் அருகே உள்ள சுருளி அருவிக்கு இரண்டு தனது உறவினர்களுடன் வேன்களில் வந்துள்ளனர். தற்போது சுருளி அருவியில் முற்றிலும் நீர் வரத்து இல்லாததால் குளிப்பதற்காக கம்பம் நகரில் இருந்து சுருளிப்பட்டி செல்லும் சாலையில் உள்ள முல்லைப் பெரியாற்றின் பாலப்பகுதிக்கு வந்துள்ளனர். அங்கு காமாட்சி மகன் தவசி மற்றும் அவரது உறவினர்கள் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சிறுவன் தவசி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளான். இதைக் கண்டு அங்கே குளித்துக் கொண்டிருந்தவர்கள் கூச்சலிட்டனர். அதற்குள் மாணவன் தண்ணீரில் மூழ்கியுள்ளான். இதனை அடுத்து உடனடியாக ராயப்பன்பட்டி காவல்துறையினருக்கும், கம்பம் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர். தகவலின் பெயரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஆற்றில் இறங்கி தண்ணீரில் மூழ்கிய மாணவனை பல மணி நேரமாக தேடி வந்த நிலையில் குடிநீர் தொட்டி அருகே 12 அடி ஆழத்தில் பள்ளி மாணவன் சடலமாக சிக்கி இருப்பதை பார்த்து தீயணைப்பு துறையினர் மாணவனின் உடலை சடலமாக வெளியே கொண்டு வந்துள்ளனர். தாய் தந்தையர் மற்றும் உறவினர்களுடன் ஆற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரிதும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    1
    தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள நாகலாபுரம் பகுதியே  சேர்ந்தவர் காமாட்சி 
இவரது மகன் தவசி (13) போடி நகராட்சியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் காமாட்சி அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சித்தப்பா ஒருவருக்கு திதி கொடுப்பதற்காக கம்பம் அருகே உள்ள சுருளி அருவிக்கு இரண்டு தனது உறவினர்களுடன் வேன்களில் வந்துள்ளனர்.
தற்போது சுருளி அருவியில் முற்றிலும் நீர் வரத்து இல்லாததால் குளிப்பதற்காக கம்பம் நகரில் இருந்து சுருளிப்பட்டி செல்லும் சாலையில் உள்ள முல்லைப் பெரியாற்றின் பாலப்பகுதிக்கு வந்துள்ளனர்.
அங்கு காமாட்சி மகன் தவசி மற்றும் அவரது உறவினர்கள் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சிறுவன் தவசி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளான். 
இதைக் கண்டு அங்கே குளித்துக் கொண்டிருந்தவர்கள் கூச்சலிட்டனர். அதற்குள் மாணவன் தண்ணீரில் மூழ்கியுள்ளான். 
இதனை அடுத்து உடனடியாக ராயப்பன்பட்டி காவல்துறையினருக்கும், 
கம்பம் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர். 
தகவலின் பெயரில் விரைந்து வந்த  தீயணைப்புத் துறையினர் ஆற்றில் இறங்கி தண்ணீரில் மூழ்கிய மாணவனை பல மணி நேரமாக தேடி வந்த நிலையில் குடிநீர் தொட்டி அருகே 12 அடி ஆழத்தில் பள்ளி மாணவன் சடலமாக சிக்கி இருப்பதை பார்த்து தீயணைப்பு துறையினர் மாணவனின் உடலை சடலமாக வெளியே கொண்டு வந்துள்ளனர்.
தாய் தந்தையர் மற்றும் உறவினர்களுடன் ஆற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரிதும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • திருச்சி, பஞ்சபூரில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் இன்று பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் முக்கிய தலைவர் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். அப்போது அவருக்கு விமான நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய கட்சி நிர்வாகிகள் சார்பில் பூங்கொத்து வழங்கி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
    1
    திருச்சி, பஞ்சபூரில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் இன்று பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இதில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் முக்கிய தலைவர் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். அப்போது அவருக்கு விமான நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய கட்சி நிர்வாகிகள் சார்பில் பூங்கொத்து வழங்கி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    2 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.