Shuru
Apke Nagar Ki App…
தென்காசி மாவட்டம், வேட்டைக்காரன்குளம் கிராமத்தில் அழுதகன்னி ஆற்றுத் தரையோரம் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ பொன்னம்பருமாள் சாஸ்தா திருக்கோவிலில் வருஷாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, ஸ்ரீ பொன்னம்பருமாள் சாஸ்தா, சுடலைமாடன், மாடத்தி, பேச்சியம்மன், பிரம்மசக்தி அம்மன், கால பைரவர் ஆகிய தெய்வங்களுக்கு கும்பநீரால் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. வழிபாடுகளுக்குப் பின்னர் பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.
M. Ganesan
தென்காசி மாவட்டம், வேட்டைக்காரன்குளம் கிராமத்தில் அழுதகன்னி ஆற்றுத் தரையோரம் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ பொன்னம்பருமாள் சாஸ்தா திருக்கோவிலில் வருஷாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, ஸ்ரீ பொன்னம்பருமாள் சாஸ்தா, சுடலைமாடன், மாடத்தி, பேச்சியம்மன், பிரம்மசக்தி அம்மன், கால பைரவர் ஆகிய தெய்வங்களுக்கு கும்பநீரால் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. வழிபாடுகளுக்குப் பின்னர் பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.
More news from தமிழ்நாடு and nearby areas
- தென்காசி மாவட்டம், வேட்டைக்காரன்குளம் கிராமத்தில் அழுதகன்னி ஆற்றுத் தரையோரம் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ பொன்னம்பருமாள் சாஸ்தா திருக்கோவிலில் வருஷாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, ஸ்ரீ பொன்னம்பருமாள் சாஸ்தா, சுடலைமாடன், மாடத்தி, பேச்சியம்மன், பிரம்மசக்தி அம்மன், கால பைரவர் ஆகிய தெய்வங்களுக்கு கும்பநீரால் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. வழிபாடுகளுக்குப் பின்னர் பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.1
- தென்காசி மாவட்டம், ஆய்க்குடி வரதையன் கிராமத்தில் அமைந்துள்ள அக்கரை ஸ்ரீ சுடலைமாடசாமி கோவிலில், ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.1
- தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, போக்குவரத்து கழக அதிகாரிகளின் உத்தரவின் பேரில் தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுமார் 300 அரசுப் பேருந்துகள் கடந்த 22ஆம் தேதி அன்று சென்னை கிளாம்பாக்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்தப் பேருந்துகளுடன், ஒவ்வொரு பேருந்துக்கும் மூன்று பணியாளர்கள் வீதம், மொத்தம் சுமார் 900 அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களும் வந்துள்ளனர். இந்த அரசுப் பேருந்துகள் தேவையில்லாமல் பல கிலோமீட்டர் தூரம் இயக்கப்பட்டு, லட்சக்கணக்கில் எரிபொருள் வீணடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், புதிய பேருந்துகள் தொடக்க விழா கடந்த இரு தினங்களாக நடைபெறாத நிலையில், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்குத் தேவையான போதிய முன்னேற்பாடு வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. இதன் காரணமாக, அவர்கள் கடும் வெயிலிலும் சாலையில் பேருந்துகளுக்கு அடியில் தூங்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஆகவே, இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.1
- திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளின் கட்டண உயர்வு தொடர்பாக அதிகாரிகள் பரிசீலனை மேற்கொண்டிருந்தனர். இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார். மக்கள் தெரிவித்த கருத்துக்களை மீறி தமிழக அரசு எந்த முடிவையும் எடுக்காது என்றும், பொதுமக்களிடம் இது தொடர்பாக கருத்துகள் மட்டுமே கேட்கப்பட்டதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.1
- எல்லா மக்களே இப்படி 🙊😱 . . . . #food #handicappedsupport #handicappedvideo #handicappedfacebook #handicappedchannel #handicappedfoodreview #worldfood #volg #vlog1
- தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் முன்னாள் முதல் அமைச்சர் எம்ஜிஆர் அவர்களால் தொடங்கப்பட்ட அண்ணா கூட்டுறவு நூற்பாலை, போதுமான பராமரிப்பு இல்லாததாலும் பணியாளர்கள் பற்றாக்குறையாலும் பல ஆண்டுகளாகவே நட்டத்தில் இயங்கி வருகிறது. இந்த ஆலை உற்பத்தி செய்யும் நூல்கள் அரசு துறைகளுக்கு, குறிப்பாக இலவச வேட்டி சேலை திட்டம் மற்றும் பள்ளி சீருடை திட்டங்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன. தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு, நட்டத்தில் இயங்கும் அரசு துறைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது; இதன் ஒரு பகுதியாக, மாநிலத்தில் செயல்படும் ஆறு கூட்டுறவு நூற்பாலைகளையும் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில், தமிழக கைத்தறித்துறை அமைச்சர் விஜய் பாலாஜி, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள அண்ணா கூட்டுறவு நூற்பாலையில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஆலையின் உற்பத்தித்திறன், பணியாளர்களின் எண்ணிக்கை, மற்றும் நட்டத்திற்கான காரணங்கள் குறித்து அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். விசாரணையின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், நூற்பாலையின் உற்பத்தி அளவு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்துள்ளது என்பதையும், அதற்கான பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்துள்ளதாகவும் தெரிவித்தார். ஆலை மீண்டும் நல்ல முறையில் செயல்படவும், தரம் உயர்த்தப்படவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், நீண்ட நாட்களாகப் பணியாற்றும் தொழிலாளர்களின் பணி நிரந்தரக் கோரிக்கை குறித்துக் கலந்து பேசி முடிவு செய்யப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். தனியார் ஆலைகளுக்கு நிகராக அரசு நூற்பாலைகளை மேம்படுத்தி, இளைஞர்களுக்கு 100 விழுக்காடு வேலைவாய்ப்பை வழங்குவதே அரசின் நோக்கம் என்று அமைச்சர் விஜய் பாலாஜி குறிப்பிட்டார். மேலும், மாவட்டத்தில் பருத்தி கொள்முதல் மேம்பாட்டிற்கும் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, தேனி மாவட்ட கலெக்டர் வைத்திநாதன், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா, மாவட்ட செயலாளர்கள் லெப்ட் பாண்டி, பிரகாஷ் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.2
- தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட வடகரை பகுதியில் வசிக்கும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள், போதிய குப்பைத் தொட்டிகள் இல்லாததால், குப்பைகளை சாலையிலேயே கொட்டி வருகின்றனர். குறிப்பாக வடகரை விஆர் பி நாயுடு தெரு, பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் வராக நதிக்கரையோரப் பகுதிகளில் குப்பைகள் குவிவதால் கடுமையான துர்நாற்றம் வீசுவதோடு, சுற்றுச்சூழல் கடுமையாக மாசுபட்டுள்ளது. சாலையில் கொட்டப்படும் உணவுப் பொருட்களை உண்பதற்காகப் பெருமளவில் பன்றிகள் கூட்டம் கூட்டமாகச் சுற்றித் திரிகின்றன. இந்தப் பன்றிகள் அவ்வழியாகச் செல்லும் பெண்கள் மற்றும் பள்ளிச் சிறுவர்களைத் துரத்துவதால் பொதுமக்கள் பெரும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். குப்பைகள் மற்றும் பன்றிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளதுடன், கடுமையான தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இந்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, இப்பகுதியில் போதுமான குப்பைத் தொட்டிகளை அமைத்து, கொட்டப்படும் குப்பைகளை அகற்ற வேண்டும் என்றும், சாலையில் சுற்றித்திரியும் பன்றிகளைப் பிடித்து அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள பிரபலமான சுற்றுலாத் தலமான குற்றால அருவிகளில் தற்போது சீசன் களைகட்டி வருகிறது. இருப்பினும், இப்பகுதியில் நிலவிவரும் கடும் வெயிலின் காரணமாக அருவிகளில் நீர்வரத்து கணிசமாகக் குறைந்து காணப்படுகிறது. இந்தச் சூழலில், இன்று குற்றாலம் மெயின் அருவியில் மிகக் குறைந்த அளவே விழும் நீரில் குளித்து மகிழ்வதற்காக சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து செல்கின்றனர். நீர்வரத்து குறைந்ததாலேயே குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலாப் பயணிகள் வரிசையில் நின்று குளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.1