Shuru
Apke Nagar Ki App…
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
Vinayagam Vinayagam
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
More news from தமிழ்நாடு and nearby areas
- 2026ல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் அதிமுக அமோக வெற்றி பெற்று மீண்டும் நல்லாட்சி அமைய உள்ளதை தொடர்ந்து, கழக ஆட்சியின் சாதனைகளை விளக்கி, பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டி காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் ஊராட்சியில், மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் , அவர்கள் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கினர். ___________ அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்த தமிழகத்தை அமளிக்காடாக மாற்றி பொதுமக்களுக்கு பல்வேறு இன்னல்களை ஏற்படுத்தி வரும் திமுக ஆட்சியை விரட்டும் வகையில், தமிழகமெங்கும் வாக்காளப் பெருமக்களை நேரில் சந்தித்து விடியா திமுக ஆட்சியின் அவலங்களை விளக்கியும், கழக ஆட்சியின் சாதனை திட்டங்களை விளக்கும் வகையிலும், கழக ஆட்சி மீண்டும் மலர்ந்திடும் வகையிலும் தமிழகமெங்கும் பொது மக்களை நேரில் சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கி திண்ணை பிரச்சாரம் நடை பெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான மணிமங்கலம் வேணுகோபால் அவர்கள் ஏற்பாட்டில், குன்றத்தூர் ஒன்றிய கழக செயலாளரும் ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மதனந்தபுரம் கே.பழனி அவர்கள் தலைமையில், காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் ஊராட்சியில் கடைவீதி பகுதியில், 2026ல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெற, பொதுமக்களிடம் கழக ஆட்சியின் சாதனைகளை விளக்கி, மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் ,பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் விவசாய பிரிவு ஒன்றிய செயலாளர் எச்.டி.சிவராஜ் உட்பட ஏராளமான கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.1
- விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பொற்கொடி செல்வராஜ் முன்முயற்சியில் ஐய்யம்பேட்டை ஊராட்சியில் உள்ள பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கி ஐய்யம்பேட்டை ஊராட்சிக்கு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய இரண்டு மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்ட காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பரிந்துரையின் பேரில் இன்று திமுக மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் தலைமையில் பூமி பூஜை செய்தார் அதனைத் தொடர்ந்து வாரணவாசி கிராமத்தில் அங்கன்வாடி மையம் ஊத்துக்காடு கிராமத்தில் ஆரம்ப சுகாதார துணை நிலையம் ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார் இந்நிகழ்ச்சியில் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஆர் கே தேவேந்திரன் வாலாஜாபாத் பேரூர் கழக செயலாளர் பாண்டியன் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பொற்கொடி செல்வராஜ், ஒன்றிய செயலாளர் சேகர், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சஞ்சய்காந்தி , வாரணவாசி ஊராட்சி மன்ற தலைவர் பிரேமா மோகனசுந்தரம் , ஊத்துக்காடு சாவித்திரி மணிகண்டன் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய பேரூர் கழக கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1
- மலைப்பாம்பு காட்சி #forest #news1
- Post by Govindappa Govindappa1
- கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பர்கூர் அருகே உள்ள ஒப்பதவாடி கிராமத்தில்தமிழக முதல்வர் மு.க.ஸ்டலின் அவர்களின் 73 வது பிறந்த நாளினை முன்னிட்டு மாபெரும் கொடி ஏற்றும் விழா நடைப்பெற்றது.இந்த விழாவிற்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி அவர்கள் கலந்துக் கொண்டுகொடிஏற்றி வைத்தார்.1
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விவசாயிகளுக்கு பாதிக்கக்கூடிய எந்த ஒரு திட்டமும் வராது என உறுதியளித்தார் துணை முதல்வர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- *காஞ்சிபுரம் அருகே பள்ளி மாணவர் மீது தாக்குதல் – பள்ளிகளில் அதிகரிக்கும் வன்முறை குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை* --------- காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட ஊத்துக்காடு ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடக்கப்பள்ளியும் இயங்கி வருகிறது. இந்த நிலையில், பள்ளியில் பீடி பிடித்ததாக கூறப்படும் எட்டாம் வகுப்பு மாணவனை ஆசிரியரிடம் கூறச் சென்ற ஆறாம் வகுப்பு மாணவன் மீது தாக்குதல் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. எட்டாம் வகுப்பு மாணவன் கல்லால் தாக்கியதில், ஆறாம் வகுப்பு மாணவன் தலையில் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களிடையே அதிகரித்து வரும் வன்முறை மற்றும் போதைப் பழக்கங்கள் குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், இதே பள்ளி வளாகத்தில் உள்ள தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அறையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள நான்கு கணிப்பொறிகள் மற்றும் சில பொருட்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவங்கள் குறித்து பள்ளிக் கல்வித்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- #சென்னை #புறநகர் #மாவட்டம்1