Shuru
Apke Nagar Ki App…
Govindappa Govindappa
More news from தமிழ்நாடு and nearby areas
- Post by Govindappa Govindappa1
- கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பர்கூர் அருகே உள்ள ஒப்பதவாடி கிராமத்தில்தமிழக முதல்வர் மு.க.ஸ்டலின் அவர்களின் 73 வது பிறந்த நாளினை முன்னிட்டு மாபெரும் கொடி ஏற்றும் விழா நடைப்பெற்றது.இந்த விழாவிற்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி அவர்கள் கலந்துக் கொண்டுகொடிஏற்றி வைத்தார்.1
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விவசாயிகளுக்கு பாதிக்கக்கூடிய எந்த ஒரு திட்டமும் வராது என உறுதியளித்தார் துணை முதல்வர்.1
- சேலம் மாநகராட்சி குடிநீர் விநியோகத்தைத் தனியாருக்கு விடும் முடிவைக் கைவிடக் கோரி, அம்பேத்கர் மக்கள் இயக்கத் தலைவர் ஜங்ஷன் அண்ணாதுரை தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தால் ஏழை, எளிய மற்றும் தாழ்த்தப்பட்ட பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என அவர்கள் குற்றம் சாட்டினர். பொதுமக்களின் நலன் கருதி இத்திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்ததார்.1
- சேலம் மாநகர மாவட்ட பாஜக சிறுபான்மையினர் பிரிவு சார்பில், இன்று சேலம் அஸ்தம்பட்டி ஹவுசிங் போர்டு பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, இஃப்தார் நோன்பை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சேலம் மாநகர மாவட்ட பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள், பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- தூத்துக்குடி பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்திற்க்கு, நீதி கேட்டு காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் உள்ளிட்ட கழகத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம். _________ தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே வேடநத்தம் கிராமம் வடக்குத் தெருவை சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் விவசாயியின் மகள், கடந்த 10 ஆம் தேதி இரவு தேர்வுக்காக நீண்டநேரம் படித்துவிட்டு பின்னர் இயற்கை உபாதை கழிக்க அங்குள்ள காட்டுப் பகுதிக்கு சென்ற போது, சமூக விரோதிகளால், பாலியல் வன்கொடுமை செய்து துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்டார். வெளியே சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது தந்தை குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்ற போது அங்குள்ள போலீஸார், விளாத்திக்குளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்குமாறு அலைகழித்துள்ளனர்.. முகம், உடலில் காயங்களுடன் மாணவி, துண்டு துண்டாக வெட்டப்பட்டு ஆடைகள் களைந்திருந்ததை கண்டு பொதுமக்கள் குளத்தூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்த மாணவியின் படுகொலைக்கு நீதி கேட்டு காஞ்சிபுரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில், வட்டாட்சியர் அலுவலகம் அருகே அந்த மாணவனின் புகைப்படத்திற்கு, மாவட்டக் கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் உள்ளிட்ட கழகத்தினர் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி நீதி கேட்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1
- Post by Govindappa Govindappa1