Shuru
Apke Nagar Ki App…
சேலம் அஸ்தம்பட்டியில் பாஜக சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி! சேலம் மாநகர மாவட்ட பாஜக சிறுபான்மையினர் பிரிவு சார்பில், இன்று சேலம் அஸ்தம்பட்டி ஹவுசிங் போர்டு பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, இஃப்தார் நோன்பை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சேலம் மாநகர மாவட்ட பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள், பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Rajendran
சேலம் அஸ்தம்பட்டியில் பாஜக சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி! சேலம் மாநகர மாவட்ட பாஜக சிறுபான்மையினர் பிரிவு சார்பில், இன்று சேலம் அஸ்தம்பட்டி ஹவுசிங் போர்டு பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, இஃப்தார் நோன்பை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சேலம் மாநகர மாவட்ட பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள், பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- சேலம் மாநகர மாவட்ட பாஜக சிறுபான்மையினர் பிரிவு சார்பில், இன்று சேலம் அஸ்தம்பட்டி ஹவுசிங் போர்டு பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, இஃப்தார் நோன்பை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சேலம் மாநகர மாவட்ட பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள், பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.1
- சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க - கொ.ம.தே.க நிர்வாகிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கடந்த தேர்தலில் 3 தொகுதிகளில் போட்டியிட்ட கொ.ம.தே.க-வுக்கு வரும் தேர்தலுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதனைக் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் கொ.ம.த.க பொதுச்செயலாளர் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் நேற்று செய்தியாளர் சந்திப்பில் உரையாடினார்.1
- சேலம் மாநகராட்சி குடிநீர் விநியோகத்தைத் தனியாருக்கு விடும் முடிவைக் கைவிடக் கோரி, அம்பேத்கர் மக்கள் இயக்கத் தலைவர் ஜங்ஷன் அண்ணாதுரை தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தால் ஏழை, எளிய மற்றும் தாழ்த்தப்பட்ட பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என அவர்கள் குற்றம் சாட்டினர். பொதுமக்களின் நலன் கருதி இத்திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்ததார்.1
- எடப்பாடி அருகே அரசு பேருந்தில் கல்லூரி மாணவி தவற விட்ட லேப் டாப் ஒப்படைப்பு... சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவி தேன்மொழி என்பவர் கணினி அறிவியல்துறையில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலை கல்லூரிக்கு வழக்கம் போல அரசு பேருந்தில் சென்றுள்ளார்... பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய போது தனது கையில் வைத்திருந்த லேப்டாப்பை மறந்து பேருந்தின் இருக்கையிலேயே வைத்து விட்டு சென்றுள்ளார். கல்லூரி வகுப்பறைக்கு சென்றவுடன் நினைவு வரவே மாணவி பதறியுள்ளார்... இந்நிலையில் அதே பேருந்தில் பயணம் செய்த சங்ககிரியை சேர்ந்த பிரதீப்குமார் என்பவர் அந்த லேப்டாப்பை மீட்டு கல்லூரி முதல்வர் தமிழரசியிடம் தகவல் தெரிவித்து இன்று நேரில் சென்று அதை மாணவியிடம் ஒப்படைத்தார். இதையடுத்து கல்லூரி சார்பில் அவருக்கு நன்றி நன்றி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது...1
- கரூர் வெள்ளியணை பகுதிக்கு உட்பட்ட ஜல்லிப்பட்டி அருகே கரிகாலி பகுதிக்குச் செல்லும் ரயில் தண்டவாள பாதை உள்ளது. தண்டவாளத்தில் சரக்கு ரயில் வருவது தெரியாமல் கல்லூரி பேருந்து ஓட்டுனர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்பொழுது பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருபதுக்கு மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்தனர்.1
- Post by Saravanan Vasanthi2
- குளித்தலையில் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி மத்திய சிறப்பு படையினர் மற்றும் குளித்தலை காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிகளை வலுப்படுத்தவும், பொதுமக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும் மத்திய சிறப்பு படையினர் 50 பேர் கரூர் மாவட்டம் குளித்தலை வந்து உள்ளனர். இந்த நிலையில் மத்திய சிறப்பு படையினரின் கொடி அணிவகுப்பு குளித்தலை நகர பகுதிகளில் நடைபெற்றது. குளித்தலை பெரியபாலம் பகுதியில் குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் கொடியசைத்து கொடி அணிவகுப்பை தொடங்கி வைத்தார். .அங்கிருந்து மாரியம்மன் கோவில் தெரு, பஜனைமடை தெரு, நகராட்சி அலுவலகம், சின்ன ஆண்டாங் கோவில் தெரு, பேராளம்மன் கோவில் தெரு, பேருந்து நிலையம், நீதிமன்றம் வழியாக சுங்ககேட் வரை சென்று முடிவடைந்தது. மத்திய சிறப்பு படையினர் துப்பாக்கி ஏந்தியபடி சென்றனர். அவர்களை பின்தொடர்ந்து குளித்தலை போலீசாரும் அணிவகுத்து உடன் சென்றனர். இதேபோல் தோகைமலை பேருந்து நிலையம் பகுதிகளிலும் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.1
- எருமப்பட்டி ஒன்றியம் பொன்னேரி கைகாட்டியிலிருந்து கோம்பை வரை சாலை வசதி கோரி நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் காயமடைந்த பச்சமுத்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சம்பவம் குறித்து வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார்.1