Shuru
Apke Nagar Ki App…
ஜல்லிப்பட்டி அருகே கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்து கரூர் வெள்ளியணை பகுதிக்கு உட்பட்ட ஜல்லிப்பட்டி அருகே கரிகாலி பகுதிக்குச் செல்லும் ரயில் தண்டவாள பாதை உள்ளது. தண்டவாளத்தில் சரக்கு ரயில் வருவது தெரியாமல் கல்லூரி பேருந்து ஓட்டுனர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்பொழுது பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருபதுக்கு மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்தனர்.
R. Suresh
ஜல்லிப்பட்டி அருகே கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்து கரூர் வெள்ளியணை பகுதிக்கு உட்பட்ட ஜல்லிப்பட்டி அருகே கரிகாலி பகுதிக்குச் செல்லும் ரயில் தண்டவாள பாதை உள்ளது. தண்டவாளத்தில் சரக்கு ரயில் வருவது தெரியாமல் கல்லூரி பேருந்து ஓட்டுனர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்பொழுது பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருபதுக்கு மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்தனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- கரூர் : ஆளில்லா ரயில் பாதையில் கரூர் தனியார் கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் சிக்கிய மாணவர்களை, உடனே மருத்துவக்கல்லூரியில் சென்று விசாரித்து சிகிச்சையை துரிதப்படுத்திய கரூர் திமுக மாவட்ட செயலாளர் V செந்தில்பாலாஜி. மேலும் மாணவர்களை சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் தெரிவித்தார்.1
- Post by Saravanan Vasanthi2
- குளித்தலையில் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி மத்திய சிறப்பு படையினர் மற்றும் குளித்தலை காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிகளை வலுப்படுத்தவும், பொதுமக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும் மத்திய சிறப்பு படையினர் 50 பேர் கரூர் மாவட்டம் குளித்தலை வந்து உள்ளனர். இந்த நிலையில் மத்திய சிறப்பு படையினரின் கொடி அணிவகுப்பு குளித்தலை நகர பகுதிகளில் நடைபெற்றது. குளித்தலை பெரியபாலம் பகுதியில் குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் கொடியசைத்து கொடி அணிவகுப்பை தொடங்கி வைத்தார். .அங்கிருந்து மாரியம்மன் கோவில் தெரு, பஜனைமடை தெரு, நகராட்சி அலுவலகம், சின்ன ஆண்டாங் கோவில் தெரு, பேராளம்மன் கோவில் தெரு, பேருந்து நிலையம், நீதிமன்றம் வழியாக சுங்ககேட் வரை சென்று முடிவடைந்தது. மத்திய சிறப்பு படையினர் துப்பாக்கி ஏந்தியபடி சென்றனர். அவர்களை பின்தொடர்ந்து குளித்தலை போலீசாரும் அணிவகுத்து உடன் சென்றனர். இதேபோல் தோகைமலை பேருந்து நிலையம் பகுதிகளிலும் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.1
- இன்றைக்கு தமிழக முதலமைச்சர் காலையில் ரெண்டு பசங்க நல்ல பசங்க 1. தேவா,2.ஜீவா இருவர் வரவைத்து ரீல்ஸ் எல்லாம் போட்டுட்டு கடைசியாக நல்லா படிங்க பா அரசு பள்ளியில் கஞ்சா நிறுத்தினால் குழந்தைகள் நல்லா படிப்பார்கள் கர்நாடக அரசு பதினாறு வயது சிறுவர்கள் சோசியல் மீடியாவை முடக்கம் செய்கிறார்கள் வேறு அரசாக இருந்தாலும் நான் பாராட்டுகிறேன். ஆந்திரா அரசு 13 வயதுக்குள் இருக்கும் இவர்கள் பயன்படுத்தாமல் இருப்பதற்கு ஆலோசனை செய்து கொண்டிருக்கிறது. குழந்தைகளை போன் பண்ணி ரீல் போடாதீர்கள் என்று சொல்லலாம் இல்ல வரவேற்று ரீல் செய்துவிட்டு உப்பு கசப்பாக கடைசியாக படிப்பா என்று சொல்கிறார். பாரதிய ஜனதா கட்சி அண்ணாமலை விமர்சனம்.1
- சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க - கொ.ம.தே.க நிர்வாகிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கடந்த தேர்தலில் 3 தொகுதிகளில் போட்டியிட்ட கொ.ம.தே.க-வுக்கு வரும் தேர்தலுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதனைக் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் கொ.ம.த.க பொதுச்செயலாளர் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் நேற்று செய்தியாளர் சந்திப்பில் உரையாடினார்.1
- கூகுளின் அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான 'Gemini' (AI) இப்போது Google Maps உடன் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இனி நீங்கள் Maps-ல் குறிப்பிட்ட இடங்களைத் தேடும்போது, வெறும் வழியை மட்டும் காட்டாமல், அந்த இடம் தொடர்பான கூடுதல் தகவல்கள், மதிப்பாய்வுகள் மற்றும் Gemini AI-ன் பரிந்துரைகளையும் உடனுக்குடன் பெற முடியும். உதாரணமாக, "ஒரு நல்ல காபி கடை எங்கே இருக்கிறது?" என்று கேட்டால், அது உங்களுக்கு மிகச்சிறந்த கடையைப் பரிந்துரைப்பதோடு, ஏன் அந்த கடை சிறந்தது என்பதையும் விளக்கும். இந்த அப்டேட்டின் மற்றொரு சிறப்பம்சம், 'Immersive View' (3D வரைபடம்) தொழில்நுட்பம். இது, நீங்கள் செல்ல விரும்பும் இடத்தின் 3D காட்சியை மிகத் துல்லியமாகக் காட்டுகிறது. இதன் மூலம், குறிப்பிட்ட கட்டிடங்கள், தெருக்கள், மற்றும் அந்த இடத்தின் சூழல் எப்படி இருக்கும் என்பதை நேரில் பார்ப்பது போன்றே அனுபவிக்கலாம். மேலும், இந்த தொழில்நுட்பம் இப்போது வான்வழி காட்சிகளையும் (Aerial views) உள்ளடக்கியுள்ளதால், பயனர்கள் தாங்கள் விரும்பும் இடத்தின் ஒட்டுமொத்தப் பார்வையும் பெற முடியும். Google Maps-ன் இந்த Gemini AI மற்றும் 3D Immersive View அப்டேட், பயண அனுபவத்தை முற்றிலும் புதிய இடத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. இனி தேடல் எளிமையாகவும், பரிந்துரைகள் துல்லியமாகவும், பயணம் மிகவும் நேர்த்தியாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த புதிய அப்டேட் படிப்படியாக அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கத் தொடங்கும்.1
- திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தலையூத்து அருவி அருகே அமைந்துள்ள அருள்மிகு நீல வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் இன்று ரெட்டியபட்டி மக்கள் உலக நன்மை வேண்டியும், உலகில் போர் தணிந்து அமைதி நிலவும், உரிய காலத்தில் மழை பெய்து விவசாயம் செழிக்கவும் திருக்கோவிலில் யாகம் நடத்தி பொங்கள் வைத்து வழிபாடு செய்தனர்2
- கரூர் வெள்ளியணை பகுதிக்கு உட்பட்ட ஜல்லிப்பட்டி அருகே கரிகாலி பகுதிக்குச் செல்லும் ரயில் தண்டவாள பாதை உள்ளது. தண்டவாளத்தில் சரக்கு ரயில் வருவது தெரியாமல் கல்லூரி பேருந்து ஓட்டுனர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்பொழுது பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருபதுக்கு மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்தனர்.1