Shuru
Apke Nagar Ki App…
புதுகை: 300க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டம் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலக கூட்டரங்கு முன் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இன்று ஒரு நாள் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நம்ம ஊரு புதுக்கோட்டை
புதுகை: 300க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டம் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலக கூட்டரங்கு முன் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இன்று ஒரு நாள் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
More news from Tamil Nadu and nearby areas
- கரூர் அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் மூலவர் கணபதிக்கு மார்கழி மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் மூலவர் கணபதி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஆலயம் வந்து அனைத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர்.1
- Post by Test profile #11
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் என்கிற பெயரை மாற்றி நிதியை குறைத்து 100 நாள் வேலைத்திட்டத்தில் புதிய சட்டத்தை நிறைவேற்றி இருக்கும் பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சட்ட நகலை கிழித்தெறியும் போராட்டம் இன்று 6.1.2026 செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் வெண்ணந்தூர் ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்றது.1
- *அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 50 லட்சம் ரூபாய் பெற்று பண மோசடியில் ஈடுபட்டதாக தேனி மாவட்டத்தின் முன்னாள் பிஆர்ஓ மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை* தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பகுதியில் வசித்து வருபவர் சாந்தி, இவரது மகன் சூரிய நாராயணன் படித்து முடித்துவிட்டு அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்துள்ளார் இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு துறை அலுவலராகப் (PRO) பணிபுரிந்து வந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் சாந்திக்கு அறிமுகம் ஆகியுள்ளார் அப்போது செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலராக பணி புரிந்து வருவதால் தனக்கு அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர் என பலருடன் தொடர்பு இருப்பதாகவும் பலருக்கு அரசு வேலை வாங்கி கொடுத்திருப்பதாகவும் 50 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் உதவி மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் (APRO) பணி வாங்கி தருவதாக கூறியுள்ளார் இதனை நம்பிய சாந்தி தனது மகனுக்கு அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பி தவணை முறையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சண்முகசுந்தரம் மற்றும் அவரது மனைவி செண்பகவள்ளி ஆகியோரிடம் 50 லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது பின்னர் தன் மகனுக்கு எப்போது அரசு வேலை கிடைக்கும் என கேட்டபோது சண்முகசுந்தரம் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் சண்முகசுந்தரம் அரசு வேலை வாங்கி தருவதாக 4 நபர்களிடமிருந்து 74 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்துள்ளதாகவும் இதனை அறிந்த சாந்தி தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார் இதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிநேக பிரியா உத்தரவின் படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தேனி மாவட்ட முன்னாள் மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் சண்முகசுந்தரம் மற்றும் அவரது மனைவி செண்பகவள்ளி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சண்முகசுந்தரம் தற்போது சேலம் போக்குவரத்து கழக மக்கள் செய்தி தொடர்பு அலுவலராக (PRO) பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது1
- குண்டடம் திராவிட பொங்கல் திருவிழ. திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஜனவரி 3 முதல் ஜனவரி 9ஆம் தேதி வரை திமுக மேற்கு நகரம் பேரூர் மற்றும் ஒன்றிய சார்பாக, வருகின்ற தமிழர் திருநாள் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்படி சூரியநல்லூர். இரக்கம்பட்டி. ஊதியூர் பகுதிகளில் விளையாட்டுப் போட்டி நடைபெற உள்ளது. போட்டியில் வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசு வழங்கப்பட உள்ளன.1
- திருச்செங்கோட்டை அடுத்த எலச்சிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செலம்ப கவுண்டம் பாளையம்பகுதியில் விநாயகா மெட்ரிகுலேஷன் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து 30 பேர் பயணித்த நிலையில் ஐந்து பேருக்கு லேசான காயம்சம்பவம் குறித்து எலச்சிபாளையம் போலீசார் விசாரணை* விநாயகா மெட்ரிகுலேஷன் பள்ளி வாகனம் சாலையில் சாய்ந்தது. எலச்சிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செலம்பகவுண்டம்பாளையம் அருகில் TN 01 Y 3448 என்ற எண் கொண்ட விநாயகா மெட்ரிகுலேஷன் பள்ளி வாகனம் செலம்பகவுண்டம்பாளையம் அருகில் வரும்போது வாகனத்தில் பட்டைஎதிர்பாராத விதமாக எதிர்பாராத விதமாகஉடைந்து போனதால் வண்டி ரோட்டிலேயே வலது புறமாக சாய்ந்து விட்டது. நல்வாய்ப்பாக பின் பகுதியில் எந்த வாகனமும் வராததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. வழக்கமாக வரும் என்று வாகனம் பழுதானதால் மாற்று வாகனமாக வந்த வாகனம் பட்டை உடைந்து விபத்துக்குள்ளானது. வாகனத்தில் 30 பள்ளி குழந்தைகள் சென்றதில் 5 ஐந்து பேருக்கு லேசான காயம் ஏற்பட்டு வையப்பமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று உடனே வீடு திரும்பினார்கள்.சம்பவம் குறித்து எலச்சிபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.1
- Post by Test profile #11
- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சின்னமனூர் பகுதியில் அமெரிக்க அதிபரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தேனி மாவட்ட குழு சார்பில் அமெரிக்கா ஏகாதிபத்திய அதிபர் டிரம்பை கண்டித்தும் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவே அமெரிக்க ராணு.வம் கைது செய்ததை கண்டித்து தேனி மாவட்டம் சின்னமனூர் ரவுண்டானா அருகே கட்சியின் ஒன்றிய செயலாளர் வே.ஜெய்ஹிந்த் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் இரா.தமிழ் பெருமாள், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே.பரமேஷ்வரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் தோழர் சாம் வளவன், தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் தோழர் சா.பாண்டியன் வழக்கறிஞர் மணிகண்டன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைச் செயலாளர் அ.முருகன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் இரா.கதிரப்பன், எஸ்.ஈஸ்வரன், என்.பவுன்ராஜா, மற்றும் வைரமுத்து இருதயராஜ், ஸ்டீபன் உள்ளிட்ட பல்வேறு தோழர்கள் திரளாக பங்கேற்று அமெரிக்க அதிபருக்கு எதிராக கோஷம் எழுப்பபட்டு கண்டன உரையாற்றினார்.1
- திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட புதிய காவல் நிலையம் எதிரே மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயில் இன்று முருகனுக்கு உகந்த நாள் செவ்வாய்க்கிழமை முன்னிட்டு 16 வகை அனைத்து திரவியங்கள் பயன்படுத்தி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள முருகன் கடவுளை ஏராளமான பக்தர்கள் அருள் பெற்று சென்றனர்1