சேலம் மாநகர மக்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் வேண்டுகோள்! சேலம் மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் இளங்கோவன் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், சேலம் மாநகராட்சி எல்லை பகுதிக்குள் வசிக்கும் பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் உள்ள பாதாள சாக்கடை திட்டம் சொத்துவரி மற்றும் குடிநீர் வரி, குடிநீர் பிரச்சனை, பொது சுகாதாரம், தெரு விளக்கு வசதி, சாலை வசதி, உள்ளிட்டவற்றில் உள்ள குறைகளை மாநகராட்சி சார்பில் புதிய வாட்ஸ்ஆப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 8300383003 மற்றும் 8300062992 என்ற whatsapp எண்ணிற்கு புகார்களை தெரிவித்தால், வார்டு வாரியாகவும் எந்த மண்டலத்திற்குட்பட்ட பகுதி என்பதை அதிகாரிகள் மூலம் தகவல் தெரிவித்து, உரை ரீதியான ஊழியர்களும் அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று பொதுமக்கள் தெரிவித்த குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வார்கள், எனவே மாநகராட்சி மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புதிய வசதியை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என, சேலம் மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
சேலம் மாநகர மக்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் வேண்டுகோள்! சேலம் மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் இளங்கோவன் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், சேலம் மாநகராட்சி எல்லை பகுதிக்குள் வசிக்கும் பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் உள்ள பாதாள சாக்கடை திட்டம் சொத்துவரி மற்றும் குடிநீர் வரி, குடிநீர் பிரச்சனை, பொது சுகாதாரம், தெரு விளக்கு வசதி, சாலை வசதி, உள்ளிட்டவற்றில் உள்ள குறைகளை மாநகராட்சி சார்பில் புதிய வாட்ஸ்ஆப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 8300383003 மற்றும் 8300062992 என்ற whatsapp எண்ணிற்கு புகார்களை தெரிவித்தால், வார்டு வாரியாகவும் எந்த மண்டலத்திற்குட்பட்ட பகுதி என்பதை அதிகாரிகள் மூலம் தகவல் தெரிவித்து, உரை ரீதியான ஊழியர்களும் அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று பொதுமக்கள் தெரிவித்த குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வார்கள், எனவே மாநகராட்சி மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புதிய வசதியை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என, சேலம் மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
- தமிழக சட்டமன்றத்தில் பதவி ஏற்பு விழாவின்போது, முதல்வர் ஜோசப் விஜய் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வணக்கத்தை ஏற்காதது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த நிகழ்வின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி, அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நாள் முதல்வர், முன்னாள் முதல்வருக்கு மரியாதை செலுத்தாதது பதவியை அவமதிப்பதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.1
- நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள குஞ்சாம்பாளையம் வயல் ஒன்றில் பைப் போடுவதற்காகத் தோண்டியபோது 10 அடி ஆழ மர்மக் குழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆதிகால மக்கள் தங்கள் தானியங்களைப் பாதுகாக்க இந்தக் குழியைப் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது. இந்தக் கண்டுபிடிப்பு அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.1
- தருமபுரி சந்தைப்பேட்டை ஆட்டுச் சந்தையில் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட 340 ஆடுகள் விற்பனைக்கு வந்தன. சிறிய குட்டிகள் ₹2000 முதல் பெரிய ஆடுகள் ₹24,000 வரை விற்பனையாகி, மொத்தமாக ₹43 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.1
- கரூர் காந்திகிராமம் பகுதியில் உள்ள தனியார் பஞ்சு குடோனில் இன்று மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், இரண்டு வாகனங்களுடன் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.1
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கத்தினால் நுங்கு விற்பனை தீவிரம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது,இந்த நிலையில் உடல் சூட்டை குறைக்கும் விதமாக சாலையோரங்களில் நுங்கு விற்பனை தீவிரமடைந்துள்ளது.இதற்காக பனைமரத் தொழிலாளிகள் இயற்கையாக விளைந்த நுங்குகளை அறுவடை செய்து கிருஷ்ணகிரி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு சாலை ஓரங்களில் நுங்கு விற்பனையை துவங்கி உள்ளனர்.1
- திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் ஏராளமான மனுக்களை அளித்தனர். மனுக்களைப் பெற்ற ஆட்சியர், விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.1
- கூத்தைப்பார் கிராமத்தில் உள்ள கன்னுடைய அய்யனார், சாத்த பிள்ளை அய்யனார் கோவிலில் சித்திரை மாத தேர் திருவிழா கண்ணைக் கவரும் வானவேடிக்கையுடன் மிக விமர்சையாக நடந்தது திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைபார் கிராமத்தில் கண்ணுடைய ஐயனார், சாத்தப்பிள்ளை அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவில் அந்த கிராம மக்களின் வழிபாட்டு தெய்வமாக உள்ளது. இந்த நிலையில் அந்த கோவிலில் சித்திரை மாததேர் திருவிழா நடந்தது. தேர் திருவிழாவை முன்னிட்டு பாரம்பர முறைப்படி பழமை மாறாமல் தேரோடும் வீதிகளில் பொதுமக்கள் அவர்கள் வீட்டு வாசலில் பசு மாட்டின் சாணத்தில் இருந்து எடுக்கப்பட்ட வராட்டியில் பாத்திரம் வைத்து பச்ச அரிசி மற்றும் பசும்பால் இட்டு பொங்கல் வைத்து சாமிக்கு படைத்து வழிபாடு செய்தனர். முன்னதாக மே மாதம் 2 ஆம் தேதி காப்பு கட்டி அதன் பிறகு 5 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு கண்ணுடைய அய்யனார் ஆலயத்தில் இருந்து சுவாமி வீதி உலா நடைபெற்றது. அதன் பிறகு ஒவ்வொரு நாளும் கிராம சாவடியிலிருந்து சுவாமிகள் வீதி உலா நடைபெற்றது 6ஆம் தேதி இரவு யானை வாகனத்திலும் 7 ஆம் தேதி அன்னபட்சி மற்றும் கொள்ளு திண்ணி குதிரை வாகனத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தது. 8ஆம் தேதி இரவு காவு பிடித்து காவு எரிதல் 9 ஆம் தேதி இரவு சப்பாரத்தில் சுவாமிகள் வீதி உலா 10ஆம் பச்ச பட்டினியும் 11ம் தேதியான அதிகாலை ஆறு மணிக்கு சுவாமிகள் தேரில் ஏற்றப்பட்டு தேர் வடம் பிடித்தலும் அதன் பிறகு முனியாண்டவர் வீதி உலா மாலை 5 மணிக்கு தேர் வடம் பிடித்து தெற்கு தெரு, மேல தெரு, வடக்கு தெரு ஆகிய தெருகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிகண்ணுடைய அய்யனார் மற்றும் சாத்த பிள்ளை அய்யனார் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தேர் வலம் வந்த பிறகு கண்ணை கவரும் மாணவேடிக்கை விமர்சையாக நடைபெற்றது1
- தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்றதும், தேர்தல் நடத்தை விதிகள் நீக்கப்பட்டு சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் மீண்டும் தொடங்கியது. இரண்டு மாத காத்திருப்புக்குப் பிறகு, தங்கள் குறைகளை அரசுக்குத் தெரிவிக்க ஏராளமான பொதுமக்கள் இன்று திரண்டனர். அவர்களுக்கு அரசு சார்பில் இலவசமாக மனு எழுதித் தரும் ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது.1