Shuru
Apke Nagar Ki App…
ேநாய்கு தகுந்தாற்போல் கீரைகள் பழங்கள் இதய நோயிலிருந்து பாதுகாக்கும்
M.Maria Ronickam
ேநாய்கு தகுந்தாற்போல் கீரைகள் பழங்கள் இதய நோயிலிருந்து பாதுகாக்கும்
More news from தமிழ்நாடு and nearby areas
- ேநாய்கு தகுந்தாற்போல் கீரைகள் பழங்கள் இதய நோயிலிருந்து பாதுகாக்கும்1
- கோதை கிராமம் காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு -பக்தர்கள் தரிசனம் நாகர்கோவிலில் அடுத்துள்ள கோதை கிராமம் காசி விஸ்வநாதர் உடனுறை விசாலாட்சி அம்பாள் திருக்கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஒட்டி சிவபெருமானுக்கு பால் பன்னீர் சந்தனம் களபம் தயிர் மூலிகைச்சாறு உள்ளிட்ட பல்வேறு வகை பொருட்களினால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து தீபாராதனையும் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து பிரதோஷ விநாயகர் காளை வாகனத்தில் கோவிலை மும்முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டனர்.1
- நெல்லையில் போக்குவரத்து கழக ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் ஜிசிசி என்ற பெயரில் மின்சார பேருந்துகளை இயக்கும் நடவடிக்கையை கைவிட்டு விட்டு அரசு போக்குவரத்துக் கழகமே இயக்க நடவடிக்கை வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மண்டல போக்குவரத்து கழக மேலாளர் அலுவலகம் முன்பு போக்குவரத்து கழக ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் நெல்லை வண்ணாரப்பேட்டை தாமிரபரணி பணிமனை அருகே அமைந்துள்ள நெல்லை மண்டல போக்குவரத்துக் கழக மேலாளர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சம்மேளனம் சிஐடியூ சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்றோர் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காலை 10 மணி முதல் மறுநாள் காலை 10 மணி வரை 24 மணி நேரம் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் வரவு-செலவு கணக்குகளை ஆய்வு செய்து, வரவுக்கும் செலவுக்கும் இடையிலான வித்தியாசத் தொகையை அரசு வழங்க வேண்டும், GCC என்ற பெயரில் மின்சார பேருந்துகளை தனியார் மூலம் இயக்கும் நடவடிக்கையை கைவிட்டு, அரசு போக்குவரத்துக் கழகமே மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கல்வித் தகுதியின் அடிப்படையில் வாரிசுதாரர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.1
- *குறும்பலாப்பேரி விலக்கில் வேகத்தடை அமைக்க கோரிக்கை – விபத்துகளை தடுக்க நடவடிக்கை தேவை* தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் – சுரண்டை சாலையில் உள்ள குறும்பலாப்பேரி விலக்கு பகுதியில் வேகத்தடை இல்லாததால் வாகனங்கள் அதிக வேகத்தில் சென்று தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இந்த விலக்கு பகுதியில் கிராமப்புற சாலைகள் இணைவதால் இருசக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் கனரக வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன. வேகக் கட்டுப்பாட்டு வசதி, எச்சரிக்கை பலகைகள் போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே, குறும்பலாப்பேரி விலக்கு பகுதியில் உடனடியாக தரமான வேகத்தடை அமைத்து, எச்சரிக்கை பலகைகள் பொருத்தி, இரவு நேரங்களில் போதிய ஒளி வசதி ஏற்படுத்த நெடுஞ்சாலைத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் விபத்து ஏற்பட்ட பிறகு நடவடிக்கை எடுப்பதை விட, முன்கூட்டியே பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து உயிரிழப்புகளைத் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- கயத்தாறில் மதுரை மெயின் ரோட்டில் மாற்று திறனாளிகள் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் கயத்தாறில் மதுரை மெயின் ரோட்டில் மாற்றுத்திறனாளிகளின் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கயத்தாறு ஒன்றிய மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவர் காந்திராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜெபஸ்டின்ராஜ், மாவட்ட துணைச் செயலாளர் எம். சாலமுன்ராஜ், மாவட்ட குழு உறுப்பினர் சரோஜா, கோவில்பட்டி நகர செயலாளர் குருநாதன், நகர குழு உறுப்பினர்கள் திருப்பதி, செல்வராஜ், ஆகியோர் கலந்து கொண்டனர்.மேலும் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையாவது மாதந்தோறும் வழங்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை ரூபாய் 6000 ஆக உயர்த்தக் கோரியும், மாற்றுத்திறனாளிகள் உதவி த்தொகைக்காக வழங்கப்பட்ட அனைத்து மனுக்களையும் உடனடியாக பரிசீலனை செய்து உடனடியாக உதவித்தொகை வழங்கும்படியும், தமிழக அரசு அறிவித்துள்ள வெற்றி வீடு திட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாற்றுத்திறனாளிகள் கண்டன கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.4
- கயத்தாறில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது* தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தினை மாற்றுத்திறனாளிகள் சங்க ஒன்றிய செயலாளர் காந்திராஜ் தலைமையில் கயத்தாறு பஜாரில் வைத்து நடைபெற்றது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் சாலமன் ராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் தமிழகத்தில் ஏற்கனவே வழங்கப்படும் 1500 ரூபாய்க்கு பதிலாக ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களைப் போலவே மாதந்தோறும் 6 ஆயிரம் வழங்க வலியுறுத்தியும். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உதவித்தொகை விண்ணப்பித்து காத்திருக்கும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை உடனடியாக வழங்கவும். மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகளில் மகளிர் மட்டும் திருநங்கை இலவசமாக பயணிக்கும் வெற்றி பயணத் திட்டத்தில் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் திட்டத்தில் பயன்பெறும் வகையில் இத்திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் எனவும் தமிழக அரசே கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் கலந்து கொண்டனர்2
- தூத்துக்குடியில் ஆகஸ்டு 27 இல் புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது *சென்னை சில்க்ஸ் மற்றும் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம் இணைந்து நடத்தக்கூடிய மாபெரும் புத்தக கண்காட்சி வரும் 27ம் தேதி தூத்துக்குடியில் நடைபெறுகிறது தூத்துக்குடியில் வரும் 27ஆம் தேதி புத்தக் கண்காட்சி தொடங்கி அடுத்த மாதம் 6ம் தேதி வரை தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற உள்ளது. 25 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 10 லட்சம் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளது. தமிழ், ஆங்கிலம், இலக்கியம், அறிவியல், பொது அறிவு, போட்டி தேர்வு உள்ளிட்ட அனைத்து புத்தகங்களும் இந்த கண்காட்சியில் இடம்பெற உள்ளது. கண்காட்சியின் நோக்கம் மாணவர்களுக்கு வாசிப்பு திறன் புத்தகம் படிப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளோம். வரும் 27 ஆம் தேதி காலை புத்தக கண்காட்சி துவக்க விழா நடைபெறுகிறது. மாநகராட்சி ஆணையர் பிரியங்கா தலைமையில், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி இந்த புத்தக கண்காட்சியை திறந்து வைக்க உள்ளார். மாணவ மாணவிகளுக்காக தினசரி கட்டுரை போட்டி திருக்குறள் போட்டி ஓவியப்பட்டி கதை எழுத போட்டி என பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளது. தமிழ்நாடு புத்தக விற்பனையாளர் சங்கம் இதுவரை 200க்கும் மேற்பட்ட கண்காட்சிகளை நடத்தி உள்ளது என தமிழ்நாடு புத்தக விற்பனையாளர் சங்கத்தின் சார்பில் ராஜபாண்டி மற்றும் ரவிவர்மன் ஆகியோர் தெரிவித்தார்.1
- ஆரோக்கியமாக வாழபழங்கள் கீரைகள் நோயிலிருந்து காக்க மேலும் பார்க்க1