தேவகோட்டை ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி திருக்கோயில் தேரோட்டம் நடை பெற்றது சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பழமை வாய்ந்த ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ராமநவமி பிரம்மோற்சவப் பெருவிழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் பக்திப் பெருக்குடன் நடைபெற்றது. விழாவின் பின்னணி இந்த பிரம்மோற்சவ விழா கடந்த ஒன்பது நாட்களுக்கு முன்னதாகக் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், மாலை நேரங்களில் சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனம் எனப் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலாவும் நடைபெற்று வந்தன. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டத்தை முன்னிட்டு, இன்று காலை ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி, சீதா பிராட்டி மற்றும் லெட்சுமணருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர், விசேஷ அலங்காரத்தில் சுவாமிகள் பெரிய தேரில் எழுந்தருளினர். "கோவிந்தா" கோஷங்கள் முழங்க, திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேவகோட்டையின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேர், நிலையை வந்தடைந்தது. விழாவில் தேவகோட்டை நகர் பகுதியைச்சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தேவகோட்டை ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி திருக்கோயில் தேரோட்டம் நடை பெற்றது சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பழமை வாய்ந்த ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ராமநவமி பிரம்மோற்சவப் பெருவிழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் பக்திப் பெருக்குடன் நடைபெற்றது. விழாவின் பின்னணி இந்த பிரம்மோற்சவ விழா கடந்த ஒன்பது நாட்களுக்கு முன்னதாகக் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், மாலை நேரங்களில் சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனம் எனப் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலாவும் நடைபெற்று வந்தன. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டத்தை முன்னிட்டு, இன்று காலை ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி, சீதா பிராட்டி மற்றும் லெட்சுமணருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர், விசேஷ அலங்காரத்தில் சுவாமிகள் பெரிய தேரில் எழுந்தருளினர். "கோவிந்தா" கோஷங்கள் முழங்க, திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேவகோட்டையின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேர், நிலையை வந்தடைந்தது. விழாவில் தேவகோட்டை நகர் பகுதியைச்சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- மதுரை மத்திய தொகுதி அதிமுக கூட்டணி கட்சியான புதிய நீதி கட்சியின் வேட்பாளர் நடிகர் சுந்தர் சி அவர்கள் இன்று காலை மதுரை மேற்கு மண்டலத்தில் தேர்தல் அலுவலரிடம் மனு தாக்கல் செய்தார் மனுதாக்கல் செய்துவிட்டு வெளியே வரும்பொழுது அங்கிருந்த மாநகராட்சி பணியாளர்களிடம் செல்பி எடுத்துக் கொண்டார். அவருடன் வந்த நடிகை குஷ்புவும் செல்பி எடுத்துக் கொண்டார்.1
- இன்று வாடிப்பட்டியில் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்கு அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் மாணிக்கம் பேருந்து நிலையம் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து தொண்டர்கள் புடைசூழ தாலுகா அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார் இதில் கட்சியின் நிர்வாகிகள் கொரியர் கணேசன் இராஜேஷ்கண்ணா இரவிச்சந்திரன் காளிதாஸ் அசோக் குமார் மற்றும் கூட்டணியின் சார்பில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் தமிழ் மாநில காங்கிரஸ் பாண்டி டயர் சரவணகுமார் அம்மா.ம.மு.க நிர்வாகிகள்.பா.ம.க.ஜான்பாண்டியன் மற்றும் கூட்டணியின் தொண்டர்கள் கலந்து கொண்டனர்1
- நாம் தமிழர் கட்சி சீமான் மீது டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது தொடர்பாக டிஐஜி தரப்பு வழக்கறிஞர் முரளிகிருஷ்ணன் கூறுகையில் உச்சநீதிமன்றத்தில் நீதியை பெறுவோம் என்றார்.1
- திண்டுக்கல் மாவட்டத்தில் காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது இந்நிலையில் மதியம் சுமார் 12:30 மணிக்கு மேல் கனமழை பெய்து வருகிறது இந்த கனமழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது கோடைகாலத்தில் கனமழை பெய்து வருவதால் இப்பகுதி விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்1
- Post by பெரியசாமி1
- பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக இன்று காலை முதல் அமமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர் இதன் ஒரு பகுதியாக தமிழக வெற்றிக் கழகத்தின் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சபரி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் இதற்காக தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் காலேஜ் விளக்கு பகுதியில் இருந்து பெரியகுளம் கோட்டாட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக வருகை தந்தனர் பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்து பின் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் இதில் தமிழக வெற்றிக்கழக பெரியகுளம் நகர செயலாளர் தினேஷ், மற்றும் நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்1
- சிவகங்கை அஇஅதிமுக மாவட்ட கழக செயலாளரும் சிவகங்கை சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் செந்தில் நாதன், கட்சி நிர்வாகிகளுடன் சிவன்கோவிலில் வழிபாடு செய்தார் . பிறகு சிவகங்கை கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கழக நிர்வாகிகள் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அப்போது மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன், தமிழ் மாநில காங்கிரஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடையப்பன், பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சத்தியநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.1
- வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேசிய ஜனநாயக கூட்டணியின் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார் இன்று தனது பிரச்சாரத்தை துவஙகினார் இந்நிலையில் MGR அவர்கள் தனது தந்தை V.P.பாலசுப்பிரமணியத்திற்கு கொடுத்த அம்பாசிட்டர் காரில் சென்டிமெண்ட்டாக பிரச்சாரத்தில் வலம் வந்து வேடசந்தூர் தொகுதி முழுவதும் அதிமுக வேட்பாளர் V.P. B. பரமசிவம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்1
- கம்பம் நகர மனிதநேய மக்கள் கட்சி அலுவலகம் திறப்பு கம்பம் சட்டமன்ற தொகுதி திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி வேட்பாளர் தேனி தெற்கு மாவட்ட செயலாளர் இராமகிருஷ்ணன் கம்பம் மெட்டு ரோட்டில் அமைந்துள்ள மனிதநேய மக்கள் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். கம்பம் நகரத் தலைவர் தமீமுல் அன்சாரி தலைமையில் இந்நிகழ்ச்சி 4-4-2026 சனிக்கிழமை நடைபெற்றது. கம்பம் வாவேர் பள்ளிவாசல் ஜமாஅத் கமிட்டி செயலாளர் நாகூர் மீரான், துணை செயலாளர் சர்புதீன் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொறுப்பாளர் யாசர் அராபத் மற்றும் நிர்வாகிகள், திமுக வடக்கு நகர செயலாளர் வீரபாண்டியன், தெற்கு நகர செயலாளர் பால்பாண்டி ராஜா, திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் குரு குமரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது, நகர செயலாளர் சேட், திராவிட கழகம் மாவட்ட செயலாளர் செந்தில் குமார்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஏரியா குழு தலைவர் லெனின், இந்திய கம்யூனிஸ்டு கட்சி கல்யாண சுந்தரம், மதிமுக நகரச் செயலாளர் பஷீர் கான் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். திமுக தொண்டர் அணி செயலாளர் சாதிக், இளைஞர் அணி வடக்கு நகர அமைப்பாளர் கலில், காதர் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அலுவலக திறப்பு மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை வரவேற்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அப்பாஸ் மந்திரி, மாவட்ட துணைத் தலைவர் சலீம் பாட்ஷா, கம்பம் நகர தமுமுக செயலாளர் நிஜாத் அகமது, மமக செயலாளர் அப்பாஸ் மந்திரி, பொருளாளர் ஜெய்லானி மாவட்ட தொண்டர் அணி செயலாளர் ஹக்கீம், ஆசிக் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். பல்வேறு கோரிக்கைகளை வேட்பாளர் முன்னணியில் கூட்டணி கட்சிகள் நிர்வாகிகள் வைத்தனர். திமுக கூட்டணிக்கு வெற்றி பெற கடுமையாக உழைப்போம் வெற்றியில் மிக பெரிய வரலாற்று வெற்றியை திமுக பெறும் என வேட்பாளர் இராமகிருஷ்ணன் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் தமுமுக மாவட்ட செயலாளர் சிந்தா மதார், மாவட்ட பொருளாளர் ஹபீபுல்லா, மாவட்ட துணைச் செயலாளர் சிராஜ்தீன், மாவட்ட சுற்றுச்சூழல் அணிச் செயலாளர் நியாஸ் அஹமது, மாவட்ட மருத்துவ அணி செயலாளர் யூசுப் அன்சாரி, கூடலூர் நகர தலைவர் சாகுல் அமீது, உத்தமபாளையம் நகர தலைவர் முகமது அசாருதீன், துணைச் செயலாளர் சையது அமீன் மற்றும் கம்பம் நிர்வாகிகள் சித்தீக், மெதார்ஷா, ஷேக் மைதீன், சையது அப்தாஹிர், சகுபர் சாதிக், ஹக்கீம், ஆசிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.3