Shuru
Apke Nagar Ki App…
பொதுமக்களுடன் கஞ்சி குடித்த திமுக வேட்பாளர் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆஸ்டின் இன்று நாகர்கோவிலில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகே வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது புனித வெள்ளியை ஒட்டி பொதுமக்களுக்கு அங்கு வழங்கப்பட்ட கஞ்சியை பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாங்கி சாப்பிட்டார். இதில் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Magson jones
பொதுமக்களுடன் கஞ்சி குடித்த திமுக வேட்பாளர் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆஸ்டின் இன்று நாகர்கோவிலில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகே வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது புனித வெள்ளியை ஒட்டி பொதுமக்களுக்கு அங்கு வழங்கப்பட்ட கஞ்சியை பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாங்கி சாப்பிட்டார். இதில் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆஸ்டின் இன்று நாகர்கோவிலில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகே வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது புனித வெள்ளியை ஒட்டி பொதுமக்களுக்கு அங்கு வழங்கப்பட்ட கஞ்சியை பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாங்கி சாப்பிட்டார். இதில் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.1
- நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் அடிக்கடி வனவிலங்குகள் நுழைந்து அட்டகாசம் செய்வது வழக்கம். நேற்று நள்ளிரவு விக்ரமசிங்கபுரம் சங்கரலிங்கபுரம் பகுதியில் இரண்டு கரடிகள் நடமாட்டம் இருந்ததை பார்த்த அப் பகுதி இளைஞர்கள் வீடியோ எடுத்து வைரல் செய்துள்ளனர். மீண்டும் கரடிகள் நடமாட்டம் உள்ளதா இல்ல பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்1
- Post by தமிழ்நாடுஅரசியல்1
- அச்சம்பட்டியில் இந்தியா கூட்டணி சார்பில் மதிமுக வேட்பாளராக போட்டியிடும் மதிமுக துணை பொதுச்செயலாளர் திமு ராஜேந்திரன் அறிமுக கூட்டம் இன்று நடந்தது இதில் திமுக மாவட்ட செயலாளர் ஜெயபாலன் தலைமை செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை, சதன் திருமலைக்குமார் எம்எல்ஏ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்1
- கயத்தாறில் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜ் கயத்தாறு பேரூராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் வாரச்சந்தையில் துண்டு பிரசவங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டார். அவருடன் அதிமுக மேற்கு ஓன்றிய செயலாளர் செல்வகுமார், கயத்தார் நகர செயலாளர் கப்பல் ராமசாமி, மாவட்ட கலைப்பிரிவு செயலாளர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சாலை கருப்பசாமி, மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆசூர் காளிப்பாண்டியன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இளைஞர் அணி இணைச்செயலாளர் குடியரசு பாண்டியன், மாவட்ட எம் ஜி ஆர்.மன்ற செயலாளர் பூமாரி யப்பான்,மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பாலகணேசன்,ஒன்றிய மாணவரணி செயலாளர் சிவக்குமார், வார்டு செயலாளர் மாரியப்பன் ஆகியோர் கயத்தாரில் வாரச் சந்தையில்,ஆரோக்கிய மாதா கோவில், கோட்டை பிள்ளையார் கோயில் தெரு,உள்பட பல்வேறு இடங்களில் எம் எல் ஏ வேட்ப்பாளர் கடம்பூர் ராஜ் ஒட்டு கேட்டார். இதனைத் தொடர்ந்து வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை வித்து மரியாதை செலுத்தினார் கட்டாலங்குளத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட் அவைத் தலைவர் எஸ்.கே.அமிர்ராஜ்பாண்டியன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர்பூலோகப் பாண்டியன், கயத்தாறு மேற்கு ஓன்றிய செயலாளர் கல்யாணபாண்டியன், கயத்தாறு நகரச் செயலாளர் அருண், மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் முருகன், கிழக்கு ஒன்றிய தலைவர் ராமர் பாண்டியன் ஒன்றிய துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன் உட்பட பல்வேறு கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.4
- விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி கலந்து கொண்டு உரையாற்றினார். கூட்டத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் கீழ் திருச்சுழி தொகுதியில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும், இந்த நல்லாட்சி தொடர்ந்து நீடிக்கவும், தொகுதியின் வளர்ச்சி பாதை முன்னேறவும், வரும் தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் ஒன்றியக் கழகச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.3
- 2026 தேர்தலை முன்னிட்டு திமுக எம்பி கனிமொழி மானாமதுரையில் பரப்புரை தொடங்கினார். வேட்பாளர் தமிழரசி ரவிக்குமாருக்கு ஆதரவு திரட்டிய அவர், திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துரைத்து மக்களிடம் வாக்கு சேகரித்தார். பெண்கள் நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல திட்டங்கள் குறித்து பேசி, திமுக கூட்டணிக்கு ஆதரவு கோரினார்.1
- சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு ஆண்டுக்கு ஒரு கோடி சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை முன்னிறுத்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வேட்பாளர் மரிய ஜெனிபர் நேற்று வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். இவர்களுடன் அக்கட்சியினர் பலரும் உடனிருந்தனர். இந்த வாக்குறுதி மூலம் கன்னியாகுமரியின் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்த கட்சி முனைப்பு காட்டி வருகிறது.1