Shuru
Apke Nagar Ki App…
இன்றைய திருக்குறள் தினமும் அறிவும் திருக்குறள் இன்றைய தலைப்பு மருந்து
RAJA news
இன்றைய திருக்குறள் தினமும் அறிவும் திருக்குறள் இன்றைய தலைப்பு மருந்து
More news from Dindigul and nearby areas
- Post by G.thangarasu1
- திண்டுக்கல் மாவட்டம், செங்குறிச்சி அருகே ஆலம்பட்டி புதூர் பகுதியில் உள்ள ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு, கும்பாபிஷேக நிகழ்ச்சி பக்தி உணர்வுடன் நடைபெற்றது. பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.1
- உப்புக்கோட்டை மற்றும் உப்பார்பட்டி கிராமத்தில் சேர்ந்த கள்ளழகர் முல்லைப் பெரியாற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து முல்லைப் பெரியாற்றின் கரையில் எதிர்சேவை நடைபெற்றது இதில் 10000 - க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள உப்புக்கோட்டை கிராமத்தில் உள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் சித்திரை திருவிழா கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி முன்னிட்டு இரவு சாமி வீதி உலா நடைபெறும் பகுதிகளில் சொக்கப்பர் கொளுத்தி கொண்டு செல்லப்பட்டனர் அதன் பின்பு கள்ளழகர் குதிரை வாகனத்தில் உப்புக்கோட்டை முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா நடைபெற்றனர். பின்னர் கள்ளழகர் சுவாமி மூலஸ்தான கோவிலுக்கு கொண்டு சென்று அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து இன்று காலை கள்ளழகர் குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி குதிரை வாகனத்தில் முல்லைப் பெரியாற்றில் வைபவம் நிகழ்ச்சி நடைபெற்றது அதேபோல் உப்பார்பட்டி சேர்ந்த கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி முல்லைப் பெரியாற்றில் இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது . அதனைத் தொடர்ந்து உப்புக்கோட்டை முல்லை பெரியாற்றம் கரையில் இரு கிராமத்தைச் சேர்ந்த கள்ளழகர் குதிரை வாகனத்தில் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது இதில் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கோவிந்தோ கோவிந்தோ என கோசமிட்டு எதிர்சேவை நிகழ்ச்சியை கண்டு களித்தனர் அதன்பின்பு ஆற்றங்கரையில் வைக்கப்பட்ட பந்தலில் இரண்டு கிராமத்தைச் சேர்ந்த கள்ளழகர் சுவாமியை வைக்கப்பட்டுள்ளது. உப்புக்கோட்டை மற்றும் உப்பார்பட்டி கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து சுமார் 10,000 மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் அதனைத் தொடர்ந்து அனைத்து பொது மக்களுக்கும் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது1
- தேனி மாவட்டம், ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு இடி மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. மழை நின்ற பின்னரும் நீண்ட நேரம் வானத்தில் இடி மின்னல் நீடித்தது. ஆண்டிப்பட்டி அருகே சித்தைய கவுண்டன்பட்டியை சேர்ந்த முத்துச்சாமி மகன் பாண்டியன் (வயது60) என்பவர் அதே பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த தனது 2 மாடுகளை கொட்டத்தில் கட்டி வைப்பதற்காக பிடித்து சென்றார். அப்போது திடீரென்று ஏற்பட்ட மின்னல், பாண்டியன் மற்றும் மாடுகளின் மீது தாக்கியது. இதில் இரு பசு மாடுகளுடன் விவசாயி பாண்டியன் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த போலீசார் இறந்த பாண்டியனின் உடலை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2 மாடுகளுடன் விவசாயி மின்னல் தாக்கி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.1
- Post by முத்துஇருளன்1
- தேனி மாவட்டம் கம்பம் அருகே கண்ணகி கோவில் சித்திரை பௌர்னமி விழா நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் இதற்கான ஏற்பாடுகளை தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு இருந்தது1
- சூறாவளி காற்றுடன் பெய்த கனமழை - ஆயிரம் வாழை மரம் காற்றில் சரிந்தும் தென்னை மரங்கள் வேரோடு சரிந்தும் சேதம் மாவட்ட நிர்வாகம் சேதங்கள் குறித்து ஆய்வு செய்து நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை தேனி அருகே கொடுவிலார்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் தென்னை மற்றும் வாழை விவசாயம் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் தேனியில் நேற்று மாலை முதல் இரவு வரை பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வந்தது இதன் காரணமாக பல்வேறு பகுதியில் தென்னை மற்றும் வாழை மரங்கள் காற்றில் சரிந்து விழுந்து சேதம் ஏற்பட்டது இந்த நிலையில் கொடுவிலார்பட்டி பகுதியில் நேற்று மழையுடன் அடித்த சூறாவளி காற்றுக்கு தாக்குபிடிக்க முடியாமல் சுமார் 1000 வாழைக்கன்றுகள் காற்றில் சாய்ந்து விழுந்து சேதம் ஏற்பட்டுள்ளது, மேலும் 10-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் வேரோடு சாய்ந்து விழுந்தும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது விவசாய கூட்டுறவு சங்கத்தில் கடன் பெற்று விவசாயம் செய்து வந்ததாக கூறும் தோட்டத்து உரிமையாளர் தங்களுக்கு வாழை நல்ல மகசூல் தரும் நேரத்தில் இந்த சேதம் ஏற்பட்டதால் கடும் நஷ்டத்தை சந்தித்து இருப்பதாக கூறுகின்றனர் இதுகுறித்து மாவட்ட வருவாய் துறை மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் மழையினால் ஏற்பட்ட சேதம் குறித்து பார்வையிட்டு தங்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்1
- Post by தமிழ்நாடு1
- திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த எப்.கீழையூர் அருகே பொன் முச்சந்தியில் அருள்மிகு திருமுக்தீஸவரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று (01-05-26) சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் விளக்கு பூஜை நடைபெற்றன. இதில் இப்பகுதியை சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முக்தீஸ்வரர் அருளை பெற்று சென்றனர்.1