Shuru
Apke Nagar Ki App…
சேலம் ரயில்வே கோட்டத்தின் சார்பில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த ஏப்ரல் மாதம் சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் 57 ரயில்களில் சங்கிலி இழுத்து அலாரம் எழுப்பியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 42 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, எவ்வித காரணமும் இன்றி சங்கிலியை இழுத்தது விசாரணையில் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் மீது ரயில்வே பாதுகாப்பு படையினர் வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், எனவே ரயில்களில் உள்ள அவசரகால செயின்களை தேவை இன்றி அதனை செயல்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
Rajendran
சேலம் ரயில்வே கோட்டத்தின் சார்பில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த ஏப்ரல் மாதம் சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் 57 ரயில்களில் சங்கிலி இழுத்து அலாரம் எழுப்பியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 42 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, எவ்வித காரணமும் இன்றி சங்கிலியை இழுத்தது விசாரணையில் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் மீது ரயில்வே பாதுகாப்பு படையினர் வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், எனவே ரயில்களில் உள்ள அவசரகால செயின்களை தேவை இன்றி அதனை செயல்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- தமிழக சட்டமன்றத்தில் பதவி ஏற்பு விழாவின்போது, முதல்வர் ஜோசப் விஜய் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வணக்கத்தை ஏற்காதது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த நிகழ்வின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி, அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நாள் முதல்வர், முன்னாள் முதல்வருக்கு மரியாதை செலுத்தாதது பதவியை அவமதிப்பதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.1
- நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள குஞ்சாம்பாளையம் வயல் ஒன்றில் பைப் போடுவதற்காகத் தோண்டியபோது 10 அடி ஆழ மர்மக் குழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆதிகால மக்கள் தங்கள் தானியங்களைப் பாதுகாக்க இந்தக் குழியைப் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது. இந்தக் கண்டுபிடிப்பு அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.1
- தருமபுரி சந்தைப்பேட்டை ஆட்டுச் சந்தையில் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட 340 ஆடுகள் விற்பனைக்கு வந்தன. சிறிய குட்டிகள் ₹2000 முதல் பெரிய ஆடுகள் ₹24,000 வரை விற்பனையாகி, மொத்தமாக ₹43 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.1
- கரூர் காந்திகிராமம் பஞ்சு குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது கரூர் காந்திகிராமம் தெற்கு ஐயப்பன் கோயில் பின்புறம் அமைந்துள்ள தனியார் தலையணை தயாரிக்கும் பஞ்சு குடோனில் பயங்கர தீ விபத்து இன்று மதியம் 1 மணி அளவில் ஏற்பட்டது. சம்பவ இடத்தில் கரூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் இரண்டு வாகனங்களில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சி தருகிறது.தொடர்ந்து தீயை அணைக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது.1
- திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகள் தொடர்பான மனுக்களை அளித்தனர். குடிநீர் வசதி, சாலை வசதி, மின்சாரம், நில பிரச்சனைகள், முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக ஏராளமான மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு மனுக்களை அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினர். மேலும், பொதுமக்களின் கோரிக்கைகள் விரைவாக பரிசீலனை செய்து தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.1
- திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் ஆலயம் அருகே திருநாவுக்கரசரின் குருபூஜையை முன்னிட்டு நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. சிவனடியார்கள் ஏற்பாடு செய்துள்ள இந்த பந்தல் மூலம் பக்தர்களுக்கு இலவசமாக நீர் மோர் வழங்கப்படுகிறது. இது கோடைக்கால வெப்பத்தில் பக்தர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.1
- மாவட்ட ஆட்சித்தலைவர் மக்கள் குறைதீர்க்கும் நாளில் அலுவலர்களின் அலட்சியம். நீண்ட நாட்களுக்கு பின்பாக நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சியில் அலுவலர்கள் அனைவரும் செல்போனை பயன்படுத்தியவாறு மக்கள் குறைதீர்க்கும் நாளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அலுவலர்கள் அதிர்ச்சியில் மக்கள்1
- தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்றதும், தேர்தல் நடத்தை விதிகள் நீக்கப்பட்டு சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் மீண்டும் தொடங்கியது. இரண்டு மாத காத்திருப்புக்குப் பிறகு, தங்கள் குறைகளை அரசுக்குத் தெரிவிக்க ஏராளமான பொதுமக்கள் இன்று திரண்டனர். அவர்களுக்கு அரசு சார்பில் இலவசமாக மனு எழுதித் தரும் ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது.1