Shuru
Apke Nagar Ki App…
தென்காசி மாவட்டம் சுரண்டை நகராட்சி பூத் எண் 338ஏவி வாக்கு சாவடியில் இன்று காலை வாக்கு பதிவு நடைபெற்று 144 வாக்கு பதிவான நிலையில் வாக்கு பதிவு எந்திரம் திடீரென பழுதானது இதனால் வாக்களிக்க வந்த தென்காசி எம்எல்ஏ பழனி நாடார் சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்தார் பின்னர் அதிகாரிகள் வந்து வேறு எந்திரங்களில் மாற்றி வாக்கு பதிவு தாமதமாக நடந்தது இதனால் பரபரப்பு ஏற்பட்டது
King
தென்காசி மாவட்டம் சுரண்டை நகராட்சி பூத் எண் 338ஏவி வாக்கு சாவடியில் இன்று காலை வாக்கு பதிவு நடைபெற்று 144 வாக்கு பதிவான நிலையில் வாக்கு பதிவு எந்திரம் திடீரென பழுதானது இதனால் வாக்களிக்க வந்த தென்காசி எம்எல்ஏ பழனி நாடார் சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்தார் பின்னர் அதிகாரிகள் வந்து வேறு எந்திரங்களில் மாற்றி வாக்கு பதிவு தாமதமாக நடந்தது இதனால் பரபரப்பு ஏற்பட்டது
More news from தமிழ்நாடு and nearby areas
- நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்ட பகுதிகளுக்க சட்டமன்றத் தேர்தலில் முன்னிட்டு வாக்களிக்க வசதியாக இன்றும் நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மாஞ்சோலை பகுதிகளுக்கு தற்போது வழக்கமாக ஒரு முறை மட்டுமே சென்று வரும் நிலையில், இன்றும் நாளையும் மூன்று முறை பேருந்துகள் இயக்கம்..2
- தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்புக் குழுவினர் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.2.36 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்புக் குழுவினர் நடத்திய சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் விவரங்களை மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான விஷு மகாஜன் வெளியிட்டுள்ளார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நாள் முதல் இன்று (22.04.2026) வரை நடத்தப்பட்ட தீவிரக் கண்காணிப்பில் கண்டறியப்பட்ட விவரங்கள் பின்வருமாறு: உரிய ஆவணங்களின்றி பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் ரூ.2,36,73,618 பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.38,42,187 பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களின் மதிப்பு ரூ.8,12,900 மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த பறக்கும் படைகள் (Flying Squads) மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினரால் இந்த அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரொக்கப் பணம் மற்றும் தேர்தல் விதிகளுக்குப் புறம்பாகக் கொண்டு செல்லப்பட்ட மதுபானங்கள் மற்றும் இதர பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. "நேர்மையான மற்றும் பாதுகாப்பான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்யக் கண்காணிப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் பெருமளவிலான தொகையைக் கொண்டு செல்லும்போது உரிய ஆவணங்களை உடன் வைத்திருக்க வேண்டும்," என ஆட்சியர் விஷு மகாஜன் அறிவுறுத்தியுள்ளார். நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், மாவட்ட எல்லைகளிலும், முக்கிய சாலைகளிலும் கண்காணிப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தேர்தல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.1
- கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் இன்று தோவாளை அரசு பள்ளியில் தனது வாக்கைபதிவு செய்வதற்கு வருகை தந்தார். அப்போது அங்கு மக்களுடன் மக்களாக நீண்ட வரிசையில் நின்று அவர் தனது வாக்கினை பதிவு செய்தார். அவருடன் அவரது மகள் தம்பரசியும் தனது வாக்கினை பதிவு செய்தார்.1
- Post by மா.சுடலைமணி1
- தமிழக சட்டமன்ற தேர்தல் இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது இதில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் மகனும் தேனி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் பெரியகுளம் தெங்கறையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு வருகை தந்து தனது வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடமை ஆற்றினார் அதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பின் போது மீண்டும் தமிழகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைக்கப்படும் மக்கள் எழுச்சியுடன் ஆர்வத்துடன் திமுக அரசு மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்குகளை அளித்து வருவதாகவும் தெரிவித்தார் மேலும் போடி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி நான் சென்று கொண்டே இருப்பேன் இரட்டை இலைக்கு விழுகும் வாக்கு எனக்காக விழுந்து கொண்டே இருக்கும் என கூறியுள்ளார் அது குறித்து உங்கள் கருத்து என கேட்டபோது கடந்த தேர்தலில் நாராயணசாமி டெபாசிட் இழந்துள்ளார் அவருக்கு எப்படி வாக்கு பொதுமக்கள் அளிப்பார்கள் நீங்கள் அவர் எப்படி வெற்றி பெறுவார்கள் என அவர்களிடம் தான் கேட்க வேண்டும் என தெரிவித்தார் விஜய் குறித்து கேள்வி எழுப்பிய போது விஜய் முதல் தேர்தலை தற்போது சந்தித்துள்ளார் மே 4 ஆம் தேதி தேர்தல் ரிசல்ட் வெளிவந்த பிறகு மக்கள் எவ்வாறு அவருக்கு வாக்களித்து உள்ளார்கள் என பார்த்த பிறகு அதற்கான கருத்துக்களை தெரிவிக்க முடியும் என தெரிவித்தார்1
- தமிழகத்தில் இன்று (ஏப்.23) காலை 7 மணி முதல் தமிழக சட்டப்பேரவைக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில் மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் செல்லூர் பகுதியில் உள்ள பள்ளியில் குடும்பத்துடன் வந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.1
- தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் வாசுதேவநல்லூர் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் வழக்கறிஞர்.ஈ.ராஜா எம்எல்ஏ சங்கரன்கோவில் கோமதி அம்பாள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குசாவடியில் முதல் ஆளாக தனது வாக்கினை பதிவு செய்தார்1
- கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரெ. மகேஷ். நாகர்கோவில் தொகுதிக்குட்பட்ட SLB அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள பூத் எண் 195-ல் குடும்பத்தினருடன் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் மக்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.1
- முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தனது சொந்த ஊரான பெரியகுளம் தென்கரை உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் போடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளரும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தனது குடும்பத்துடன் வந்து வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடமை ஆற்றினார்.அதன் பின்பு தேனி முன்னாள் எம்பி ரவீந்திரநாத் தனது வாக்கை பதிவு செய்தார்1