Shuru
Apke Nagar Ki App…
இந்தி திணிப்பு மற்றும் மாநில கல்வி உரிமையை பறிக்கும் மத்திய அரசை கண்டித்து, தமிழ் வழி கல்வி இயக்கம் சார்பில், திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவர் சின்னப்பா தமிழர் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பாளர்கள் தமிழ்நாடு பாடத்திட்டத்தில் உள்ள பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திற்கு மாறக்கூடாது எனவும், அரசு பள்ளிகளை மூடக்கூடாது எனவும், தமிழ்நாட்டு பல்கலைக்கழக துணைவேந்தர்களை தேர்வு செய்யும் உரிமையை மாநில அரசே ஏற்க வேண்டும் எனவும், மேலும் கல்வி உரிமையை மாநிலத்திற்கே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
Msd
இந்தி திணிப்பு மற்றும் மாநில கல்வி உரிமையை பறிக்கும் மத்திய அரசை கண்டித்து, தமிழ் வழி கல்வி இயக்கம் சார்பில், திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவர் சின்னப்பா தமிழர் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பாளர்கள் தமிழ்நாடு பாடத்திட்டத்தில் உள்ள பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திற்கு மாறக்கூடாது எனவும், அரசு பள்ளிகளை மூடக்கூடாது எனவும், தமிழ்நாட்டு பல்கலைக்கழக துணைவேந்தர்களை தேர்வு செய்யும் உரிமையை மாநில அரசே ஏற்க வேண்டும் எனவும், மேலும் கல்வி உரிமையை மாநிலத்திற்கே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடி வட்டம், சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை அணுகு சாலை அருகே உள்ள வே.துறையூர், சிறுமருதூர் இடையே உள்ள கட்டிடத்தில் அரசு மதுபான கடை திறக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த பகுதியில் அரசு மதுபான கடை திறக்கப்பட்டால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேளாண் வேலைக்கு செல்லக்கூடிய பெண்கள், வே. துறையூர் மதுரகாளியம்மன் கோவில் வழியாக சமயபுரம் கோவிலுக்கு வரும் பாதயாத்திரை பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக அந்தப் பகுதியில் தொடர்ந்து மது பிரியர்கள் அமர்ந்து மது அருந்துவதால் தினந்தோறும் பொதுமக்கள், பெண்கள் அனைவரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பெண்களும், பள்ளி, கல்லூரிக்கு செல்லக்கூடிய மாணவ, மாணவிகளும் மிகுந்த அச்சத்துடன் அந்த பாதையை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார்கள் தெரிவித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகமும், அரசு அதிகாரிகளும் எடுக்கவில்லை. இந்த சூழ்நிலையில் அந்தப் பகுதியில் புதிதாக அரசு மதுபான கடை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது. ஆகையால் மதுபான கடை அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும். கிராம மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கோடிக்கை மனு அளித்தனர். லால்குடி அருகே புதிதாக மதுபானக்கடை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை மனுவை சமர்ப்பித்துள்ளனர்.1
- திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த திருவெள்ளறையில் அமைந்துள்ள புண்டரீகாக்ஷப் பெருமாள் கோவிலில் இன்று (27-07-26) ஸ்ரீபங்கஜவல்லித் தாயார் ஸமேத புண்டரீகாக்ஷப் பெருமாள் ஆடி ஜ்யேஷ்டாபிஷேகம் தங்க குடம் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருவெள்ளறையை சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு, இந்த புனித நிகழ்ச்சியை கண்டு மகிழ்ந்தனர்.1
- புதுக்கோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்துள்ள நிலையில், பதிவான மழையின் அளவை புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பின்படி, புதுக்கோட்டையில் 31 மி.மீ, திருமயத்தில் 16.2 மி.மீ, கரம்பக்குடியில் 2.6 மி.மீ, ஆலங்குடியில் 2 மி.மீ மற்றும் மழையூரில் 1.4 மி.மீ என மொத்தம் 53.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இந்த மழையின் காரணமாக அப்பகுதிகளில் தற்போது சற்று குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.1
- தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே நடந்த இந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வல்லம் பகுதியைச் சேர்ந்த 26 வயது மேகலா, நேற்று இரவு குடும்பத்துடன் வீட்டின் முன்பு தூங்கிக் கொண்டிருந்தபோது நள்ளிரவில் விஷம் கொண்ட பாம்பு ஒன்று கடித்துள்ளது. வலியால் கத்திய மேகலாவின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பாம்பை அடித்து கொன்றுள்ளனர். உடனடியாக இருசக்கர வாகனத்தில் பூதலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனையில் அந்த நேரத்தில் மருத்துவர் இல்லை. செவிலியர்கள் மட்டுமே முதலுதவி செய்ததாக கூறப்படுகிறது. உடனே தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பாமல், 108 ஊழியர்களுக்கும் செவிலியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் 108 வாகனத்தில் அழைத்துச் செல்வதில் தாமதம் ஆனதாக உறவினர்கள் கூறுகின்றனர். தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். உறவினர்கள், இரவு நேரத்திலும் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும் என்றும், உரிய சிகிச்சை வழங்கப்படாததால் ஏற்பட்ட இந்த உயிரிழப்புக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், அரசாணைப்படி ஒரு அரசு மருத்துவமனையில் மருத்துவர் 3 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு மாற்றல் ஆக வேண்டும். ஆனால் சில மருத்துவர்கள் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் இருப்பதால் இதுபோன்ற அவசர சிகிச்சைகளில் பிரச்சனை வருகிறது. எனவே மருத்துவர்களை உரிய நேரத்தில் இடமாற்றம் செய்து இதுபோன்ற உயிரிழப்புகளை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். இந்த சம்பவம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.1
- திண்டுக்கல் மாவட்டம் கசவணம்பட்டியில் உள்ள அருள்மிகு முத்தாலம்மன் கோவில் திருவிழா உற்சவம் நடைபெறுகிறது.1
- இந்தி திணிப்பு மற்றும் மாநில கல்வி உரிமையை பறிக்கும் மத்திய அரசை கண்டித்து, தமிழ் வழி கல்வி இயக்கம் சார்பில், திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவர் சின்னப்பா தமிழர் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பாளர்கள் தமிழ்நாடு பாடத்திட்டத்தில் உள்ள பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திற்கு மாறக்கூடாது எனவும், அரசு பள்ளிகளை மூடக்கூடாது எனவும், தமிழ்நாட்டு பல்கலைக்கழக துணைவேந்தர்களை தேர்வு செய்யும் உரிமையை மாநில அரசே ஏற்க வேண்டும் எனவும், மேலும் கல்வி உரிமையை மாநிலத்திற்கே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.1
- சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட மஞ்சினி ஊராட்சியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். விவசாயிகள் மஞ்சினி செயலாளர் அழகனிடம் மனு அளித்தனர். இந்த மனுவில் சேலம் ஆத்தூர் மஞ்சினி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரப்பட்டது.1