पणजी वेंगुर्ले कदंबा बस आजगावं वाघबीळ येथे कलंडली चाळीस प्रवासी सुदैवाने बचावले गोवा राज्याची कदंबा प्रवासी बस आजगाव जवळ दुचाकी वाहन चालकाला वाचवताना वाघबीळ येथील खोल दरीत जाता जाता वाचली.सदरील बस ही पणजी वरून वेंगुर्ले येथे जात असताना एका दुचाकी स्वाराला वाचविताना कलंडली. मात्र सुदैवानेच यातील चाळीस प्रवासी बाल बाल बचावले आहेत. गोवा येथील पणजी येथून संध्याकाळी साडेचार वाजता सुटणारी पणजी शिरोडा मार्गे वेंगुर्ला ही वस्तीची गाडी शिरोडा च्या दिशेने येत असताना आजगाव वाघबीळाजवळ सायंकाळी सव्वा सहा वाजता आली असता घातक वळणावर समोरून मळेवाडच्या दिशेने चार चाकी गाडी जात असताना त्या घातक वळणावर दुचाकी वाहन चालकाने वर टॅग करत असताना त्या दुचाकी स्वाराला वाचवण्याच्या नादात सदर बस खोल दरीच्या काही फूट अंतरावर कलंडली सदर बस मध्ये एकूण चाळीस प्रवासी प्रवास करत होते सदर प्रवाशांना ग्रामस्थांनी आपत्कालीन दरवाज्यातून सुखरूप पणे बाहेर काढले. बसचे चालक धनंजय आसोलकर व वाहक सर्वेश नाईक यांनी माहिती दिली. या प्रवाशांपैकी कोणालाही दुखापत झालेली नाही परं काही फूट अंतरावर जर ही बस कलंडली असती तर किमान २०० फूट खोल दरीत ही बस कोसळून मोठा अपघात झाला असता परंतु सदर बस चालकाच्या प्रसंगवाधाने बस अलीकडेच कलंडली. दुचाकी स्वार दुचाकी गाडी टाकून पसार झाला. दुचाकीस्वाराच्या वाचवण्याच्या नादात ४० प्रवाशांचे जीव धोक्यात जाणार होते परंतु चालकाच्या प्रसंगवधाने सदर घटना टळली. धोकादायक या रस्त्याच्या बाजूने वळणावर दोन्ही बाजूने झाडी वाढली असून या वाघबीळ रस्त्याकडील दरीकडील लोखंडी संरक्षक रेलिंग दुरुस्तीच्या प्रतिक्षेत आहे.त्यामुळे बांधकाम विभागाने या समस्यांबाबत तत्काळ दखल घेण्याची मागणी आजगाव प्रभारी सरपंच सुशील कामटेकर यांनी केली आहे.
पणजी वेंगुर्ले कदंबा बस आजगावं वाघबीळ येथे कलंडली चाळीस प्रवासी सुदैवाने बचावले गोवा राज्याची कदंबा प्रवासी बस आजगाव जवळ दुचाकी वाहन चालकाला वाचवताना वाघबीळ येथील खोल दरीत जाता जाता वाचली.सदरील बस ही पणजी वरून वेंगुर्ले येथे जात असताना एका दुचाकी स्वाराला वाचविताना कलंडली. मात्र सुदैवानेच यातील चाळीस प्रवासी बाल बाल बचावले आहेत. गोवा येथील पणजी येथून संध्याकाळी साडेचार वाजता सुटणारी पणजी शिरोडा मार्गे वेंगुर्ला ही वस्तीची गाडी शिरोडा च्या दिशेने येत असताना आजगाव वाघबीळाजवळ सायंकाळी सव्वा सहा वाजता आली असता घातक वळणावर समोरून मळेवाडच्या दिशेने चार चाकी गाडी जात असताना त्या घातक वळणावर दुचाकी वाहन चालकाने वर टॅग करत असताना त्या दुचाकी स्वाराला वाचवण्याच्या नादात सदर बस खोल दरीच्या काही फूट अंतरावर कलंडली सदर बस मध्ये एकूण चाळीस प्रवासी प्रवास करत होते सदर प्रवाशांना ग्रामस्थांनी आपत्कालीन दरवाज्यातून सुखरूप पणे बाहेर काढले. बसचे चालक धनंजय आसोलकर व वाहक सर्वेश नाईक यांनी माहिती दिली. या प्रवाशांपैकी कोणालाही दुखापत झालेली नाही परं काही फूट अंतरावर जर ही बस कलंडली असती तर किमान २०० फूट खोल दरीत ही बस कोसळून मोठा अपघात झाला असता परंतु सदर बस चालकाच्या प्रसंगवाधाने बस अलीकडेच कलंडली. दुचाकी स्वार दुचाकी गाडी टाकून पसार झाला. दुचाकीस्वाराच्या वाचवण्याच्या नादात ४० प्रवाशांचे जीव धोक्यात जाणार होते परंतु चालकाच्या प्रसंगवधाने सदर घटना टळली. धोकादायक या रस्त्याच्या बाजूने वळणावर दोन्ही बाजूने झाडी वाढली असून या वाघबीळ रस्त्याकडील दरीकडील लोखंडी संरक्षक रेलिंग दुरुस्तीच्या प्रतिक्षेत आहे.त्यामुळे बांधकाम विभागाने या समस्यांबाबत तत्काळ दखल घेण्याची मागणी आजगाव प्रभारी सरपंच सुशील कामटेकर यांनी केली आहे.
- திருச்சி மாவட்டம், மணப்பாறை, மதுரை சாலையில் உள்ள நகராட்சி வணிக வளாகத்தில் பிரிண்டர்ஸ் மற்றும் டிராவல்ஸ் கடை வைத்திருப்பவர் செல்வன். இவர் நேற்று வழக்கம்போல் தனது சுற்றுலா வேனை கடையின் முன்பு நிறுத்திவிட்டு சென்றுள்ளார். இன்று காலை வந்து பார்த்தபோது வண்டியில் இருந்த டீசல் டேங்கின் மூடி சேதமடைந்த நிலையில் கிழே கிடந்ததோடு டீசலும் தரையில் சிந்தி இருந்துள்ளது. இதனைகண்டு அதிர்ச்சியடைந்த செல்வன் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காடசிகளை ஆய்வு செய்துள்ளார். அதில் அதிகாலை 4 மணியளவில் வேனிற்கு முன்பு வந்து நிறுத்தப்பட்ட ஒரு காரில் இருந்து இறங்கி வரும் மர்ம நபர் ஒருவர் வேனின் அடிப்பகுதியில் லாவகமாக நுழைந்து செல்லும் காட்சியும், பின்னர் வேனில் இருந்து கேனில் டீசலை எடுத்துச் செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தது. வண்டியின் டீசல் டேங்கில் முழு அளவு டீசல் இருந்த நிலையில் இன்று பார்த்தபோது பாதிக்கும் குறைவான டீசலே இருந்துள்ளது. 30 - 40 லிட்டர் டீசல் வரை திருடப்பட்டிருந்தது. இதனையடுத்து செல்வன் மணப்பாறை போலீசில் புகார் அளித்தார். சிசிடிவியில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் டீசல் திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர். போக்குவரத்து மிகுந்த பகுதியில் அதிகாலையில் மர்ம நபர்கள் காரில் வந்து டீசலை திருடிச்சென்ற சம்பவம் வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.1
- இருசக்கர வாகனத்தை எடுக்க சென்ற போது தனி அறையில் அடைத்து வைத்து மகன்கள் மற்றும் தாய்யை சித்திரைவதை செய்த ரீட்டா குழுவினர் ஒருதலை பட்சமாக செயல்படும் திருப்பத்தூர் கிராமிய காவல்துறை திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி தாலுகா புதுப்பேட்டை அடுத்த அருணாச்சலாநகர் பகுதியை சேர்ந்த நந்தகுமார் இவர் நையாண்டி நிகழ்ச்சி தொழில் செய்து வருகிறார். இவரது தம்பி சந்தோஷ் என்பவர் திருப்பத்தூர் விட்டு வசதி வாரியா பகுதியில் தனது இருசக்கர வாகனத்தை எடுக்க சென்றபோது ரீட்டா என்பவரின் தூண்டுதலின் பெயரில் ஆனந்தன் சுதாகர், சேட்டு, மணி, ஆகியோரை வைத்து சந்தோஷ் என்பவரை அறையில் அடைத்து அடித்து துன்புறுத்தி உள்ளனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்த சந்தோஷின் அண்ணன் நந்தகுமார் அவரது தாயார் விஜயாவை கையை பிடித்து சேலைய இழுத்து இருவரையும் அறையில் உள்ளே தள்ளி அடித்து துன்புறுத்தபட்டனர். இதில் நந்தகுமார் என்பவரை ரீட்டா மற்றும் அவரது குழுவினர் பலமாக தாக்கியத்தில் மயக்க நிலையில் உள்ள நந்தகுமாரை சந்தோஷ் அவரது தாய் விஜயா ஆகியோர் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் நையாண்டி தொழில் செய்து வரும் நந்தகுமார் இவருக்கு போட்டியாக ஆனந்தன் மற்றும் அவரது குழுவினர்கள் நந்தகுமார் என்பவர் நீயாமான முறையில் நையாண்டி நிகழ்ச்சிகளை குறைந்த விலையில் பேசி வருவதை கண்ட ஆனந்தன் மற்றும் அவரது குழுவினர்கள் நந்தகுமார் என்பவரை மிரட்டும் வகையில் இனிமேல் நீ எங்கேயும் நிகழ்ச்சி பேச கூடாது இல்லனா உன்னை கொன்றுவிடுவேன் என கொலை மிரட்டல் விடுத்தும் அடித்தும் உள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய காவல்நிலையத்தில் புகார் செய்ய நந்தகுமாரின் தாயார் விஜயா என்பவர் காவல்நிலையத்தில் புகார் செய்த போது காவல்துறைனார் நந்தகுமார் தாயார் விஜயவை தகாத வார்த்தையால் பேசி வெளிய போ என்று மிரட்டும் தோணியில் பேசியுள்ளனர். மேலும் காவல்துறை ஒருதலை பட்சமாக செயல்பட்டு வருவது குறித்து உடனடியாக உரிய நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட காவல் கண்கணிப்பாளருக்கு நந்தகுமார் மற்றும் அவரது பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்1
- திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்கா தெக்குப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கௌசல்யா, தனது கணவர் சதீஷ்குமார் மீது துன்புறுத்தல் மற்றும் வன்முறைக்கு எதிராக மனு அளித்துள்ளார். இந்த தம்பதியருக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர். கௌசல்யா தனியார் பள்ளியில் பணியாற்றி வருகிறார். சதீஷ்குமார் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு கௌசல்யாவை மணந்து கொண்டார். ஆனால், கணவர் வேலைக்கு செல்லாமல் ஊதாரி தனமாக சுற்றித் திரிந்து வருவதாகவும், அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, சதீஷ்குமார் தனது சொந்த ஊரான திருப்பத்தூர் தில்லை நகருக்கு சென்று விட்டதாக தெரிகிறது. அவர் பலமுறை கௌசல்யா மற்றும் பிள்ளைகளை அடித்து துன்புறுத்தியுள்ளார். மேலும், கௌசல்யா மற்றும் தனது மகள் என்றும் பாராமல் பல்வேறு இன்னலுக்கு ஆளாக்கி துன்புறுத்தியுள்ளார். இது தொடர்பாக கௌசல்யா சென்னை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தனது பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, கௌசல்யா தனது தாய் வீடான தேக்குப்பட்டு கிராமத்திற்கு வந்து தனது பெற்றோருடன் நடந்த சம்பவங்களை எடுத்து கூறியுள்ளார். 27/07/2026 அன்று, தனது பெற்றோர் மற்றும் பிள்ளைகளுடன் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து தனது கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், தனது கணவர் சதீஷ்குமார் வேறொரு திருமணம் செய்து கொண்டதாகவும், தற்போது பெண் குழந்தை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சென்னையில் குடியிருக்கும் வீட்டை காலி செய்யுமாறு தொடர்ந்து தொந்தரவு செய்து வருவதாகவும் கூறியுள்ளார். மனுவைப் பெற்றுக் கொண்ட அலுவலர் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.1
- புதுக்கோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்துள்ள நிலையில், பதிவான மழையின் அளவை புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பின்படி, புதுக்கோட்டையில் 31 மி.மீ, திருமயத்தில் 16.2 மி.மீ, கரம்பக்குடியில் 2.6 மி.மீ, ஆலங்குடியில் 2 மி.மீ மற்றும் மழையூரில் 1.4 மி.மீ என மொத்தம் 53.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இந்த மழையின் காரணமாக அப்பகுதிகளில் தற்போது சற்று குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.1
- சேலம் மாநகராட்சி குடிநீர் விநியோகப் பணியைப் பன்னாட்டு நிறுவனமான சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கும் முடிவைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சேலத்தில் போராட்டம் நடைபெற்றது. மாநகராட்சி நிர்வாகமே குடிநீர் விநியோகத்தை முறையாகச் செய்ய வேண்டும் என்று கோரி ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்று மனு அளிக்க முயன்றவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். சேலத்தில் மார்க்சிஸ்ட் வாலிபர் சங்கம் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.1
- தருமபுரி மாவட்ட பேரூராட்சிகளின் சார்பில், தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வாழ்வாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் அரசு சேவைகள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் சிறப்பு முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் தூய்மை பணியாளர்கள், கழிவுநீர் மற்றும் செப்டிக் டேங்க் பராமரிப்பு பணியாளர்கள், வீடு தோறும் கழிவு சேகரிக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். முகாமில் அரசு சார்ந்த பல்வேறு துறைகள் சார்பில் தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நேரடியாக சேவைகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு துறையினரும் தங்களது துறை சார்ந்த அரசுத் திட்டங்கள், நலத்திட்ட உதவிகள், விண்ணப்பிக்கும் நடைமுறைகள் மற்றும் பயன்கள் குறித்து விரிவாக விளக்கமளித்ததுடன், தகுதியான பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்களையும் பெற்றனர். மேலும், பணியாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு, தொழிலாளர் நல வாரிய நலன்கள், கல்வி உதவித்தொகை, விபத்து மற்றும் உயிர்காப்பீட்டு திட்டங்கள், ஓய்வூதியத் திட்டங்கள், குடும்ப நல உதவிகள் உள்ளிட்ட பல்வேறு அரசுத் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. அதேபோல், கழிவுநீர் மற்றும் செப்டிக் டேங்க் பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயமாக பயன்படுத்துவதன் அவசியம், மனித உயிருக்கு ஆபத்தான கைமுறை கழிவுநீர் சுத்திகரிப்பு பணிகளைத் தவிர்ப்பது, இயந்திரமயமான முறையில் பணிகளை மேற்கொள்வது தொடர்பான விழிப்புணர்வும் வழங்கப்பட்டது. தூய்மை பணியாளர்கள் மற்றும் கழிவு சேகரிப்பு தொழிலாளர்களுக்கு அரசு வழங்கி வரும் சமூகப் பாதுகாப்பு உரிமைகள், தொழிலாளர் நலத் திட்டங்களில் பதிவு செய்யும் நடைமுறைகள், அரசின் பல்வேறு உதவிகளை எளிதில் பெறும் வழிமுறைகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனைகள் வழங்கினர். தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை விரைந்து வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இம்முகாமில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், பேரூராட்சி அலுவலர்கள், அரசு துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்கள், அவர்களது குடும்பத்தினர் என ஏராளமானோர் கலந்து கொண்டு அரசின் சேவைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து நேரடியாக பயனடைந்தனர்.1
- திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் இன்று காலை 11 மணியளவில் மாணவ, மாணவிகள் நீட் தேர்வை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வைக் கண்டித்தும், அதனை ரத்து செய்யக் கோரியும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டு நீட் தேர்வுக்கு எதிராகக் கண்டனக் கோஷங்களை எழுப்பினர்.2
- தருமபுரி நகர் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற குப்பாகவுண்டர் தெரு ஸ்ரீ மாரியம்மன் கோவில் ஆண்டு திருவிழா பக்தர்களின் பக்தி கோஷங்கள் முழங்க வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மலர்கள், மின்விளக்குகளால் கோவில் வளாகம் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. அர்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு ஹோமம், அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடத்தினர். பக்தர்கள் மஞ்சள் நீர், எலுமிச்சை மாலை ஆகியவற்றை அம்மனுக்கு சமர்பித்து வேண்டிக் கொண்டனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று பால் குடம் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு குப்பாகவுண்டர் தெருவில் இருந்து கடைவீதி, பால் டிப்போ வழியாக மேளதாளங்களுடன் கோவிலை வந்தடைந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்ற நிலையில் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்களால் நிரம்பி வழிந்தது. திருவிழாவின் ஒரு பகுதியாக கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமானோர் வரிசையில் நின்று பிரசாதம் பெற்று சென்றனர். குப்பாகவுண்டர் தெரு பகுதி மட்டுமல்லாமல் தருமபுரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து அம்மனை தரிசனம் செய்து சென்றனர். கோவில் நிர்வாகிகள் அனைத்து பக்தர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.1
- தருமபுரி நகர் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற குப்பாகவுண்டர் தெரு ஸ்ரீ மாரியம்மன் கோவில் ஆண்டு திருவிழா பக்தர்களின் பக்தி கோஷங்கள் முழங்க வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மலர்கள், மின்விளக்குகளால் கோவில் வளாகம் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. அர்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு ஹோமம், அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடத்தினர். பக்தர்கள் மஞ்சள் நீர், எலுமிச்சை மாலை ஆகியவற்றை அம்மனுக்கு சமர்பித்து வேண்டிக் கொண்டனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று பால் குடம் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு குப்பாகவுண்டர் தெருவில் இருந்து கடைவீதி, பால் டிப்போ வழியாக மேளதாளங்களுடன் கோவிலை வந்தடைந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்ற நிலையில் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்களால் நிரம்பி வழிந்தது. திருவிழாவின் ஒரு பகுதியாக கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமானோர் வரிசையில் நின்று பிரசாதம் பெற்று சென்றனர். இவ்விழாவில் ஸ்ரீ மாரியம்மன் சாமிக்கு மாலை 5 மணி அளவில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருவிழா கடைசி நாளன்று அம்மன் வீதி உலா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோவிலில் வந்தடைந்தது. குப்பாகவுண்டர் தெரு பகுதி மட்டுமல்லாமல் தருமபுரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து அம்மனை தரிசனம் செய்து சென்றனர். தருமபுரி குப்பாகவுண்டர் தெரு ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.1