logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் (RTO) லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இன்று திடீர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பெருந்துறை ஆர்.டி.ஓ அலுவலகத்தில் இடைத்தரகர்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுகளுக்கு லஞ்சம் பெறப்படுவதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்திருந்தது. இந்த தகவலின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சாந்தி தலைமையிலான ஏழுக்கும் மேற்பட்ட போலீசார் இன்று மதியம் பெருந்துறை அலுவலகத்திற்குள் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். போலீசாரின் இந்த திடீர் வருகையால் அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் மற்றும் இடைத்தரகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற முதற்கட்ட சோதனையில், கணக்கில் வராத பெருமளவிலான ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. லஞ்ச ஒழிப்புத் துறையினர் அலுவலகத்தின் கதவுகளைப் பூட்டி, ஊழியர்கள் யாரையும் வெளியே செல்ல அனுமதிக்காமல் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சோதனையின் முழுமையான முடிவில் மட்டுமே, கைப்பற்றப்பட்ட கணக்கில் வராத பணம் எவ்வளவு மற்றும் யார் யார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற முழு விவரமும் தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 hrs ago
user_Dinesh
Dinesh
கோபிசெட்டிபாளையம், ஈரோடு, தமிழ்நாடு•
2 hrs ago

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் (RTO) லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இன்று திடீர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பெருந்துறை ஆர்.டி.ஓ அலுவலகத்தில் இடைத்தரகர்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுகளுக்கு லஞ்சம் பெறப்படுவதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்திருந்தது. இந்த தகவலின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சாந்தி தலைமையிலான ஏழுக்கும் மேற்பட்ட போலீசார் இன்று மதியம் பெருந்துறை அலுவலகத்திற்குள் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். போலீசாரின் இந்த திடீர் வருகையால் அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் மற்றும் இடைத்தரகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற முதற்கட்ட சோதனையில், கணக்கில் வராத பெருமளவிலான ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. லஞ்ச ஒழிப்புத் துறையினர் அலுவலகத்தின் கதவுகளைப் பூட்டி, ஊழியர்கள் யாரையும் வெளியே செல்ல அனுமதிக்காமல் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சோதனையின் முழுமையான முடிவில் மட்டுமே, கைப்பற்றப்பட்ட கணக்கில் வராத பணம் எவ்வளவு மற்றும் யார் யார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற முழு விவரமும் தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் (RTO) லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இன்று திடீர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பெருந்துறை ஆர்.டி.ஓ அலுவலகத்தில் இடைத்தரகர்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுகளுக்கு லஞ்சம் பெறப்படுவதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்திருந்தது. இந்த தகவலின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சாந்தி தலைமையிலான ஏழுக்கும் மேற்பட்ட போலீசார் இன்று மதியம் பெருந்துறை அலுவலகத்திற்குள் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். போலீசாரின் இந்த திடீர் வருகையால் அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் மற்றும் இடைத்தரகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற முதற்கட்ட சோதனையில், கணக்கில் வராத பெருமளவிலான ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. லஞ்ச ஒழிப்புத் துறையினர் அலுவலகத்தின் கதவுகளைப் பூட்டி, ஊழியர்கள் யாரையும் வெளியே செல்ல அனுமதிக்காமல் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சோதனையின் முழுமையான முடிவில் மட்டுமே, கைப்பற்றப்பட்ட கணக்கில் வராத பணம் எவ்வளவு மற்றும் யார் யார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற முழு விவரமும் தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    1
    ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் (RTO) லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இன்று திடீர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பெருந்துறை ஆர்.டி.ஓ அலுவலகத்தில் இடைத்தரகர்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுகளுக்கு லஞ்சம் பெறப்படுவதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்திருந்தது.

இந்த தகவலின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சாந்தி தலைமையிலான ஏழுக்கும் மேற்பட்ட போலீசார் இன்று மதியம் பெருந்துறை அலுவலகத்திற்குள் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். போலீசாரின் இந்த திடீர் வருகையால் அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் மற்றும் இடைத்தரகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற முதற்கட்ட சோதனையில், கணக்கில் வராத பெருமளவிலான ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. லஞ்ச ஒழிப்புத் துறையினர் அலுவலகத்தின் கதவுகளைப் பூட்டி, ஊழியர்கள் யாரையும் வெளியே செல்ல அனுமதிக்காமல் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சோதனையின் முழுமையான முடிவில் மட்டுமே, கைப்பற்றப்பட்ட கணக்கில் வராத பணம் எவ்வளவு மற்றும் யார் யார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற முழு விவரமும் தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    user_Dinesh
    Dinesh
    கோபிசெட்டிபாளையம், ஈரோடு, தமிழ்நாடு•
    2 hrs ago
  • சேலம் மாநகரத்தில் உள்ள கோட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று மாணவிகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், காவல்துறையின் 'சிங்கப்பெண்' சிறப்பு அதிரடிப்படையின் செயல்பாடுகள் மற்றும் நோக்கம் குறித்து மாணவிகளுக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் அவசர காலங்களில் உதவி பெற வேண்டிய முக்கிய எண்களான 181 (பெண்கள் உதவி மையம்), 112 (அவசர உதவி), 1091 (பெண்கள் உதவி எண்), 1098 (குழந்தைகள் உதவி மையம்) மற்றும் 1930 (சைபர் குற்றங்கள் தடுப்பு) ஆகியவற்றின் பயன்பாடுகள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. ஆபத்துக் காலங்களில் இந்த எண்களை எவ்வாறு அணுகுவது என்பது குறித்து மாணவிகளுக்குச் செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது. இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாணவிகளின் தன்னம்பிக்கையையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய உதவும் என்று பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
    1
    சேலம் மாநகரத்தில் உள்ள கோட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று மாணவிகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், காவல்துறையின் 'சிங்கப்பெண்' சிறப்பு அதிரடிப்படையின் செயல்பாடுகள் மற்றும் நோக்கம் குறித்து மாணவிகளுக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் அவசர காலங்களில் உதவி பெற வேண்டிய முக்கிய எண்களான 181 (பெண்கள் உதவி மையம்), 112 (அவசர உதவி), 1091 (பெண்கள் உதவி எண்), 1098 (குழந்தைகள் உதவி மையம்) மற்றும் 1930 (சைபர் குற்றங்கள் தடுப்பு) ஆகியவற்றின் பயன்பாடுகள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. ஆபத்துக் காலங்களில் இந்த எண்களை எவ்வாறு அணுகுவது என்பது குறித்து மாணவிகளுக்குச் செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது.

இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாணவிகளின் தன்னம்பிக்கையையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய உதவும் என்று பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
    user_Salem_Updates
    Salem_Updates
    News Anchor கடயம்பட்டி, சேலம், தமிழ்நாடு•
    2 hrs ago
  • தமிழக முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது கட்சித் தொண்டர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் இடும்பன் கோவிலில் சிறப்பு பூஜைகளை நடத்தினர்.
    1
    தமிழக முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது கட்சித் தொண்டர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் இடும்பன் கோவிலில் சிறப்பு பூஜைகளை நடத்தினர்.
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    10 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள ஆயக்குடி பகுதியில், தமிழ் திரைப்பட இயக்குநரான வசந்தபாலன் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் ஏழாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 'வெயில்' மற்றும் 'அங்காடித்தெரு' போன்ற படங்களை இயக்கிய வசந்தபாலன், இந்தப் புதிய படத்தை இயக்குகிறார்.
    1
    திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள ஆயக்குடி பகுதியில், தமிழ் திரைப்பட இயக்குநரான வசந்தபாலன் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் ஏழாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 'வெயில்' மற்றும் 'அங்காடித்தெரு' போன்ற படங்களை இயக்கிய வசந்தபாலன், இந்தப் புதிய படத்தை இயக்குகிறார்.
    user_திருப்புகழ் ரமேஷ்
    திருப்புகழ் ரமேஷ்
    பழனி, திண்டுக்கல், தமிழ்நாடு•
    10 hrs ago
  • கரூர் மாவட்டம் குளித்தலை முத்து பூபாலசமுத்திரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நீலமேகப் பெருமாள் கோவிலின் உப சன்னதியான அருள்மிகு ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா இன்று விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.
    1
    கரூர் மாவட்டம் குளித்தலை முத்து பூபாலசமுத்திரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நீலமேகப் பெருமாள் கோவிலின் உப சன்னதியான அருள்மிகு ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா இன்று விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.
    user_கருணாநிதி
    கருணாநிதி
    Kulithalai, Karur•
    9 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சித்தரேவு ஊராட்சிக்குட்பட்ட கதிர் நாயக்கன்பட்டி பிரிவு அருகே செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையை அகற்றக்கோரி சித்தரேவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சித்தையன் கோட்டை, அய்யம்பாளையம் செல்லும் சாலையில் அமர்ந்து அவர்கள் இந்த சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பட்டிவீரன்பட்டி காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
    1
    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சித்தரேவு ஊராட்சிக்குட்பட்ட கதிர் நாயக்கன்பட்டி பிரிவு அருகே செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையை அகற்றக்கோரி சித்தரேவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சித்தையன் கோட்டை, அய்யம்பாளையம் செல்லும் சாலையில் அமர்ந்து அவர்கள் இந்த சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பட்டிவீரன்பட்டி காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
    user_RAJA
    RAJA
    பத்திரிகையாளர் ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    14 hrs ago
  • நேற்று இரவு, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட திம்பம் மலைப்பாதையில் ஒரு தடுப்புச்சுவர் மீது சிறுத்தை ஒன்று படுத்திருந்தது. இதைக் கண்ட வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் படமெடுத்தார். நீண்ட நேரம் அங்கேயே இருந்த சிறுத்தை, பின்னர் வனப்பகுதிக்குள் திரும்பிச் சென்றது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட வனச்சரகங்களில் சிறுத்தை, புலி, மான், கரடி, யானை போன்ற பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில், வனவிலங்குகள் சாலைகளில் அதிக அளவில் நடமாடுகின்றன. பகல் நேரங்களிலும் யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்லுமாறு வனத்துறையினர் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், இரவு நேரங்களில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் கூடுதல் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் மீண்டும் அறிவுறுத்தியுள்ளனர்.
    1
    நேற்று இரவு, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட திம்பம் மலைப்பாதையில் ஒரு தடுப்புச்சுவர் மீது சிறுத்தை ஒன்று படுத்திருந்தது. இதைக் கண்ட வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் படமெடுத்தார். நீண்ட நேரம் அங்கேயே இருந்த சிறுத்தை, பின்னர் வனப்பகுதிக்குள் திரும்பிச் சென்றது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட வனச்சரகங்களில் சிறுத்தை, புலி, மான், கரடி, யானை போன்ற பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில், வனவிலங்குகள் சாலைகளில் அதிக அளவில் நடமாடுகின்றன. பகல் நேரங்களிலும் யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்லுமாறு வனத்துறையினர் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், இரவு நேரங்களில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் கூடுதல் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் மீண்டும் அறிவுறுத்தியுள்ளனர்.
    user_Dinesh
    Dinesh
    கோபிசெட்டிபாளையம், ஈரோடு, தமிழ்நாடு•
    4 hrs ago
  • சேலம் மாவட்டம், கெங்கவல்லியில் வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணிபுரியும் இளங்கோ மீது, அதே பகுதியில் செவிலியராகப் பணிபுரியும் திராவிடமணி என்பவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகப் புகார் எழுந்துள்ளது. இந்தப் புகாரின் அடிப்படையில், திராவிடமணியின் சகோதரர் மணிகண்டன், இன்று வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் இளங்கோவிடம் வாக்குவாதம் செய்து அவரது கன்னத்தில் அறைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக, வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோ மணிகண்டன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதேநேரத்தில், செவிலியர் திராவிடமணியும் வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோ மீது புகார் அளித்துள்ளார். இந்தப் புகார்களின் பேரில், வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோ மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    1
    சேலம் மாவட்டம், கெங்கவல்லியில் வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணிபுரியும் இளங்கோ மீது, அதே பகுதியில் செவிலியராகப் பணிபுரியும் திராவிடமணி என்பவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகப் புகார் எழுந்துள்ளது. இந்தப் புகாரின் அடிப்படையில், திராவிடமணியின் சகோதரர் மணிகண்டன், இன்று வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் இளங்கோவிடம் வாக்குவாதம் செய்து அவரது கன்னத்தில் அறைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோ மணிகண்டன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதேநேரத்தில், செவிலியர் திராவிடமணியும் வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோ மீது புகார் அளித்துள்ளார். இந்தப் புகார்களின் பேரில், வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோ மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    user_Selva
    Selva
    ஆத்தூர், சேலம், தமிழ்நாடு•
    5 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.