Shuru
Apke Nagar Ki App…
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
Vinayagam Vinayagam
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
More news from தமிழ்நாடு and nearby areas
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- 2026ல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் அதிமுக அமோக வெற்றி பெற்று மீண்டும் நல்லாட்சி அமைய உள்ளதை தொடர்ந்து, கழக ஆட்சியின் சாதனைகளை விளக்கி, பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டி காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் ஊராட்சியில், மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் , அவர்கள் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கினர். ___________ அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்த தமிழகத்தை அமளிக்காடாக மாற்றி பொதுமக்களுக்கு பல்வேறு இன்னல்களை ஏற்படுத்தி வரும் திமுக ஆட்சியை விரட்டும் வகையில், தமிழகமெங்கும் வாக்காளப் பெருமக்களை நேரில் சந்தித்து விடியா திமுக ஆட்சியின் அவலங்களை விளக்கியும், கழக ஆட்சியின் சாதனை திட்டங்களை விளக்கும் வகையிலும், கழக ஆட்சி மீண்டும் மலர்ந்திடும் வகையிலும் தமிழகமெங்கும் பொது மக்களை நேரில் சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கி திண்ணை பிரச்சாரம் நடை பெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான மணிமங்கலம் வேணுகோபால் அவர்கள் ஏற்பாட்டில், குன்றத்தூர் ஒன்றிய கழக செயலாளரும் ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மதனந்தபுரம் கே.பழனி அவர்கள் தலைமையில், காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் ஊராட்சியில் கடைவீதி பகுதியில், 2026ல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெற, பொதுமக்களிடம் கழக ஆட்சியின் சாதனைகளை விளக்கி, மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் ,பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் விவசாய பிரிவு ஒன்றிய செயலாளர் எச்.டி.சிவராஜ் உட்பட ஏராளமான கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.1
- காஞ்சிபுரம் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.ஒரு கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மேலவலம் கிராமத்தைச் சேர்ந்த மணி மகன் மோகன் (37) இவர் மதுராந்தகத்தில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் கடந்த 10.3.25 ஆம் தேதி நடந்த இச்சம்பவம் தொடர்பான வழக்கு காஞ்சிபுரம் மாவட்ட தேசிய மக்கள் நீதிமன்றத்தில் விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. உயிரிழந்த மோகன் தனியார் மருந்து கம்பெனியில் மூத்த அதிகாரியாக பணியாற்றி வருகிறார் .இவருக்கு கன்னிகா(31) என்ற மனைவியும் கோபிகா(6) ஷட்னிகா(3)நைனிகா(2) மற்றும் தாயார் கௌரி(65) ஆகியோரும் மோகனின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளனனர்.மோகன் உயிரிழந்தது தொடர்பான வழக்கை விசாரித்த தேசிய மக்கள் நீதிமன்றம் விபத்தில் உயிரிழந்த மோகனின் குடும்பத்தினருக்கு ரூபாய் ஒரு கோடி இழப்பீட்டு தொகையை நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி சார்பில் வழங்கப்பட்டது. தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும் முதன்மை அமர்வு நீதிபதியுமான எஸ். மோகனகுமாரி தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்விற்கு தலைமை வகித்த முதன்மை அமர்வு நீதிபதி மோகனகுமாரி இழப்பீட்டுத் தொகை ஒரு கோடியை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் வழங்கினார் .இந்த நிகழ்வில் தொழிலாளர் நல நீதிபதி சுஜாதா, விபத்து வழக்குகள் நீதிமன்ற நீதிபதி ஜெயஸ்ரீ, முதன்மை சார்பு நீதிபதி கே எஸ் அருண் சபாபதி, சார்பு நீதிபதி திருமால், நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனியின் துணை மேலாளர் லாவண்யா உட்பட பல்வேறு நீதிபதிகளும் மூத்த வழக்கறிஞர்களும் வழக்காடிகளும் கலந்து கொண்டனர்.1
- பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கா இந்த ஆட்சியில்.? #admk #eps #tn #News #press #media #KPK #bala #ecr1
- கும்மிடிப்பூண்டி அடுத்த கண்ணன்கோட்டை சேர்ந்த 30 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க விழா இன்று நடைபெற்றது. நிகழ்வில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்று 30 பேருக்கு வீட்டுமனை பட்டாவை வழங்கினார். இதில் கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் மணிபாலன், திமுக நிர்வாகி தேர்வாய் முனிவேல், கண்ணன்கோட்டை ஊராட்சி திமுக நிர்வாகிகள் கோபால், ராஜா, விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.3
- Post by NAMADHU ARASU(Krishna M Com)1
- Post by Govindappa Govindappa2
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1