விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தருமபுரியில் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சதீஷ் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தும் வகையில் இன்று தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சதீஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக வாக்காளர்கள் அனைவரும் அச்சமின்றியும் மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் எந்த ஒரு தூண்டுதலுமின்றி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு தொடங்கிய பேரணி வாக்களிக்க தகுதியான அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தும் வகையில் கோஷங்களை எழுப்பியவாறு நெசவாளர் காலனி வழியாகச் சென்று நான்கு ரோடு சந்திப்பில் முடிவடைந்தது. இப்பேரணியில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா கோட்டாட்சியர் காயத்ரி மற்றும் அரசு அதிகாரிகள் 1000க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தருமபுரியில் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சதீஷ் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தும் வகையில் இன்று தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சதீஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக வாக்காளர்கள் அனைவரும் அச்சமின்றியும் மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் எந்த ஒரு தூண்டுதலுமின்றி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு தொடங்கிய பேரணி வாக்களிக்க தகுதியான அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தும் வகையில் கோஷங்களை எழுப்பியவாறு நெசவாளர் காலனி வழியாகச் சென்று நான்கு ரோடு சந்திப்பில் முடிவடைந்தது. இப்பேரணியில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா கோட்டாட்சியர் காயத்ரி மற்றும் அரசு அதிகாரிகள் 1000க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
- தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தருமபுரியில் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சதீஷ் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தும் வகையில் இன்று தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சதீஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக வாக்காளர்கள் அனைவரும் அச்சமின்றியும் மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் எந்த ஒரு தூண்டுதலுமின்றி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு தொடங்கிய பேரணி வாக்களிக்க தகுதியான அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தும் வகையில் கோஷங்களை எழுப்பியவாறு நெசவாளர் காலனி வழியாகச் சென்று நான்கு ரோடு சந்திப்பில் முடிவடைந்தது. இப்பேரணியில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா கோட்டாட்சியர் காயத்ரி மற்றும் அரசு அதிகாரிகள் 1000க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.1
- கூத்தப்பாடி ஊராட்சியில் அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த மூன்று மாதங்களாக நீர் வரத்து சரிந்து காணப்பட்ட நிலையில் நேற்று கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறந்ததன் காரணமாக சுமார் 4000 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் இன்று ஜனவரி 22 வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1500 கன அடியாக நீர்வரத்து சரிந்துள்ளதாக மத்திய நீர் வள மேலாண்மை துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்1
- . தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி உட்பட்டு உள்ள பாப்பாரப்பட்டி பேரூராட்சி கழக செயலாளர் ரமேஷ் தலைமையில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பாப்பாரப்பட்டி பேருந்து நிலையம் அருகே தமிழக வெற்றி கழகத்தின் சின்னம் விசில் சின்னத்தை வழங்கிய தேர்தல் ஆணையத்தை வரவேற்கும் விதமாக பட்டாசுகள் வெடித்து பொதுமக்கள் மத்தியில் விசில் அடித்தும் கொண்டாடினார். தொண்டர்கள் நமது சின்னம் வெற்றிச் சின்னம் விசில் நாளைய முதல்வர் விஜய் என கோஷமிட்டனர் . தர்மபுரியில் தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் திருவிழா போல் கொண்டாடிய ரசிகர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதில் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் நமது சின்னம் விசில் பொதுமக்கள் மத்தியில் தங்களுடைய சின்னத்தை விசில் அடித்து வெளிப்படுத்தினர். இதில் நகர, ஒன்றிய கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்1
- கிருஷ்ணகிரியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக, விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்1
- ஊத்தங்கரையில் காவல் துறை சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி காவல் ஆய்வாளர் முருகன் தலைமையில் நடைபெற்றது நடைபெற்றது.1
- சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் ஓசூர் பகுதியை சேர்ந்த திவ்யதர்ஷினி வயது 17 முதலாம் ஆண்டு ஆண்டு பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார் இந்த நிலையில் இன்று மதியம் ஒரு மணி அளவில் ச மாணவிகளுடன் ஃபுட்பால் விளையாடிக் கொண்டிருந்த பொழுது திடீரென்று கீழே விழுந்தவர் உயிரிழந்தார் இது குறித்து ஆத்தூர் ஊரக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் கல்லூரி மாணவ மாணவிகள் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் கூடியதால் பெரும் பரபரப்பு காணப்பட்டது மேலும் இறந்ததற்கான காரணத்தை விசாரணை செய்ய வேண்டும் என்று மாணவர்கள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.1
- இராசிபுரம் வட்டம் அத்தனூர் பேரூராட்சியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டன அதில் மாணவர்கள் பல்வேறு வகையான பொருட்களை வைத்து விளக்கம் அளித்தனர்1
- தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் அமைந்துள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், நேற்று (ஜன.22) வியாழக்கிழமை தர்மபுரி மாவட்ட சுகாதார துறையின் கீழ் 14வயது பள்ளி மாணவிகளுக்கு புற்றுநோய் தடுப்பூசி செலுத்துவதை பற்றியும், அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார மருத்துவர்கள் செவிலியர்கள், ஆசிரியர்கள், மாணவிகளின், பெற்றோர்கள் மற்றும் தாய்மார்கள் என பலர் கலந்து கொண்டனர்.1