logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தூத்துக்குடியில் மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தது தவெக தலைவர் விஜய்யின் வாகனம். (8-4-2026) புதன்கிழமை தூத்துக்குடி விமான நிலையம் வந்த தவெக தலைவர் விஜய் நெல்லையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு பின்னர் மாலை 5.30 மணி அளவில் தூத்துக்குடி ரோடு ஷோ வில் கலந்த கொள்ள வந்த விஜய்க்கு தூத்துக்குடியில் சில கிலோமீட்டர் தூரம் மக்கள் பெருந்திரளாக கூடி நின்று சிறப்பான முறையில் வரவேற்பு கொடுத்தனர் விஜயின் வாகனம் மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தது விஜய் மக்களை பார்த்து தவெக கொடியை அசைத்தவாறு மக்களின் வரவேற்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.

6 hrs ago
user_மா.சுடலைமணி
மா.சுடலைமணி
Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
6 hrs ago

தூத்துக்குடியில் மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தது தவெக தலைவர் விஜய்யின் வாகனம். (8-4-2026) புதன்கிழமை தூத்துக்குடி விமான நிலையம் வந்த தவெக தலைவர் விஜய் நெல்லையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு பின்னர் மாலை 5.30 மணி அளவில் தூத்துக்குடி ரோடு ஷோ வில் கலந்த கொள்ள வந்த விஜய்க்கு தூத்துக்குடியில் சில கிலோமீட்டர் தூரம் மக்கள் பெருந்திரளாக கூடி நின்று சிறப்பான முறையில் வரவேற்பு கொடுத்தனர் விஜயின் வாகனம் மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தது விஜய் மக்களை பார்த்து தவெக கொடியை அசைத்தவாறு மக்களின் வரவேற்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • (8-4-2026) புதன்கிழமை தூத்துக்குடி விமான நிலையம் வந்த தவெக தலைவர் விஜய் நெல்லையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு பின்னர் மாலை 5.30 மணி அளவில் தூத்துக்குடி ரோடு ஷோ வில் கலந்த கொள்ள வந்த விஜய்க்கு தூத்துக்குடியில் சில கிலோமீட்டர் தூரம் மக்கள் பெருந்திரளாக கூடி நின்று சிறப்பான முறையில் வரவேற்பு கொடுத்தனர் விஜயின் வாகனம் மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தது விஜய் மக்களை பார்த்து தவெக கொடியை அசைத்தவாறு மக்களின் வரவேற்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.
    1
    (8-4-2026) புதன்கிழமை தூத்துக்குடி விமான நிலையம் வந்த தவெக தலைவர் விஜய் நெல்லையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு பின்னர் மாலை 5.30 மணி அளவில் தூத்துக்குடி ரோடு ஷோ வில் கலந்த கொள்ள வந்த விஜய்க்கு தூத்துக்குடியில் சில கிலோமீட்டர் தூரம் மக்கள் பெருந்திரளாக கூடி நின்று சிறப்பான முறையில் வரவேற்பு கொடுத்தனர் விஜயின் வாகனம் மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தது விஜய்  மக்களை பார்த்து தவெக கொடியை அசைத்தவாறு மக்களின் வரவேற்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • Post by மா.கணேஷ்
    1
    Post by மா.கணேஷ்
    user_மா.கணேஷ்
    மா.கணேஷ்
    Photographer ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • தூத்துக்குடியில் பைபாஸ் சாலையில் மறவன் மடம் அருகே பல ஏக்கர் பரப்பளவில் படர்ந்திருந்த முள்செடிகளில் ஏற்பட்ட காட்டுத்தீயைச் தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி அணைத்தனர். தூத்துக்குடி மறவன் மடம் அருகே உள்ள காலி நிலங்களில் வளர்ந்திருந்த முள்செடிகள் நேற்று திடீரெனத் தீப்பிடித்து எரியத் தொடங்கின. இது குறித்துச் சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாகச் சிப்காட் நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில், ஏட்டு இசக்கி ராஜன், ஓட்டுநர் மணிகண்டன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் முத்து ஜெயக்குமார், சாமுவேல் ஆகியோர் தீயணைப்பு ஊர்தியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வெயிலின் தாக்கம் மற்றும் பலத்த காற்று காரணமாகத் தீ மளமளவெனப் பரவி, பல ஏக்கர் நிலங்களைச் சூழ்ந்தது. தீ எரிந்த பகுதிக்கு அருகிலேயே பெட்ரோல் விற்பனை நிலையம் மற்றும் மர யார்டுகள் இருந்ததால் பெரும் ஆபத்து ஏற்படும் சூழல் உருவானது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த தீயணைப்புத் துறையினர், உடனடியாகத் தனியார் ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்தனர். ஜேசிபி மூலம் எரியாத முள்செடிகளை அப்புறப்படுத்தித் தீ மேலும் பரவாமல் தடுத்தனர். பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு காட்டுத்தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்களின் இந்தச் சமயோசியமான நடவடிக்கையைப் பொதுமக்களும், வணிக நிறுவன உரிமையாளர்களும் வெகுவாகப் பாராட்டினர். இது குறித்துச் சிப்காட் நிலைய அலுவலர் த. கார்த்திகேயன் பொதுமக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் கூறியிருப்பதாவது: "கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் மற்றும் தனியார் நில உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து தங்கள் பகுதியில் உள்ள காய்ந்த முள்செடிகளை ஜேசிபி மூலம் அகற்ற வேண்டும். இதன் மூலம் தீ விபத்துகளையும், பெரும் பொருள் சேதங்களையும் தவிர்க்கலாம். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், தீயணைப்புத் துறையினரின் மீட்புப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும் வேண்டும் எனத் தெரிவித்தார்.
    1
    தூத்துக்குடியில் பைபாஸ் சாலையில் மறவன் மடம் அருகே பல ஏக்கர் பரப்பளவில் படர்ந்திருந்த முள்செடிகளில் ஏற்பட்ட காட்டுத்தீயைச் தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி அணைத்தனர்.
தூத்துக்குடி மறவன் மடம் அருகே உள்ள காலி நிலங்களில் வளர்ந்திருந்த முள்செடிகள் நேற்று திடீரெனத் தீப்பிடித்து எரியத் தொடங்கின. இது குறித்துச் சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாகச் சிப்காட் நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில், ஏட்டு இசக்கி ராஜன், ஓட்டுநர் மணிகண்டன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் முத்து ஜெயக்குமார், சாமுவேல் ஆகியோர் தீயணைப்பு ஊர்தியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
வெயிலின் தாக்கம் மற்றும் பலத்த காற்று காரணமாகத் தீ மளமளவெனப் பரவி, பல ஏக்கர் நிலங்களைச் சூழ்ந்தது. தீ எரிந்த பகுதிக்கு அருகிலேயே பெட்ரோல் விற்பனை நிலையம் மற்றும் மர யார்டுகள் இருந்ததால் பெரும் ஆபத்து ஏற்படும் சூழல் உருவானது.
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த தீயணைப்புத் துறையினர், உடனடியாகத் தனியார் ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்தனர். ஜேசிபி மூலம் எரியாத முள்செடிகளை அப்புறப்படுத்தித் தீ மேலும் பரவாமல் தடுத்தனர். பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு காட்டுத்தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்களின் இந்தச் சமயோசியமான நடவடிக்கையைப் பொதுமக்களும், வணிக நிறுவன உரிமையாளர்களும் வெகுவாகப் பாராட்டினர்.
இது குறித்துச் சிப்காட் நிலைய அலுவலர் த. கார்த்திகேயன் பொதுமக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் கூறியிருப்பதாவது: "கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் மற்றும் தனியார் நில உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து தங்கள் பகுதியில் உள்ள காய்ந்த முள்செடிகளை ஜேசிபி மூலம் அகற்ற வேண்டும். இதன் மூலம் தீ விபத்துகளையும், பெரும் பொருள் சேதங்களையும் தவிர்க்கலாம். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், தீயணைப்புத் துறையினரின் மீட்புப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும் வேண்டும் எனத் தெரிவித்தார்.
    user_AMS MEDIA
    AMS MEDIA
    Local News Reporter ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    15 hrs ago
  • மதசார்பற்ற முற்போக்கு இந்தியா கூட்டணியின், திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் சு. சுப்பிரமணியன் அவர்களை ஆதரித்து மானூர் மேற்கு ஒன்றியம் தெற்குப்பட்டி, சீதைக்குறிச்சி, குறிச்சிகுளம், மேல கலக்குடி, கீழ கலக்குடி , திருமலாபுரம் , அயுப்கான்புரம் ஆகிய பகுதிகளில் முன்னாள் அமைச்சர் முன்னாள் திருநெல்வேலி மத்திய மாவட்ட கழகப் பொறுப்பாளர் உயர்திரு.TPM.மைதீன்கான் அவர்கள் தலைமையில் கிராம பொதுமக்கள் கழக உடன்பிறப்புகளை சந்தித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது . இந்நிகழ்வில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் ALS லட்சுமணன் Ex-MLA , மாநில மகளிர் தொண்டரணி துணைச் செயலாளர் விஜிலா சத்யானந்த், மாநில நெசவாளர் அணி செயலாளர் சொ.பெருமாள், மாவட்டத் துணைச் செயலாளர்கள் S.V.சுரேஷ், கிரிஜா குமார், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் ஆ.க.மணி, மாநகர துணை செயலாளர் V.S. அப்துல் கையூம் மதிமுக செயற்குழு உறுப்பினர் மின்னல் முகமது அலி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் லி . முகம்மது மீரான் மைதீன், கோ.மிக்கேல், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் தொப்பி I மைதீன், மாவட்ட விவசாய அணி தலைவர் போத்திக்கண்ணு,மத்திய மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் குறிச்சிகுளம் சித்திக் மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் சூச்சர், பேரங்காடி ஐயப்பன் மற்றும் காங்கிரஸ் கட்சி முன்னாள் வட்டார தலைவர் அருள் ராஜ், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க அவை தலைவர் , தங்கராஜ் மதிமுக ஒன்றிய துணைச் செயலாளர் J J வேத பாண்டியன், மருதம் வர்த்தக நல பொருளாளர் பாலசுப்பிரமணியம், கூட்டணி கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கழக உடன்பிறப்புகள் திரளானோர் கலந்து கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டிய போது.
    1
    மதசார்பற்ற முற்போக்கு இந்தியா கூட்டணியின், திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் சு. சுப்பிரமணியன் அவர்களை ஆதரித்து மானூர் மேற்கு ஒன்றியம்  தெற்குப்பட்டி, சீதைக்குறிச்சி, குறிச்சிகுளம், மேல கலக்குடி,  கீழ கலக்குடி , திருமலாபுரம் , அயுப்கான்புரம்   ஆகிய பகுதிகளில் முன்னாள் அமைச்சர் முன்னாள் திருநெல்வேலி மத்திய மாவட்ட கழகப் பொறுப்பாளர் உயர்திரு.TPM.மைதீன்கான் அவர்கள் தலைமையில் கிராம பொதுமக்கள் கழக உடன்பிறப்புகளை சந்தித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது . இந்நிகழ்வில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் ALS லட்சுமணன் Ex-MLA , மாநில மகளிர் தொண்டரணி துணைச் செயலாளர் விஜிலா சத்யானந்த், மாநில நெசவாளர் அணி செயலாளர் சொ.பெருமாள், மாவட்டத் துணைச் செயலாளர்கள் S.V.சுரேஷ்,  கிரிஜா குமார், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் ஆ.க.மணி, மாநகர துணை செயலாளர் V.S. அப்துல் கையூம் மதிமுக செயற்குழு உறுப்பினர் மின்னல் முகமது அலி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் லி . முகம்மது மீரான் மைதீன், கோ.மிக்கேல், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் தொப்பி I மைதீன், மாவட்ட விவசாய அணி தலைவர் போத்திக்கண்ணு,மத்திய மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் குறிச்சிகுளம் சித்திக்  மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் சூச்சர், பேரங்காடி ஐயப்பன் மற்றும்  காங்கிரஸ் கட்சி முன்னாள் வட்டார தலைவர்  அருள் ராஜ், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க அவை தலைவர் , தங்கராஜ் மதிமுக ஒன்றிய துணைச் செயலாளர் J J வேத பாண்டியன், மருதம் வர்த்தக நல பொருளாளர்  பாலசுப்பிரமணியம், கூட்டணி கட்சி  நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கழக உடன்பிறப்புகள் திரளானோர் கலந்து கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டிய போது.
    user_நெல்லை வீரபாண்டியன்
    நெல்லை வீரபாண்டியன்
    Photographer Palayamkottai, Tirunelveli•
    11 hrs ago
  • *திருச்சுழி அருகே சவ்வாஸ்புரம் கிராமத்தில் கோவில் திருவிழாவில் கையில் வாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிந்த இளைஞர்களை தட்டிக் கேட்ட பஞ்சாலை தொழிலாளி வெட்டி படுகொலை; கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி 3 மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் போராட்டம்* விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே சவ்வாஸ்புரம் கிராமத்தில் ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ மாரியம்மன் பங்குனி பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. இந்த திருவிழாவின்போது சவ்வாஸ்புரம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி மற்றும் மாங்குளத்தை சேர்ந்த மாரிக்கண்ணன் என்ற இரு இளைஞர்கள் கஞ்சா போதையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கையில் பெரிய வாளுடன் சுற்றி திரிந்துள்ளனர். இதனைக் கண்ட அதே ஊரைச் சேர்ந்த பஞ்சாலை தொழிலாளியான வேல்முருகன்(33) என்பவர் கோவில் விழா கமிட்டி உறுப்பினராக இருந்ததால் கையில் வாளுடன் சுற்றித்திரிந்த கருப்பசாமி மற்றும் மாரி கண்ணன் இருவரையும் தட்டி கேட்டு சத்தம் போட்டு உள்ளார். இதனால் ஆத்திரம் நடந்த இருவரும் உன்னை வெட்டிக் கொள்ளாமல் விடமாட்டோம் என கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து விழா முடிந்து இன்று அதிகாலை நேரத்தில் ராமலிங்காமில் அருகே உள்ள டீக்கடையில் வேல்முருகன் நண்பர்களுடன் வந்து டீ குடித்துவிட்டு மீண்டும் சவ்வாஸ்புரம் திரும்பி உள்ளார். அப்போது சவ்வாஸ்புரம் தொடக்கக் வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகே நடந்து சென்று கொண்டிருக்கும்போது அங்கு இருளில் மறைந்திருந்த கருப்பசாமி மற்றும் மாரிக்கண்ணன் இருவரும் தாங்கள் வைத்திருந்த வாளால் வேல்முருகனை சரமாரியாக வெட்டி உள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து வேல்முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வேல்முருகன் நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடி திருச்சுழி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து வேல்முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் வேல்முருகனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த நபர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் அருப்புக்கோட்டை - சாயல்குடி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரின் பேச்சு வார்த்தையை ஏற்காமல் தொடர்ந்து மூன்று மணி நேரத்துக்கும் மேலாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது அதனைத் தொடர்ந்து போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து வந்த அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் மாரிமுத்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும், சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்யவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சுமார் மூன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். திருச்சுழி காவல் நிலைய போலீசார் தலைமறைவாக உள்ள கருப்பசாமி மற்றும் மாரிக்கண்ணனை தீவிரமாக தேடி வருகின்றனர்.‌ மேலும் இந்த பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை உள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    4
    *திருச்சுழி அருகே சவ்வாஸ்புரம் கிராமத்தில் கோவில் திருவிழாவில் கையில் வாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிந்த இளைஞர்களை தட்டிக் கேட்ட பஞ்சாலை தொழிலாளி வெட்டி படுகொலை; கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி 3 மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் போராட்டம்*
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே சவ்வாஸ்புரம் கிராமத்தில் ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ மாரியம்மன் பங்குனி பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. இந்த திருவிழாவின்போது சவ்வாஸ்புரம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி மற்றும் மாங்குளத்தை சேர்ந்த மாரிக்கண்ணன் என்ற இரு இளைஞர்கள் கஞ்சா போதையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கையில் பெரிய வாளுடன் சுற்றி திரிந்துள்ளனர். 
இதனைக் கண்ட அதே ஊரைச் சேர்ந்த பஞ்சாலை தொழிலாளியான வேல்முருகன்(33) என்பவர் கோவில் விழா கமிட்டி உறுப்பினராக இருந்ததால் கையில் வாளுடன் சுற்றித்திரிந்த கருப்பசாமி மற்றும் மாரி கண்ணன் இருவரையும் தட்டி கேட்டு சத்தம் போட்டு உள்ளார். இதனால் ஆத்திரம் நடந்த இருவரும் உன்னை வெட்டிக் கொள்ளாமல் விடமாட்டோம் என கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். 
அதனைத் தொடர்ந்து விழா முடிந்து இன்று அதிகாலை நேரத்தில் ராமலிங்காமில் அருகே உள்ள டீக்கடையில் வேல்முருகன் நண்பர்களுடன் வந்து டீ குடித்துவிட்டு மீண்டும் சவ்வாஸ்புரம் திரும்பி உள்ளார். அப்போது சவ்வாஸ்புரம் தொடக்கக் வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகே நடந்து சென்று கொண்டிருக்கும்போது அங்கு இருளில் மறைந்திருந்த கருப்பசாமி மற்றும் மாரிக்கண்ணன் இருவரும் தாங்கள் வைத்திருந்த வாளால் வேல்முருகனை சரமாரியாக வெட்டி உள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து வேல்முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வேல்முருகன் நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடி திருச்சுழி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து வேல்முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இந்த நிலையில் வேல்முருகனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த நபர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் அருப்புக்கோட்டை - சாயல்குடி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரின் பேச்சு வார்த்தையை ஏற்காமல் தொடர்ந்து மூன்று மணி நேரத்துக்கும் மேலாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது 
அதனைத் தொடர்ந்து போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து வந்த அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் மாரிமுத்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும், சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்யவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 
சுமார் மூன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். திருச்சுழி காவல் நிலைய போலீசார் தலைமறைவாக உள்ள கருப்பசாமி மற்றும் மாரிக்கண்ணனை தீவிரமாக தேடி வருகின்றனர்.‌
மேலும் இந்த பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை உள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    user_Paramasivam A
    Paramasivam A
    Photography studio திருச்சுழி, விருதுநகர், தமிழ்நாடு•
    17 hrs ago
  • கடையநல்லூர் சுற்று வட்டார பகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரச்சாரம் இன்று நடந்தது இதில் அதிமுக வேட்பாளர் கிருஷ்ண முரளி எ குட்டியப்பா தலைமை வகித்து வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க பிரச்சாரம் செய்தார்
    1
    கடையநல்லூர் சுற்று வட்டார பகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரச்சாரம் இன்று நடந்தது 
இதில் அதிமுக வேட்பாளர் கிருஷ்ண முரளி எ குட்டியப்பா தலைமை வகித்து வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க பிரச்சாரம் செய்தார்
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று நாகர்கோவிலில் பேசியதாவது; வருகின்ற 15ம் தேதி NDA கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய நாகர்கோவில் வரும் பிரதமர் மோடி ரோடு ஷோவில் கலந்து கொள்கிறார். மேலும், பேசிய அவர் பாஜகவை பார்த்து முதல்வர் பயப்படுகிறார். அவரது Ex.அமைச்சர்கள் ஊழல் செய்துள்ளார்கள். பல ED வழக்குகள் உட்பட பல வழக்குகள் உள்ளன. இதை எடுத்து விடுவோம் என்று அவர் பயப்படுகிறார் என்றார்.
    1
    தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று நாகர்கோவிலில் பேசியதாவது; வருகின்ற 15ம் தேதி NDA கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய நாகர்கோவில் வரும் பிரதமர் மோடி ரோடு ஷோவில் கலந்து கொள்கிறார். மேலும், பேசிய அவர் பாஜகவை பார்த்து முதல்வர் பயப்படுகிறார். அவரது Ex.அமைச்சர்கள் ஊழல் செய்துள்ளார்கள். பல ED வழக்குகள் உட்பட பல வழக்குகள் உள்ளன. இதை எடுத்து விடுவோம் என்று அவர் பயப்படுகிறார் என்றார்.
    user_Magson jones
    Magson jones
    அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    14 hrs ago
  • Post by மா.கணேஷ்
    1
    Post by மா.கணேஷ்
    user_மா.கணேஷ்
    மா.கணேஷ்
    Photographer ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    5 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.