வாணியம்பாடியில் தேர்தல் அறிவித்ததை தொடர்ந்து சட்டமன்ற அலுவலகத்திற்கு சீல் வைத்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்த உடனடியாக வாணியம்பாடி சட்டமன்ற அலுவலகத்தை பொதுப்பணி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் சீல் வைத்தனர். தேர்தல் ஆணையம் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்கு பதிவு மே நான்கு வாக்கு எண்ணிக்கை என அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காதர் பேட்டை பகுதியில் அமைந்துள்ள சட்டமன்ற அலுவலகத்திற்கு விரைந்து வந்த பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ரவி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் சத்யா, பழனி ஆகியோர் வாணியம்பாடி சட்டமன்ற அலுவலகத்தில் அனைத்து இடங்களையும் ஆய்வு மேற்கொண்டு மின் இணைப்பைத் துண்டித்தனர். பின்னர் உள்ளே வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை அகற்றினர். மூன்று நுழைவாயில்களுக்கும் துணியை சுற்றி அறைக்கு ராக் வைத்து சீல் வைத்தனர். மேலும் அங்கு வெளியில் வைக்கப்பட்டிருந்த கட்சி ரீதியான அனைத்து பேனர்கள் மற்றும் போஸ்டர்களை அகற்றினர்.
வாணியம்பாடியில் தேர்தல் அறிவித்ததை தொடர்ந்து சட்டமன்ற அலுவலகத்திற்கு சீல் வைத்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்த உடனடியாக வாணியம்பாடி சட்டமன்ற அலுவலகத்தை பொதுப்பணி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் சீல் வைத்தனர். தேர்தல் ஆணையம் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்கு பதிவு மே நான்கு வாக்கு எண்ணிக்கை என அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காதர் பேட்டை பகுதியில் அமைந்துள்ள சட்டமன்ற அலுவலகத்திற்கு விரைந்து வந்த பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ரவி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் சத்யா, பழனி ஆகியோர் வாணியம்பாடி சட்டமன்ற அலுவலகத்தில் அனைத்து இடங்களையும் ஆய்வு மேற்கொண்டு மின் இணைப்பைத் துண்டித்தனர். பின்னர் உள்ளே வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை அகற்றினர். மூன்று நுழைவாயில்களுக்கும் துணியை சுற்றி அறைக்கு ராக் வைத்து சீல் வைத்தனர். மேலும் அங்கு வெளியில் வைக்கப்பட்டிருந்த கட்சி ரீதியான அனைத்து பேனர்கள் மற்றும் போஸ்டர்களை அகற்றினர்.
- தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்த உடனடியாக வாணியம்பாடி சட்டமன்ற அலுவலகத்தை பொதுப்பணி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் சீல் வைத்தனர். தேர்தல் ஆணையம் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்கு பதிவு மே நான்கு வாக்கு எண்ணிக்கை என அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காதர் பேட்டை பகுதியில் அமைந்துள்ள சட்டமன்ற அலுவலகத்திற்கு விரைந்து வந்த பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ரவி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் சத்யா, பழனி ஆகியோர் வாணியம்பாடி சட்டமன்ற அலுவலகத்தில் அனைத்து இடங்களையும் ஆய்வு மேற்கொண்டு மின் இணைப்பைத் துண்டித்தனர். பின்னர் உள்ளே வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை அகற்றினர். மூன்று நுழைவாயில்களுக்கும் துணியை சுற்றி அறைக்கு ராக் வைத்து சீல் வைத்தனர். மேலும் அங்கு வெளியில் வைக்கப்பட்டிருந்த கட்சி ரீதியான அனைத்து பேனர்கள் மற்றும் போஸ்டர்களை அகற்றினர்.1
- திருப்பத்தூர் மாவட்டம்:. இந்த நிகழ்ச்சியில் அறப்போர் இயக்க தன்னார்வலர்கள் திரு. சுரேஷ், திரு. முனிராஜ், திரு. திருக்குமரன், திரு. வெங்கடேஷ், திரு. சுந்தரேசன் ஆகியோர் மற்றும் சேலம் மண்டல ஒருங்கிணைப்பாளர் இணைந்து பொதுமக்களிடம் “என் ஓட்டு விற்பனைக்கு அல்ல” என்ற விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினர். மேலும், வாக்குகளை பணத்திற்கு விற்காமல் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்பதைக் கூறி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, வீடுகள் மற்றும் கடைகளில் “என் ஓட்டு விற்பனைக்கு அல்ல” என்ற வாசகத்துடன் ஸ்டிக்கர்கள் ஒட்டி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சி மூலம் பொதுமக்களிடம் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதாக தன்னார்வலர்கள் தெரிவித்தனர்.2
- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள அம்பேத்கர் சிலை அருகில் கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை கண்டித்து ஒன்றிய பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளை கண்டித்து திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் முபெ கிரி தலைமையில் நகர செயலாளர் அன்பழகன் நகர் மன்ற தலைவர் சாதிக் பாஷா ஒன்றிய துணை செயலாளர் செந்தில் முன்னாள் பேரூர் மன்ற தலைவர் சென்னம்மாள் முருகன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்1
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தொகுதி தேர்தல் பறக்கும் படை (இன்று மார்ச் 16) ஆம்பூர் தொகுதி தோலப் பள்ளி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது குருராஜாபாளையம் பகுதியை சேர்ந்த அஇஅதிமுக ஒன்றிய செயலாளர் ஜோதி ராம லிங்க ராஜா என்பவரின் காரில் ரூபாய் ஒரு லட்சம் பறிமுதல் செய்து ஆம்பூர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி போஷன் குமார் என்பவரிடம் ஒப்படைத்த பறக்கும் படையினர்1
- திருவண்ணா மலை தெற்கு மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதி.ஜவ்வாது மலை வடக்கு ஒன்றிய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக. அடுப்பு எரிக்க கேஸ் சிலிண்டர் பெட்ரோல் தட்டுப்பாடு குறித்து ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். திமுக மாநில துணை செயாளர்.பிரியா ப.விஜயரங்கன். கண்டனம் உரையாற்றினார்.திமுக வடக்கு ஒன்றியம் செயலாளர் ப.கேசவன் ஒன்றிய காங்கிரஸ் நிர்வாகி. மூர்த்தி. சின்னத்தம்பி. ஒன்றிய விசிக நிர்வாகி. காசி ஒன்றிய தேமுதிக நிர்வாகி.R.K. ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.1
- வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் புதிய வாக்களர்களை வாக்களிக்க தேவையான அனைத்து விழிப்புணர்வு மற்றும் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 85 வயதிற்க்கு மேற்பட்ட 9541 வாக்காளர்கள் தருமபுரி மாவட்டத்தில் உள்ளனர். இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின் படி அவர்கள் தபால் ஓட்டுக்களை பயன்படுத்திக் கொள்ளலாம். வாக்குசாவடி மையத்தில் நேரடியாக சென்று வாக்களிக்க விரும்பினாலும் நேரடியாக சென்று வாக்களிக்கலாம், 11345 மாற்றுதிறனாளி வாக்களர்கள் உள்ளனர். 1596 வாக்குசாவடிகளிலும் அவர்களுக்கு தேவையான சாய்வுதளம், சக்கர நாற்காலி உள்ளிட்ட தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன, மேலும் மாற்று திறனாளிகளுக்கும் தபால் வாக்குகள் தரப்பட்டு அவர்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வழிவகை செய்யப்பட்டுள்ளது. முப்படை ரானுவத்தில் பணியாற்றும் 1601 வாக்களர்களுக்கும் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மனு தாக்கல் நிறைவடையும் 10 தினங்களுக்கு முன்னர் வரை படிவம், 6, 7, 8 மூலம் புதிய இளம் வாக்காளர்களை சேர்த்து கொள்ள முடியும், வாக்களர்கள் வாக்களிக்க வசதியாக புதிய நடைமுறைகளை மேற்கொண்டுள்ளது, தருமபுரி மாவட்டத்தில் வாக்கு சதவீதத்தை அதிகப்படுத்த அனைத்து வாக்களர்களுக்கும் தேவையான வசதிகள் தங்கு தடையின்றி செய்து தரப்படும், ஒவ்வொரு வாக்குசாவடியிலும் 1500 லிருந்து 1200 வாக்களர்களாக குறைக்கப்பட்டுள்ளது இதன் மூலம் வாக்காளர்கள் எளிதில் வாக்களித்து விட்டு செல்ல முடியும், மாவட்டத்தில் உள்ள 1596 வாக்குசாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது, இதன் மூலம் மக்கள் யாருடையை அச்சுறுத்தலும் இன்றி தைரியமாக வாக்களித்து செல்ல முடியும், வாக்களர்கள் பகுதி எண், பாகம் எண், எளிதாக கண்டறியும் வாக்கு சீட்டின் வலது புறத்தில் பெரிய எழுத்துக்களில் அச்சிடப்பட்டுள்ளது. செல்போன்களை வாக்குசாவடி மையத்திற்க்குள் அனுமதி இல்லை என்பதால் செல்போன்கள் பாதுகாக்க வாக்கு சாவடி வெளியே தனி கவுண்டர் அமைக்கப்பட்டுள்ளது, வாக்களர்கள் செல்போனை அங்கே ஒப்படைத்து விட்டு வாக்கு செலுத்தி விட்டு திரும்பி செல்லும் போது பெற்றுக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாக்குசாவடி மையத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்க்கு அப்பால் தான் மற்றவர்கள் இருக்க வேண்டும், வாக்களர்கள் மட்டுமே அதனை தாண்டி வர முடியும், இந்த முறை வாக்கு பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் கலர் புகைப்படபம் இடம் பெற்றுள்ளதால் வேட்பாளர்களை எளிதில் அடையாளம் காண வழிவகை செய்யப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்ததும் அனைத்து வாக்குசாவடி முகவர்களுக்கும் 17 சி என்றபடிவம் வழங்கப்படும், பெண்கள், மற்றும் வயதானவர்களுக்கு தனி வரிசை அமைக்கப்படும், ஒரே மையத்தில் 5 க்கு மேற்பட்ட வாக்கு சாவடி மையங்கள் இருந்தால் வார்டுகள் கண்டறியும் வகையில் பல வண்ணங்களில் அமைக்கப்படும், அனைத்து வசதிகள் மற்றும் துணை ராணுவ படையினரின் பாதுகாப்புடன் தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 130 வாக்குசாவடிகள் பதட்டமான வாக்கு சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளது, அதற்கு தேவையான சி.ஆர்.பி.எப் வீரர்கள் உள்ளனர்.அத்தகைய வாக்குசாவடிகள் தொடர்ந்து கண்காணிக்ப்பட்டு வருகிறது, 12 ஆயிரம் அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் 11 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட எல்லை வன பகுதியில் உள்ளது அப்பகுதியில் உள்ள சாலைகளையும் கண்காணிப்பு கேமரா மூலம் காண்காணித்து வருகிறோம். 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுத்து செல்பவர்கள் உரிய ஆவனத்துடன் எடுத்து செல்ல வேண்டும். உரிய ஆவனமின்றி எடுத்து செல்லும் பணம் தங்க நகை பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கணக்கில் வைக்கப்படும், உரிய ஆவணங்கள் காட்டி பெற்று செல்லலாம். தர்மபுரி மாவட்டத்தில் கோட்டூர் மலை, ஏரிமலை கிராமங்களுக்கு இதற்கு முன்னர் வாக்கு எந்திரங்களை கழுதைகள் மூலம் கொண்டு செல்லப்பட்டன, தற்போது டிராக்டர் மூலம் எடுத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, தேர்தல் தொடர்பான புகார்களை சி.விஜில் என்ற ஆப்பிலும், 9443947017 என்ற செல்போனில் எண்ணிலும் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.1
- மத்திய பாஜக அரசு தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சிப்பதாகக் கூறி சேலம் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எஸ்டிபிஐ சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் அப்சர் அலி பேசுகையில், "மத்திய பாஜக அரசு கல்வி மற்றும் 100 நாள் வேலைத் திட்டம் உள்ளிட்ட தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்குத் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது" எனச் சாடினார். இந்நிகழ்வில் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராகக் முழக்கமிட்டனர்1
- தேர்தல் விதிமுறை நடைமுறைக்கு வந்துள்ளது அடுத்து தர்மபுரி மாவட்டத்தில் வருவாய் துறையினர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு சீல் வைத்து மூடப்பட்டனர். வரும் ஏப்ரல் 23ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் இன்று முதல் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது. தேர்தல் ஆணையம் விதிமுறைப்படி தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஐந்து சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர். மேலும் பேருந்து நிலையம், கட்சி அலுவலகங்கள், சாலையோரம் உள்ளிட்ட பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கட்சி தலைவர்களின் சிலை மூடப்பட்டது. ஆங்காங்கே ஒட்டப்பட்ட வால் போஸ்டர்கள், சுவரொட்டிகள், பேனர்கள், விளம்பரப் பததைகள், கட்சி கொடிகள் என அனைத்தையும் நகராட்சி பேரூராட்சி அலுவலர்கள் மூலம் தூய்மை பணியாளர்களால் அகற்றப்பட்டனர்.1