Shuru
Apke Nagar Ki App…
உண்மையை உண்மை என்று பதிவு செய்து நீங்கள் நூறாண்டு காலம் வாழ வேண்டும் அண்ணா.
மா.சுடலைமணி
உண்மையை உண்மை என்று பதிவு செய்து நீங்கள் நூறாண்டு காலம் வாழ வேண்டும் அண்ணா.
More news from தமிழ்நாடு and nearby areas
- 05.01.2026_ADP_INTERNATIONAL KICK BOXING சர்வதேச அளவிலான கிக் பாக்ஸிங் போட்டிக்கு தகுதி பெற்ற தேனி மாவட்ட மாணவர்கள் சர்வதேச கிக்பாக்சிங் போட்டிக்கு தகுதி பெற்ற அரசு பள்ளிகளில் படிக்கும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு தேனி மாவட்ட கிக் பாக்ஸிங் சங்கத்தினர் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது. சர்வதேச கிக்பாக்சிங் போட்டிகள் இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் உள்ள இந்திராகாந்த உள் விளையாட்டு அரங்கில் பிப்ரவரி மாதம் 4ம்தேதி முதல் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது.இதற்காக இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் கடந்த மூன்று வருடங்களாக வீரர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன.இதில் மாவட்ட மற்றும் மாநில அளவில் வெற்றி பெற்று அதையடுத்து தேசிய அளவில் வெற்றி பெற்ற வீரர்கள் என தனித்தனியாக வெற்றி பெற்றதற்கான மதிப்பெண் புள்ளிகள் அவர்களுக்கு அளிக்கப்பட்டு அதன் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப் பட்டது.அந்த தரவரிசை பட்டியலில் சர்வதேச கிக் பாக்ஸிங் போட்டியில் பங்கேற்பதற்காக தேனி மாவட்டத்தில் இருந்து ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராமங்களைச் சார்ந்த அரசு பள்ளிகளில் படிக்கும் ஆறு மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.குறிப்பாக சீனியர் பிரிவு, ஜூனியர் பிரிவு, சப் ஜூனியர் பிரிவு என மூன்று பிரிவுகளில் யாழினி, சம்சிதா , கிருபா ஸ்ரீ , வசுமதி , ரீகாஸ்ரீ , சபரிஸ் ஆகிய ஆறு மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.அவர்களுக்கு ஆண்டிப்பட்டி அருகே உள்ள கன்னியப்பிள்ளைபட்டியில் உள்ள கிக்பாக்ஸிங் உள் அரங்க கூடத்தில் தேனி மாவட்ட கிக் பாக்ஸிங் பயிற்சியாளர் துரைமுருகன் தீவிர பயிற்சி அளித்து வருகிறார்.இந்நிலையில் சர்வதேச போட்டிகளுக்கு தேர்வான கிராமப்புற ஆறு அரசு பள்ளி மாணவர்களுக்கு தேனி மாவட்ட கிக்பாக்சிங் சங்கம் சார்பில் பாராட்டுவிழா நடைபெற்றது.இதில் தேசிய அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்ற மாணவர்களை தேனிமாவட்ட தலைவர் மகாராஜன் உள்ளிட்ட சங்கத்தினர் பாராட்டு தெரிவித்து போட்டிகளில் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தனர்.1
- *தேர்தல் ஓட்டுக்காக எங்களது வாழ்வாதாரத்தை கெடுத்து விட்டு இலவச பேருந்து சேவையை அரசு வழங்கியுள்ளது* *அரசு முறையாக மீட்டர் கட்டணத்தை நிர்ணயத்தால் ஆட்டோக்களில் பொதுமக்கள் பயணம் செய்ய தயாராக உள்ளனர்* *இந்து முன்னணி ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவர் பேட்டி* இந்து முன்னணி ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாநில பொதுகுழு கூட்டம் இன்று தேனியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது சங்கத்தின் மாநிலத் தலைவர் மணலி மனோகர் தலைமையில் நடைபெற்ற இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் இந்து முன்னணி ஆட்டோ தொழிலாளர் கலந்துகொண்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது பின்ன செய்தியாளர்களை சந்தித்து பேசிய சங்கத்தின் மாநில தலைவர் மணலி மனோகர் கூறுகையில் ஓலா, உபர், ரேப்பிடோ போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடைவிதித்து ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் ஆந்திர அரசாங்கமே பிரத்யோகமாக செயலியை உருவாக்கியுள்ளது ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 15,000 நிதி உதவி அளிக்கப் போவதாக அறிவித்துள்ளனர் அதேபோல் தமிழகத்திலும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 15,000 ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும் என்றும் இதற்காக மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தார் தொடர்ந்து 13 வருடங்களாக ஆட்டோ ஓட்டுநர்களின் மீட்டர் கட்டணம் உயர்த்தப்படாமலே உள்ளது அதனால் தமிழக அரசு ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மீட்டர் கட்டணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் மேலும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் வீடுகள் கொடுக்கப்பட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது தேர்தல் வாக்குக்காக எங்களது வாழ்வாதாரத்தை கெடுத்து விட்டு இலவச பேருந்து சேவை கொடுக்கிறது அரசு இதனால் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது மீட்டர் கட்டணம் முறையாக இருந்தால் பொதுமக்கள் ஆட்டோவில் பயணம் செய்ய தயாராக இருக்கின்றார்கள் எனவே தமிழக அரசு மீட்டர் கட்டணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என தெரிவித்தார்1
- பழனி: அரசு மருத்துவமனை வளாகத்தில் தீ விபத்து- தென்னை மரத்தில் தீ பிடித்தது எரிந்ததால் பரபரப்பு பழனி அரசு மருத்துவமனை வளாகத்தில் கிழக்குப் பகுதியில் குப்பை கழிவுகளை கொட்டி வைத்துள்ளனர். குப்பைகளில் தீரென தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்திருந்ததால் தீம் மல மலவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது. சிறிது நேரத்தில் மருத்துவமனை வளாகத்தில் இருந்த தென்னை மரத்திலும் தீ பற்றி எரியத் துவங்கியது. தென்னை மரம் தீப்பற்றி எரிவதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக பழனி தீயணைப்புத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் தீயை போராடி அணைத்தனர்.1
- வேடசந்தூர் மகாலட்சுமிபுரம் குரும்பபட்டி பூதிபுரம் சீத்தபட்டி மினுக்கம்பட்டி காந்திநகர் ஐயர் மடம் இந்த பகுதிகளில் சுமார் ஒரு மாத காலமாக பொதுமக்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் கிடைப்பதில்லை இதனால் பொதுமக்கள் குடிநீரின்றி மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்1
- புதிய குடிநீர் தொட்டி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை புதுக்கோட்டை மாவட்டம் செங்கீரையில் உள்ள சிறுமின்விசை குடிநீர் தொட்டியானது கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக பழுதடைந்து காணப்படுகிறது. இப்பகுதி மக்கள் இதனை குடிநீருக்காக பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது குடிநீருக்காக வெகுதூரம் சென்று எடுத்து வர வேண்டிய சூழல் இருப்பதாக தெரிவிக்கின்றனர். எனவே குடிநீர் தொட்டியை அகற்றம் செய்து புதிய குடிநீர் தொட்டி அமைத்துத் தருமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.1
- paree matric higher secondary school Pullambadi. contact 99424646052
- *பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து தேனி ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றம் அமைப்பினர் (AIYF)* அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் (AIYF) சார்பில் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர் இதன் ஒரு பகுதியாக தேனி ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசின் ரயில்வே துறை, வங்கி மற்றும் தபால் அலுவலகங்களில் உள்ள ஒரு லட்சம் பணியிடங்களை பறித்து தமிழக இளைஞர்களுக்கு துரோகம் செய்த ஒன்றிய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசின் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்களை கொண்டு நிரப்ப வேண்டும் என வலியுறுத்தியும் மேலும் ஒப்பந்த மற்றும் அவுட்சோர்சிங் முறையை ரத்து செய்து இளைஞர் விரோதத்திற்கு எதிராக உள்ள புதிய தொழிலாளர் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி போராட்டத்தை ஈடுபட்டனர் இதனால் தேனி ரயில் நிலைய கதவுகள் மூடப்பட்டு ரயில்வே போலீசார் மற்றும் தேனி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்1
- திண்டுக்கல் மாவட்டம் வடக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மல்வார்பட்டி, மேற்கு மாரம்பாடி, கிழக்கு மாரம்பாடி, வேடசந்தூர் கடைவீதி, வேடசந்தூர் ஆத்துமேடு அண்ணா திடல், விடுதலைபட்டி, அழகாபுரி, கோவிலூர், எரியோடு, தென்னம்பட்டி, வடமதுரை, மோளப்பாடியூர் உள்ளிட்ட பகுதிகளில் *விடியல் எங்கே* ஆவண தெருமுனை பிரச்சார கூட்டம் திண்டுக்கல் மாவட்டம் வடக்கு தலைவர் மு.கணேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் மாவட்டம் வடக்கு செயலாளர் பழனி வைரமுத்து அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்டம் வடக்கு ஊடகப்பிரிவு செயலாளர் மாரம்பாடி சந்திர சேகர், வேடசந்தூர் நகர செயலாளர் முனியப்பன் வேடசந்தூர் பேரூர்தலைவர் பாலசுப்பிரமணியம் வடமதுரை ஒன்றிய செயலாளர் வேல்முருகன் ஒன்றிய தலைவர் கணபதி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்1
- வேடசந்தூர் ஒட்டன்சத்திரம் சாலை சாலையூர் நால்ரோடு அருகில் இந்த மின்கம்பத்தில் செடி கொடியாக காணப்படுவதால் மின் கசிவு ஏற்பட்டு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த செடி கொடிகளை அகற்றி கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்1