தூத்துக்குடி மிலாது நபி சிறப்பு துவா மற்றும் அன்னதானம் தூத்துக்குடியில் உள்ள பாரம்பரியமிக்க பழமை வாய்ந்த ஜாமியா பள்ளிவாசலில் மீலாது நபி விழாவை முன்னிட்டு உலக நன்மைக்காக அதிகாலையில் சிறப்பு பிரார்த்தனை; ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்பு- பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கப்பட்டது அண்ணல் நபி முஹம்மது ரசூலுல்லாஹ் அவர்களின் பிறந்தநாளை மீலாது நபி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த ஜாமியா பள்ளிவாசலில் மிலாது நபி விழாவை முன்னிட்டு தொடர்ந்து 12 நாட்கள் மவ்லிது ஓதப்பட்டது. இதை தொடர்ந்து இன்று அதிகாலையில் அரசு காஜி முஜிபுர் ரகுமான், தலைமையில் விவசாயம் செழிக்க மழை வேண்டியும் உலக நன்மைக்காகவும் மதரஷா முதல்வர் இம்தாதுல்லா, ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல் ஆலீம், சதக்கத்துல்லா, மதரசா துணை முதல்வர் முதல்வர் அகமது ஆகியோர் சிறப்பு துவா ஓதினார்கள் இதைத்தொடர்ந்து பத்தாயிரம் பேருக்கு ஒரு டன் அளவிற்கு உணவு சமைக்கப்பட்டு அனைத்து ஜமாத்தை சேர்ந்த மக்கள் மற்றும் பல்வேறு தரப்பு பொதுமக்கள் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் என அனைவரும் உணவு வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மிலாது நபி சிறப்பு துவா மற்றும் அன்னதானம் தூத்துக்குடியில் உள்ள பாரம்பரியமிக்க பழமை வாய்ந்த ஜாமியா பள்ளிவாசலில் மீலாது நபி விழாவை முன்னிட்டு உலக நன்மைக்காக அதிகாலையில் சிறப்பு பிரார்த்தனை; ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்பு- பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கப்பட்டது அண்ணல் நபி முஹம்மது ரசூலுல்லாஹ் அவர்களின் பிறந்தநாளை மீலாது நபி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த ஜாமியா பள்ளிவாசலில் மிலாது நபி விழாவை முன்னிட்டு தொடர்ந்து 12 நாட்கள் மவ்லிது ஓதப்பட்டது. இதை தொடர்ந்து இன்று அதிகாலையில் அரசு காஜி முஜிபுர் ரகுமான், தலைமையில் விவசாயம் செழிக்க மழை வேண்டியும் உலக நன்மைக்காகவும் மதரஷா முதல்வர் இம்தாதுல்லா, ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல் ஆலீம், சதக்கத்துல்லா, மதரசா துணை முதல்வர் முதல்வர் அகமது ஆகியோர் சிறப்பு துவா ஓதினார்கள் இதைத்தொடர்ந்து பத்தாயிரம் பேருக்கு ஒரு டன் அளவிற்கு உணவு சமைக்கப்பட்டு அனைத்து ஜமாத்தை சேர்ந்த மக்கள் மற்றும் பல்வேறு தரப்பு பொதுமக்கள் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் என அனைவரும் உணவு வழங்கப்பட்டது.
- தூத்துக்குடி மிலாது நபி சிறப்பு துவா மற்றும் அன்னதானம் தூத்துக்குடியில் உள்ள பாரம்பரியமிக்க பழமை வாய்ந்த ஜாமியா பள்ளிவாசலில் மீலாது நபி விழாவை முன்னிட்டு உலக நன்மைக்காக அதிகாலையில் சிறப்பு பிரார்த்தனை; ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்பு- பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கப்பட்டது அண்ணல் நபி முஹம்மது ரசூலுல்லாஹ் அவர்களின் பிறந்தநாளை மீலாது நபி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த ஜாமியா பள்ளிவாசலில் மிலாது நபி விழாவை முன்னிட்டு தொடர்ந்து 12 நாட்கள் மவ்லிது ஓதப்பட்டது. இதை தொடர்ந்து இன்று அதிகாலையில் அரசு காஜி முஜிபுர் ரகுமான், தலைமையில் விவசாயம் செழிக்க மழை வேண்டியும் உலக நன்மைக்காகவும் மதரஷா முதல்வர் இம்தாதுல்லா, ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல் ஆலீம், சதக்கத்துல்லா, மதரசா துணை முதல்வர் முதல்வர் அகமது ஆகியோர் சிறப்பு துவா ஓதினார்கள் இதைத்தொடர்ந்து பத்தாயிரம் பேருக்கு ஒரு டன் அளவிற்கு உணவு சமைக்கப்பட்டு அனைத்து ஜமாத்தை சேர்ந்த மக்கள் மற்றும் பல்வேறு தரப்பு பொதுமக்கள் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் என அனைவரும் உணவு வழங்கப்பட்டது.1
- பெற்றோர்களை மதிக்காமல் செல்லும் ஒரு சில பெண்களுக்கு இது ஒரு பாடம் பெற்றோர்களை மதிக்காமல் செல்லும் ஒரு சில பெண்களுக்கு இது ஒரு பாடம் பெண் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் சட்டம் பாதுகாப்பாக உள்ளது அந்த பாதுகாப்பே சில பெண்களுக்கு வாழ்க்கையின் கேள்வி புரியும் உள்ளாக்குகிறது நான் மேஜர் என்ன வேண்டுமானாலும் முடிவு செய்வேன் என்று முடிவு செய்யும் பெண்களுக்கு இது ஒரு பாடம் இன்று பெற்றவர்கள் உற்றார் உறவினர் கூறும் அறிவுரைகள் கசப்பாக இருக்கும் அது வாழ்விற்கு உறுதுணையாக தேனாக இனிக்கும் சரியான தேர்வு செய்யாத நபர்களின் பேச்சு அந்த நேரத்தில் தேனாக இருக்கும் ஆனால் வாழ்வு கசக்கும் பெண் குழந்தைகளையும் ஆண் குழந்தைகளையும் பெற்றோர் தங்களின் குழந்தைகள் வளரும் வரை அதற்கு எந்த ஒரு குறையும் இல்லாமல் வளர்த்து வரும் போது வாலிப வயதில் உணர்ச்சி தூண்டுதலால் தவறான தேர்வு செய்யும் போது பெற்றோரின் அறிவுறுத்தல் ஆண் குழந்தைகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும் தேவையில்லாததாக தெரிகிறது வாழ்வில் முட்டி மோதி நிற்கும் போது தனது பெற்றோரின் அறிவுரைகள் அப்பொழுதுதான் புரியும் ஆனால் அந்த நேரத்தில் எல்லாம் முடிந்திருக்கும் யோசியுங்கள் பெண்களே யோசியுங்கள் அனைவருக்கும் அன்பான காலை வணக்கத்துடன் அன்னூர் அருணாச்சலம் ஆச்சாரி1
- ஓட்டப்பிடாரம் அருகே நான்கு வழி சாலையில் தவறான திசையில் சென்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழப்பு -புதியம்புத்தூர் போலீசார் விசாரணை ஓட்டப்பிடாரம் அருகே தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த சுதாகர் (40)என்பவர் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்துள்ளார்.இந்த நிலையில் தூத்துக்குடி டூ மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புதூர்பாண்டியபுரம் பாலத்தில் சுதாகர் தவறான திசையில் இருசக்கர வாகனத்தில் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிரே வந்த மாருதி ஆல்ட்டோ கார் அதிவேகமாக இருசக்கர வாகனம் மீது மோதியதில் சுதாகர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சுதாகர் பரிதாபமாக உயர்ந்தார். சம்பவம் குறித்து புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசார் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரான ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த மோகனசுந்தரம் (40 )என்பவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்1
- திருச்செந்தூர் அருகே பெருங்குளம் குளத்தில் குவியும் உள்நாட்டு பறவைகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மற்றும் வன அலுவலர். பெருங்குளம் குளத்தில் குவியும் உள்நாட்டு பறவைகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மற்றும் வன அலுவலர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கடும் வெயிலும், வறட்சியும் நிலவி வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளங்கள் தண்ணீரின்றி வறண்டு காணப்படும் நிலையில், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பெருங்குளம் குளத்தில் அதிகளவு தண்ணீர் தேங்கியுள்ளது. தாமிரபரணி ஆற்றின் மருதூர் அணைக்கட்டில் இருந்து பிரியும் கீழக்கால்வாயின் கடைசி குளமாக பெருங்குளம் அமைந்துள்ளது. சுமார் 900 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இந்த குளத்தில் தற்போது தண்ணீர் அதிகளவில் இருப்பதால், ஏராளமான உள்நாட்டு பறவைகள் குவிந்து வருகின்றன. குறிப்பாக நத்தை கொத்தி நாரை, கருப்புகோட்டான், கரண்டிவாயன், அரிவாள் மூக்கன், மஞ்சள் மூக்கு நாரை, ஜம்பு நாரை, சாம்பல் நாரை, மூக்குழிப்பான், பாம்பு தாரா, கூழைக்கடா உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் பெருங்குளத்தில் முகாமிட்டுள்ளன. இதுதவிர வெள்ளைக் கொக்கு, பெரிய கொக்கு, சாம்பல் கொக்கு உள்ளிட்ட பல்வேறு வகையான கொக்குகளும் காணப்படுகின்றன. தற்போது 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் பெருங்குளம் குளத்தில் முகாமிட்டுள்ளது. அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டம் கூட்டமாக குளத்தில் இறங்கும் பறவைகள், அங்குள்ள மீன்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களை உணவாக உட்கொண்டு வருகின்றன. இந்நிலையில் இன்றைய தினம் பெருங்குளம் குளத்தில் காணப்படும் உள்நாட்டு பறவைகளை பார்வையிட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் வருகை தந்தார். வருகை தந்த அவர் பைனாகுலர் கொண்டு குளத்தில் காணப்படும் பறவைகளை பார்வையிட்டு அங்கு நின்ற மாவட்ட வன அலுவலர் இளையராஜா மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் விவரங்கள் கேட்டறிந்தார். தொடர்ந்து பறவைகளை பாதுகாப்பது குறித்து ஆலோசனை வழங்கினார்.1
- கயத்தாறு தாலுகா தலையால் நடந்தால் குளம் கிராமத்தில் தமிழக முதல்வர் தொடங்கி வைத்த புதிய பேருந்து புதிய வழித்தடத்தில் தொடக்கம் கயத்தாறு தாலுகா தெற்கு மயிலோடை பஞ்சாயத்தை சேர்ந்த தலையால் நடந்தான்குளம் கிராமத்திற்கு திருநெல்வேலி சங்கர் நகர் கங்கைகொண்டான் பார்த்திங்களா ராஜா பெருங்குடி வழியாக தலையால் நடந்தால் கிராமத்திற்கு தமிழக முதல்வர் தொடங்கி வைத்த பஸ்களில் இந்த 9 எல் என்ற வழித்தடத்தில் இந்த புதிய பஸ்சை தொடங்கி வைக்கப்பட்டது. இந்தத் தொடக்க விழாவில் தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.இதில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இணை செயலாளர் கருப்பசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அலெக்சாண்டர், தலையால் நடந்தால் குளம் கிளைச் செயலாளர் பால்பண்ணைமுத்து, ஏ.சி.பால்முருகன்,கவிதா, கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் பேச்சியம்மாள், மற்றும் கட்சி நிர்வாகிகள் வள்ளிவேல், முத்துமாலை, பலவேசமுத்து, இமானுவேல், முத்துக்குமார், ஊர் நாட்டாண்மைகள் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.4
- நெல்லையில் போக்குவரத்து கழக ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் ஜிசிசி என்ற பெயரில் மின்சார பேருந்துகளை இயக்கும் நடவடிக்கையை கைவிட்டு விட்டு அரசு போக்குவரத்துக் கழகமே இயக்க நடவடிக்கை வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மண்டல போக்குவரத்து கழக மேலாளர் அலுவலகம் முன்பு போக்குவரத்து கழக ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் நெல்லை வண்ணாரப்பேட்டை தாமிரபரணி பணிமனை அருகே அமைந்துள்ள நெல்லை மண்டல போக்குவரத்துக் கழக மேலாளர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சம்மேளனம் சிஐடியூ சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்றோர் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காலை 10 மணி முதல் மறுநாள் காலை 10 மணி வரை 24 மணி நேரம் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் வரவு-செலவு கணக்குகளை ஆய்வு செய்து, வரவுக்கும் செலவுக்கும் இடையிலான வித்தியாசத் தொகையை அரசு வழங்க வேண்டும், GCC என்ற பெயரில் மின்சார பேருந்துகளை தனியார் மூலம் இயக்கும் நடவடிக்கையை கைவிட்டு, அரசு போக்குவரத்துக் கழகமே மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கல்வித் தகுதியின் அடிப்படையில் வாரிசுதாரர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.1
- சேர்மன் இல்ல திருமண விழா மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி சேர்மனாக உள்ள ரமேஷ் அவர்களின் இல்ல திருமண விழா கதிரேசன் கோவில் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது இந்த திருமண விழாவிற்கு முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி சிறப்புரையாற்றினார் தொடர்ந்து பல்வேறு பகுதியில் இருந்து வருகை தந்த மதிமுக மாவட்ட செயலாளர்கள் மணமக்களை வாழ்த்தினார்.1
- சிறு தொண்டு நல்லூர் ஸ்ரீ முத்துமாலை அம்மன் கோவில் கொடை விழா ஏரல் அடுத்த சிறுத்தொண்டநல்லூர் அருள்மிகு முத்துமாலைஅம்மன் கோயில் கொடை விழா சப்பரபவனி விமரிசையாக நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அடுத்து உள்ள சிறுத்தொண்டநல்லூர் அருள்மிகு முத்துமாலை அம்மன் திருக்கோயில் ஆவணி கொடை விழா சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் சிகர நிகழ்ச்சியாக அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பொன் சப்பரத்தில் நகர் வீதி ஊர்வலம் நிகழ்ச்சி நடைபெற்றது. கொடை நிகழ்ச்சியின் தொடக்கமாக காலை தீர்த்தவாரி நடைபெற்றது முளைப்பாறியிட்ட பெண்கள் தங்கள் வீடுகளில் கும்மி அடித்து பூஜை செய்தனர். மதியக்கொடை கயிறு குத்தி ஆடுதல் வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றது .இரவு சப்பரபவனியை யொட்டி வான வேடிக்கை நடைபெற்றது செண்டை மேளங்கள், நாதஸ்வரங்கள் முழங்க அம்பாள் பொன் சப்பரத்தில் சிறுத் தொண்டநல்லூர் வீதிகளில் ஊர் வலமாக வந்து பக்தருக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் தங்கள் வீடுகளில் இருந்து அம்மனை சேவித்து தேங்காய் பழம் உடைத்தனர் காலை 7 மணி அளவில் சப்பரம் கோயிலைச் சென்றடையும். நிகழ்ச்சியில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். கொடை விழா நாட்கள் முழுவதும் அன்னதானம் நடைபெற்றது1