Shuru
Apke Nagar Ki App…
பாலக்கோட்டில் சட்ட விரோத செயல்கள் நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் சந்து கடை, கஞ்சா, லாட்டரி சீட்டு, அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக பாலக்கோடு பகுதியில் 18 வார்டுகளிலும், பாலக்கோடு காவல் நிலையத்தின் பின்புறம், விற்பனை செய்து வருகிறார்கள். மேலும் தளவாய்அள்ளி புதூர், தக்காளி மார்க்கெட், மல்லாபுரம், மராண்டஹள்ளி, பகுதிகளில் விற்பனை நடைபெறுகிறது. மேலும் அருந்ததியர் காலனி, ஜக்கசமுத்திரம் சர்க்கரை ஆலை உள்ளிட்ட பகுதியில் சூதாட்டம் நடைபெறுவதாகவும் இதனை, நடவடிக்கை எடுக்க வேண்டி சமூக ஆர்வலர் பாஜக பொறுப்பாளர் சிவா, நேற்று திங்கட்கிழமை ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
Raja
பாலக்கோட்டில் சட்ட விரோத செயல்கள் நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் சந்து கடை, கஞ்சா, லாட்டரி சீட்டு, அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக பாலக்கோடு பகுதியில் 18 வார்டுகளிலும், பாலக்கோடு காவல் நிலையத்தின் பின்புறம், விற்பனை செய்து வருகிறார்கள். மேலும் தளவாய்அள்ளி புதூர், தக்காளி மார்க்கெட், மல்லாபுரம், மராண்டஹள்ளி, பகுதிகளில் விற்பனை நடைபெறுகிறது. மேலும் அருந்ததியர் காலனி, ஜக்கசமுத்திரம் சர்க்கரை ஆலை உள்ளிட்ட பகுதியில் சூதாட்டம் நடைபெறுவதாகவும் இதனை, நடவடிக்கை எடுக்க வேண்டி சமூக ஆர்வலர் பாஜக பொறுப்பாளர் சிவா, நேற்று திங்கட்கிழமை ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
More news from தமிழ்நாடு and nearby areas
- தமிழக சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் செய்தியாளர் சந்திப்பு தர்மபுரி மாவட்டத்தில் இன்று தமிழக சட்டமன்ற உறுதிமொழி ஆணைய குழுவினர் பல்வேறு பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொண்டனர் இன்று மாலையுடன் ஆய்வுகள் முடிவடைந்த நிலையில் சட்டமன்ற உறுதிமொழி ஆணையக் குழுவின் தலைவர் வேல்முருகன் எம் எல் ஏ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இதுவரை தர்மபுரி மாவட்டத்தில் 33 உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் 14 புதிய உறுதிமொழிகள் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்1
- பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட தாய் சேய் நல கட்டிடத்தை சட்டமன்ற உறுதிமொழி குழு நேரில் பார்வைட்டு ஆய்வு. தருமபுரி மாவட்டத்தில் சட்டமன்ற உறுதிமொழி குழு பல்வேறு இடங்களை ஆய்வு செய்து வருகின்றன அதன் தொடர்ச்சியாக பெண்ணாகரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்ட தாய் சேய் நல கூடுதல் கட்டிடத்தை சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் தலைமையிலான சட்டமன்ற குழுவினர் நேரடியாக சென்று ஆய்வு செய்தனர் இந்த ஆய்வில் மருத்துவமனையில் சிகிச்சை எவ்வாறு அளிக்கப்படுகின்றன மகப்பேறு தாய்மார்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பல்வேறு நோய்களுக்கான மருந்துகள் குறித்தும் பச்சிளம் குழந்தைகள் பராமரிக்கும் அறைகள் குழந்தைகள் பெற்றெடுத்த தாய்மார்கள் இடம் எவ்வாறு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன குறித்தும் பிரசவத்திற்காக வரும் கர்ப்பிணி பெண்களிடம் தலைமை மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் அரசால் வழங்கப்படும் இலவச கர்ப்பிணி பெண்கள் பெட்டகம் வழங்கப்படுகிறதா? என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டும் அங்கு வந்த கர்ப்பிணி பெண்கள் மற்றும் மகப்பேறு தாய்மார்கள் நோயாளிகளிடம் கேட்டறிந்தார். மேலும் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி அரசு தலைமை மருத்துவமனையில் சாலை வசதி வேண்டி கோரிக்கை வைத்ததையடுத்து பொதுப்பணித்துறை நிதியிலிருந்து ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியினை மதிப்பீடு செய்யப்பட்டு அனுமதி அனுமதி பெற்று தார் சாலை அமைக்கும் பணி நடைபெறும். அதேபோல் மருத்துவமனை சுற்றி சுற்றுலா அமைக்க கோரி கோரிக்கை வைத்ததை அடுத்து தேசிய சுகாதார இயக்கம் திட்டத்தின் கீழ் நிதி வந்தவுடன் சுற்று சுவர் அமைக்கப்பட்டு தருமபுரி மாவட்டத்திலேயே தனியார் மருத்துவமனைக்கு நிகராக அனைத்து வசதிகளுடனும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை சேவை செய்யும் எனவும் தெரிவித்தார்1
- தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் தருமபுரி மாவட்டம் மகளிர் திட்டம் பணியாளர்கள் சார்பில் 1 வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் தருமபுரி மாவட்ட மகளிர் திட்ட பணியாளர்கள் சார்பில் இன்று வேலை நிறுத்த போராட்டம் அறிவித்து கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தருமபுரி ஊரக வளர்ச்சி துறை சங்க மாநில தலைவர் இளங்குமரன் மற்றும் அரசு ஊழியர் சங்கத் தலைவர் திருவேங்கடம் அவர்கள் தலைமையில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள் 14 அம்ச கோரிக்கை வலியுறுத்தி கோசம் எழுப்பி வேலை நிறுத்த போராட்டம் நடத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் எங்களுடைய கோரிக்கை நிறைவேற்றா பட்சத்தில் 20.01.2026 அன்று மாநிலம் தழுவிய காத்திருப்பு உண்ணாவிரத போராட்டம் ஊரகம் மற்றும் நகர்ப்புற பணியாளர் மூலம் உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்1
- கிருஷ்ணகிரி அருகே உள்ளஹெக்பஞ்சத்தன் தர்காவில்அனைத்து சமுதாய மக்களுக்கு நலத்திட்டஉதவி வழங்கும் விழா.1
- த.வெ.க சார்பில், திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட மாபெரும் கொள்கை பரப்பு பொதுக்கூட்டம்! திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கோட்டை மூலையில், த.வெ.க.சார்பில் கிழக்கு மாவட்ட மாபெரும் கொள்கை பரப்பு பொதுக்கூட்டம் திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. வரவேற்புரை, எஸ்.வசந்த்கெவின், நைனா முகம்மது, சிறப்பு அழைப்பாளார், நட்சத்திர பேச்சாளர், மாநில ஒருங்கிணைப்பாளர் ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு அணி எஸ்.ரமேஷ் ஆகியோர் திமுக அரசின் அவலநிலையை கண்டித்து சிறப்புரையாற்றினர். திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மேனலூர் எஸ்.கே.எம் ரமேஷ் அவர்களுக்கு திருவள்ளுவர் உருவ சிலை அன்பளிப்பு வழங்கி கௌரவித்தார், கிழக்கு மாவட்ட தலைவர் உதயகுமார் அவர்களுக்கும் திருவள்ளுவர் சிலை வழங்கப்பட்டது. மற்றும் மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட சார்பு அணிகள் செய்யாறு நகர,மத்திய ஒன்றிய செயலாளர்கள் செய்யாறு, அனக்காவூர்,வெம்பாக்கம் ஒன்றியங்களிலிருந்து, வந்தவாசி நகரம் வந்தவாசி , தெள்ளார், பெரணமல்லூர் ஒன்றியங்களிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர் மேலும் தேசூர் பேரூராட்சி மழையூர் ஒன்றியம் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர் சுமார் ஆயிரம் பேருக்கு மேலாக நிகழ்வில் கலந்து கொண்டனர் அனைவருக்கும் பிஸ்கட்டுகள், மிக்சர் தண்ணீர் பாக்கெட் வழங்கப் பட்டது இறுதியில் நன்றி உரை நகர செயலாளர் ராஜேஷ். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட இணைச் செயலாளர் கார்த்திக் சிறப்பாக செய்திருந்தார்.4
- பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் பேசும்போது கரூர் துயரச் சம்பவத்திற்கு செந்தில் பாலாஜி முக்கிய காரணம் என கூறியது குறித்து கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இடம் செய்தியாளர்கள் கேட்ட போது ஏழு மணி நேரம் கால தாமதமாக வந்தது யார்? விளக்கு அணைத்தது யார்? இந்த வழக்கு சிபிஐ விசாரித்து வருவதால் விரைவில் இதற்கான விடை கிடைக்கும் என கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மாணவ, மாணவர்களுக்கான மணிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி முடிந்த பிறகு செய்தியாளரிடம் தெரிவித்தார்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- தன்னார்வலர்களை பாராட்டிய சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் தர்மபுரி ஆதி பவுண்டேஷன் சார்பாக இண்டூர் ஏரி புனரமைப்பு செய்த பணிகளை தமிழ்நாடு சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் அவர்கள் தலைமையிலும் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் அவர்களின் முன்னிலையிலும் இன்று ஏரியை பார்வையிட்டு பாராட்டுகளை தெரிவித்தனர் மற்றும் பல்வேறு ஆலோசனைகளும் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுதிமொழி குழு உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்1