Shuru
Apke Nagar Ki App…
கிருஷ்ணகிரி அருகே உள்ள மிட்டஅள்ளி ஊராட்சியில் நடைப்பெற்ற கிராம சபை கூட்டம்.
FAYAZ
கிருஷ்ணகிரி அருகே உள்ள மிட்டஅள்ளி ஊராட்சியில் நடைப்பெற்ற கிராம சபை கூட்டம்.
More news from Tamil Nadu and nearby areas
- Post by Periyasamy1
- இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக கொடியேற்றப்பட்ட ஆட்டோ சங்க ஓட்டுநர்கள். தர்மபுரி மாவட்டம் அரூர் நகரப் பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் பேருந்து நிலையம் முன்பு குடியரசு தினமான இன்று தேசிய கொடியை ஏற்றுவதற்கான நிகழ்வை நடத்தியுள்ளனர். அப்போது இந்திய வரைபடம் மற்றும் இந்திய தேசிய கொடி வர்ணத்தை கோலப்பொடி மூலம் வரைந்து இருந்தனர். இதனைத் தொடர்ந்து அரூர் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக உள்ள சக்திவேல் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர்கள் அருகே இருந்த பொதுமக்களுக்கு சாக்லேட் மற்றும் இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இந்திய நாடு குடியரசு நாடாக அறிவித்தும் 76 ஆண்டுகளுக்கு பிறகு 77வது ஆண்டாக தொடரக்கூடிய இந்த நிலையில் முதல் முறையாக ஆட்டோ ஓட்டுநர்கள் சார்பில் தேசிய கொடியை ஏற்றி வைத்து இந்த விழாவை சிறப்பித்ததற்கு நாங்கள் பெருமைப்படுவதாக ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவித்தனர்.1
- உதயந்திரம் பேரூராட்சியில் 77வது குடியரசு தின விழா கொடியை பேரூராட்சி மன்ற தலைவி பூசா ராணி ஏற்றி வைத்தார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயந்திரம் பேரூராட்சி பகுதியில் 77வது குடியரசு தின விழாவை முன்னிட்டு பேரூராட்சி மன்ற தலைவி பூசா ராணி மற்றும் இளநிலை உதவியாளர் குமார் ஆகியோர் மூவண்ண தேசிய கொடியை இயற்றினார். நகரமன்ற உறுப்பினர் செல்வராஜ் உட்பட அனைத்து கவுன்சிலர்கள் மற்றும் அனைத்து அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். ராணுவ வீரர்கள் பதத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. ஆசிரியர்கள் அரசு துறையை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் பலரும் இதில் பங்கேற்றனர். இறுதியாக அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.1
- பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று திங்கட்கிழமை வினாடிக்கு 1000 கன அடியாக நீர்வரத்து வந்து கொண்டிருந்த போதிலும் ஒரு சில இடங்களில் இன்று வறண்டு தண்ணீர் இல்லாமல் பாறைகளாக காட்சியளிக்கிறது மேலும் பொதுமக்கள் குளித்துவிட்டு விட்டு செல்லும் துணி மற்றும் கழிவுகள் குப்பைகள் சேர்ந்து குட்டைகளில் நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது எனவே பொதுமக்கள் காவிரி ஆற்றில் குப்பைகள் மற்றும் கழிவுகளை கொட்ட வேண்டாம் என சமூக ஆர்வலர்களும் அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர் தொடர்ந்து அப்பகுதியில் குப்பை தொட்டிகளும் கழிவுகள் சேகரிக்கவும் தொட்டிகள் வைத்து பராமரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்1
- இராசிபுரம் வட்டத்தில் உள்ள உடுப்பத்தான் புதூரில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இன்று ஜனவரி 26 திங்கள் கிழமை குடியரசு தின விழா தலைமை ஆசிரியர் கொடியேற்றத்துடன் கொண்டாடப்பட்டது நிகழ்வில் சேலம் மாவட்டம் சர்வதேச சட்ட உரிமை மற்றும் மனித நீதி சபை அமைப்பு சார்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு பேனா பென்சில் நோட் போன்ற உபகரண பொருட்கள் வழங்கப்பட்டு மற்றும் இனிப்புகள் வழங்கி விழாவை சிறப்பித்தார்கள் அமைப்பைச் சார்ந்த நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்4
- சேலம் மாவட்டம் கெங்கவல்லி பத்தாவது வார்டு பகுதியைச் சேர்ந்த தெற்கு பள்ளிவாசல் பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் ஒன்று சேர்ந்து பள்ளிவாசல் முன்பு குடியரசு தின விழாவை முன்னிட்டு கொடியேற்றப்பட்டு இனிப்புகள் வழங்கி இஸ்லாமியர்கள் சுதந்திரம் வாங்கி தருவதற்கு செய்த செயல்களை மாணவ மாணவிகளுக்கு எடுத்துக் கூறினார்கள்.9
- குடியரசு தினத்தை முன்னிட்டு காவல்துறை மற்றும் பத்திரிகையாளர் இடையே நட்பு ரீதியான கிரிக்கெட் போட்டி.1
- Post by Periyasamy1
- *திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற 77வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்* திருப்பத்தூர் மாவட்டத்தில் நான்காவது முறையாக ஜோலையார்பேட்டை அடுத்த பாச்சல் கிராமத்தில் அமைந்துள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இந்திய நாட்டின் 77 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதன் பின்பு சமாதான புறாவை பறக்கவிட்டும் மூவண்ணம் நிறம் அடங்கிய பலூனை பறக்க விட்டனர். பின்னர் காவல் துறையினரின் சிறப்பான அணிவகுப்பை மரியாதையை மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் சியாமளாதேவி ஆகியோர் ஏற்றுக் கொண்டனர்.. இவ்விழாவில் கமோன்டோ படையினரின் வீரதீர செயல் சாகாச நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது. பின்பு மாவட்ட சார்பில் பல்வேறு துறைகளில் பணியாற்றிய 35நபர்களுக்கு முதல்வர் விருது மற்றும் 24 நபர்களுக்கு சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசின் சார்பில் 8 துறைகளில் 97 பயனாளிகளுக்கு 1 கோடியே 13 லட்சத்து 80 ஆயிரத்து 749 ரூபாய் மதிப்பில் நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது..1