சோழவந்தான் அருகே அறுவடை செய்த நெல் தேக்கம், கொள்முதல் செய்ய கோரிக்கை சோழவந்தான் அருகே சி.புதூர் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கி கிடக்கும் 50 ஏக்கர் நிலத்தில் விளைந்த நெல்... ஒரு போக சாகுபடியில் விளைவித்த நெல்லை அரசு கொள்முதல் செய்யாமல் தேங்கிக் கிடக்கும் அவலம்.. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே சித்தாலங்குடி புதூர் கிராமத்தில் ஒருபோக சாகுபடி மூலம் சுமார் 100 ஏக்கரில் விளைவிக்கப்பட்ட நெல் மணிகள் கிராம மந்தையில் கொட்டி வைக்கப்பட்டு சுமார் பத்து நாட்களாக அரசு கொள்முதல் செய்யாமல் இருக்கிறது. மற்ற இடங்களில் இருபோக சாகுபடியில் விளையும் சூழ்நிலையில் ஒருபோகத்தில் விளைவித்த நெல்லையே அரசு கொள்முதல் செய்யாமல் மௌனம் காத்து வருவது விவசாயிகளுக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தி வருகிறது. இந்தப் பகுதியில் முல்லைப் பெரியாறு பாசனம் மூலம் சுமார் 100 ஏக்கரில் மகேந்திரா 404, கோ_ 51, ஐஆர்_64 ஆகிய நெல்மணிகள் விளைவிக்கப்பட்டு விவசாயிகள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக காத்திருக்கின்றனர் தற்போது திடீர் திடீரென மழையும் பெய்து வருகிறது தாங்கள் விளைவித்த நெல்லை பாதுகாக்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் அதிக நாட்கள் வெயிலில் இருப்பதால் எடையும் குறையும் வாய்ப்பும் உள்ளது. மேலும் ஏக்கருக்கு பல ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து மகசூல் செய்தும் கொள்முதல் செய்யாமல் அரசு இழுத்தடிப்பதால் மிகுந்த மனவேதனையில் உள்ளனர் விவசாயிகள். இது குறித்து மதுரை மாவட்ட நிர்வாகம் நேரடியாக விசாரணை செய்து சித்தாலங்குடி புதூர் நெல் கொள்முதல் நிலையத்தில் உடனடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என இந்த பகுதி விவசாயிகள் பொதுமக்கள் பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
சோழவந்தான் அருகே அறுவடை செய்த நெல் தேக்கம், கொள்முதல் செய்ய கோரிக்கை சோழவந்தான் அருகே சி.புதூர் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கி கிடக்கும் 50 ஏக்கர் நிலத்தில் விளைந்த நெல்... ஒரு போக சாகுபடியில் விளைவித்த நெல்லை அரசு கொள்முதல் செய்யாமல் தேங்கிக் கிடக்கும் அவலம்.. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே சித்தாலங்குடி புதூர் கிராமத்தில் ஒருபோக சாகுபடி மூலம் சுமார் 100 ஏக்கரில் விளைவிக்கப்பட்ட நெல் மணிகள் கிராம மந்தையில் கொட்டி வைக்கப்பட்டு சுமார் பத்து நாட்களாக அரசு கொள்முதல் செய்யாமல் இருக்கிறது. மற்ற இடங்களில் இருபோக சாகுபடியில் விளையும் சூழ்நிலையில் ஒருபோகத்தில் விளைவித்த நெல்லையே அரசு கொள்முதல் செய்யாமல் மௌனம் காத்து வருவது விவசாயிகளுக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தி வருகிறது. இந்தப் பகுதியில் முல்லைப் பெரியாறு பாசனம் மூலம் சுமார் 100 ஏக்கரில் மகேந்திரா 404, கோ_ 51, ஐஆர்_64 ஆகிய நெல்மணிகள் விளைவிக்கப்பட்டு விவசாயிகள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக காத்திருக்கின்றனர் தற்போது திடீர் திடீரென மழையும் பெய்து வருகிறது தாங்கள் விளைவித்த நெல்லை பாதுகாக்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் அதிக நாட்கள் வெயிலில் இருப்பதால் எடையும் குறையும் வாய்ப்பும் உள்ளது. மேலும் ஏக்கருக்கு பல ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து மகசூல் செய்தும் கொள்முதல் செய்யாமல் அரசு இழுத்தடிப்பதால் மிகுந்த மனவேதனையில் உள்ளனர் விவசாயிகள். இது குறித்து மதுரை மாவட்ட நிர்வாகம் நேரடியாக விசாரணை செய்து சித்தாலங்குடி புதூர் நெல் கொள்முதல் நிலையத்தில் உடனடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என இந்த பகுதி விவசாயிகள் பொதுமக்கள் பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
- சோழவந்தான் அருகே சி.புதூர் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கி கிடக்கும் 50 ஏக்கர் நிலத்தில் விளைந்த நெல்... ஒரு போக சாகுபடியில் விளைவித்த நெல்லை அரசு கொள்முதல் செய்யாமல் தேங்கிக் கிடக்கும் அவலம்.. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே சித்தாலங்குடி புதூர் கிராமத்தில் ஒருபோக சாகுபடி மூலம் சுமார் 100 ஏக்கரில் விளைவிக்கப்பட்ட நெல் மணிகள் கிராம மந்தையில் கொட்டி வைக்கப்பட்டு சுமார் பத்து நாட்களாக அரசு கொள்முதல் செய்யாமல் இருக்கிறது. மற்ற இடங்களில் இருபோக சாகுபடியில் விளையும் சூழ்நிலையில் ஒருபோகத்தில் விளைவித்த நெல்லையே அரசு கொள்முதல் செய்யாமல் மௌனம் காத்து வருவது விவசாயிகளுக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தி வருகிறது. இந்தப் பகுதியில் முல்லைப் பெரியாறு பாசனம் மூலம் சுமார் 100 ஏக்கரில் மகேந்திரா 404, கோ_ 51, ஐஆர்_64 ஆகிய நெல்மணிகள் விளைவிக்கப்பட்டு விவசாயிகள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக காத்திருக்கின்றனர் தற்போது திடீர் திடீரென மழையும் பெய்து வருகிறது தாங்கள் விளைவித்த நெல்லை பாதுகாக்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் அதிக நாட்கள் வெயிலில் இருப்பதால் எடையும் குறையும் வாய்ப்பும் உள்ளது. மேலும் ஏக்கருக்கு பல ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து மகசூல் செய்தும் கொள்முதல் செய்யாமல் அரசு இழுத்தடிப்பதால் மிகுந்த மனவேதனையில் உள்ளனர் விவசாயிகள். இது குறித்து மதுரை மாவட்ட நிர்வாகம் நேரடியாக விசாரணை செய்து சித்தாலங்குடி புதூர் நெல் கொள்முதல் நிலையத்தில் உடனடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என இந்த பகுதி விவசாயிகள் பொதுமக்கள் பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.1
- மதுரை.. மதுரையில் வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டத்தால் நெல் கொள்முதல் கடுமையாகப் பாதிப்பு. பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ்களை வருவாய்த்துறையினரிடம் மட்டுமே பெற முடியும் என்பதால் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இதனால் அறுவடை செய்த நெல் மூட்டைகளை வயல்களிலும், வீடுகளிலும், கொள்முதல் நிலையங்களிலும் குவித்து வைத்து விவசாயிகள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், பட்டா, சிட்டா, அடங்கல் நகல்களைக் கொண்டு நெல்லைக் கொள்முதல் செய்ய ஆட்சியர் நடவடிக்கை எடுக்கக் கோரி, மார்ச் 5-ஆம் தேதி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.வேல்பாண்டி, செயலாளர் எஸ்.பி.இளங்கோவன் ஆகியோர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். தேக்கமடைந்துள்ள நெல் மூட்டைகள் மழையில் நனையும் அபாயம் உள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர். அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.1
- ஜல்லிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட காமக்காபட்டி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டின் கீழ் ரூபாய் 17.25 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய அங்கன்வாடி மையத்தினை பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் இன்று திறந்து வைத்து குத்து விளக்கேற்றி புதிய கட்டிடத்தினை குழந்தைகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.1
- தேனி வடக்கு மாவட்ட திமுக சார்பில் செயற்குழு கூட்டம் மற்றும் அறிமுக கூட்டம் தேனி தனியார் விடுதியில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் திமுகவில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு திமுக நிர்வாகிகளை சந்தித்து மரியாதை செய்தார் பின் கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் முயற்சியால் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் பொருளாதாரத்தில் முன்னேறிய முதல் மாநிலமாக தமிழகம் இருக்கின்றது வருகிற சட்டமன்றத் தேர்தலில் இரண்டாவது முறையாக ஸ்டாலின் முதலமைச்சராக வருவார் என அனைத்து தரப்பு மக்களும் பேசிக் கொண்டு வருகின்றனர் என்னையும் என்னுடன் சேர்ந்தவர்களையும் தாய் உள்ளத்தோடு திமுகவில் இணைத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் வருகிற 7 ஆம் தேதி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இணைப்பு விழா நடைபெற உள்ளது இதில் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் தெரிவித்தார் இந்த நிகழ்ச்சியில் திமுக எம்.பி தங்க தமிழ்ச்செல்வன், முன்னாள் எம்.பி ஓ.பி ரவீந்திரநாத் மற்றும் திமுக நிர்வாகிகள், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்1
- Post by Sangili.v1
- Post by RAJA news1
- பழனியில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை இன்று பிறப்பு விழா இன்று நடைபெறுகிறது1
- மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அரசு பேருந்து வயலில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அரசு பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள வயல்வெளியில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. பேருந்தானது பயணிகள் இன்றி இந்த விபத்து நடைபெற்றதாலும் அதிகாலை என்பதால் அவ்வழியாக வேறு ஏதும் வேறு வாகனங்கள் வராததாலும் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது அரசு போக்குவரத்து அதிகாரிகள் முறையாக பேருந்துகளை ஆய்வு செய்து பராமரிக்க வேண்டும் மேலும் பயணிகளின் பயன்பாட்டிற்காக செல்லும் முன் ஓட்டுனர் பேருந்தில் பிரேக் ஆக்ஸிலேட்டர் கிளட்ச் போன்றவை சரியாக வேலை செய்கிறதா என ஆய்வு செய்த பின்னரே பேருந்தை பயணிகளை ஏற்றுவதற்கு எடுத்துச் செல்ல வேண்டும் அரசு போக்குவரத்து பணிமனையில் அதிகாரிகள் மெத்தனத்தால் இது போன்ற தரமற்ற பேருந்துகள் அடிக்கடி விபத்துக்குள்ளாவது தொடர்கதையாக உள்ளது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்1