logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தூத்துக்குடி முத்துக்குளி தலைமை பரதநல சங்கம் செய்யும் தவறான செயல்களை சுட்டிக்காட்டி எச்சரித்தார் தென்பாண்டியர் B. J. புல்டன் ஜெசின்

3 hrs ago
user_N balu Nbalu
N balu Nbalu
Journalist Thoothukkudi, Tuticorin•
3 hrs ago

தூத்துக்குடி முத்துக்குளி தலைமை பரதநல சங்கம் செய்யும் தவறான செயல்களை சுட்டிக்காட்டி எச்சரித்தார் தென்பாண்டியர் B. J. புல்டன் ஜெசின்

More news from Tuticorin and nearby areas
  • தூத்துக்குடி முத்துக்குளி தலைமை பரதநல சங்கம் செய்யும் தவறான செயல்களை சுட்டிக்காட்டி எச்சரித்தார் தென்பாண்டியர் B. J. புல்டன் ஜெசின்
    1
    தூத்துக்குடி முத்துக்குளி தலைமை பரதநல சங்கம் செய்யும் தவறான செயல்களை சுட்டிக்காட்டி எச்சரித்தார் தென்பாண்டியர் 
B. J. புல்டன் ஜெசின்
    user_N balu Nbalu
    N balu Nbalu
    Journalist Thoothukkudi, Tuticorin•
    3 hrs ago
  • தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அனல்மின் நிலைய விரிவாக்கத்திற்காக நில எடுப்பு வகையில் -பாதிக்கப்பட்ட நில உடமைதாரர்களுக்கு தற்போதைய நில மதிப்பு படி உரிய நிவாரணத்தொகை வழங்கிட கோரி (19-2-2026) வியாழக்கிழமை அன்று உடன்குடி, காலங்குடியிருப்பு, மானாடுதண்டுபத்து ஆகிய உடன்குடி அனல்மின் நிலைய வருவாய் கிராமங்களில் உள்ள சுமார் 1500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. மேற்கண்ட நிலங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையினை 2012 - ஆம் ஆண்டின் நில மதிப்பு படி வழங்கப்பட உள்ளது. இதன்படி 1 ஹெக்டேர் (2.5 ஏக்கர்) நிலத்திற்கு ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை தான் வழங்கப்பட உள்ளது. ஆனால் தற்போது உடன்குடி வருவாய் கிராமத்தில் 1 செண்ட் நிலமே ரூ.8 லட்சம் அளவிற்கு வெகுவாக உயர்ந்திருப்பதால் இது நில உடமைதாரர்களை வஞ்சிக்கும் செயலாகும் எனவே அனல்மின் நிலைய விரிவாக்கத்திற்கு கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு குறைந்த பட்சம் ஒரு ஏக்கருக்கு ரூ.50 லட்சம் அல்லது நிலத்திற்கு நிகரான நில மாகவோ வழங்கிட ஆவன செய்யுமாறு வேண்டுகிறோம் என்று உடன்குடி, காலங்குடியிருப்பு, மானாடுதண்டுபத்து, பகுதிகளை சேர்ந்த பாதிக்கப்படும் நில உடமைதாரர்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.
    1
    தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அனல்மின் நிலைய விரிவாக்கத்திற்காக நில எடுப்பு வகையில் -பாதிக்கப்பட்ட  நில உடமைதாரர்களுக்கு தற்போதைய நில மதிப்பு படி உரிய நிவாரணத்தொகை வழங்கிட கோரி (19-2-2026) வியாழக்கிழமை அன்று உடன்குடி, காலங்குடியிருப்பு, மானாடுதண்டுபத்து ஆகிய உடன்குடி அனல்மின் நிலைய வருவாய் கிராமங்களில் உள்ள சுமார் 1500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. மேற்கண்ட நிலங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையினை 2012 - ஆம் ஆண்டின் நில மதிப்பு படி வழங்கப்பட உள்ளது. இதன்படி 1 ஹெக்டேர் (2.5 ஏக்கர்) நிலத்திற்கு ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை தான் வழங்கப்பட உள்ளது. ஆனால் தற்போது உடன்குடி வருவாய் கிராமத்தில் 1 செண்ட் நிலமே ரூ.8 லட்சம் அளவிற்கு வெகுவாக உயர்ந்திருப்பதால் இது நில உடமைதாரர்களை வஞ்சிக்கும் செயலாகும் எனவே
அனல்மின் நிலைய விரிவாக்கத்திற்கு கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு குறைந்த பட்சம் ஒரு ஏக்கருக்கு ரூ.50 லட்சம் அல்லது நிலத்திற்கு நிகரான நில மாகவோ வழங்கிட ஆவன செய்யுமாறு வேண்டுகிறோம் என்று  உடன்குடி, காலங்குடியிருப்பு, மானாடுதண்டுபத்து, பகுதிகளை சேர்ந்த பாதிக்கப்படும் நில உடமைதாரர்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • தூத்துக்குடி:*இஸ்லாமியர்களின் புனித கடமைகளில் ஒன்றான, ரமலான் நோன்பு துவக்கம் தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசலில் புதுப்பிக்கப்பட்ட பள்ளிவாசலில் சிறப்பு தொகுதியில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்* இஸ்லாமியர்களின் முக்கிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்று ரமலான் மாதத்தில் நோன்பிருப்பது. 19ம்தேதி துவங்கி அடுத்த மாதம் 20ம்தேதி வரை அதாவது 30நாட்கள் நோன்பு கடைப்பிடிப்பார்கள். இந்த ஆண்டு ரமலான் பிறை நேற்று மாலை (18-02-26) தென்பட்டதை தொடர்ந்து 19ஆம் தேதி இன்று அதிகாலை இஸ்லாமியர்கள் நோன்பு துவங்க உள்ளனர். இதற்காக தூத்துக்குடியில் உள்ள பழமைவாய்ந்த ஜாமியா பள்ளிவாசலில் புதுப்பிக்கப்பட்ட புதிய பள்ளிவாசலை தலைமை இமாம்கள் அப்துல் அழிம், சதக்கத்துல்லா அரபிக் கல்லூரி முதல்வர் இம்தாதுல்லாஹ், முன்னாள் ஜாமியா பள்ளிவாசல் தலைவர் மீராசா ஆகியோர் திறந்து வைத்தனர்‌ இதைத் தொடர்ந்து இந்த புதிய பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு தொழுகையில் ஈடுபட்டனர் இஸ்லாமியர்கள் நோன்பு காலத்தில் காலையில், சூரிய உதயத்துக்கு முன்பிருந்து, சூரியன் மறையும் நேரம் வரை, உணவு, தண்ணீர் எதுவும் உட்கொள்ளாமல், நோன்பு கடைப்பிடிப்பர். இந்த நாட்களில், ஒவ்வொரு நாளும், ஐந்து வேளை தொழுகை மட்டுமின்றி, இரவிலும் தராவீஹ் என்னும் சிறப்பு தொழுகை நடத்தி, பிரார்த்தனை செய்வது வழக்கம்.
    1
    தூத்துக்குடி:*இஸ்லாமியர்களின் புனித கடமைகளில் ஒன்றான, ரமலான் நோன்பு துவக்கம் தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசலில் புதுப்பிக்கப்பட்ட பள்ளிவாசலில் சிறப்பு தொகுதியில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்* 
இஸ்லாமியர்களின் முக்கிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்று ரமலான் மாதத்தில் நோன்பிருப்பது. 19ம்தேதி துவங்கி அடுத்த மாதம் 20ம்தேதி வரை அதாவது 30நாட்கள் நோன்பு கடைப்பிடிப்பார்கள். இந்த ஆண்டு ரமலான் பிறை நேற்று மாலை (18-02-26) தென்பட்டதை தொடர்ந்து 19ஆம் தேதி  இன்று அதிகாலை இஸ்லாமியர்கள் நோன்பு துவங்க உள்ளனர்.
இதற்காக  தூத்துக்குடியில் உள்ள பழமைவாய்ந்த ஜாமியா பள்ளிவாசலில் புதுப்பிக்கப்பட்ட புதிய பள்ளிவாசலை  தலைமை இமாம்கள் அப்துல் அழிம், சதக்கத்துல்லா
அரபிக் கல்லூரி முதல்வர் இம்தாதுல்லாஹ், 
முன்னாள் ஜாமியா பள்ளிவாசல் தலைவர் மீராசா ஆகியோர் திறந்து வைத்தனர்‌  இதைத் தொடர்ந்து இந்த புதிய பள்ளிவாசலில்
சிறப்பு தொழுகை நடைபெற்றது.  இந்த தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்  
இஸ்லாமியர்கள் நோன்பு காலத்தில்
காலையில், சூரிய உதயத்துக்கு முன்பிருந்து, சூரியன் மறையும் நேரம் வரை, உணவு, தண்ணீர் எதுவும் உட்கொள்ளாமல், நோன்பு கடைப்பிடிப்பர். இந்த நாட்களில், ஒவ்வொரு நாளும், ஐந்து வேளை தொழுகை மட்டுமின்றி, இரவிலும் தராவீஹ் என்னும் சிறப்பு தொழுகை நடத்தி, பிரார்த்தனை செய்வது வழக்கம்.
    user_Jaya Studio
    Jaya Studio
    தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    8 hrs ago
  • ஆறுகாணி அருகே காட்டு தீ! ஆறுகாணி அருகே சூரவகாணி, கமியூனிட்முக் பகுதியில் கடும் வெயில் காரணமாக காட்டு தீ பிடித்துள்ளது. தீ மளமளவென எரிந்து கீழ் குடியிருப்பை நோக்கி வந்து கொண்டிருப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் தீயணைப்பு துறையினர் மற்றும் கேரளா காவல்துறையினர் சம்பவ இடத்தில் வந்துள்ளனர். பாறையில் ஏற்ப்பட்டுள்ள கடும் வெப்பம் காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம்!
    1
    ஆறுகாணி அருகே காட்டு தீ!
ஆறுகாணி அருகே சூரவகாணி, கமியூனிட்முக்  பகுதியில் கடும் வெயில் காரணமாக காட்டு தீ பிடித்துள்ளது. தீ மளமளவென எரிந்து கீழ் குடியிருப்பை நோக்கி வந்து கொண்டிருப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மேலும் தீயணைப்பு துறையினர் மற்றும் கேரளா காவல்துறையினர் சம்பவ இடத்தில் வந்துள்ளனர்.
பாறையில் ஏற்ப்பட்டுள்ள கடும் வெப்பம் காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம்!
    user_Arukani Members South
    Arukani Members South
    Photographer Vilavancode, Kanniyakumari•
    6 hrs ago
  • மதுரை மீனாட்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஆதரவாக மாணவிகள் போராட்டம் தீவிரம் கால் நூற்றாண்டுக்கும் மேலாக வஞ்சிக்கப்படும் விரிவுரையாளர்கள். மதுரை, பிப்.19– மதுரை மீனாட்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் கௌரவ (தொகுப்பூதிய) விரிவுரையாளர்கள் கடந்த 11 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெண் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். UGC நிர்ணயித்த Rs.57,800 கௌரவ விரிவுரையாளர்களுக்கு வழங்க வேண்டும். அனைத்து அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கும் 12 மாத சம்பளம் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற கௌரவ விரிவுரையாளர்களுக்கு ரூ. 25 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும். அனைத்து அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கும் பிஎ ப் மற்றும் இபிஎப் வழங்க வேண்டும் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் கோரி அவர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், விரிவுரையாளர்களுக்கு ஆதரவாக இந்திய மாணவர் சங்கம் சார்பில் கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவிகளின் ஆதரவு போராட்டத்தில் பங்கேற்ற மாணவி அகிலா கூறியதாவது: “எங்களின் கல்வியே பாதிக்கப்படுகிறது. ஆனால் இது ஆசிரியர்களுக்கான போராட்டம் மட்டுமல்ல; எங்கள் எதிர்காலத்திற்கான போராட்டம். இரண்டாம் பருவ மாணவிகளுக்கு முறையான வகுப்பறைகள் கூட இல்லை. மரத்தடியில் அமர்ந்து பாடம் கேட்கும் நிலை உள்ளது. ஆசிரியர்கள் போராடும் வரை நாங்களும் அவர்களுடன் இருப்போம்,” என்றார். மற்றொரு மாணவி விக்னேஷ்வரி கூறுகையில், “எங்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் உயர்கல்வி பெற்றவர்கள். போட்டித் தேர்வுகளுக்கும், தனிப்பட்ட பிரச்சினைகளுக்கும் துணை நிற்கும் அவர்கள் உரிய ஊதியம் பெற வேண்டியது அவசியம். அடிப்படை வசதிகள் கூட இல்லாத சூழலில் கல்வி நடைபெறுகிறது. ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்கள் ஆதரவு தொடரும்,” என்றார். போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் அரசு விரைந்து தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் வலியுறுத்துகின்றனர். கல்லூரியில் நடைபெற்று வரும் இப் போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கம் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் ஜெ.டீலன் ஜெஸ்டின், மாவட்ட செயலாளர் சி.டேவிட் ராஜதுரை புறநகர் மாவட்ட துணை செயலாளர் அகிலா மாநில குழு உறுப்பினர் விக்னேஷ்வரி மாநகர் மாவட்ட குழு உறுப்பினர்கள் நாகமணிகண்டன், திருப்பரலாதன், கண்ணன், அமல், ஆகியோர் கலந்து கொண்டனர்.
    3
    மதுரை மீனாட்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஆதரவாக மாணவிகள் போராட்டம் தீவிரம்
கால் நூற்றாண்டுக்கும் மேலாக வஞ்சிக்கப்படும் விரிவுரையாளர்கள்.
மதுரை, பிப்.19–
மதுரை மீனாட்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் கௌரவ (தொகுப்பூதிய) விரிவுரையாளர்கள் கடந்த 11 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெண் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும்.
UGC நிர்ணயித்த Rs.57,800 கௌரவ விரிவுரையாளர்களுக்கு வழங்க வேண்டும். அனைத்து அரசு கல்லூரி
கௌரவ விரிவுரையாளர்களுக்கும் 12 மாத சம்பளம் வழங்க வேண்டும். 
ஓய்வுபெற்ற கௌரவ விரிவுரையாளர்களுக்கு ரூ. 25 லட்சம்
பணிக்கொடை வழங்க வேண்டும்.
அனைத்து அரசு கல்லூரி
கௌரவ விரிவுரையாளர்களுக்கும் பிஎ ப் மற்றும் இபிஎப் வழங்க வேண்டும் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் கோரி அவர்கள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், விரிவுரையாளர்களுக்கு ஆதரவாக இந்திய மாணவர் சங்கம் சார்பில் கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
மாணவிகளின் ஆதரவு
போராட்டத்தில் பங்கேற்ற மாணவி அகிலா கூறியதாவது:
“எங்களின் கல்வியே பாதிக்கப்படுகிறது. ஆனால் இது ஆசிரியர்களுக்கான போராட்டம் மட்டுமல்ல; எங்கள் எதிர்காலத்திற்கான போராட்டம். இரண்டாம் பருவ மாணவிகளுக்கு முறையான வகுப்பறைகள் கூட இல்லை. மரத்தடியில் அமர்ந்து பாடம் கேட்கும் நிலை உள்ளது. ஆசிரியர்கள் போராடும் வரை நாங்களும் அவர்களுடன் இருப்போம்,” என்றார்.
மற்றொரு மாணவி விக்னேஷ்வரி கூறுகையில்,
“எங்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் உயர்கல்வி பெற்றவர்கள். போட்டித் தேர்வுகளுக்கும், தனிப்பட்ட பிரச்சினைகளுக்கும் துணை நிற்கும் அவர்கள் உரிய ஊதியம் பெற வேண்டியது அவசியம். அடிப்படை வசதிகள் கூட இல்லாத சூழலில் கல்வி நடைபெறுகிறது. ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்கள் ஆதரவு தொடரும்,” என்றார்.
போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் அரசு விரைந்து தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் வலியுறுத்துகின்றனர். 
கல்லூரியில் நடைபெற்று வரும் இப் போராட்டத்தில்
இந்திய மாணவர் சங்கம் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் ஜெ.டீலன் ஜெஸ்டின், மாவட்ட செயலாளர் சி.டேவிட் ராஜதுரை புறநகர் மாவட்ட துணை செயலாளர் அகிலா மாநில குழு உறுப்பினர் விக்னேஷ்வரி மாநகர் மாவட்ட குழு உறுப்பினர்கள் நாகமணிகண்டன், திருப்பரலாதன், கண்ணன், அமல், ஆகியோர் கலந்து கொண்டனர்.
    user_Ponmaran Thekkathir Reporter
    Ponmaran Thekkathir Reporter
    மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
    3 hrs ago
  • மதுரையில் பந்தல்குடி பகுதியை சேர்ந்த ஆதிதிராவிட மக்கள் டாக்டர் சரவணனை சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவு அளித்தனர். ஐந்து ஆண்டுகளாக மக்களை ஏமாற்றிய திமுக மீது குற்றச்சாட்டு. தங்கள் கோரிக்கைகளை பொதுச் செயலாளருக்கு எடுத்துச் சென்று தீர்வு ஏற்படுத்தவும் கோரிக்கை மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட பந்தல்குடி பகுதியில் 5,000-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் வசித்து வருகின்றனர், பந்தல்குடி வாய்கால் ஓரங்களிலும், வாடகை வீடுகளிலும் வசித்து வரக்கூடிய இம்மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாகும், சமீபத்தில் திராவிட மாடல் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு இலட்சம் பேருக்கு பட்டா வழங்கிய விளம்பர நிகழ்வில் கூட இவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவில்லை, இதனையடுத்து ஏராளமான ஆதிதிராவிட மக்கள் அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணனை சந்தித்து தங்களுடைய கோரிக்கை மற்றும் கஷ்டங்களை தெரிவித்தனர், ஒவ்வொருவரின் கோரிக்கைகளை கேட்டுக் கொண்ட டாக்டர் பா.சரவணன் பந்தல்குடி பகுதி மக்களின் கோரிக்கைகளை அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார். இதனையடுத்து அம்மக்கள் திமுக எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றும், டாக்டர் சரவணனை சந்தித்து பேசியது மன நிறைவை தருவதாகவும் தெரிவித்தனர், மேலும், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.
    1
    மதுரையில் பந்தல்குடி பகுதியை சேர்ந்த ஆதிதிராவிட மக்கள் டாக்டர் சரவணனை சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவு அளித்தனர்.
ஐந்து ஆண்டுகளாக மக்களை ஏமாற்றிய திமுக மீது குற்றச்சாட்டு.
தங்கள் கோரிக்கைகளை பொதுச் செயலாளருக்கு எடுத்துச் சென்று தீர்வு ஏற்படுத்தவும் கோரிக்கை
மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட பந்தல்குடி பகுதியில் 5,000-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் வசித்து வருகின்றனர், பந்தல்குடி வாய்கால் ஓரங்களிலும், வாடகை வீடுகளிலும் வசித்து வரக்கூடிய இம்மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாகும்,
சமீபத்தில் திராவிட மாடல் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு இலட்சம் பேருக்கு பட்டா வழங்கிய விளம்பர நிகழ்வில் கூட இவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவில்லை,
இதனையடுத்து ஏராளமான ஆதிதிராவிட மக்கள் அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணனை சந்தித்து தங்களுடைய கோரிக்கை மற்றும் கஷ்டங்களை தெரிவித்தனர்,
ஒவ்வொருவரின் கோரிக்கைகளை கேட்டுக் கொண்ட டாக்டர் பா.சரவணன் பந்தல்குடி பகுதி மக்களின் கோரிக்கைகளை அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார்.
இதனையடுத்து அம்மக்கள் திமுக எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றும், டாக்டர் சரவணனை சந்தித்து பேசியது மன நிறைவை தருவதாகவும் தெரிவித்தனர்,
மேலும், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.
    user_Madhubalaji vm
    Madhubalaji vm
    Local News Reporter வாடிப்பட்டி, மதுரை, தமிழ்நாடு•
    13 hrs ago
  • தேனி நகரத்தின் நீண்டகால பிரச்சினையை தீர்த்து தர இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட செயலாளர் பெத்தாச்சி ஆசாத் தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார். தேனி நகரத்தில் நீண்ட கால பிரச்சனையும் 3000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள பிரச்சனையுமான நத்தமா வால் கரடா என்பதை தீர்த்து வைக்குமாறு பேட்டி மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
    1
    தேனி நகரத்தின் நீண்டகால பிரச்சினையை தீர்த்து தர இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை 
இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட செயலாளர் பெத்தாச்சி ஆசாத் தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார். தேனி நகரத்தில் நீண்ட கால பிரச்சனையும் 3000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள பிரச்சனையுமான நத்தமா வால் கரடா என்பதை தீர்த்து வைக்குமாறு பேட்டி மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
    user_Theni Godwin
    Theni Godwin
    பத்திரிகையாளர் தேனி, தேனி, தமிழ்நாடு•
    21 hrs ago
  • தூத்துக்குடி முத்துக்குளி தலைமை பரதநல சங்கம் செய்யும் தவறான செயல்களை சுட்டிக்காட்டி எச்சரித்தார் தென்பாண்டியர் B. J. புல்டன் ஜெசின்
    1
    தூத்துக்குடி முத்துக்குளி தலைமை பரதநல சங்கம் செய்யும் தவறான செயல்களை சுட்டிக்காட்டி எச்சரித்தார் தென்பாண்டியர் 
B. J. புல்டன் ஜெசின்
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    6 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.