தருமபுரி அரசு கலைக்கல்லூரி கலையரங்கத்தில் உங்க கனவ சொல்லுங்க என்ற திட்ட துவக்க விழா கலெக்டர் சதீஷ் பகைபேசி இணைப்புகளை வழங்கினார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், பாடியநல்லூரில் தமிழ்நாடு அரசின் "உங்க கனவ சொல்லுங்க " என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, நேற்று தருமபுரி அரசு கலைக்கல்லூரி கலையரங்கத்தில் உங்க கனவ சொல்லுங்க என்ற புதிய திட்ட துவக்க விழா நிகழ்ச்சி காணொலி காட்சி வாயிலாக ஒளிபரப்பபட்டதை தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (09.01.2026) கலந்து கொண்டு, பார்வையிட்டு, தன்னார்வலர்களுக்கு தொப்பி மற்றும் கைபேசி இணைப்புகளை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சிக்கு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி அவர்கள் முன்னிலை வகித்தார். இத்திட்டத்தில் 1079 தன்னார்வலர்களை கொண்டு தருமபுரி மாவட்டத்தில் உள்ள 4,60,673 குடும்பங்களை சார்ந்த உறுப்பினர்களை நேரில் சந்தித்து 30 நாட்களில் நமது மாநிலத்தில் செயல்படுத்தப்படும் சுமார் 65 திட்டங்களின் செயல்பாடுகள்/பயன்கள் மற்றும் அத்திட்டங்களின் பின் மதிப்பீடுகள் தொடர்பாகவும், மேலும் குடும்ப உறுப்பினர்களின் முக்கிய 3 கனவுகளை கணக்கெடுப்பின் மூலம் கண்டறிந்து 2030 ஆம் ஆண்டிற்குள் நிறைவேற்றும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஸ்வரன், தருமபுரி நகர மன்ற தலைவர் திருமதி.லட்சுமி நாட்டான் மாது, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.கவிதா, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.காயத்ரி, மகளிர் திட்ட இயக்குநர் திருமதி.அ.லலிதா, மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் இந்நாள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
தருமபுரி அரசு கலைக்கல்லூரி கலையரங்கத்தில் உங்க கனவ சொல்லுங்க என்ற திட்ட துவக்க விழா கலெக்டர் சதீஷ் பகைபேசி இணைப்புகளை வழங்கினார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், பாடியநல்லூரில் தமிழ்நாடு அரசின் "உங்க கனவ சொல்லுங்க " என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, நேற்று தருமபுரி அரசு கலைக்கல்லூரி கலையரங்கத்தில் உங்க கனவ சொல்லுங்க என்ற புதிய திட்ட துவக்க விழா நிகழ்ச்சி காணொலி காட்சி வாயிலாக ஒளிபரப்பபட்டதை தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (09.01.2026) கலந்து கொண்டு, பார்வையிட்டு, தன்னார்வலர்களுக்கு தொப்பி மற்றும் கைபேசி இணைப்புகளை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சிக்கு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி அவர்கள் முன்னிலை வகித்தார். இத்திட்டத்தில் 1079 தன்னார்வலர்களை கொண்டு தருமபுரி மாவட்டத்தில் உள்ள 4,60,673 குடும்பங்களை சார்ந்த உறுப்பினர்களை நேரில் சந்தித்து 30 நாட்களில் நமது மாநிலத்தில் செயல்படுத்தப்படும் சுமார் 65 திட்டங்களின் செயல்பாடுகள்/பயன்கள் மற்றும் அத்திட்டங்களின் பின் மதிப்பீடுகள் தொடர்பாகவும், மேலும் குடும்ப உறுப்பினர்களின் முக்கிய 3 கனவுகளை கணக்கெடுப்பின் மூலம் கண்டறிந்து 2030 ஆம் ஆண்டிற்குள் நிறைவேற்றும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஸ்வரன், தருமபுரி நகர மன்ற தலைவர் திருமதி.லட்சுமி நாட்டான் மாது, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.கவிதா, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.காயத்ரி, மகளிர் திட்ட இயக்குநர் திருமதி.அ.லலிதா, மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் இந்நாள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- ஜனநாயகன் படம் வெளியிடாதது பாஜகவுக்கு நஷ்டம், திமுகவுக்குத்தான் லாபம்-விஜய் தரப்பினர் யாரும் பேசாமல் இருப்பதால், காணவில்லை அறிவிப்புத்தான் கொடுக்க வேண்டும் என மொரப்பூரில் பாஜக நிர்வாகி நடிகை கஸ்தூரி பேட்டி.1
- ஜனநாயகன் படம் வெளியிடாதது பாஜகவுக்கு நஷ்டம், திமுகவுக்குத்தான் லாபம்-விஜய் தரப்பினர் யாரும் பேசாமல் இருப்பதால், காணவில்லை அறிவிப்புத்தான் கொடுக்க வேண்டும் என மொரப்பூரில் பாஜக நிர்வாகி நடிகை கஸ்தூரி பேட்டி. தருமபுரி மாவட்டம் அரூர் பாஜக சார்பில் மோடி பொங்கல் மொரப்பூரில் நடைபெற்றது. இந்த பொங்கல் விழாவில் பாஜகவின் கலை கலாச்சார பிரிவு மாநில செயலாளர் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபட்டார். இந்த பொங்கல் விழாவிற்கு வந்த நடிகை கஸ்தூரியை பாஜகவினர் மாட்டு வண்டியில் அழைத்து வந்தனர். மேலும் பொங்கல் விழாவில் நடைபெற்ற வள்ளி கும்மி ஆட்டத்தில் நடிகை கஸ்தூரி குழுவினரோடு இணைந்து கும்மி ஆடினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகை கஸ்தூரி, தணிக்கை குழு எந்த படத்திற்கு கட்டீப்பாடுகள் விதிக்கவில்லை. காங்கிரஸ், திமுகவினருக்கு நான் சொல்ல நினைக்கிறேன். அறநிலையத் துறையில் அரசு குறிக்கீடு, கோயில் நிர்வாகத்தில் அரசு குறுக்கீடு என தமிழ்நாட்டில் இருக்கிறதனால், மத்திய அரசும் எல்லாத் துறையிலும் தலையிடும் என்று நினைக்க வேண்டாம். மத்திய அரசில் எல்லாமே நியாயமான முறையில் நடக்கிறது. தணிக்கை துறை ஐஏஎஸ் அதிகாரி பாலமுரளி தலைமையில் நடைபெறுகிறது. அவர் ரிவைஸிங் கமிட்டிக்கு அனுப்பி இருப்பதில் யாரும் தலையிட முடியாது. திமுகவை பொறுத்தவரையில் எல்லா பிரச்சனைகளிலும் அவர்கள் நேரடியாக தலையிட மாட்டார்கள். என்னுடைய அனுபவத்தில் நான் சொல்கிறேன். ஒரு புகார் எங்கிருந்து வருகிறது என்று தெரியாது ஆனால் அதனை ஆழ்ந்து பின் தொடர்ந்தால் அதன் உண்மை தன்மையை புரிய வரும். எப்பொழுதும் திமுக வெளிப்படையாக அதில் செயல்படாது. ஜனநாயகன் படம் வெளியிடாதது, காலதாமதம் ஆவது, பாஜகவுக்கு தான் நஷ்டம். இதில் திமுகவுக்கு தான் லாபம். நீதிமன்றம் செல்வது, லிஸ்டிலே இல்லாத ஒன்று. விஜய் தரப்பினர் நீதிமன்றத்திற்கு செல்வதில் ஆராய்ந்து சென்றிருக்க வேண்டும். இதனை சென்சாரிலேயே முடித்திருந்தால், இன்று திரைப்படம் வெளியிடப்பட்டிருக்கும். நான் இதனை நினைத்து வருத்தப்படுகிறேன். ஆதங்கப்படுகிறேன். நான் விஜய்யின் ரசிகையாக வெளிநாட்டிலிருந்து எல்லா படங்களையும் முதல் நாளை பார்த்திருக்கிறேன். காவலன் படத்திற்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டபோது, அவரை பாதிக்கப்பட்டவராக சிம்பதியோடு பார்த்தோம். ஆனால் இப்போது அவர் கம்முனு (அமைதியாக) இருக்கிறார். இவரை பாதிக்கப்பட்டவராக பார்ப்பதா? இல்லை செயலிழந்தவராக பார்ப்பதா? பெராலிக்ஸ் (முடக்கு வாதம்) வந்தவர் போல இருக்கிறார். யார் இறந்தாலும் பேசுவதில்லை. 41 பேர் இறந்த பிறகு நான்கு நாள் கழித்து யோசித்து பேசுகிறார். அவர் படத்துக்கு ஒரு பிரச்சனை வந்தாலும், பேசாமல் இருக்கிறார். அங்கே டெல்லி போய் விதவிதமாக பேசியவர்கள், கூட்டத்தில் பேசியவர்கள் எல்லாம், எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. சென்சார் நீதிமன்றமானால் கூட, எதாவது தெரியனுமில்ல. காணவில்லை அறிவிப்பு தான் போடனும். இப்ப எனக்கே ஒரு சந்தேகம் வருகிறது. உங்க பிரச்சனைக்கு நீங்க சும்மா இருக்கீங்க, நாளைக்கு எந்த பிரச்சினைக்கு என்ன பண்ணுவீங்க. உங்களுக்காக, உங்க பிரச்சனைக்காக பாஜக அதிமுக தலைவர்கள் பேசுகிறார்கள். நீங்க அப்ப கூட பேசவில்லை. முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தலை மென் வைத்து புதிய திட்டங்களை அறிவித்து வருகிறார். கடந்த ஒரு மாதமாக தமிழ்நாட்டில் போராட்டமாகவே இருக்கிறது. அரசு ஆசிரியர்கள், செவிலியர்கள் என எல்லோரும் போராடி வருகின்றனர். செவிலியர்களுக்கு ஒரு சப்பை கட்டு செய்து, 500 ஆர்டர் மட்டும் கொடுத்துள்ளனர். இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. ஜாக்டோ ஜியோ ஆறாம் தேதி போராட்டத்தை சரி கட்டி உள்ளார்கள். ஆனால் பழைய பென்சன் திட்டத்தை கொடுக்கவில்லை. இது எப்ப திரும்பும் வெடிக்க போவது என்று தெரியவில்லை. தற்போது ஜனவரி மாதம் பிறந்ததிலிருந்து பத்து லட்சம் மடிக்கணினி, மகளிர் உதவி தொகை என பல திட்டங்களை கொடுத்து வருகிறார் முதலமைச்சர். 404 வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக சொல்கிறார்கள். 99 வாக்குறுதிகள் நிறைவேற்றியதாக ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். அங்கே கணக்கில் வீக் என நினைக்கிறேன். ஏனென்றால் நான் 504 வாக்குறுதியில் 99 சதவீதம் என்றால், ஏறத்தாழ 499 வாக்குறுதிகள். இது நூறு வாக்குறுதிகளை கூட நிறைவேற்றி இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. 404 வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை என்பதை தான், நிறைவேற்றியதாக மாற்றி சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன். நானும் தேடித்தேடி பார்க்கிறேன் என கஸ்தூரி தெரிவித்தார்.1
- ஒகேனக்கல் ஆற்றில் நீர் வரத்து சரிவு தர்மபுரி மவட்டம் பென்னாகரம் கூத்தப்பாடி ஊராட்சியில் அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில தினங்களாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பொழியும் பருவமழையின் அளவைப் பொறுத்து நீர்வரத்து அதிகரிப்பதும் சரிவதுமாக காணப்படுகிறது. இந்நிலையில், நேற்று 1200 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று (ஜன.10) சனிக்கிழமை காலை நிலவரப்படி வினாடிக்கு 700 கனஅடியாக குறைந்துள்ளது, என மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.1
- கிருஷ்ணகிரி, எழும்பி பிரகாசி மிஷனரி பேராயம் மற்றும் நியு ஆங்கிலிக்கன் சினாட் அமைப்பின் தந்தை பேராயர் ஜெயசிங் செய்தியாளர்களிடம் சந்திப்பு.1
- ஊத்தங்கரை அருகே வீட்டுமனை பட்டா கிராம கணக்கில் பதிவேற்றம் செய்யாததை கண்டித்து காத்திருப்பு போராட்டம். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாலமரத்துப்பட்டி தரப்பு ஓலைப்பட்டி கூட்ரோட்டில் சுமார் 65க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு கடந்த 2012மே ஆண்டு வீட்டு மனை பட்டா வழங்கியும் அதனை கிராம அடங்கல் பதிவேட்டில் பதிவு செய்யாததை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர் ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களுக்கு பட்டா வழங்கியும் இதுவரையிலும் தமிழக அரசு அதனை கிராம கணக்கில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கூறி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர், ஊத்தங்கரை வருவாய் வட்டாட்சியர், மற்றும் வருவாய் ஜமாபதி முகம், உங்களுடன் ஸ்டாலின், உங்களுடன் முதல்வர் உள்ளிட்ட திட்டங்களில் நேரடியாக பொதுமக்கள் பல்வேறு மனுக்களை கொடுத்தும் இதுவரையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் ஆளும் திமுக அரசு எடுக்கவில்லை. பட்டா வைத்துள்ள வீடுகளையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி இடித்து அகற்றும் வேலையிலும் வருவாய்த்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனை கண்டித்து இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுமக்கள் ஒன்று திரண்டு உடனடியாக தமிழக அரசால் வழங்கப்பட்ட அனைத்து பட்டாக்களையும் கிராம கணக்கில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கூறி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வருவாய்த்துறையினர் வீடுகளை இடித்து அகற்றப்பட்ட இடத்தில் வேலி அமைத்துள்ளனர், அந்த வேலியை அத்துமீறி உடைத்து அந்த பகுதி மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்றும் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுப்போம் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர் எனவே தமிழக அரசு உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பட்டாவினை கிராம கணக்கில் பதிவேற்றம் செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- தைப்பொங்கல் பண்டிகை முன்னிட்டு சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் வார சந்தையில் 8 கோடி ரூபாய்க்கு ஆடு விற்பனை. சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கொங்கணாபுரம் பேரூராட்சி சார்பாக வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இவ்வாறு சந்தையில் சேலம்,நாமக்கல்,தர்மபுரி சுற்றுவட்டார மாவட்டங்களிலேயே பெரிய ஆட்டுச் சந்தை கூடுகிறது சேலம்,நாமக்கல்,ஈரோடு,கரூர்,தர்மபுரி,கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். மேலும் எடப்பாடி,கொங்கணாபுரம்,சின்னப்பம்பட்டி,சங்ககிரி,ஆட்டையாம்பட்டி உட்பட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் வளர்க்க ஆடுகளைக் கொண்டுவந்து விற்பனை செய்தும் வளர்ப்பதற்காக ஆடுகளை வாங்கி செல்கின்றனர். கொங்கணாபுரம் வாரச் சந்தைக்கு சுமார் 20000 ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.20000 ஆடுகள் கொண்டு வந்திருந்த நிலையில் 18000 ஆடுகள் இன்று விற்பனையானது.சராசரியாக சந்தையில் 10 கிலோ எடையுள்ள செம்மறி ஆடு, வெள்ளாடு ரூபாய் 6,800 முதல் 8,000 வரையும், 20 கிலோ எடை உள்ள செம்மறி ஆடு, வெள்ளாட்டு கிடாய்கள் ரூபாய் 12,600 முதல் 16,500 வரை விலைபோனது . அதேபோல 30 கிலோ எடையுள்ள செம்மறி ஆடு, வெள்ளாட்டு கிடாய் ரூபாய் 18 ஆயிரம் முதல் ரூபாய் 26 ஆயிரம் வரை விற்பனையானது. இன்று மட்டும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கொங்கணாபுரம் வாரச்சந்தையில் சுமார் 8 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது.இதனால் ஆடு வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்...1
- ஆத்தூர் உழவர் சந்தையில் விவசாயிகள் உள்ளிறுப்பு போராட்டம்.7
- தருமபுரி மாவட்டம் அரூர் பாஜக சார்பில் மோடி பொங்கல் மொரப்பூரில் நடைபெற்றது. இந்த பொங்கல் விழாவில் பாஜகவின் கலை கலாச்சார பிரிவு மாநில செயலாளர் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபட்டார். இந்த பொங்கல் விழாவிற்கு வந்த நடிகை கஸ்தூரியை பாஜகவினர் மாட்டு வண்டியில் அழைத்து வந்தனர். மேலும் பொங்கல் விழாவில் நடைபெற்ற வள்ளி கும்மி ஆட்டத்தில் நடிகை கஸ்தூரி குழுவினரோடு இணைந்து கும்மி ஆடினார்.1