Shuru
Apke Nagar Ki App…
சீலை பிள்ளையார் புத்தூர் காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூர் அருகே உள்ள சீலை பிள்ளையார் புதூர் காவேரி ஆற்றில் இன்று விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது காட்டுப்புத்தூர் ஸ்ரீராம சமுத்திரம் சின்ன பள்ளிபாளையம் நாய்யநல உள்ளிட்ட 20 மேற்பட்ட கிராமங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் இன்று மூன்றாவது நாள் காவிரி ஆற்றில் பக்தர்கள் பூஜை செய்து விநாயகர் சிலையை கரைத்தனர்
Kumar reports musiri
சீலை பிள்ளையார் புத்தூர் காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூர் அருகே உள்ள சீலை பிள்ளையார் புதூர் காவேரி ஆற்றில் இன்று விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது காட்டுப்புத்தூர் ஸ்ரீராம சமுத்திரம் சின்ன பள்ளிபாளையம் நாய்யநல உள்ளிட்ட 20 மேற்பட்ட கிராமங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் இன்று மூன்றாவது நாள் காவிரி ஆற்றில் பக்தர்கள் பூஜை செய்து விநாயகர் சிலையை கரைத்தனர்
More news from தமிழ்நாடு and nearby areas
- தொட்டியத்தில் முசிறி எம்எல்ஏ விக்னேஷ் தொகுதி முழுவதும் பல்வேறு திட்ட பணிகள் கொண்டு வருவதாக தெரிவித்தார் திருச்சி மாவட்டம் தொட்டியம் வழக்கறிஞர்கள் சங்க முப்பெரும் விழாவில் முசிறி எம்எல்ஏ விக்னேஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் எம்எல்ஏ விக்னேஷ் பேசுகையில் புதிய நீதிமன்ற கட்டிடம் மற்றும் முசிறி தொகுதி முழுவதும் பல்வேறு திட்ட பணிகளை கொண்டு வந்து சேர்ப்பது கொடுத்து தீவிர ஆலோசனை செய்து உள்ளதாகவும் 5 வருடங்களில் பல்வேறு திட்ட பணிகளை செய்து முடிப்பதாகவும் தெரிவித்தனர் நிகழ்வில் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்1
- முசிறியில் கிளை நூலகத்தில் இளைஞர்கள் திறன் மேம்பாட்டு பயலரகம். முசிறியில் கிளை நூலகத்தில் இளைஞர்கள் திறன் மேம்பாட்டு பயலரங்கம், திருச்சி மாவட்டம் முசிறி கிளை நூலகத்தில் வாசகர் வட்டம் மற்றும் களம் இலக்கிய அமைப்பு இணைந்து நடத்திய இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிலரங்கம் நடைபெற்றது. பயிலரங்கத்திற்கு ரமேஷ் பாபு தலைமை தாங்கினார் பாலசுப்பிரமணியன் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மென் திறன் பயிற்றுனர் ஆர்த்தி சிகரம் தொடுகின்ற தலைப்பில் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். முன்னதாக வாசகர் வட்ட தலைவி சித்ரா அனைவரையும் வரவேற்றார். நிகழ்வில் பாலசுப்பிரமணியன்,பாலசேகர் மற்றும் கிளை நூலக வாசர் வட்டத்தைச் சேர்ந்த வர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவில் சுப்பிரமணியன் அனைவருக்கும் நன்றி கூறினார்.1
- மணப்பாறையில் இரண்டாவது நாளாக நீடித்த சாலை மறியல் நிறைவு சீட்டு நிறுவன விவகாரத்தில் வாலிபர் தற்கொலை செய்த வழக்கில் சமரசம்! திருச்சி மாவட்டம் மணப்பாறையில் சீட்டு நிறுவனப் பிரச்சனை காரணமாக விக்னேஸ்வரன் என்பவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முக்கியக் குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி முதல் நாளில் உறவினர்கள் மணப்பாறை - விராலிமலை நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், இன்று 2-வது நாளாக மீண்டும் போராட்டம் தொடர்ந்தது. போராட்டத்திற்கான காரணம்: தற்கொலைக்குக் காரணமான இரண்டு நபர்களின் பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் (FIR) சரியான முறையில் சேர்க்கப்படவில்லை எனக் கூறி, விக்னேஸ்வரனின் மனைவியும், அவருடைய குழந்தையும், உறவினர்களும் இன்று மீண்டும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். காவல்துறை விளக்கம் & முடிவு: சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வழக்கின் FIR நகலை உறவினர்களிடம் காண்பித்து, அதில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டப் பிரிவுகள் மற்றும் சேர்க்கப்பட்டுள்ள பெயர்கள் குறித்து தெளிவுபடுத்தி தீவிர பேச்சுவார்த்தை நடத்தினர். காவல்துறையின் விரிவான விளக்கத்தை ஏற்றுக்கொண்ட உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் போக்குவரத்து சீரானது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்1
- மாணிக்க விநாயகர் கோவில் 29 ம் ஆண்டு சதுர்த்தி விழா. திரளான பக்தர்கள் பங்கேற்பு. திருச்சி உறையூர் சின்ன சௌராஷ்டிரா தெருவில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாணிக்க விநாயகர் திருக்கோவிலில் 29 ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. இந்நிகழ்வை திருச்சி மாநகர் மாவட்ட பாஜக தலைவர் ஒண்டி முத்து தொடங்கி வைத்தார்.விழா கடந்த 14-ம் தேதி அன்று கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 108 சங்கு அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பாஜக ஆன்மீக கோவில் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் தினகர் மற்றும் விழா குழு செயலாளர்களான கண்ணன்,முத்துராஜர் ஆகியோர் தலைமையில், விழாக் குழுவினர் மற்றும் அப்பகுதி மக்கள் ஒருங்கிணைந்து விழாவை சிறப்பாக நடத்தினர்.விழாவின் முக்கிய நிகழ்வான தீபாராதனையைத் தொடர்ந்து அன்னதானம் நிகழ்வு நடைபெற்றது.தொடர்ந்து மாலையில் ஸ்ரீ பக்த வீர விநாயகர் விசர்ஜன ஊர்வலம் மற்றும் திருவீதி புறப்பாடு சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ மாணிக்க விநாயகரின் அருளைப் பெற்றனர்.1
- நன்செய் இடையாறு பொன்கோவில் - மூங்கில் வனச்சோலை கூட்டாத்து மூலையில் அமைந்து இருக்கும் ஸ்ரீ சங்கிலி கருப்பண்ண சுவாமி மஹா கும்பாபிஷேக விழா நன்செய் இடையாறு பொன்கோவில் - மூங்கில் வனச்சோலை கூட்டாத்து மூலையில் அமைந்து இருக்கும் ஸ்ரீ சங்கிலி கருப்பண்ண சுவாமி மஹா கும்பாபிஷேக விழா1
- கரூரில் ADMK வடக்கு பகுதி கட்சி அலுவலகம் திறப்பு விழா கரூர் மாவட்டம் அதிமுக வடக்கு பகுதி சார்பில் இன்று அலுவலகம் திறக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட முன்னாள் அமைச்சர் சின்னச்சாமி கரூர் மாவட்ட கழக செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் அதிமுக வடக்குப் பகுதி கட்சி அலுவலகம் திறப்பு விழா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர் இந்த நிகழ்ச்சியில் அருண் டெக்ஸ் தங்கவேலு என்.எஸ்.கிருஷ்ணன் வடக்கு பகுதி நிர்வாகிகள் அவைத் தலைவர் மணி வார்டு செயலாளர்கள் சரவணன்.பிரபு. சுப்பிரமணி.மகாமுனி.. வடக்கு பகுதி நிர்வாகிகள் வழக்கறிஞர் கலைராஜன் இந்தியன் கார்த்திக்.ராஜா.மகேஷ்.பெரியசாமி. கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு இனிப்புகளை வழங்கி சிறப்பித்தனர்1
- தொட்டியம் வழக்கறிஞர் சங்க விழாவில் சங்கத் தலைவர் கார்த்திக் முசிறி எம்எல்ஏ வை விக்னேஷிடம் புதிய நீதிமன்றம் கட்டிடம் கட்டி தர கோரிக்கை வைத்தார் திருச்சி மாவட்டம் தொட்டியம் வழக்கறிஞர் சங்க முப்பெரும் விழா சங்கத் தலைவர் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது விழாவில் பேசிய சங்கத் தலைவர் கார்த்தி முசிறி எம்எல்ஏ விக்னேஷிடம் நீதிமன்ற கட்டிடம் மிகவும் சேதம் அடைந்துள்ளதால் புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டி கோரிக்கை வைத்துள்ளனர் நிகழ்வில் சங்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்1
- துவரங்குறிச்சி அருகே முதியவர் வீட்டில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் உயிரிழப்பு திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்டம் அதிகாரம் அஞ்சல் சடவேலாம்பட்டி ஆண்டி(60). இவர் மனைவியுடன் வசித்து வரும் நிலையில், இறந்து போன நபரின் மனைவி சின்னம்மாள் என்பவரின் தம்பியின் மனைவி பழனியம்மாள் என்பவருக்கும் இடையில் நகை கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்துள்ளது . அது தொடர்பாக இறந்து போன நபர்,அவரது மனைவி சின்னம்மாள் மற்றும் வெள்ளையம்மாள் இவரது மருமகன் பழனிச்சாமி ஆகியோர் நகை கொடுப்பது பற்றி பேசிக்கொண்டிருந்ததாகவும் அப்போது அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும் அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின் இறந்து போன நபர் துவரங்குச்சியில் உள்ள கடைக்கு சென்று விட்டு மீண்டும் இன்று சுமார் 3.30 மணிக்கு வீட்டிற்கு வந்து வீட்டின் அருகில் நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்ததாகவும் உடனே தனியார் ஆம்புலன்ஸ் மூலம் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனை அழைத்துச் சென்று பரிசோதனை செய்து பார்த்தபோது வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர் கூறியதையடுத்து நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தனது கணவரின் இறப்பிற்கு காரணம் தெரிந்து கொள்ள வேண்டியிருப்பதால் நடவடிக்கை எடுக்க வேண்டி இறந்து போன நபர் மனைவி கொடுத்த புகார் மனுவை பெற்று நிலையத்தில் விசாரணை செய்து வருகின்றனர். இறந்த நபரது பிரேதமானது மணப்பாறை அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.1