சத்தியமங்கலத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் சத்தியமங்கலம், கொத்துக்காடு, அரியப்பம்பாளையம், இண்டியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இந்து முன்னணி சார்பிலும், பொதுமக்கள் வீடுகளிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் கலந்து கொண்டன. சிலைகள் சத்தியமங்கலம் எஸ்.ஆர்.டி. கார்னர் மேட்டுப்பாளையம் சாலையில் வரிசையாகக் கொண்டு வந்து நிறுத்தப்பட்டன. தொடர்ந்து மாலை இந்து முன்னணி சார்பில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை இந்து முன்னணி நிர்வாகி குருசாமி காவிக்கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் பெண்கள் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளுடன் முன்னே சென்றனர். தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பெரிய விநாயகர் சிலைகள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டன. சத்தியமங்கலம்-மைசூர் சாலை, கடைவீதி, வடக்குப்பேட்டை வழியாகச் சென்ற ஊர்வலம் பவானி ஆற்றைச் சென்றடைந்தது. அங்கு விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைக்கப்பட்டன. ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
சத்தியமங்கலத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் சத்தியமங்கலம், கொத்துக்காடு, அரியப்பம்பாளையம், இண்டியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இந்து முன்னணி சார்பிலும், பொதுமக்கள் வீடுகளிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் கலந்து கொண்டன. சிலைகள் சத்தியமங்கலம் எஸ்.ஆர்.டி. கார்னர் மேட்டுப்பாளையம் சாலையில் வரிசையாகக் கொண்டு வந்து நிறுத்தப்பட்டன. தொடர்ந்து மாலை இந்து முன்னணி சார்பில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை இந்து முன்னணி நிர்வாகி குருசாமி காவிக்கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் பெண்கள் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளுடன் முன்னே சென்றனர். தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பெரிய விநாயகர் சிலைகள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டன. சத்தியமங்கலம்-மைசூர் சாலை, கடைவீதி, வடக்குப்பேட்டை வழியாகச் சென்ற ஊர்வலம் பவானி ஆற்றைச் சென்றடைந்தது. அங்கு விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைக்கப்பட்டன. ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
- சத்தியமங்கலத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் சத்தியமங்கலம், கொத்துக்காடு, அரியப்பம்பாளையம், இண்டியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இந்து முன்னணி சார்பிலும், பொதுமக்கள் வீடுகளிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் கலந்து கொண்டன. சிலைகள் சத்தியமங்கலம் எஸ்.ஆர்.டி. கார்னர் மேட்டுப்பாளையம் சாலையில் வரிசையாகக் கொண்டு வந்து நிறுத்தப்பட்டன. தொடர்ந்து மாலை இந்து முன்னணி சார்பில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை இந்து முன்னணி நிர்வாகி குருசாமி காவிக்கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் பெண்கள் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளுடன் முன்னே சென்றனர். தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பெரிய விநாயகர் சிலைகள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டன. சத்தியமங்கலம்-மைசூர் சாலை, கடைவீதி, வடக்குப்பேட்டை வழியாகச் சென்ற ஊர்வலம் பவானி ஆற்றைச் சென்றடைந்தது. அங்கு விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைக்கப்பட்டன. ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.1
- இந்த மாட்டுக்கு உள்ள அறிவை பாருங்கள். எப்படி சென்றால் அந்த தண்ணீரை கடக்க முடியும் என்று தெரிந்து வைத்து உள்ளது.1
- சேலத்தில் துவங்கியது மாவீரன் மக்கள் கழகம் என்ற புதிய கட்சி! பாமகவிலிருந்து பிரிந்து சென்ற நிர்வாகிகள் ஒன்றிணைந்து, இன்று சேலத்தில் மாவீரன் மக்கள் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் இயக்கத்தை ஆரம்பித்துள்ளனர். இக்கட்சியின் தலைவராக கரூர் பாஸ்கரனும், பொது செயலாளராக தர்மபுரி சரவணன், பொருளாளர் திருச்சி லூர்துசாமி, ஆகிய நிர்வாகிகளை இன்று முறைப்படி தேர்ந்தெடுத்தனர். மேலும் கட்சியின் புதிய கொடியையும் அறிமுகம் செய்தனர், இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.1
- கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேட்பாளர் லட்சுமணன் தாக்கல் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்த லட்சுமணன் செய்தியாளர்களை சந்திக்கையில் தாராபுரம் தனித் தொகுதியில் 50 ஆண்டு காலமாக அருந்ததிர் சமுதாய மக்களுக்கு எந்தவித வாய்ப்பும் வழங்கப்படவில்லை எனவும். தற்பொழுது தவெக ஆட்சி அமைக்க ஆதரவளித்த கட்சியான கம்யூனிஸ்ட் தனது முடிவினை தன்னிச்சையாக எடுத்து தாராபுரம் இடைத்தேர்தலில் களம் காண இருப்பதாக கூறினார். மேலும் தனது வெற்றியானது அருந்ததியர் சமுதாய மக்களின் வெற்றி எனவும். தன்னை வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் தனது குரல் சட்டமன்றத்தில் மக்களுக்காக ஒலிக்கும் எனவும் கூறினார்.1
- ராசிபுரம் அருகே வீட்டின் அருகே புகுந்த 8 அடி நீள மலைப்பாம்பு – தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்பு... ராசிபுரம் அருகே வீட்டின் அருகே புகுந்த 8 அடி நீள மலைப்பாம்பு – தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்பு... ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை குள்ளாண்டிக்காடு பகுதியில் வீட்டின் அருகே புகுந்த சுமார் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை குள்ளாண்டிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கவின்குமார். கொல்லிமலை அடிவாரப் பகுதியில் வசித்து வரும் இவரது வீட்டின் அருகே மலைப்பாம்பு ஒன்று புகுந்ததாக ராசிபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள், வீட்டின் அருகே பதுங்கியிருந்த மலைப்பாம்பை பாம்பு பிடிக்கும் இடுக்கி மூலம் லாவகமாக உயிருடன் மீட்டனர். பின்னர் மீட்கப்பட்ட மலைப்பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மீட்கப்பட்ட மலைப்பாம்பு சுமார் 8 அடி நீளம் கொண்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.1
- பிரதமர் மோடியின் 76-வது பிறந்தநாள் விழா... தூய்மை பணியாளர்களுக்கு சேலை, இனிப்பு வழங்கிய பாஜகவினர்..... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சந்திரசேகரபுரம் பகுதியில், பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்தநாள் விழா பாஜக சார்பில் நடைபெற்றது. பாஜக ஒன்றிய செயலாளர் விஜய சரஸ்வதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சந்திரசேகரபுரம் ஊராட்சியில் பணியாற்றி வரும் 15-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு சேலைகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.1
- பெரியார் 148-வது பிறந்தநாள் திமுக சார்பில் கரூரில் மாலை அணிவித்து மரியாதை. கரூர்:17.09.2026 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் திருவுருவ சிலைக்கு திமுக சார்பில் கரூரில் மாலை அணிவித்து மரியாதை. பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் 146-வது பிறந்தநாளை முன்னிட்டு திராவிட கட்சிகள், திராவிட இயக்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். கரூர் மாவட்ட திமுக சார்பில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திருமாநிலையூர் பகுதியில் உள்ள தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினர்.1
- சேலம் ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் சாலையில் அமர்ந்து பொதுமக்கள் போராட்டம்! சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டி அடுத்துள்ள ராக்கிப்பட்டி பகுதியில் ஏராளமான பட்டியல் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே உள்ள சிலர் பட்டியலின மக்களை உடனடியாக வீடுகளை காலி செய்து வெளியேற வேண்டும் இல்லையென்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அப்பகுதியில் உள்ள சிலர் தங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்பதாகவும் இதற்கு மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இன்று அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆட்சியர் அலுவலக நுழைவாயில் சாலையில் அமர்ந்து பெரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய சமாதான பேச்சை தொடர்ந்து சமாதானம் அடைந்த மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்குவதற்கு ஆட்சியரிடம் சென்று முறையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர். இந்த சம்பவத்தால் ஆட்சி அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பில் ஏற்பட்டது.1