Shuru
Apke Nagar Ki App…
காஞ்சிபுரம்: நேற்று (டிச.28) மாலை 6-7 மணிவரை நடைபெற்ற "Ask Your MLA" இன்ஸ்டாகிராம் நேரலையில், காஞ்சிபுரம் எம்.எல்.ஏ எழிலரசன் தொகுதி மக்களின் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளித்தார். மக்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்த அவர், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இந்த நிகழ்வு மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது
Naga Rajan
காஞ்சிபுரம்: நேற்று (டிச.28) மாலை 6-7 மணிவரை நடைபெற்ற "Ask Your MLA" இன்ஸ்டாகிராம் நேரலையில், காஞ்சிபுரம் எம்.எல்.ஏ எழிலரசன் தொகுதி மக்களின் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளித்தார். மக்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்த அவர், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இந்த நிகழ்வு மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது
More news from Tamil Nadu and nearby areas
- ராயக்கோட்டை மேம்பாலம் மேல் பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது கர்நாடகா பேருந்து மற்றும் கார் மோதி விபத்து கிருஷ்ணகிரி ராயக்கோட்டை மேம்பாலம் பகுதியில் கர்நாடகா அரசு பேருந்து ஆதிபராசக்தி கோவிலுக்கு செல்வதற்காக பயணிகளை ஏற்றிக்கொண்டு ராயக்கோட்டை மேம்பாலம் பகுதியில் பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது கர்நாடகா அரசு பேருந்தின் பின்பக்கம் வந்த ஷிப்ட் கார் பேருந்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது இதில் காரில் பயணித்தவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் பேருந்தில் பயணம் செய்தவர்களுக்கும் எவ்வித காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபினர் இந்த விபத்து சம்பந்தமாக கிருஷ்ணகிரி தாலுகா காவல் துறையினர் கர்நாடக பேருந்து ஓட்டுனர் ரவிகாந்த் மற்றும் கார் ஓட்டுநர் திருவண்ணாமலை பகுதி சேர்ந்த சுந்தர் இரண்டு நபர்களிடம் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்1
- ஓம் நமசிவாய 🙏 https://youtube.com/@muthucreatorcom1
- 27.12.2025 நாகை மாவட்ட செய்தியாளர் மகேந்திரன் திருக்குவளையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் உழவர் நல சேவை மையங்கள் திறப்பு விழா தமிழ்நாடு வேளாண்மை- உழவர் நலத்துறை சார்பில் வேளாண் கண்காட்சி முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் தொடக்க விழா மற்றும் வேளாண் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணோளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.அதனை தொடர்ந்து நாகை மாவட்டம் திருக்குவளை வாழக்கரை சாலையிலும் , எட்டுக்குடி சாலையிலும் இரண்டு உழவர் நல சேவை மையங்கள் குத்து விளக்கேற்றி துவங்கி வைக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் வட்டார ஆத்மா திட்டக்குழு தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன் , திருக்குவளை கல்வி வளர்ச்சிக்குழு தலைவர் மலர்வண்ணன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வம், சுதா அருணகிரி, வாழக்கரை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செழியன், உழவர் நல சேவை மைய நிர்வாகிகள் ரோஸ்குமார், முரளி மற்றும் வேளாண்மை துறை அலுவலர்கள், விவசாயிகள் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.1
- தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு குருபூஜை விழா தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சீனிகடை முகத்தில் புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் கறம்பக்குடி வடக்கு தெற்கு ஒன்றிய நகரக் கழகத்தின் சார்பில் குருபூஜை விழா நடைபெற்றது. இவ்விழாவில் விஜயகாந்த் திருவுரு படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினர்.2
- கொத்தமங்கலம் அரசு பள்ளியில் நடைபெற்ற கராத்தே மாணவர்களுக்கு தகுதி பட்டை வழங்கும் விழாவில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், அதிகாலையில் கராத்தே உள்ளிட்ட உடற்பயிற்சிகள் செய்வதால் மனம் அமைதியாகவும், கோபம் இல்லாமலும் நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும் எனவும், இந்த சிறு வயதில் இருந்தே உடற்பயிற்சியில் ஈடுபடும் மாணவர்களை தொடர்ந்து இந்த பயிற்சிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.1
- வேடசந்தூர் சேனங்கோட்டை துணை மின் நிலையம் அருகில் இந்த மின்கம்பத்தில் செடி கொடிகள் மின் வயர்களில் சுற்றி கொண்டு உள்ளது இதனால் மின் கம்பத்தில் கீழே வருபவர்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த மின்கம்பங்களில் உள்ள செடி கொடிகளை அகற்றி கொடுக்க வேண்டுமென்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை.1
- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பழைய பேருந்து நிலையம் அருகே காளியம்மன் கோவில் தெருவில் ஆசாரி வின்சென்ட் ராஜ் என்பவர் வீட்டில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவியதால் வீட்டில் இருந்த பல பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.1
- பனி சீசனில் மக்கள் மகிழ்ச்சியுடன்.1
- ஆண்டிபட்டியில் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் சாலையோர ஆக்கிரமிப்புகள் ஒருதலைப்பட்சமாக அகற்றபடுவதாக பொதுமக்கள் . தனி நபர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் ஆக்கிரமிப்புகள் முறையாக அகற்றப்படவில்லை என்றும் ஒருதலைப் பட்சமாக பராபட்சமாக அகற்றப்படுவதாகவும்தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் மீது பொதுமக்கள் புகார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நகர்பகுதி தேர்வுநிலை பேரூராட்சியாக விளங்கி வருகிறது.மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள இந்த நகரில் 1லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருவதோடு இந்நகரத்தின் வழியாக செல்லும் சாலை கேரளாவை இணைக்கும் பிரதான சாலையாகவும் விளங்கி வருவதால் அரசு மற்றும் தனியார் வாகனங்களும் கனரக வாகனங்களும் ஆயிரக்கணக்கில் சென்று வருகின்றன. இந்நிலையில் நகரின் இரு புறங்களிலும் சாலையோரங்களில் பொதுமக்கள் ஆக்கிரமிப்புக்கள் செய்து பயன்படுத்தி வருவதால் 100 அடியுள்ள சாலையின் அகலம் 20 அடிகள் வரை குறைந்து அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு அவ்வப்போது உயிர்பலியும் ஏராளமானோர் படுகாயங்களும் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தனிநபர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆண்டிபட்டி தேசிய நெடுஞ்சாலைத்துறையினருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து இன்று நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் விதமாக ஆண்டிபட்டி தேசிய நெடுஞ்சாலை துறையினர் வருவாய் துறையினர் பேரூராட்சி நிர்வாகம் நிலஅளவை துறையினர் மின்துறையினர் காவல்துறையினர் ஆகியோரோடு இணைந்து ஆண்டிபட்டி பேரூராட்சி எல்லைப் பகுதியான ஜக்கம்பட்டியில் இருந்து கொண்டமநாயக்கன்பட்டி வரை ஆக்கிரப்புக்களை அகற்றும் பணியை துவக்கினர்.இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் முறையாக ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை என புகார் எழுந்துள்ளது.ஒரு தலைப்பட்சமாக பாரபட்சமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதாகவும்,பெரிய வணிக நிறுவனங்கள் உணவு விடுதிகள் ஆகியவற்றின் முன்புறம் இருக்கும் ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்படவில்லை என்றும்,சிறிய கடைகள் மற்றும் சாலையோர வியாபாரிகளின் கடைகள் ஆகியவையே ஆற்றப்படுவதாகவும் புகார் கூறும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இதுவரை நான்கு முறை ஆண்டிபட்டி நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டும் முழுமையாக ஆக்கிரமப்புக்கள் அகற்றப்படாமல் கண் துடைப்பாகவே இப்பணிகள் நடைபெற்றதாகவும்,இதனால் ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதின் நோக்கம் நிறைவேறாமல் வழக்கம்போல் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டு ள்ளதாகவும் எனவே முறையாக முழுமையாக பாரபட்சமில்லாமல் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.1