சிவகங்கையில் ரூ. 2.03 கோடி மதிப்பீட்டிலான 5 புதிய திட்டப் பணிகள்: அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அடிக்கல் நாட்டினார் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் மற்றும் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ், மொத்தம் ரூபாய் 2.03 கோடி மதிப்பீட்டிலான 5 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளுக்குக் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நேற்று அடிக்கல் நாட்டி, பணிகளைத் தொடங்கி வைத்தார். திட்ட விவரங்கள்: கீழ்க்கண்ட கிராமங்களில் புதிய சமுதாயக்கூடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது: * காரையூர் (திருப்பத்தூர் ஒன்றியம்): ரூ. 53 இலட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடம். * எருமைப்பட்டி (சிங்கம்புணரி ஒன்றியம்): ரூ. 50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடம். * சந்திரிபட்டி (எஸ்.மாம்பட்டி ஊராட்சி): ரூ. 50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடம். * ஜெயங்கொண்டநிலை: ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் ரூ. 25 இலட்சம் மதிப்பீட்டில் சிறு சமுதாயக்கூடம். * மல்லாகோட்டை: ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் ரூ. 25 இலட்சம் மதிப்பீட்டில் சிறு சமுதாயக்கூடம். அமைச்சர் ஆற்றிய உரை: நிகழ்ச்சியில் பணிகளைத் தொடங்கி வைத்துப் பேசிய அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், "தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் தமிழக அரசு அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கி வருகிறது. பொதுமக்களின் தேவைகளை அறிந்து, கோரிக்கைகளுக்கு முன்பாகவே வளர்ச்சிப் பணிகள் துரிதப்படுத்தப்படுகின்றன. திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அரசின் திட்டங்கள் மட்டுமன்றி, எனது சொந்த நிதியிலிருந்தும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் 16 பணிகள் நடைபெறவுள்ளன. இதில் அரசின் சார்பில் மூன்றில் இரண்டு பங்கும், எனது சொந்த நிதியிலிருந்து ஒரு பங்கும் வழங்கப்பட்டு இப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 'எல்லோருக்கும் எல்லாமும்' என்ற அடிப்படையில் செயல்படும் இந்த அரசுக்கு பொதுமக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு நல்க வேண்டும்," எனத் தெரிவித்தார். பங்கேற்பாளர்கள்: இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் மரு.ஜி.அரவிந்த், முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சண்முகவடிவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இராஜேந்திர குமார், குமுதம் (திருப்பத்தூர்), முனியராஜ் (சிங்கம்புணரி) மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கையில் ரூ. 2.03 கோடி மதிப்பீட்டிலான 5 புதிய திட்டப் பணிகள்: அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அடிக்கல் நாட்டினார் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் மற்றும் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ், மொத்தம் ரூபாய் 2.03 கோடி மதிப்பீட்டிலான 5 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளுக்குக் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நேற்று அடிக்கல் நாட்டி, பணிகளைத் தொடங்கி வைத்தார். திட்ட விவரங்கள்: கீழ்க்கண்ட கிராமங்களில் புதிய சமுதாயக்கூடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது: * காரையூர் (திருப்பத்தூர் ஒன்றியம்): ரூ. 53 இலட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடம். * எருமைப்பட்டி (சிங்கம்புணரி ஒன்றியம்): ரூ. 50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடம். * சந்திரிபட்டி (எஸ்.மாம்பட்டி ஊராட்சி): ரூ. 50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடம். * ஜெயங்கொண்டநிலை: ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் ரூ. 25 இலட்சம் மதிப்பீட்டில் சிறு சமுதாயக்கூடம். * மல்லாகோட்டை: ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் ரூ. 25 இலட்சம் மதிப்பீட்டில் சிறு சமுதாயக்கூடம். அமைச்சர் ஆற்றிய உரை: நிகழ்ச்சியில் பணிகளைத் தொடங்கி வைத்துப் பேசிய அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், "தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் தமிழக அரசு அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கி வருகிறது. பொதுமக்களின் தேவைகளை அறிந்து, கோரிக்கைகளுக்கு முன்பாகவே வளர்ச்சிப் பணிகள் துரிதப்படுத்தப்படுகின்றன. திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அரசின் திட்டங்கள் மட்டுமன்றி, எனது சொந்த நிதியிலிருந்தும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் 16 பணிகள் நடைபெறவுள்ளன. இதில் அரசின் சார்பில் மூன்றில் இரண்டு பங்கும், எனது சொந்த நிதியிலிருந்து ஒரு பங்கும் வழங்கப்பட்டு இப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 'எல்லோருக்கும் எல்லாமும்' என்ற அடிப்படையில் செயல்படும் இந்த அரசுக்கு பொதுமக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு நல்க வேண்டும்," எனத் தெரிவித்தார். பங்கேற்பாளர்கள்: இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் மரு.ஜி.அரவிந்த், முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சண்முகவடிவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இராஜேந்திர குமார், குமுதம் (திருப்பத்தூர்), முனியராஜ் (சிங்கம்புணரி) மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- மதுரை.. மதுரையில் வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டத்தால் நெல் கொள்முதல் கடுமையாகப் பாதிப்பு. பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ்களை வருவாய்த்துறையினரிடம் மட்டுமே பெற முடியும் என்பதால் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இதனால் அறுவடை செய்த நெல் மூட்டைகளை வயல்களிலும், வீடுகளிலும், கொள்முதல் நிலையங்களிலும் குவித்து வைத்து விவசாயிகள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், பட்டா, சிட்டா, அடங்கல் நகல்களைக் கொண்டு நெல்லைக் கொள்முதல் செய்ய ஆட்சியர் நடவடிக்கை எடுக்கக் கோரி, மார்ச் 5-ஆம் தேதி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.வேல்பாண்டி, செயலாளர் எஸ்.பி.இளங்கோவன் ஆகியோர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். தேக்கமடைந்துள்ள நெல் மூட்டைகள் மழையில் நனையும் அபாயம் உள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர். அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.1
- சோழவந்தான் அருகே சி.புதூர் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கி கிடக்கும் 50 ஏக்கர் நிலத்தில் விளைந்த நெல்... ஒரு போக சாகுபடியில் விளைவித்த நெல்லை அரசு கொள்முதல் செய்யாமல் தேங்கிக் கிடக்கும் அவலம்.. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே சித்தாலங்குடி புதூர் கிராமத்தில் ஒருபோக சாகுபடி மூலம் சுமார் 100 ஏக்கரில் விளைவிக்கப்பட்ட நெல் மணிகள் கிராம மந்தையில் கொட்டி வைக்கப்பட்டு சுமார் பத்து நாட்களாக அரசு கொள்முதல் செய்யாமல் இருக்கிறது. மற்ற இடங்களில் இருபோக சாகுபடியில் விளையும் சூழ்நிலையில் ஒருபோகத்தில் விளைவித்த நெல்லையே அரசு கொள்முதல் செய்யாமல் மௌனம் காத்து வருவது விவசாயிகளுக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தி வருகிறது. இந்தப் பகுதியில் முல்லைப் பெரியாறு பாசனம் மூலம் சுமார் 100 ஏக்கரில் மகேந்திரா 404, கோ_ 51, ஐஆர்_64 ஆகிய நெல்மணிகள் விளைவிக்கப்பட்டு விவசாயிகள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக காத்திருக்கின்றனர் தற்போது திடீர் திடீரென மழையும் பெய்து வருகிறது தாங்கள் விளைவித்த நெல்லை பாதுகாக்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் அதிக நாட்கள் வெயிலில் இருப்பதால் எடையும் குறையும் வாய்ப்பும் உள்ளது. மேலும் ஏக்கருக்கு பல ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து மகசூல் செய்தும் கொள்முதல் செய்யாமல் அரசு இழுத்தடிப்பதால் மிகுந்த மனவேதனையில் உள்ளனர் விவசாயிகள். இது குறித்து மதுரை மாவட்ட நிர்வாகம் நேரடியாக விசாரணை செய்து சித்தாலங்குடி புதூர் நெல் கொள்முதல் நிலையத்தில் உடனடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என இந்த பகுதி விவசாயிகள் பொதுமக்கள் பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.1
- 05.03.2026 வியாழக்கிழமை மஹா குரு அழுக்குசாமி அருட்பணி சார்பாக அரசு பொது மருத்துவமனை அருகில் காலையில் 175 பேருக்கு அன்னம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உதவி செய்த அனைவரும் என்றென்றும் வாழ்க! வளர்க!! உயர்க!!!1
- வேடசந்தூர் காமராஜர் பேருந்து நிலையம் இன்று4:3:2026 புதன்கிழமை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி மூலமாக திறந்து வைக்கப்பட்டது 1.19 கோடி நிதியில் இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது கழிப்பறை இன்றி கட்டப்பட்ட இந்த பேருந்து நிலையம் சில சமூக ஆர்வலர்கள் கேள்வி கேட்டதால் 20 லட்சம் மதிப்பீட்டில் தற்போது கழிப்பறை கட்டிக் கொண்டுள்ளனர் இந்த பேருந்து நிலையத்தில் முன்பு இருந்ததைப் போல் 15 க்கும் மேற்பட்ட கடைகள் இருந்தது அது தற்போது இல்லை தற்போது ஐந்து ஆறு கடைகள் மட்டுமே உள்ளது ? கட்டண கழிப்பறை மற்றும் பொதுக்களிப்பறை இரண்டு செயல்பட்டது பொதுக்களிப்பறை கட்டுமான பணி நடைபெறுகிறது? தாய்மார்கள் பாலூட்டும் அரை முன்பு இருந்தது தற்போது இல்லை? குடிதண்ணீர் வசதி முன்பு இருந்தது தற்போது இல்லை? மழை வெயில் காலங்களில் நிற்பதற்கு நிழல் கூடை போல் இருந்தது தற்போது இல்லை ? பொது மக்களின் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கத்தான் அரசு உள்ளது அதை செய்யாமல் கடமைக்காக செயல்படுவது என்பது வருத்தத்துக்குரியது .. இவன்.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி( மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் )(CPI-ML) வேடசந்தூர் ஒன்றிய குழு.1
- ஜல்லிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட காமக்காபட்டி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டின் கீழ் ரூபாய் 17.25 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய அங்கன்வாடி மையத்தினை பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் இன்று திறந்து வைத்து குத்து விளக்கேற்றி புதிய கட்டிடத்தினை குழந்தைகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.1
- தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மேகமலை ஹைவேவிஸ் மலைப்பகுதி அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் முற்றிலும் தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த இந்தப் பகுதி ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் வன பாதுகாப்பு சரணாலய பகுதியாக வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள மேகமலை, மணலாறு, இரவங்கலாறு, வென்னியாறு, உள்பட ஏழுமலை கிராமங்களில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தனியார் தேயிலைத் தோட்ட நிர்வாகத்தின் கீழ் தொழிலாளிகளாக பணிபுரிந்து வருகின்றனர். தேயிலைத் தோட்ட நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள இந்த குடியிருப்புகளில் வசிக்கும் பொது மக்கள் தங்களது வீடுகளில் பழுது ஏற்பட்டால் அதனை சரி செய்வதற்கு தளவாடப் பொருட்களை கொண்டு வருவதற்கு வனத்துறையினர் தடை விதிப்பதாகவும் அதனால் வீடுகளை சீரமைக்க முடியாமல் பெரிதும் சிரமம் அடைந்து வருவதாகவும், அதேபோல் அந்தப் பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட் உரிமையாளர்கள் தாங்கள் விளைவிக்கும் தளவாட பொருட்களை கொண்டு வருவதற்கும் பொருள்களை உற்பத்தி செய்வதற்காக கொண்டு செல்லும் மூலப் பொருட்களுக்கு வனத்துறையினர் அனுமதி மறுப்பதால் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் மேகமலை மக்களின் வாழ்வாதார உரிமையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக வனத்துறையினர் தன்னிச்சை அதிகார போக்கால் விதித்து வரும் தடைகளை அகற்ற வேண்டும் எனக் கூறி பலமுறை அரசு மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக தடை விதிக்கும் வனத்துறையினரை கண்டிப்பதாகவும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்க இருப்பதாகவும் கூறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சின்னமனூர் மார்க்கையன்கோட்டை ரவுண்டானா பகுதியில் ஒன்று கூடிய தேயிலை தோட்ட தொழிலாளர்களும் தனியார் எஸ்டேட் உரிமையாளர்களும் சாலையில் அமர்ந்து வனத்துறையினரை கண்டித்தும், மக்களின் கோரிக்கையை ஏற்காத அரசு அதிகாரிகளை கண்டித்தும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்க இருப்பதாக கூறி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தேயிலைத் தோட்ட தொழிலாளர்களும் உரிமையாளர்களும் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.1
- மதுரை : திருச்சி ரயில்வே நுழைவு வாயிலில் இந்தி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டதைக் கண்டித்து திமுகவினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அங்குள்ள இந்தி எழுத்துக்கள் உடனடியாக அகற்றப்பட்டன. இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில், அகற்றப்பட்டது இந்தி எழுத்துக்கள் மட்டுமல்ல, ஆதிக்க வெறியின் ஆணவமும்தான் எனச் சாடியுள்ளார். உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசி போலி தமிழ் பற்று காட்டுபவர்களும், அடிமைத்தனத்தின் அடையாளமாய் அவர்களுக்குத் துணை நின்று தமிழ்நாட்டுக்குத் துரோகம் இழைப்போரும் தமிழ்நாட்டு மக்களால் அகற்றப்படுவார்கள் என்றும், தில்லியின் ஆணவத்திற்குத் தமிழ்நாடு என்றைக்குமே கட்டுப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.2
- மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அரசு பேருந்து வயலில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அரசு பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள வயல்வெளியில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. பேருந்தானது பயணிகள் இன்றி இந்த விபத்து நடைபெற்றதாலும் அதிகாலை என்பதால் அவ்வழியாக வேறு ஏதும் வேறு வாகனங்கள் வராததாலும் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது அரசு போக்குவரத்து அதிகாரிகள் முறையாக பேருந்துகளை ஆய்வு செய்து பராமரிக்க வேண்டும் மேலும் பயணிகளின் பயன்பாட்டிற்காக செல்லும் முன் ஓட்டுனர் பேருந்தில் பிரேக் ஆக்ஸிலேட்டர் கிளட்ச் போன்றவை சரியாக வேலை செய்கிறதா என ஆய்வு செய்த பின்னரே பேருந்தை பயணிகளை ஏற்றுவதற்கு எடுத்துச் செல்ல வேண்டும் அரசு போக்குவரத்து பணிமனையில் அதிகாரிகள் மெத்தனத்தால் இது போன்ற தரமற்ற பேருந்துகள் அடிக்கடி விபத்துக்குள்ளாவது தொடர்கதையாக உள்ளது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்1
- தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையில் இன்று மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்சி நடைபெற்றது. பெரியகுளம் தென்கரையில் உள்ள தண்டுபாளையம் மதரஸா மண்டபத்தில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் பெரியகுளம் திமுக எம்எல்ஏ சரவணகுமார் பங்கேற்று மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று சமூக நல்லிணக்கத்தை பேணும் விதமாக இப்தார் திறந்து வைத்து நோன்பு கஞ்சி அருந்தினர். இதில் சுமார் 100.க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.1