Shuru
Apke Nagar Ki App…
ஓம் நமசிவாய 🙏 #shorts https://youtube.com/@muthucreatorcom
J.MUTHU
ஓம் நமசிவாய 🙏 #shorts https://youtube.com/@muthucreatorcom
More news from தமிழ்நாடு and nearby areas
- கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதிக்குட்பட்ட பெலாந்துறை,பொன்னேரி,கொத்தட்டை,திருவட்டத்துறை,கொடிக்கலம்,கூடலூர் ஆகிய கிராமங்களில் அமைச்சர் சி.வெ கணேசன் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.பின்னர் குறைகளை கேட்டறிந்து மனுக்களைப்பெற்றார்.இதில் கட்சியினர்,அதிகாரிகள்,பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.1
- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு2
- தேனி மாவட்டம் கம்பத்தில் முல்லைப் பெரியார் சம்பந்தமாக நடந்து வரும் முறை கேடுகளை பற்றிய கருத்துக்களை விவசாய சங்கத்தினர் எடுத்துரைக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தாங்கள் தப்பிப்பதற்கு என்று அதிகாரிகள் தவறான செய்தி பரப்புகின்றனர் எனக் குற்றச்சாட்டு. தேனி மாவட்டம் கம்பத்தில் பெரியார் வைகை பாசன விவசாய சங்கத்தின் சார்பாக முல்லைப் பெரியார் அணையில் கடந்த சில நாட்களாக நடந்துவரும் முறைகேடுகளை பற்றியும் அவற்றை சமாளிப்பதற்காக அதிகாரிகள் பொய் பிரச்சாரம் செய்வது குறித்தும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சங்கத்தின் மாநில தலைவர் மனோகரன் தலைமையிலும் ஒருங்கிணைப்பாளர் பென்னிகுக் அன்னூர் பாலசிங்கம் முன்னிலையிலும் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய பென்னிகுக் அன்வர் பாலசிங்கம் பேசுகையில் கடந்த இரண்டு மாதங்களாக முல்லைப் பெரியாறு அணையில் நடைபெற்று வரும் சிக்கல்கள் குறித்தும் அவற்றிலிருந்து தப்பிப்பதற்கு அதிகாரிகள் பரப்பி வரும் விசம்பத்தனமான பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த பத்திரிகையாளகள் சந்திப்பு நடைபெறுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முல்லைப் பெரியாறு அணையில அங்கு உள்ள தளவாடங்கள் அரசின் உத்தரவின் பேரில் எடை போடப்பட்டு ஏலத்தில் வற்க்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை 13 லாரிகளில் கொண்டு சென்று விட்டதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் மொத்தத்தில் கொண்டு சென்றது நான்கு லாரிகள் மட்டுமே ஆனால் அதிகாரிகள் 13 லாரி என்று முன்னுக்கு முன்னுக்கு பின் முரணாக பேசி வருகிறார்கள். நாங்கள் அந்த லாரியில் சம்பந்தமாக அனைத்து விவரங்களையும் ஒப்படைக்க தயாராக உள்ளோம் ஆனால் அவர்கள் 13 லாரியில் கொண்டு சென்றதற்கான உத்தரவாத்தை தர நிரூபிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினர். மேலும் முல்லைப் பெரியாறு அணையில் எப்பொழுதுமே அதிகாரிகள் அங்கு காணப்படுவதில்லை 142 அடி தண்ணீர் தேக்கும் போது அதிகாரிகள் அங்கு இருக்க வேண்டும் ஆனால் யாருமே இல்லை இவ்வாறு அதிகாரிகள் செயல்பட்ட கேரளாவில் உள்ளவர்கள் முல்லைப் பெரியானையை துச்சமாக நினைத்துவிடுவார்கள் என்று கூறினார். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் மதுரையில் உள்ள கோட்ட பொறியாளரிடம் சென்று புகார் மனுவை அளிப்போம் என்று தெரிவித்தார்.1
- ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கேக் தயாரிப்பு மும்முரம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பேக்கரி கடைகளில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கேக் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பலரது இல்லங்களில் கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்பது வழக்கம் அதன் அடிப்படையில் வண்ண வண்ண நிறங்கள் அழகிய வடிவமைப்புகளுடன் குழந்தை உருவங்கள் மற்றும் வெண்ணிலா பைனாப்பிள் ஆரஞ்சு பட்டர் ஸ்காட்ச் ஹனி சாக்லேட் பிளாக் பாரஸ்ட் வைட் ஃபாரஸ்ட் ஐஸ்கிரீம் கேக் அரை கிலோ முதல் 10 கிலோ வரையிலும் கேக்கல் தயார் நிலையில் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது இதனை வாங்க மக்கள் வழக்கத்திற்கு மாறாக ஆர்வம் காட்டி வருகின்றனர்1
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பூசணி விலை கடும் வீழ்ச்சி: விவசாயிகள் கவலை தைப்பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட சுற்றுப்புற கிராமங்களில் பூசணிக்காய் விளைச்சலும் விலையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இந்த காலகட்டத்தில் பூசணிக்காய்களின் வரத்து அதிகரித்து, நல்ல விலை கிடைக்கும் நிலையில், இந்த ஆண்டு எதிர்பாராத விலை வீழ்ச்சி விவசாயிகளை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. பொங்கல் வழிபாட்டில் முக்கிய இடம் பெறும் பூசணிக்காயை நம்பி, நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஆண்டுதோறும் இப்பகுதிகளில் பயிரிட்டு வருகின்றனர். இந்த ஆண்டில் பனி மற்றும் பூச்சி தாக்குதலால் பல இடங்களில் விளைச்சல் குறைந்ததாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் கடந்த ஆண்டு கிலோ ரூ.50 வரை விற்பனையான பூசணிக்காய், தற்போது ரூ.10 முதல் ரூ.15 வரை மட்டுமே விலை கிடைப்பதால், விதை, உரம், ஆட்கள் கூலி உள்ளிட்ட முதலீட்டு செலவுகளை கூட ஈடுசெய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடன் சுமை அதிகரித்து, வரும் நாட்களில் விலை உயரும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் காத்திருக்கும் நிலையில், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து தகுந்த இழப்பீடு அல்லது நிதியுதவி வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- பொங்கல் சிறப்பு ஆஃபர் ஊத்தங்கரை அலினா சிக்ஸில்1
- குருத்தோலை சப்பரத்தில் பவனி வந்த பெருமாள் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமி திருக்கோயிலில் மார்கழி திருவாதிரை பெருவிழாவில் 7-ம் நாள் முக்கிய நிகழ்வாக குருத்தோலை சப்பரத்தில் வெள்ளி இடபவாகனத்தில் சிவபெருமான் அலங்காரத்தில் மாணிக்கவாசகப் பெருமாள் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.1
- சகோதரரை மனைவியுடன் சேர்ந்து தாக்கிய வீடியோ வைரல் – நிலவழி தகராறில் ஒருவர் காயம் கிருஷ்ணகிரி மாவட்டம், திருவயல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முனியப்பன் என்பவர், தனது நிலத்திற்கு செல்லும் வழிப்பாதை ஆக்கிரமிப்பு தொடர்பான தகராறில், தனது பெரியப்பா மகனான குமரேசன் மற்றும் அவரது மனைவி திவ்யா ஆகியோர் தன்னை தாக்கியதாக கூறி, காயமடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முனியப்பன் தெரிவிப்பதாவது, தனது நிலத்திற்கு செல்லும் வழியை ஆக்கிரமித்து, வழி விட மறுத்ததன் காரணமாக நிலவழி பிரச்சனை ஏற்பட்டதாகவும், அதனுடன் தொடர்பாக குமரேசன் மற்றும் திவ்யா தன்னை கடுமையாக தாக்கியதாகவும் கூறியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்த போதிலும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து, நேற்று முனியப்பனின் தாய் ஜானகி, தங்கள் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், காவல்துறை தங்கள்மீது பொய் வழக்கு போட முயற்சிப்பதாகவும் கூறி, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், முனியப்பனை குமரேசன் மற்றும் அவரது மனைவி திவ்யா தாக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால், இச்சம்பவம் குறித்து மீண்டும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கவனம் ஈர்த்துள்ளது. வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.2
- இரவின் மடியில்.1