logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு

4 hrs ago
user_Raja
Raja
செய்தியாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
4 hrs ago

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு

More news from தமிழ்நாடு and nearby areas
  • பாலக்கோடு அருகே பத்தாம் வகுப்பு மாணவி தற்கொலை பாலக்கோடு அடுத்த கொட்டாவூர் மாரியம்மன் கோவில் பகுதி சேர்ந்த சரவணன்-முத்துலட்சுமி இவர்களுக்கு தமிழரசி என்ற மகள் உள்ளார் பத்தாம் வகுப்பு மாணவி கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் இது குறித்து தகவல் அறிந்த பாலக்கோடு காவலர்கள் இன்று புதன்கிழமை வழக்குப்பதிந்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் பத்தாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    1
    பாலக்கோடு அருகே பத்தாம் வகுப்பு மாணவி தற்கொலை
பாலக்கோடு அடுத்த கொட்டாவூர் மாரியம்மன் கோவில் பகுதி சேர்ந்த சரவணன்-முத்துலட்சுமி இவர்களுக்கு தமிழரசி என்ற  மகள் உள்ளார் பத்தாம் வகுப்பு மாணவி கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் இது குறித்து தகவல் அறிந்த பாலக்கோடு காவலர்கள் இன்று புதன்கிழமை வழக்குப்பதிந்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் பத்தாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    user_Raja
    Raja
    செய்தியாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • பணம் கேட்டு தாக்குதல் வழக்கு: தனபால் கைது – தலைமறைவான தமிழ்வாணனை தேடும் போலீசார் காவல் நிலைய முற்றுகைக்கு முயற்சி: பொதுமக்கள் சமாதானப்படுத்தப்பட்டதால் பரபரப்பு கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே பணம் தொடர்பான தகராறில் தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், குற்றச்சாட்டுக்கு உள்ளான தனபால் என்பவரை ஊத்தங்கரை காவல்துறையினர் நேற்று இரவு கைது செய்தனர். மேலும், சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் தமிழ்வாணன் தலைமறைவாக உள்ள நிலையில், அவரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக, 26.12.2025 அன்று ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் இருந்து வந்த தகவலின் அடிப்படையில், ஊத்தங்கரை காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் மோகன் விசாரணை மேற்கொண்டார். மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேலுமணி பேச முடியாத நிலையில் இருந்ததால், அவரது மனைவி அம்பிகா அளித்த வாக்குமூலத்தின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அம்பிகா அளித்த வாக்குமூலத்தில், 25.12.2025 காலை கொட்டாரப்பட்டி கிராமத்தில், பணம் கேட்டு வந்த தமிழ்வாணன் மற்றும் அவரது அண்ணன் தனபால் ஆகியோர், வேலுமணியை கெட்ட வார்த்தைகளால் பேசி மூங்கில் தடியால் தாக்கியதுடன், கழுத்தில் துண்டு போட்டு இழுத்துச் சென்று கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்தார். இந்த சம்பவத்தால் மன உளைச்சலுக்கு ஆளான வேலுமணி மருந்து குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த வழக்கில் தனபால் கைது செய்யப்பட்டதை அறிந்த கொட்டாரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், சுமார் நான்கு டாடா ஏசி வாகனங்களில் ஊத்தங்கரை காவல் நிலையத்திற்கு வந்து முற்றுகையிட முயன்றனர். இதனால் காவல் நிலையம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதையடுத்து, ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் முருகன் தலைமையிலான போலீசார், பொதுமக்களை சமாதானப்படுத்தி, காவல் நிலைய முற்றுகை போராட்டம் நடத்தக் கூடாது என அறிவுறுத்தி, அவர்களை மீண்டும் ஊருக்கு திருப்பி அனுப்பி வைத்தனர். இதனால் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஊத்தங்கரை காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    1
    பணம் கேட்டு தாக்குதல் வழக்கு: தனபால் கைது – தலைமறைவான தமிழ்வாணனை தேடும் போலீசார்
காவல் நிலைய முற்றுகைக்கு முயற்சி: பொதுமக்கள் சமாதானப்படுத்தப்பட்டதால் பரபரப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே பணம் தொடர்பான தகராறில் தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், குற்றச்சாட்டுக்கு உள்ளான தனபால் என்பவரை ஊத்தங்கரை காவல்துறையினர் நேற்று இரவு கைது செய்தனர். மேலும், சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் தமிழ்வாணன் தலைமறைவாக உள்ள நிலையில், அவரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, 26.12.2025 அன்று ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் இருந்து வந்த தகவலின் அடிப்படையில், ஊத்தங்கரை காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் மோகன் விசாரணை மேற்கொண்டார். மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேலுமணி பேச முடியாத நிலையில் இருந்ததால், அவரது மனைவி அம்பிகா அளித்த வாக்குமூலத்தின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அம்பிகா அளித்த வாக்குமூலத்தில், 25.12.2025 காலை கொட்டாரப்பட்டி கிராமத்தில், பணம் கேட்டு வந்த தமிழ்வாணன் மற்றும் அவரது அண்ணன் தனபால் ஆகியோர், வேலுமணியை கெட்ட வார்த்தைகளால் பேசி மூங்கில் தடியால் தாக்கியதுடன், கழுத்தில் துண்டு போட்டு இழுத்துச் சென்று கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்தார். இந்த சம்பவத்தால் மன உளைச்சலுக்கு ஆளான வேலுமணி மருந்து குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த வழக்கில் தனபால் கைது செய்யப்பட்டதை அறிந்த கொட்டாரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், சுமார் நான்கு டாடா ஏசி வாகனங்களில் ஊத்தங்கரை காவல் நிலையத்திற்கு வந்து முற்றுகையிட முயன்றனர். இதனால் காவல் நிலையம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து, ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் முருகன் தலைமையிலான போலீசார், பொதுமக்களை சமாதானப்படுத்தி, காவல் நிலைய முற்றுகை போராட்டம் நடத்தக் கூடாது என அறிவுறுத்தி, அவர்களை மீண்டும் ஊருக்கு திருப்பி அனுப்பி வைத்தனர். இதனால் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக ஊத்தங்கரை காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    user_Arunkumar k
    Arunkumar k
    Journalist கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • தகவல் வழங்காத குற்றம்: மனுதாரருக்கு ரூ.5,000 இழப்பீடு வழங்கிய கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உரிய காலத்தில் தகவல் வழங்காததற்காக, மாநில தகவல் ஆணையத்தின் உத்தரவுப்படி கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலக பொதுத் தகவல் அலுவலர், மனுதாரருக்கு ரூ.5,000 இழப்பீடு வழங்கினார். கிருஷ்ணகிரி மாவட்டம் மாளகுப்பம் பகுதியைச் சேர்ந்த சங்கரன் என்பவர் அளித்த புகாரின் பேரில் நடைபெற்ற விசாரணையில், பொதுத் தகவல் அலுவலர் சட்டப்பூர்வ கடமையைச் செய்யத் தவறியது உறுதி செய்யப்பட்டது. மாநில தகவல் ஆணையர் பி. தாமரைக்கண்ணன் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் காலவிரையத்திற்காக இழப்பீடு வழங்கப்பட்டதுடன், காலதாமதத்திற்கு காரணமான அலுவலர் மீது பிரிவு 20(1), 20(2) கீழ் நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது என்பதற்கான விளக்கமும் கோரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, புதிய பொதுத் தகவல் அலுவலர் ரூ.5,000 காசோலையை மனுதாரரிடம் நேரில் வழங்கினார். இழப்பீடு பெற்றுக்கொண்டதற்கான உறுதிமொழி அறிக்கையை 30.12.2025 அன்று மாநில தகவல் ஆணையத்தில் சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
    1
    தகவல் வழங்காத குற்றம்: மனுதாரருக்கு ரூ.5,000 இழப்பீடு வழங்கிய கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலகம்
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உரிய காலத்தில் தகவல் வழங்காததற்காக, மாநில தகவல் ஆணையத்தின் உத்தரவுப்படி கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலக பொதுத் தகவல் அலுவலர், மனுதாரருக்கு ரூ.5,000 இழப்பீடு வழங்கினார். கிருஷ்ணகிரி மாவட்டம் மாளகுப்பம் பகுதியைச் சேர்ந்த சங்கரன் என்பவர் அளித்த புகாரின் பேரில் நடைபெற்ற விசாரணையில், பொதுத் தகவல் அலுவலர் சட்டப்பூர்வ கடமையைச் செய்யத் தவறியது உறுதி செய்யப்பட்டது.
மாநில தகவல் ஆணையர் பி. தாமரைக்கண்ணன் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் காலவிரையத்திற்காக இழப்பீடு வழங்கப்பட்டதுடன், காலதாமதத்திற்கு காரணமான அலுவலர் மீது பிரிவு 20(1), 20(2) கீழ் நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது என்பதற்கான விளக்கமும் கோரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, புதிய பொதுத் தகவல் அலுவலர் ரூ.5,000 காசோலையை மனுதாரரிடம் நேரில் வழங்கினார். இழப்பீடு பெற்றுக்கொண்டதற்கான உறுதிமொழி அறிக்கையை 30.12.2025 அன்று மாநில தகவல் ஆணையத்தில் சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
    user_Pooma
    Pooma
    கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    15 hrs ago
  • பொங்கல் சிறப்பு ஆஃபர் ஊத்தங்கரை அலினா சிக்ஸில்
    1
    பொங்கல் சிறப்பு ஆஃபர் ஊத்தங்கரை அலினா சிக்ஸில்
    user_செல்வம்
    செல்வம்
    Journalist Krishnagiri, Tamil Nadu•
    23 hrs ago
  • வேப்பூர் ரோட்டரி சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் கடலூர் : வேப்பூர் ரோட்டரி சங்கம் சார்பில் கூட்டு ரோட்டில் பசுமை புரட்சி திட்டம் கொண்டாடபட்டது அப்போது விவசாயிகளுக்கு மா, பலா, கொய்யா, புங்கம் உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகள் வழங்கபட்டது இந்நிகழ்ச்சிக்கு வேப்பூர் ரோட்டரி சங்க தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார் முன்னால் மாவட்ட ஆளுநர் ஜனனி தாசன் முன்னிலையில் விருத்தாசலம் ரோட்டரி சங்க தலைவர் அன்புக்குமரன் விவசாயிகளுக்கு மரகன்றுகளை வழங்கினார் இதில் வேப்பூர் ராமகிருஷ்ணா பள்ளி தாளாளர் கதிரவன், ரோட்டரி சங்க நிர்வாகிகள் கொளஞ்சி, கார்த்திகேயன், சின்னதுரை, அமானுல்லாகான், செல்வராசு, சிங்கதுரை, சுடரொளி, சரவணன், ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
    4
    வேப்பூர் ரோட்டரி சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள்
கடலூர் :  வேப்பூர் ரோட்டரி சங்கம் சார்பில் கூட்டு ரோட்டில் பசுமை புரட்சி திட்டம் கொண்டாடபட்டது அப்போது விவசாயிகளுக்கு மா, பலா, கொய்யா, புங்கம் உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகள் வழங்கபட்டது இந்நிகழ்ச்சிக்கு  வேப்பூர் ரோட்டரி சங்க தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார் முன்னால் மாவட்ட ஆளுநர் ஜனனி தாசன் முன்னிலையில் விருத்தாசலம் ரோட்டரி சங்க தலைவர் அன்புக்குமரன் விவசாயிகளுக்கு மரகன்றுகளை வழங்கினார்  இதில் வேப்பூர் ராமகிருஷ்ணா பள்ளி தாளாளர் கதிரவன், ரோட்டரி சங்க நிர்வாகிகள் கொளஞ்சி, கார்த்திகேயன், சின்னதுரை, அமானுல்லாகான், செல்வராசு, சிங்கதுரை, சுடரொளி, சரவணன், ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
    user_சந்திரசேகர். D
    சந்திரசேகர். D
    Tharasu reporter வேப்பூர், கடலூர், தமிழ்நாடு•
    49 min ago
  • ஓம் நமசிவாய 🙏 #shorts https://youtube.com/@muthucreatorcom
    1
    ஓம் நமசிவாய 🙏
#shorts 
https://youtube.com/@muthucreatorcom
    user_J.MUTHU
    J.MUTHU
    Auto Rickshaw Driver மணச்சநல்லூர், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent ஆற்காடு, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    20 hrs ago
  • ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு
    2
    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு
    user_Raja
    Raja
    செய்தியாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    4 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.