logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

பணத்தை திருப்பி தராததால் பொது வெளியில் அடித்து அசிங்கம் விஷம் அருந்தி தற்கொலை பணம் கேட்டு தாக்குதல் வழக்கு: தனபால் கைது – தலைமறைவான தமிழ்வாணனை தேடும் போலீசார் காவல் நிலைய முற்றுகைக்கு முயற்சி: பொதுமக்கள் சமாதானப்படுத்தப்பட்டதால் பரபரப்பு கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே பணம் தொடர்பான தகராறில் தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், குற்றச்சாட்டுக்கு உள்ளான தனபால் என்பவரை ஊத்தங்கரை காவல்துறையினர் நேற்று இரவு கைது செய்தனர். மேலும், சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் தமிழ்வாணன் தலைமறைவாக உள்ள நிலையில், அவரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக, 26.12.2025 அன்று ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் இருந்து வந்த தகவலின் அடிப்படையில், ஊத்தங்கரை காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் மோகன் விசாரணை மேற்கொண்டார். மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேலுமணி பேச முடியாத நிலையில் இருந்ததால், அவரது மனைவி அம்பிகா அளித்த வாக்குமூலத்தின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அம்பிகா அளித்த வாக்குமூலத்தில், 25.12.2025 காலை கொட்டாரப்பட்டி கிராமத்தில், பணம் கேட்டு வந்த தமிழ்வாணன் மற்றும் அவரது அண்ணன் தனபால் ஆகியோர், வேலுமணியை கெட்ட வார்த்தைகளால் பேசி மூங்கில் தடியால் தாக்கியதுடன், கழுத்தில் துண்டு போட்டு இழுத்துச் சென்று கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்தார். இந்த சம்பவத்தால் மன உளைச்சலுக்கு ஆளான வேலுமணி மருந்து குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த வழக்கில் தனபால் கைது செய்யப்பட்டதை அறிந்த கொட்டாரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், சுமார் நான்கு டாடா ஏசி வாகனங்களில் ஊத்தங்கரை காவல் நிலையத்திற்கு வந்து முற்றுகையிட முயன்றனர். இதனால் காவல் நிலையம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதையடுத்து, ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் முருகன் தலைமையிலான போலீசார், பொதுமக்களை சமாதானப்படுத்தி, காவல் நிலைய முற்றுகை போராட்டம் நடத்தக் கூடாது என அறிவுறுத்தி, அவர்களை மீண்டும் ஊருக்கு திருப்பி அனுப்பி வைத்தனர். இதனால் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஊத்தங்கரை காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

2 hrs ago
user_Arunkumar k
Arunkumar k
Journalist கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
2 hrs ago

பணத்தை திருப்பி தராததால் பொது வெளியில் அடித்து அசிங்கம் விஷம் அருந்தி தற்கொலை பணம் கேட்டு தாக்குதல் வழக்கு: தனபால் கைது – தலைமறைவான தமிழ்வாணனை தேடும் போலீசார் காவல் நிலைய முற்றுகைக்கு முயற்சி: பொதுமக்கள் சமாதானப்படுத்தப்பட்டதால் பரபரப்பு கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே பணம் தொடர்பான தகராறில் தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், குற்றச்சாட்டுக்கு உள்ளான தனபால் என்பவரை ஊத்தங்கரை காவல்துறையினர் நேற்று இரவு கைது செய்தனர். மேலும், சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் தமிழ்வாணன் தலைமறைவாக உள்ள நிலையில், அவரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக, 26.12.2025 அன்று ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் இருந்து வந்த தகவலின் அடிப்படையில், ஊத்தங்கரை காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் மோகன் விசாரணை மேற்கொண்டார். மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேலுமணி பேச முடியாத நிலையில் இருந்ததால், அவரது மனைவி அம்பிகா அளித்த வாக்குமூலத்தின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அம்பிகா அளித்த வாக்குமூலத்தில், 25.12.2025 காலை கொட்டாரப்பட்டி கிராமத்தில், பணம் கேட்டு வந்த தமிழ்வாணன் மற்றும் அவரது அண்ணன் தனபால் ஆகியோர், வேலுமணியை கெட்ட வார்த்தைகளால் பேசி மூங்கில் தடியால் தாக்கியதுடன், கழுத்தில் துண்டு போட்டு இழுத்துச் சென்று கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்தார். இந்த சம்பவத்தால் மன உளைச்சலுக்கு ஆளான வேலுமணி மருந்து குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த வழக்கில் தனபால் கைது செய்யப்பட்டதை அறிந்த கொட்டாரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், சுமார் நான்கு டாடா ஏசி வாகனங்களில் ஊத்தங்கரை காவல் நிலையத்திற்கு வந்து முற்றுகையிட முயன்றனர். இதனால் காவல் நிலையம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதையடுத்து, ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் முருகன் தலைமையிலான போலீசார், பொதுமக்களை சமாதானப்படுத்தி, காவல் நிலைய முற்றுகை போராட்டம் நடத்தக் கூடாது என அறிவுறுத்தி, அவர்களை மீண்டும் ஊருக்கு திருப்பி அனுப்பி வைத்தனர். இதனால் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஊத்தங்கரை காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பூசணி விலை கடும் வீழ்ச்சி: விவசாயிகள் கவலை தைப்பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட சுற்றுப்புற கிராமங்களில் பூசணிக்காய் விளைச்சலும் விலையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இந்த காலகட்டத்தில் பூசணிக்காய்களின் வரத்து அதிகரித்து, நல்ல விலை கிடைக்கும் நிலையில், இந்த ஆண்டு எதிர்பாராத விலை வீழ்ச்சி விவசாயிகளை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. பொங்கல் வழிபாட்டில் முக்கிய இடம் பெறும் பூசணிக்காயை நம்பி, நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஆண்டுதோறும் இப்பகுதிகளில் பயிரிட்டு வருகின்றனர். இந்த ஆண்டில் பனி மற்றும் பூச்சி தாக்குதலால் பல இடங்களில் விளைச்சல் குறைந்ததாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் கடந்த ஆண்டு கிலோ ரூ.50 வரை விற்பனையான பூசணிக்காய், தற்போது ரூ.10 முதல் ரூ.15 வரை மட்டுமே விலை கிடைப்பதால், விதை, உரம், ஆட்கள் கூலி உள்ளிட்ட முதலீட்டு செலவுகளை கூட ஈடுசெய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடன் சுமை அதிகரித்து, வரும் நாட்களில் விலை உயரும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் காத்திருக்கும் நிலையில், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து தகுந்த இழப்பீடு அல்லது நிதியுதவி வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பூசணி விலை கடும் வீழ்ச்சி: விவசாயிகள் கவலை
தைப்பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட  சுற்றுப்புற கிராமங்களில் பூசணிக்காய் விளைச்சலும் விலையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இந்த காலகட்டத்தில் பூசணிக்காய்களின் வரத்து அதிகரித்து, நல்ல விலை கிடைக்கும் நிலையில், இந்த ஆண்டு எதிர்பாராத விலை வீழ்ச்சி விவசாயிகளை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. பொங்கல் வழிபாட்டில் முக்கிய இடம் பெறும் பூசணிக்காயை நம்பி, நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஆண்டுதோறும் இப்பகுதிகளில் பயிரிட்டு வருகின்றனர்.
இந்த ஆண்டில் பனி மற்றும் பூச்சி தாக்குதலால் பல இடங்களில் விளைச்சல் குறைந்ததாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் கடந்த ஆண்டு கிலோ ரூ.50 வரை விற்பனையான பூசணிக்காய், தற்போது ரூ.10 முதல் ரூ.15 வரை மட்டுமே விலை கிடைப்பதால், விதை, உரம், ஆட்கள் கூலி உள்ளிட்ட முதலீட்டு செலவுகளை கூட ஈடுசெய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடன் சுமை அதிகரித்து, வரும் நாட்களில் விலை உயரும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் காத்திருக்கும் நிலையில், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து தகுந்த இழப்பீடு அல்லது நிதியுதவி வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_Pooma
    Pooma
    கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    15 hrs ago
  • ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு
    2
    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு
    user_Raja
    Raja
    செய்தியாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent ஆற்காடு, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    20 hrs ago
  • கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதிக்குட்பட்ட பெலாந்துறை,பொன்னேரி,கொத்தட்டை,திருவட்டத்துறை,கொடிக்கலம்,கூடலூர் ஆகிய கிராமங்களில் அமைச்சர் சி.வெ கணேசன் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.பின்னர் குறைகளை கேட்டறிந்து மனுக்களைப்பெற்றார்.இதில் கட்சியினர்,அதிகாரிகள்,பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    1
    கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதிக்குட்பட்ட பெலாந்துறை,பொன்னேரி,கொத்தட்டை,திருவட்டத்துறை,கொடிக்கலம்,கூடலூர் ஆகிய கிராமங்களில்  அமைச்சர் சி.வெ கணேசன் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.பின்னர் குறைகளை கேட்டறிந்து மனுக்களைப்பெற்றார்.இதில் கட்சியினர்,அதிகாரிகள்,பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    user_சந்திரசேகர். D
    சந்திரசேகர். D
    Tharasu reporter வேப்பூர், கடலூர், தமிழ்நாடு•
    11 hrs ago
  • ஓம் நமசிவாய 🙏 #shorts https://youtube.com/@muthucreatorcom
    1
    ஓம் நமசிவாய 🙏
#shorts 
https://youtube.com/@muthucreatorcom
    user_J.MUTHU
    J.MUTHU
    Auto Rickshaw Driver மணச்சநல்லூர், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • இரவின் மடியில்.
    1
    இரவின் மடியில்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    1 hr ago
  • சகோதரரை மனைவியுடன் சேர்ந்து தாக்கிய வீடியோ வைரல் – நிலவழி தகராறில் ஒருவர் காயம் கிருஷ்ணகிரி மாவட்டம், திருவயல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முனியப்பன் என்பவர், தனது நிலத்திற்கு செல்லும் வழிப்பாதை ஆக்கிரமிப்பு தொடர்பான தகராறில், தனது பெரியப்பா மகனான குமரேசன் மற்றும் அவரது மனைவி திவ்யா ஆகியோர் தன்னை தாக்கியதாக கூறி, காயமடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முனியப்பன் தெரிவிப்பதாவது, தனது நிலத்திற்கு செல்லும் வழியை ஆக்கிரமித்து, வழி விட மறுத்ததன் காரணமாக நிலவழி பிரச்சனை ஏற்பட்டதாகவும், அதனுடன் தொடர்பாக குமரேசன் மற்றும் திவ்யா தன்னை கடுமையாக தாக்கியதாகவும் கூறியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்த போதிலும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து, நேற்று முனியப்பனின் தாய் ஜானகி, தங்கள் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், காவல்துறை தங்கள்மீது பொய் வழக்கு போட முயற்சிப்பதாகவும் கூறி, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், முனியப்பனை குமரேசன் மற்றும் அவரது மனைவி திவ்யா தாக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால், இச்சம்பவம் குறித்து மீண்டும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கவனம் ஈர்த்துள்ளது. வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
    2
    சகோதரரை மனைவியுடன் சேர்ந்து தாக்கிய வீடியோ வைரல் – நிலவழி தகராறில் ஒருவர் காயம்
கிருஷ்ணகிரி மாவட்டம், திருவயல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முனியப்பன் என்பவர், தனது நிலத்திற்கு செல்லும் வழிப்பாதை ஆக்கிரமிப்பு தொடர்பான தகராறில், தனது பெரியப்பா மகனான குமரேசன் மற்றும் அவரது மனைவி திவ்யா ஆகியோர் தன்னை தாக்கியதாக கூறி, காயமடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முனியப்பன் தெரிவிப்பதாவது, தனது நிலத்திற்கு செல்லும் வழியை ஆக்கிரமித்து, வழி விட மறுத்ததன் காரணமாக நிலவழி பிரச்சனை ஏற்பட்டதாகவும், அதனுடன் தொடர்பாக குமரேசன் மற்றும் திவ்யா தன்னை கடுமையாக தாக்கியதாகவும் கூறியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்த போதிலும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, நேற்று முனியப்பனின் தாய் ஜானகி, தங்கள் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், காவல்துறை தங்கள்மீது பொய் வழக்கு போட முயற்சிப்பதாகவும் கூறி, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், முனியப்பனை குமரேசன் மற்றும் அவரது மனைவி திவ்யா தாக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால், இச்சம்பவம் குறித்து மீண்டும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கவனம் ஈர்த்துள்ளது. வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
    user_Pooma
    Pooma
    கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    15 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent ஆற்காடு, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    21 hrs ago
  • தெய்வத்திரு கந்தசாமி கவுண்டர் அவர்களின் நினைவு நாள் இன்று! மகாத்மா காந்தி ஆசிரமத்தில் அவர்களுக்கு கூட்டுப் பிரார்த்தனை செய்யப்பட்டது! முகவரி : மகாத்மா காந்தி ஆசிரமம், ஆனைமலை, பொள்ளாச்சி - 642 104 கோயம்புத்தூர் மாவட்டம்! தொலைபேசி: +91 90432 00016 +9190432 00014 உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் நன்றி🙏
    1
    தெய்வத்திரு கந்தசாமி கவுண்டர் அவர்களின் நினைவு நாள் இன்று! மகாத்மா காந்தி ஆசிரமத்தில் அவர்களுக்கு கூட்டுப் பிரார்த்தனை செய்யப்பட்டது!
முகவரி :
மகாத்மா காந்தி ஆசிரமம்,
ஆனைமலை,
பொள்ளாச்சி - 642 104
கோயம்புத்தூர் மாவட்டம்!
தொலைபேசி:
+91 90432 00016
+9190432 00014
உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் நன்றி🙏
    user_Varun pradeep B
    Varun pradeep B
    Political party office Coimbatore South, Tamil Nadu•
    3 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.